Title : "Nee directionlo vesham cheiyaliniundira Ragavendra Rao - sivaji"
Want to act in your Direction Ragavendra Rao - sivaji
NT acted in one Tamil movie produced by NTR and Directed by Raghavendra Rao
Printable View
வாசு,
நானும் உன்னுடன் அங்கு வாழ்ந்து விட்டேன். தலைவரை பற்றி பேசி, நீ சாப்பிட்ட அனைத்தையும்(கருவாடு தவிர்த்து) சாப்பிட்டு உங்களோடு இருந்தது போல உணர்வு.
நான் இதற்கு மேல் இந்த பதிவை பற்றி என்ன சொல்ல? உன் நடையில் தெரியும் genuine innocence நான் மிக ரசிக்கும் ஒன்று.
எனக்கு நெய்வேலியில் வாழ்ந்ததால் இந்த nostalgic கொடுப்பினை இல்லை. என் வாழ்க்கை நெய்வேலி,சென்னை,பாங்காக்,ஜகார்த்தா,ஹோசிமின் என்றே கழிந்தது.சிறு ஆசுவாசம், நான் விடுமுறை கொண்டாடிய திருவிடை மருதூர்.
தென்னாற்காடு மாவட்டம் எப்போதுமே தலைவர் கோட்டை.(ராமதாஸ் கூட தலைவர் ரசிகரே)
வாசு சார்,
இதை இதை இதைத் தான் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நடிகர் திலகம் படம் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதே ஒரு தனி அனுபவம். நம் ஒவ்வொருவருக்கும் அவருடைய படம் பார்ப்பது ஒரு சம்பவம் அல்ல ... சரித்திரம் ... இதைத் தான் நான் ஒவ்வொருவரிடமும் வேண்டுகிறேன். தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். அடுத்த தலைமுறைக்கு சிவாஜி ரசிகர்களின் அனுபவங்கள் மிகவும் சுவையாகவும் இருக்கும் அவருடைய தாக்கம் ரசிகர்களுக்குள் எந்த அளவிற்கு ஆழ ஊடுருவியுள்ளது என்பதை எடுத்துரைக்கும்.
தங்களுடைய பால்ய அனுபவங்கள் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. உணர்வு பூர்வமான வாழ்க்கையையும் அனுபவங்களையும் சிவாஜி ரசிகர்கள் வாழ்க்கையில் ஏராளமாக சந்தித்திருப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
டியர் பாலகிருஷ்ணன் சார்
தங்களுடைய தெலுங்கு மொழிபெயர்ப்பிற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்களிடம் எந்த அளவிற்கு மரியாதை வைத்திருந்தார் நடிகர் திலகம் என்பதற்கு உதாரணம் இந்த நிழற்படம்.
அதே போல் பங்காரு பாபு 100 நாட்கள் ஓடிய திரையரங்குகளின் பெயர்களையும் மொழி பெயர்க்க முடியுமா
அருமையான ஒரு ஹாஸ்ய ரங்கம் - தெனாலிராமன் என்ற காவியத்திலிருந்து குறிப்பாக அந்த புலவரின் introduction scene - எழுத்தாணி பிடித்தால் நிறுத்தாமல் எழுதுவார் ! விருதுகள் எங்கே? ...விருதுகள் எங்கே.?....
வருகிறது அங்கே ....அதற்க்கு முன் திரும்பிப்பாருங்கள் இங்கே !
http://www.youtube.com/watch?v=5CvSf6--tJ4
மனுஷன் சண்டைல மட்டும் ஒரு மீட்டரையும் break பண்ணுவதில்லை.
வந்துட்டார்யா, வந்துட்டாரு. அவ்வ்வ்
நண்பர்களுக்கு ஓர் செய்தி.... !
இயக்குனர் திரு.கே.s ரவிக்குமார், பிற திரைப்பட கதைகளிலிருந்து கருவின் ஒரு பகுதி, மற்றும் கருத்தின் ஒரு பகுதியையும் கவர்ந்து திரைப்படம் எடுப்பதில் வல்லவர்...
