நன்றி பொன் ரவிச்சந்திரன் சார்,
இதோ நீங்கள் கேட்ட தினகரன் 'வசந்தம்' (28-10-2013) இதழில் வந்த 'பராசக்தி' பற்றிய கட்டுரை.
http://i812.photobucket.com/albums/z...ps148605ff.jpg
http://i812.photobucket.com/albums/z...psa863b73a.jpg
Printable View
நன்றி பொன் ரவிச்சந்திரன் சார்,
இதோ நீங்கள் கேட்ட தினகரன் 'வசந்தம்' (28-10-2013) இதழில் வந்த 'பராசக்தி' பற்றிய கட்டுரை.
http://i812.photobucket.com/albums/z...ps148605ff.jpg
http://i812.photobucket.com/albums/z...psa863b73a.jpg
Excellent Posting Vasudevan Sir....!
I really wonder if any actor's first film would have completed over 100 days and collected to this extent of around 1.75 lakhs in 1952...in those days, that too in a theater that has the capacity of around 2600.
Most importantly, please read the first paragraph and last paragraph. Mr.Pichaimuthu was literally one before release of Nadigar Thilagam's Parasakthi. After the release of parasakthi, he became "Thangam Muthu". That's the power of Nadigar Thilagam.
Now, viewers who see this please decide for yourself, Should everyone who was in distribution business continue with the same once he is well settled and well of in his life? Is it mandatory? Well, Some fools think that way !
Am sure, many viewers who read this will definitely NOW will understand and realise who holds good quality and quantity of Records in their career !
Please continue posting such articles
Regards
LS
Fantastic Pic
guess who are these
http://www.4shared.com/download/CpYz...71641-fc10ff26
டியர் வாசு சார்,
தலைவரின் பராசக்தி பற்றிய தினகரன் பதிவுக்கு மிக்க நன்றி, அந்த காலத்திலேயே ஒன்றே முக்கால் லட்சம், அதுவும் ஒரே தியேட்டரில் என்பதை படிக்கும் போது வியப்பு மேலிடுகிறது. தலைவர் தன முதல் படத்திலேயே வசூல் சக்கரவர்த்தி என்பதை நிருபித்து விட்டார்.
பராசக்தியின் அருளால் உயர்தமனிதனாகி , அவன் ஒரு சரித்திரம் என்று சொல்லவைத்து , இவர் ஒரு தெய்வ பிறவிதான் என்று எல்லோராலும் பாராட்டு பெற்று , தவ புதல்வனாக திகழ்ந்து , தெய்வமகனாக உலாவந்து - அவன்தான் மனிதன் என்பதையும் நடிப்புக்கு அப்பால் (நிஜ வாழ்க்கையிலும் )நிரூபித்து ராஜா வாக என்றும் நம் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பது NT ஒருவரே
:smile2::smokesmile:
ANDRUM INDRUM ENDURM NT VASOOL CHAKARAVARTHI many times
we have proved with facts and figures, somepeople somehow are not prepered to accept.
please let me know reruns of NT films in city during diwali days,
MY HEARTIEST DEEPAVALI GREETINGS TO ONE AND ALL OUR FRIENDS.
EXPECTING PAMMALAR AND MURALI ON THE FESIVALDAY.
GREETINGS
RAMAJAYAM USA
Thank you very much,Vasudevan Sir,for the immediate response and giving opportunity for more people to read the DINAKARAN/PARAASAKTHI article.
Dear RAvI RAVI sir,nice disneyland photo of NT
Kaka Radhakrishnan & NT
http://www.4shared.com/download/CpYz...50222-6375d5c7
Dear RS,
We know about those who just for false pride, grazing the buffalo. They are unable to digest the facts and figures.
They will not change sir ! By this time, whoever reads through, will know who is the real master blaster ! Times have changed and so is people. They are smart enough now to identify who is bullshitting.
One "intellectual" even went to the extent of writing that meant First Time release even if failed it is ok and what is important is re-re-re-re- releases...! All we could do is Pity those so called "Intellectuals" !
If cat closes its eyes and thinks it is dark outside, it is the foolishness of the cat and not the outside world.
Seldom those people know that Truth is stranger than fiction.
Regards
SL
Dear Vasu Sir
Thanks for Article about Great Record Creator of World Cinema Nadigar Thilagam Sivaji's PARASAKTHI. Nobody in the World Created Such Record from his First Film.
SIVAJI IS THE GOLDEN GIFT TO INDIAN CINEMA
C.Ramachandran
தீபாவளி முதல் கோவை ஷன்முகாவில் நடிகர் திலகம் அவர்களின் மூன்று பரிமாண நடிப்பில் வெளிவந்த 200வது மதோன்னத, தரணியை அதிரவைத்த வெற்றி படைப்பு திரிசூலம் !
நடிகர் திலகம் மற்றும் திரிசூலம் - சாதனைகளின் சில துளிகள்.
1) நடிகர் திலகம் நடிக்க வந்து 25வது வருடம் 1979 என்பது மட்டும் அல்ல. 25 வருடத்தில் 200 படங்களை நிறைவு செய்த சாதனை. அதாவது ஒரு வருடத்திற்கு சராசரி 8 திரைப்படங்கள்.
இன்னும் சொல்லப்போனால் 45.625 நாட்களுக்கு (ஒன்றரை மாத இடைவெளியில்) ஒரு நடிகர் திலகத்தின் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது !
பல சமயங்களில் ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து இரெண்டுமே பிரம்மாண்ட வெற்றியும் கண்டிருக்கிறது (உதாரணம் : சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள் / ஊட்டி வரை உறவு & இரு மலர்கள் மற்றும் பல )
2) 45.625 நாட்களுக்கு ஒரு திரைப்படம் என்றால் ஒரே மாதிரியான சாதாரண மசாலா கதைகள் மட்டும் படமாக்க படவில்லை. புராண, இதிகாச, சமுதாய சீர்திருத்த, வரலாற்று காவியங்கள் இதில் அடங்கும். ஒவொரு கதாபாதிரத்திர்கேற்றார்போல தன்னை மாற்றிக்கொள்ளும் பாங்கு எந்த நடிகருக்கு இவர் அளவிற்கு இவர் நடித்த காலத்தில் வந்திருக்கிறது என்று சற்றே எண்ணி பார்க்கவும்..!
உலக திரையுலகில் மிக மிக பிரபலமாக இருந்தும், தமிழ் திரை உலகில் என்றுமே உச்சத்திலிருந்தும், தமிழ் திரை உலகின் வர்த்தகம் பெரிதளவில் இவரை நம்பி இருந்தும், இவரால் எந்த தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ, கதாசிரியர்களோ, சக நடிகர்களோ, விநியோகஸ்தர்களோ மற்றும் எந்த தனிமனிதனோ தொந்தரவடயவில்லை,உள்ளத்தால், உடலால் பாதிப்படையவில்லை என்பது மிக பெரிய சாதனை.
நேர்மை,
நேரம் தவறாமை,
கண்ணியம் காத்தல்,
ஒழுக்கம் ,
தொழில் பக்தி,
இயக்குனரை மதித்தல்,
சக நடிகர்களுக்கு சம வாய்ப்பு அளித்தால்
கட்டுகோப்பு
உயர்ந்த சிந்தனை
இப்படி பல நல்ல குணங்கள் நடிகர் திலகத்திற்கு இருந்ததால் தான் இவரை வைத்து திரைப்படம் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் நான் நீ என்று அவர் திரை துறையில் இருக்கும் வரை போட்டி போட்டார்கள் !
ஒரு வருடத்தில் 8 படங்கள் என்றால், இவரால் பிழைத்தவர்கள், இவரை வைத்து பிழைத்தவர்கள் எத்துனை பேர் என்று சற்று எண்ணிப்பாருங்கள் !