அப்படி அவர் கவர்ந்து ஒரு பகுதியை வைத்து ஒரு முழு திரைப்படம் தான் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படையப்பா.
என்னடா....படைப்பவை எடுத்ததை எதற்கு நடிகர் திலகம் திரியில் எழுதுகிறான் என்று பார்கிறீர்கள.
விஷயம் இருக்கிறது.... நடிகர் திலகம் நடித்த தெனாலிராமன் திரைபடத்தில் பானுமதி கதாபாத்திரத்தின் தன்மையையும்..அவர் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்டு உயிர் துறக்கும் தருவாயில், அவருடைய கதாபாத்திரத்தின் தன்மையை கூறுவார்...அதை கவனத்து பாருங்கள்...நீங்கள் அனைவரும் ரம்யக்ரிஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரத்தை உணர்வீர்கள்....இந்த ஒரு கதாபாத்திரத்தின் கருவை, தெனலிராமனிலிருந்து கவர்ந்து ( வசனம் உட்பட) அதனுடன்...மற்ற கற்பனை கதாபாத்திரமும் உருவாக்கி....படைப்பவை தந்தார் !
http://www.youtube.com/watch?v=7H4acey6-qo
டியர் வாசுதேவன் சார்,
என் கிராமம்... என் மக்கள். - அருமை - கடலூர் செல்லும்போது அவசியம் ராமாபுரத்திற்கு சென்று வரவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். நன்றி.
Vijayawada – Sri Vijaya Talkies
Guntur - Sri Vijaya Talkies
Nellore - Rangamahal
Tenali - Venus Picutre Palace
Vizag - Jyothi Theatre
Kakinada - Crown Talkies
Rajamundry - Krishna Picture Palace
Karnool - Navarang Talkies
Proddatur - Balaji Talkies
Kadapa - Rahamathiya Picutre Palace
Hyderabad - ?
Thank to Mr.Prasad , my colleague
தமிழ் தாயின் தவபுதல்வன், தமிழ் திரைஉலகின் முதல் குடிமகன், பல பட்டங்களை , வெற்றிகளை , வசூலில் சாதனை புரிந்து , கோடிகணக்கான ரசிகர்களுக்கு கடவுள், கை திரியல் நெய்யப்பட்ட கட்டிலில், அதுவும் , தன்னை இயக்கிய / இயக்கம் இயக்குனர்
திரு. பந்துலு மடியில் தலை வைத்து படுத்து, கையில் கிளாஸ், கூலிங் கிளாஸ் அணிந்து, மெண்மையான புண்சிரிப்புடன் போஸ் கொடுக்கும் இந்த புகை படத்தை பற்றி (நடிகர் திலகத்தை) பற்றி பல பக்கங்கள் எழுதலாம் .
யாராவது எழுத்துகளே ? ராகவேந்திர / வாசு சார் ப்ளீஸ்
டியர் பாலகிருஷ்ணன் சார்
பங்காரு பாபு திரைப்படத்தின் விளம்பரத் தகவல்களை மொழி மாற்றம் செய்து தந்த தங்கள் நண்பர் பிரசாத் அவர்களுக்கும் தங்களுக்கும் நம் அனைவர் சார்பிலும் உளமார்ந்த நன்றி சார்.
புகை படத்தை எப்படி பெரியதாக போடுவது ?
பிராப்தம் படத்தின் ஒரிஜினலான மூக மனசுலு திரைப்படத்தின் ஒரு பாடலை [தமிழில் சந்தனத்தில் ஒரு வாசம் எடுத்து], ஓரிரு நிமிடங்களுக்கான காட்சியை வண்ணத்தில் மாற்றியுள்ளார்கள். இதற்கான காணொளி கீழே.
http://youtu.be/A9QSlUAihmA
மிக அருமையாக உள்ளது. கலர் டோன் மிகவும் யதார்த்தமாக உள்ளது.