லைட் பாய் முதல் டச்-உப பாய் வரை,
சக நடிகர்கள்,
சக நடிகையர்,
இயக்குனர்கள்,
உதவி இயக்குனர்கள்,
அலங்காரம்,
நடனம்,
சண்டைபயிர்ச்சி,
கலை,
கேமரா,
கதாசிரியர், அவருடைய சிஷ்யர்கள்,
போஸ்டர் ஓட்டுபவர்கள்,
திரையரங்கு உரிமையாளர்,
தியேட்டர் கான்டீன்,
சைக்கிள் மற்றும் கார் பார்கிங்,
மற்றும் பலர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நடிகர் திலகத்தின் திரைப்படம் வரும்பொழுதெல்லாம் நல்ல வருமானம் பெற்று வளமுடன் வாழ்ந்திருக்கிறார்கள் !
200 வது திரைப்படம் திரிசூலம் 1979இல் வெளிவந்து இன்று வரை எங்கு திரையிட்டாலும் நல்ல மகசூல் செய்துகொண்டிருகிறது என்றால் அது மிகையாகாது. தவறானவர்கள் கைகளில் இந்த திரைப்படம் போகும்போது அவ்வப்போது சிறிது வேண்டுமென்றே பாதிபடைய அவர்கள் வைத்தாலும் மீண்டும் ஒரு போஏனிக்ஸ் பறவை போல உயிர்தேழுந்துள்ளதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
திரிசூலம் வெளிவந்தபோது சாதனைகளின் சில துளி !
1) சாந்தி, கிரான், புவனேஸ்வரி திரையரங்குகளில் 900 காட்சிகள் அதாவது ஒவ்வொரு திரையரங்கிலும் 100 நாட்கள் வரை தொடர்ந்து அரங்கு நிறைவு ( continous houseful shows) கண்ட திரைப்படம்.
2) 12 வாரங்களில் ருபாய் ஒரு கோடி வசூல் சர்வ சாதாரணமாக ஊதி தள்ளிய படம்.
3) 1974இல் வெளிவந்து அதற்க்கு முன் ஏற்படுத்தப்பட்ட அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து சுமார் ருபாய் 1.5 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர் திலகத்தின் "தங்கபதக்கம்" திரைப்பட வசூலை திரிசூலம் முறியடித்தது ! நம் திரி நண்பர்களுக்கு ஒரு விழாவில் திரு. Rm வீரப்பன் கூறியது நினைவிருக்கலாம். ! அது எந்த விழா என்று திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் அல்லது திரு முரளி அவர்கள் நினைவுபடுத்தினால் நன்றாக இருக்கும் !
200வது திரைப்படம் 200 நாட்கள் ஓடியது மிகபெரிய சாதனை. ஆனால் இந்த சாதனை ஏற்கனவே சிலமுறை நடிகர் திலகம் ஏற்படுத்தியுள்ளார் என்பதுதான் உண்மை !
மேலே கூறியவை சாதனையின் ஒரு சில துளிகளே !
திரிசூலம் மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பெரும் என்பதில் ஐயமில்லை. ! விநியோகிப்பவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
எஸ்.எல். அருமை.திரிசூலம் வெற்றி காண பிரார்த்திக்கிறேன்.
Dear SL , your narration carries tons of passion and involvement . Well researched mail with good amount of statistics . Kindly do continue
:):smokesmile:
அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தலைவரைப்போல முக பாவங்கள் காட்ட யாராலும் முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
..ஆனால் அதில் ஓரளவு காட்டகூடவா யாரும் இல்லை என நினைத்திருந்தபோது,
தற்செயலாக எனக்கு இந்த வீடியோ கிடைத்தது.விடையும் கிடைத்தது.கண்டு மகிழுங்கள்..
http://in.screen.yahoo.com/babys-emo...144913027.html
E&OE
Shanti - ஒரு மேலோட்ட பார்வை
நேற்று முரசில் சாந்தி - படம் பார்த்தபின் கிடைத்த மன சாந்தியில் உறங்க சென்றேன் . எப்படிப்பட்ட படம்! - இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா ?! மற்றவர்கள் இருந்தும் NT மற்றுமே இருப்பது போன்ற ஒரு பிரமை ---- பிரிண்ட் was not up to the mark . மணிரத்தினத்தின் படத்தை பார்ப்பது போல் ஒரு இருள் சூழ்ந்த பிரிண்ட். இந்த படத்தை பல ஜாம்பவான்கள் இந்த திரியில் அலசி உள்ளார்கள் - எனவே என் பங்கு ஒரு சின்ன அணில் மாதிரிதான் -----
The story gives lots of emphasis on value system in society தொட்டு தாலி கட்டியவன்தான் கணவனாக இருக்க வேண்டும் - நல்ல சமயத்தில் ( உயிர் போகும் தருவாயுலும் ) கணவனாக நடிக்க இருக்கும் கட்டாயத்தில் தள்ளபடுபவனை ஒரு உயர்ந்த மனைவி ஒருகாலும் கணவனாக ஏற்று கொள்ள மாட்டாள் - உயிரை விட தயங்க மாட்டாள். நல்ல உயர்ந்த கருத்து - whether this suits to present is highly debatable .
நடிப்பு - ஒருவன் பல பிரச்சனைகள் தன்னை சூழும்போது , தன்னை தானே பல கேள்விகள் கேப்பது உண்டு - எவளவு அழகாக NT தன் நிலைமையை புரிய வயிப்பார் - நாமே எழுந்து சென்று விஜயகுமாரியை சமாதான படுத்தினால் என்ன என்று தோன்றும் ! இந்த தமிழகம் புரியாமலே , புரிந்துகொள்ளாமலே பல சாதனையாளர்களை தொலைத்துவிட்டதே என்று வருத்தமாக உள்ளது .
இந்த படத்தில் NT க்கு முன்று வேடங்கள் - ஆச்சிரியமாக இருக்கிறதா ? - ஒன்று - நட்புக்கு உதாரணமாக இருக்கவேண்டிய பாத்திரம் - இது அவர் இரத்தத்தில் ஊரிய ஒன்று - சும்மா ஊதிவிடுவார் . இரண்டாவது நண்பனின் மனைவியுடன் கணவனாக இருக்கவேண்டிய நிலைமை - He takes the Value system to the height of Himalayas - முன்றாவது - தான் காதலித்த பெண்ணை கைவிடாம அதே சமயத்தில் கல்யாணமும் பண்ணிக்கொள்ள முடியாமல் a catch 22 situation - excellent acting displayed in all the three different roles.
மற்ற பல நடிகர்களும் இந்த படத்தில் வருவார்கள் ஆனால் சாந்தி தருவது NT ஒருவர் மட்டுமே !
தேவிகா இந்த படத்தை ஒரு தொய்வு இல்லாமல் NT யுடன் பார்த்து கொள்வார்- Excellent chemistry , history , mathematics and I'm not competent enough to write more about this pair .
பாடல்கள் :
" வாழ்ந்து பார்க்கவேண்டும் " - "ஆசை அளவு காண வேண்டும் " - என்ன மாதிரியான வார்த்தைகள் - ஆசைகள் மட்டும் அளவுடுன் இருந்துவிட்டால் இந்த உலகம் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்/ இருக்கும் !!
"யார் இந்த நிலவு " - இந்த பாடலையும் , நடிப்பையும் சொல்ல இனி வார்த்தைகள் இல்லை
"செந்தூர் முருகன் கோயிலிலே "- அருமையான பாடல் - நாள் முழுதும் கேட்டுகொண்டிருக்கலாம்
"நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் " - என்ன பாடல் - NT நம் மனதில் என்றோ வந்துவிட்டாலும் , பாடல் புதியதாகவே உள்ளது
" ஊரெங்கும் மாவிலை தோரணம் " - கண்ணில் இனி நீர் இல்லை
முடிவுதான் சற்றே ஏமாற்றமாக உள்ளது - யாருமே தப்பு செய்யாமல் ஏன் தனக்கு தானே தண்டனை வழங்கிகொள்கிறார்கள் என்றுதான் புரியவில்லை . NT யையும் தேவிகாவையும் கொல்லாமல் விட்டதால்தான் சாந்தி கிடைத்தது முடிவில் ! Overall a great show and happy to watch a great pair !