இந்த நிழற்படம் அட்டாச்மெண்டாக உள்ளதால், சிறிய அளவை க்ளிக் செய்தால் ஒரிஜினல் வடிவம் கிடைக்கும்.
బాలకృష్ణగారు,
బంగారు బాబు తన్స్లతిఒను థాంక్సు .
NTR - NT - ANR together for Bangaru Babu 100 days funtion not Chanakya chandragupta Silver Jubliee function
http://akkineni2akkineni.blogspot.in...g-post_06.html
Cinema Express 16-30 April 2013
http://i1087.photobucket.com/albums/...t%20-2/1x1.jpg
இனிய நண்பர் வாசுதேவன் சார்
உங்களின் கிராமத்து நினைவலைகள் தொகுப்பு கடந்த காலத்துக்கே அழைத்து சென்றுவிட்டது .
மிகவும் ரசித்தேன் . பசுமையான கிராமத்து சூழ்நிலை - மரியாதை மிக்க மக்கள் - பாசத்துக்கு கரம் நீட்டும் மக்கள் .
அனுபவித்து நீங்கள் பதிவிட்ட கிராமத்து அனுபவம்
அசத்துங்கள் ...
அட கடவுளே !
இதை எழுதும் அந்த மாமேதைக்கு இதிலுமா ஓர வஞ்சனை. ?
மற்ற சில படங்களின் விமர்சனத்துடன், திரை அரங்குகளில் ஓடிய விதம் ஆகியவற்றை சில குறிப்புகள் தப்பும் தவறுமாக இருந்தாலும் அதை எழுதுகிறான் இந்த சினிமா எக்ஸ்பிரஸ் அதி மேதாவி !
வசந்த மாளிகையை பற்றி எழுதும்போது மட்டும் ஏன் இந்த ஒர வஞ்சனை? 1972 என்கின்ற வருடம் நடிகர் திலகத்தின் இரண்டு வெள்ளிவிழா படங்கள், 4 நூறு நாள் படங்கள் ஒரு சுமார் ரக படம் வந்த வருடம். வசந்தமாளிகயோ அந்த வருடம் தமிழ் படங்களில் வசூலில் புதிய மாபெரும் சாதனையை ஏற்படுத்திய படம்.
ரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து சென்டர்களிலும் 50 நாட்களை நடிகர் திலகத்தின் வசந்த்தமாளிகை ரிலீஸ் ஆவதற்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்ட படம் ஓடிகொண்டிருந்த போதிலும், சர்வ சாதாரணமாக கடந்து ஓடிய படம்.
10 சென்டர்களில் 100 days அதற்க்கு மேலும், 2 சென்டர்களில் 175 days அதற்க்கு மேலும்( பாரத விலாசிர்க்காக வழிவிட்டு) , தமிழகத்தில் 100% கடுமையான மின் வெட்டு இருந்தால் Generator வைத்து திரைஅரங்குகள் படம் ஒட்டவேண்டிய சூழ்நிலையிலும் மாபெரும் வெற்றிபெட்ட்று, Madurayil 200 days ஓடி முடிந்து ஷிப்டிங் முறையில் மேலும் 50 நாள் ஓடி மொத்தம் 250 நாளும் ,
வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கையில் நான்கு திரை அரங்குகளில் ஒன்றில் (லிடோ) 100 நாட்களும், மீதம் மூன்று திரை அரங்குகளில் (வெல்லிங்டன், Plaza , காபிடல் ) முறையே 250, 176, 287 நாட்களும் ஓடி இன்று வரை ஒரு இமாலய சாதனைய உள்ளது !
ஒரு பத்திரிகை என்றபொழுது தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பால், எந்த ஓர வஞ்சனையும் இல்லாமல் நடுநிலையாக எழுதாத பட்சத்தில் இவர்கள் எழுதுவது மற்ற செய்திகளை பொருத்தவரை அப்படியே உண்மை என்று எப்படி எடுத்துகொள்வது ?
நான் சென்னைக்கு வந்த பிற்கு இப்படி எழுதும் அந்த சினிமா எக்ஸ்பிரஸ் மேதாவியை சந்திக்கிறேன்.!
விட்டேனா பார் அந்த ஓரவஞ்சனைகாரனை ! ஒன்று இதுபோல அவன் எல்லா திரைபடதிர்க்கும் எழுதவேண்டும் இல்லையேல் ஓடிய விதம், தியேட்டர் பற்றி குறிப்பிடவே கூடாது !
எஸ்வி சார்,
அப்படியே....பசுமை நிறைந்த நினைவுகளே...பாடி திரிந்த பறவைகளே ...பழகி களித்த தோழர்களே என்ற பாடலை பாடவேண்டியதுதானே சார் !
நல்ல விஷயங்களை மனதார பாராட்டும் உங்களுடைய இந்த ஒருகுணம் ஒன்று போதும் சார், எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு இணை இல்லாதது !
Actually, So nice of you !
Thanking on behalf of "Ghee Fence" Vasudevan Sir !
பாபு
என்னடா இவன் எபோதும் NT தின் late 80's படங்கள் பத்தியே எழுதுகிறான் என்று தோணலாம் ஏன் எனக்கே அப்படி தான் ஒரு எண்ணம் தோன்றியது . அதனால் இந்த கருப்பு வெள்ளை படம் பாபு
1971 ல் தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் வெற்றி பெற்ற ஒரே படம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நட் கணக்கில் எங்க பட்ட வெற்றி படங்கள் .
இந்த படம் மலையாளம் படத்தின் தழுவல் தான் ஆனால் அந்த nativity problem என்று சொல்வார்களே அட அதாங்க cultural differences அந்த மாதிரி எதுவும் ஏற்படவில்லை . காரணம் இந்த படத்தின் இயக்குனர் திரு AC திருலோகச்சந்தர் அவர்களின் சாமர்த்தியமான இயக்கம் .
இந்த படத்தில் NT தின் கேரக்டர் பல பரிணாம வளர்சிகளை இயக்குனர் அழகாக செதுக்கி இருப்பர் .
இந்த படம் லைட் ஹார்ட் படம் இல்லை கதை கொஞ்சம் கணம். NT நடிப்பு சும்மா பிச்சு உதறுவார் மனிதர் . இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்தார்.
கதை என்று பார்த்தல் ஒரு கை ரிக்க்ஷாகரன் தான் ஒரு வேலை சாப்பிட சாப்பாடுகாக, எப்பிடிஒரு குடும்பத்தை காப்பாற்ற முயல்கிறார் என்பதே கதை .
பாபு ஒரு மில்லில் வேலை பார்க்கிறார் அங்கே முதலாளியிடம் ஒரு தொழிலளிகாக சண்டை போட்டு தன் வேலையை இழைகிறார்.
தற்செயலாக கை ரிக்க்ஷா இழுக்கும் வேலை கிடைக்க அதன் மூலம் அவர் வாழ்கை எப்படி மாறுகிறது என்பதே இந்த படம் .
சில பேர் ரொம்ப புத்திசாலிகள் மாதிரி பேசுவதாக நினைத்து நான் உதவி செய்தால் எனக்கு என்ன லாபம் என்று பேசுவார்கள் அப்படி பட்டவர்கள் இந்த படத்தில் பாலாஜி பாத்திரம் பாபு க்கு செய்யும் ஒரு சிறிய உதவி எப்படி தங்கள் குடும்பத்தை காப்பாற்றியது என்பதே சாட்சியாகும்.