Ravi
:):smokesmile:
அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் நடிகர்திலகம் அவர்களோடு தீபாவளி நினைவு ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
தீபாவளி அன்று வீட்டுக் கடமையை விரைவாக முடித்துவிட்டு, அன்னை இல்லம் சென்றால், நடிகர்திலகம் அவர்கள் FRESH ஆக அமர்ந்திருப்பார். இதுமாதிரியான விசேஷ நாட்களில் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் ஜோராகக் காட்சியளிப்பார் நடிகர்திலகம். பேரன், பேத்திகள் வெடிகளை கொளுத்துவதை கொஞ்ச நேரம் ரசிப்பார். அவருடன் செர்ந்து நானும். வெடி புகை என்பது நடிகர்திலகத்துக்கு அலர்ஜி என்பதால் சிறிதுநேரத்திலேயே வீட்டிற்குள் சென்றுவிடுவார். அதன்பின் ரசிகர்கள் வர ஆரம்பிப்பார்கள். புதிய 10 நோட்டினை அன்பளிப்பாக அளிப்பார். ஒருமுறை ஆர்வக் கோளாறில் ஒரு ரசிகர் அந்த ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்க, ரூபாய் நோட்டு என்பது நாம் வணங்கும் கடவுள் மாதிரி - அதில் கையெழுத்திடுவதோ, கிறுக்குவதோ, கடவுளையே அவமதிப்பது மாதிரி என்று கூறி, அவரைக் கடிந்துகொண்டார் நடிகர்திலகம். அவருடையை தேசபக்தியைப் பாருங்கள்.
அதுமாதிரி ஒரு விசேஷ தருணத்தில் நடிகர்திலகத்திற்கு நான் மரியாதை செய்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் இந்த தீபாவளி நினைவாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.
http://i1234.photobucket.com/albums/...psd1175548.jpg
(புகைப்படத்தில் தலைவருடைய பார்வையையும், சுற்றியிருப்பவர்களுடைய பார்வையும் கவனிக்க)
நன்றி
KC sir - பொறாமை பட கூடிய பதிவுகளை தவிருங்கள் சார் ! :)
Goddess Lakshmi is very sensitive - she dislikes people who don't respect HER - this is what demonstrated nicely by NT - lots to learn from Him.
Thanks for your diwali wishes - we all heartily reciprocate
Ravi
:):smokesmile:
தலைவர் நடிப்பின் பரிமாணத்தை,ஆழத்தை,பெருமையை நினைத்து நினைத்து நம்மை கர்வப்படவைக்கும் படம்..இப்போ
கே டி.வி.யில்..ஓடிக்கொண்டிருக்கிறது!
Happy Diwali for fellow hubbers and crores of NT's fans.
Regards
S Vasudevan
சந்திர் சேகர் சார். கொடுத்து வைத்தவர் நீங்கள்.. அழகிய புகைப்படம் இட்டமைக்கு நன்றி..
நண்பர்கள் அனைவ்ருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் திரு நாள்.. மன்னிக்க :) தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்...
Dear KC Sir
Really you are very lucky person. Thanks for your memorable photo. Superb
C.Ramachandran
கண்பத் சார் நன்றி.. :) பட்டாஸ் நன்றாக வெடிக்கட்டும், குதூகலம் என்றும் பொங்கி வழியட்டும் ..ஸ்வீட்ஸ் மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க..( கடைசி வரி நான் எனக்குச் சொன்னேன்!) )
Wish you all a happy and safe Deepavali.
Regards,
R. Parthasarathy
அனைத்து நண்பர்களுக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
Happy Deepavali to All.