NT தன் சட்டை கிழிந்ததை , தன் வறுமையை நகைச்சுவையாக ,வெகு அலட்சியமாக தன் சட்டை கிழிந்ததை குறிபிடுவது அவர் வாழ்கையை எப்படி ஜாலியாக எடுத்து கொள்கிறார் என்பதுக்கு சாட்சி
NT யிடம் அவர் குடும்பம் காட்டும் பரிவும் அதற்கு NT தின் நெகிழ்ச்சியும் காண கண் கோடி வேண்டும் . ஒரு ரிக்க்ஷாகரன் உடல் மொழி எப்படி இருக்குமோ அப்படியே . இது வரைக்கும் யாரும் தன்னை எப்படி நடத்தியது இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிடிகிறது NT தின் விழிகள் .
சாப்பிட சொல்லும் பொழுது ஒரு குச்சம் வேலைக்காரன் வெளியே போய் சாப்பிட சொல்லும் பொழுது முதலில் அங்கே போவது இங்கேயே சாப்பிட சொல்லும் பொழுது முதலில் மறுப்பதும் பிறகு அன்புக்கு கட்டுபடவும் அதுவும் அந்த சின்ன குழந்தை தன் தட்டில் எடுத்து சாப்பிட்ட உடன் பதற்வதும் அதற்கு பாலாஜி சொல்லும் பதிலும் கவிதை .
அதே NT ஸ்ரீதேவி ஐ இரண்டு வருடம் கழித்து சந்திக்கும் பொழுது அவர் விழிகள் எழுப்பும் கேள்விகள் , துடிப்புக்கு 1000 சபாஷ் . அதே NT பாலாஜியின் மனைவி சௌகார்யிடம் தான் ஒரு நாய் என்றும் கடமை பட்டவன் என்றும் கதர்வதும் , சத்தியமா ஹில்ட்டர் கூட கண் கலங்குவான்
அதே சிவாஜி வளர்ந்த ஸ்ரீதேவி தன்னை ரிக்க்ஷகரன் என்று அவமானம் செய்ததும் ஒரு நிமிடம் திகைத்து சௌகார் தன் பெண்ணை அடித்ததும் அதை தடுத்து கொஞ்ச நேரம் வெளியே செல்வதும் எதார்த்தத்தின் உச்சம் . ஏனென்றால் நம்ம வீடுகளில் செல்லமாக வளர்த்த குழந்தை ஐ அடித்ததும் அப்பா வெளியே செல்வது மிகவும் வாடிக்கை. எங்கள் வீட்டில் இப்படி நடந்து உள்ளது .
அதே அம்மு வளர்ந்து குமரி அனா உடன் சிவகுமாரை காதல் செய்தும் அதை கண்டு பொங்கும் இடம் , பிறகு அம்மு (இப்போ நிர்மலா) தன் தவறை உன்னர்து செயல்பட்டதும் சமாதனம் ஆகும் இடம் ஒரு தந்தை போல காட்சி அளிக்கிறார்
இதற்கு இடையே தன் உடல் நலிவுற்று நோய் வந்ததை கூட கருத்தில் கொள்ளாமல் நிர்மலாவின் வளர்ச்சிக்க பாடு படும் பொழுது கடமை வீரனாக காட்சி அளிக்கிறார்.
தன் பெண்ணை ஒரு பணக்காரன் பெண் கேட்டு வந்ததும் NT காட்டும் கெடுபடி அந்த பணக்காரன் NT ன் தவறை சுட்டிகடியதும் திருத்தி கொள்வதும் மற்றும் தன் நிலை உணர்த்து கல்யாணத்துக்கு செல்லாமல் தவிர்ப்பதும் மனசு கேளாமல் அங்கே செல்வதும் போன பின் மாட்டி கொண்டதும் NT தான் நிர்மலாவின் மாமா இல்லை என்று மறுப்பதும் , ஆசிர்வாதம் பண்ணும் பொழுதே உயிர் பிரிவதும், உயிர் பிரியும் நொடியை அற்புதமாக கண் முலம் பார்வையாளர்களுக்கு உணர்த்துவது NT மட்டும் சாத்தியம் . அந்த நொடி அவர் கண்ணில் தெரிந்த ஒரு ஒலி அது உணர்த்தும் அர்த்தங்கள் 1000. தான் எடுத்து கொண்ட லட்சியம் நிறைவேறியதின் பூரிப்பு.