எங்கள் தெய்வமகனை மனதில் பூஜித்தபடி
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
http://www.goodlightscraps.com/conte...eetings-22.gif
http://i812.photobucket.com/albums/z...psa6ac3306.jpg
இன்றைய தினத்தந்தி
'புதிய பறவை' உருவானது பற்றி 'ஆரூர்தாஸ்' கட்டுரை. (நான் எழுத மறுத்த சிவாஜி படம்)
http://i812.photobucket.com/albums/z...psaf387712.jpg
http://i812.photobucket.com/albums/z...ps3cacf92a.jpg
http://i812.photobucket.com/albums/z...ps5b1c50b4.jpg
http://i812.photobucket.com/albums/z...psd5c20ef5.jpg
http://i812.photobucket.com/albums/z...psa0286dee.jpg
http://i812.photobucket.com/albums/z...psfe5a7b7a.jpg
http://i812.photobucket.com/albums/z...psf21fcdc6.jpg
http://i812.photobucket.com/albums/z...ps24aeaecf.jpg
http://i812.photobucket.com/albums/z...psbc7fedcf.jpg
http://i812.photobucket.com/albums/z...pse1f41676.jpg
தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாசு சார், உங்களுக்கு ஸ்பெஷலாக... ஆரூர்தாஸ் கட்டுரைக்காக.
http://i1146.photobucket.com/albums/...psa463f00a.jpg
மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
quoted from and thanks to: http://www.thehindu.com/features/met...cle5304910.eceQuote:
Deepavali and Tamil films have a relationship that has endured over six decades. Here are some festival releases that have earned money and fame for its makers.
Tamil film Parasakthi, released on October 17, 1952, on Deepavali, ran to packed houses, won critical acclaim, and made history. It gave the film world two superstars — actor Sivaji Ganesan and writer M. Karunanidhi. Sivaji Ganesan was the hero and Karunanidhi wrote the screenplay and dialogues. That set the trend of timing a film release with Deepavali. It was considered a good luck charm and it brought in the moolah for the producers, name and fame for the actors and directors. Even today, film makers strive to release their films on Deepavali. As Karthi’s All in All Azhagu Raja, Ajith’s Arambam, Vishal’s Pandiya Naadu gear up to cash in on the festive mood, some film lovers share their thoughts on films and Deepavali.
Artist V. Jeevananthan, author of Thiraiseelai
Actor Sivaji Ganesan’s two films Engirondha Vandhaal (a remake of the Hindi film Khilona) and Sorgam, released during Deepavali. Both became silver jubilee hits. The song ‘Ponmagal Vandhal’ from Sorgam became hugely popular. The song makes a re-entry as in a remix in Vijay’s film Azhagiya Tamil Magan, that has music by A.R. Rahman.
.....
M. Subramaniam, President of Tamil Nadu Film Distributors Federation
Sivaji Ganesan’s two silver jubilee films Ooty Varai Uravu and Iru Malaragal released on Deepavali. His 100th film Navarathri in which he played nine different roles ran for more than 100 days. People thronged the theatre to watch his performance.
.....
G. Ratnavel, Royal Theatre
Sivaji Ganesan’s Sivantha Mann ran for 100 days. “Bicycles would be parked for over a km to buy tickets. People came with families. ......”
அனைவருக்கும் அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்..
வாசுதேவ்ன சார்.. ஆரூர் தாஸ் கட்டுரை அழகு.. நன்றி..
திரி நண்பர்கள் அனைவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! .
ஷபா...!!!! அரூர்தாஸ் அவர்களே....! ஹ்ம்ம் !! தாங்கல !
"எனக்கு நேரமில்லை வேற யாராவது எழுதிக்க சொல்லு..சிவாஜி அண்ணன் கிட்டே நீயே சொல்லிடு..." - அரூர்தாஸ் நல்ல எழுத்தாளர் என்ற நினைப்பில் உள்ளவர் அல்லவா ..அதனால் தான் தன கற்பனாசக்தியை இங்கு காட்டியுள்ளார். இது, 5 திரைப்படங்கள் எழுதி பேர் வாங்கியவுடன் அவருக்கு வந்த அஹந்தயைதான் காட்டுகிறதே தவிர ஒரு professionalism துளி கூட காட்டவில்லை அப்படி அவர் உண்மையிலயே இங்கு எழுதியதை போல சிவாஜி பிளம்ஸ் துரையிடம் கூறியிருந்தால் !
இதில் ..." சாரி நீங்க போகலாம் " வேறு...! ஏன்யா அரூர்தாஸ் ! உப்பை போட்டு தானே நீர் உணவு உண்கிரீர் ? எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு ! கேள்விப்பட்டதில்லையா ? என்ன திமிரா உங்களுக்கு !
இது போதாதுன்னு சாவித்திரி சொன்னதாக அப்புடின்னு ஒரு புளுகு " அண்ணனும் தம்பியும் புழிஞ்சிடுவாங்க" வேறு..!
திரு அரூர்தாஸ் அவர்கள் ஒன்றை உணரவேண்டும் ! நீங்கள் வெறும் மசாலா பட கதை எழுதவில்லை.
எழுதுவது ஒரு தலைசிறந்த உலக புகழ்பெற்ற நடிகனுக்கு ! அப்படி இருக்கும்போது வேலை சிறிது தரமானதாக தான் இருந்தாகவேண்டும். தரம் என்றால் சிறிது மூளையை கசக்கதான் வேண்டும்..!
சும்மா என்னமோ ஓசியில் எழுதிகொடுப்பது போல ஒரு எண்ணம் திரு.அரூர்தாஸ் அவர்களுக்கு !
இதை படிப்பவர் வேண்டுமானால் பாருங்கள்..இன்னும் ஓர் இரண்டு வாரங்களில், நடிகர் திலகம் ருபாய் 5,000 முன் பணமாக புதிய பறவைக்கு கொடுத்தார் என்றால் அதை விட இரு மடங்கு அதிகம் வேறொருவர் கொடுத்தார் என்று இதே அரூர்தாஸ் எழுததான் போகிறார் !
உண்மையிலயே அவ்வளவு வேலையிருந்தால் கடைசீவரை எழுதாமல் இருந்திருக்க வேண்டியதுதானே...சும்மாவாவது எதற்கு இந்த வெட்டி பந்தா ! என்னமோ...இவரு முடியாதுன்னாராம் அப்புறம் அவங்க கெஞ்சினாங்கலாம் ...இவரு வேற வழி இல்லாம எழுதினாராம் ! ஏன்ய இந்த சுய விளம்பரம் ? ஏன் உங்களுக்கு நீங்களே மானியம் விட்டுகுறீங்க ?
அறிவை கொடுத்ததோ துரோணரின் கெளரவம் ...அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கெளரவம் ! என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது !
நடிகர் திலகத்தால் முன்னுக்கு வந்தவர்கள் பலரும் இப்படி ஒரு கட்டத்தில் திமிராக பேசியதும் பழகியதும் நமக்கு புதிதில்லை. அந்த வகையில் அரூர்தாஸ் ஒரு அதிர்ச்சி அல்ல ! என்னமோ இவர் பின்னால் சிவாஜி பிலிம்ஸ் கெஞ்சியது போல ஒரு தோற்றத்தை எல்லா வாரமும் இவர் ஏற்படுத்துவது மிகவும் கண்டனத்திருக்கு உரியது !
அரூர்தாஸ் கூட அல்ல..! அவரது பெற்றோர் மற்றும் அவரது மூதாதையர் செய்த புண்ணியம் நடிகர் திலகம் என்ற இந்த புவி கண்ட இனி கானபோகாத கலைஞனிடம் இவரை கொண்டு சேர்த்தது.!
தன்னை மறைமுகமாக உயர்த்திகொண்டு மற்றவரை ...??
தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி
திலகமில்லா தீபாவளி
13-ஆவது தீபாவளி
திலகமில்லா தீபாவளி
திக்கெட்டும் புகழ் மணக்க
திலகமாய் ஒளி வீசுபவர்
இல்லாததால்
திருநாள் வெறும் நாள்தான்
என் வரையில்
அபசம் இல்லை
ஆதங்கம்.
என் தெய்வம் இல்லையென்று
என் தெய்வத்தின் காவியங்கள் எங்கே என்று
ஆனால் மனம் குடிகொண்ட
தெய்வத்தால் மன ஆறுதல்
1992 வரை தீபாளிப் படையலில்
வீட்டில் கலந்து கொண்டதே இல்லை.
அதுதான் சாமி வெண்திரையில் என்
கண்புகுமே! இதயத்திலும் சேர்த்து.
இனிப்பு, காரம், அருஞ்சுவையையும்
என் சாமியே அன்று தந்து விடுமே!
அப்புறம் தனியே எதற்கு ஸ்வீட், காரமெல்லாம்.
பட்டாசு சப்தம் கேட்டது இல்லை
அதுதான் உன் அசைவுக்கு அதை விட
கைத்தட்டல் ஓசை கேட்குமே!
உற்றார் உறவினரைப் பார்த்ததில்லை
அதனினும் சிறந்த ரசிகர் பட்டாளத்தை பார்த்து விடுவேனே!
பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கியதில்லையே!
உன் பாதம் தொட்டு கும்பிட மறந்ததேது?
அண்ணன் தம்பிகளுடன் பேசியது கிடையாது
உன் அன்புத் தம்பிகளுடன் கொஞ்சியதுண்டு
அப்பாவின் சம்பளம் தெரியாது
உன் படங்களின் கலெக்ஷன் கைநுனியில்
சொல்ல வெட்கமில்லை எனக்கு
ஏனெனில் நீ நடிகனில்லை
மனிதன். அவனில் நீ மாணிக்கம்.
பரீட்சை எந்த நாள் என்று தெரியாது
பரீட்சைக்கு நேரமாச்சு எந்த நாள் என்று தெரியும்
தொழில் நுட்பக் கல்வி சும்மா பேருக்கு
உன் புகழ் பாட வேண்டும் ஊருக்கு
காலை,மதியம், மாலை, இரவு தீபாவளி உன்னுடனே
ஆளைக் காணோம் என்று எவரேனும் கேட்டால்
வேலையைப் பார் வேந்தனைப் பார்க்கப் போய் இருந்தேன்
என்று கொக்கரிப்பு. கூட்டநெரிசலைக் கண்டு
ஆட்டம் போட்ட காலம் எங்கே?
நீ இல்லை. உன் படங்கள் இல்லை.
ஏதோ கடமைக்கு ஒரு தீபாவளி.
எழுந்தோம்...எண்ணெய் வைத்தோம்...
குளித்தோம்...படைத்தோம்... என்று.
காலை எழுந்தவுடன் உன் முகம் தேடி விழித்தேன்
பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.
நீ இல்லையே... உன் காவியங்கள் இல்லையே
விழிக்காமல் என்ன செய்வேன்.
கண்ணை மூடிக் கொண்டு உன்னுடன் வாழ்ந்த அந்தக் காலங்களை
இன்பமுடன் அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
மனையாள் எழுப்புகிறாள்.
ஏங்க... இந்த ஸ்வீட்டை கொஞ்சம் உங்க நண்பர் வீட்டில கொடுத்துட்டு வந்திடுங்களேன்
ச்சே! என்னடா தீபாவளி இதெல்லாம். நொந்து கொண்டே நொடிந்து போகின்றேன்.
நீதான் இல்லையே! உன் தீபாவளிதான் இல்லையே! உன்னுடன்தான் தீபாவளி இல்லையே
இனி எப்ப வரும் உன் இல்லை என் தீபாவளி
தொலைத்து விட்டு நிற்கிறேன் என் தீபாவளியை.