இந்த படத்தின் மிக பெரிய பலம் பாத்திர படைப்பு . எல்லாமே positive characters .
பாலாஜி - ஒரு சமத்துவவாதி. அவர் பத்திரம் ஒரு author backed ரோல். சிவாஜி இடம் அவர் காட்டும் இறக்கம் நம் அனைவர்க்கும் ஒரு படம் எப்படி மற்றவர்களை நம் எப்படி அவர்களின் வறுமைய் சுட்டிகட்டமல் அணுக வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு .
சௌகார் - வழக்கம் போலே அழும் பத்திரம் தான் அனாலும் அவ்வளவு உதவிகள் செய்யும் சிவாஜிய் தன் மகள் ரிக்க்ஷா கரன் என்று ஏசும் பொழுது அறைவதும் அதே பெண் சிவாஜிக்கு நோய் வந்த உடன் அலத்சிய படுத்தும் பொழுது கடித்து கொளும் இடத்தில ஸ்கோர் செய்து விடுகிறார்
VKR : சிவாஜின் well wisher அக வந்து வாழ்து இருக்கிறார் . தன் நண்பர்காக கை ரிக்சா வாங்கி அவர் இடம் கொடுப்பதும் . சிவாஜியிடம் உள்ள தான் என்ற குறைய் சுட்டி காட்டும் இடம் நல்ல நண்பர்களுக்கு ஒரு எடுத்துகாட்டு .
மேஜர்: ஒரு பணக்காரன் எப்பிடி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம் . முதலில் பெண் கேட்ட யோசிப்பதும் பிறகு சிவாஜியிடம் பேசுவதும், தன் தகுதிக்கு குறைவான இடம் என்று தெரிந்தும் நாகேஷ் இடம்அவர்களுடன் சரிசமாக உரையாடுவதும் , சிவாஜிக்காக காத்திருந்து சௌகார்யிடம் அனுமதி கேட்கும் பாங்கு ஒரு நல்ல மனிதற்கு எடுத்துகாட்டு .
நாகேஷ் காமெடி , வாசு காமெடி ஊறுகாய் போல .
படத்தில் heroine இல்லை அனா அந்த குறை தெரியவில்லை . இப்படி ஒரு கதைல் நடிபதற்கு ஒரு தில் வேணும் அது சிவாஜிக்கு மட்டும் சத்தியம்.
பாடல்கள் இதோ எந்தன் தெய்வம் மற்றும் வருதப்பா வருதப்பா பாடல் இன்று அளவும் பிரபலம் .
இதன் தாக்கம் அரசாங்கம் வரைக்கும் சென்றது . இந்த படம் வந்த பிறகு தான் கலைஞர் கை ரிக்க்ஷா வை ஒழிக உத்தரவிட்டார் .
இதுவே இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சி .
Vasu sir,
Thanks for your feedback and for uploading rare photos
டியர் ராகுல் ராம்
பாபு படத்தைப் பற்றிய அருமையான ஆய்வேடு பதித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். தாங்கள் கூறியது போல் எல்லா பாத்திரப் படைப்புகளுமே பாஸிடிவ் என்பது படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட். பாராட்டுக்கள்.
1971 தீபாவளியில் பாபுவுடன் வெளியான ஆதி பராசக்தி மிகப் பெரிய வெற்றிப் படம். பல ஊர்களில் நல்ல வசூலைத் தந்த படம். இது குறிப்பிடத் தக்கது.
நமது ntfans அமைப்பின் அடுத்த நிகழ்ச்சி, வரும் 19.05.2013 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சென்னை ருஷ்யன் கலாச்சார மய்ய அரங்கில் நடைபெற உள்ளது. ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த உன்னதத் திரைக்காவியம் ராமன் எத்தனை ராமனடி திரையிடப் பட உள்ளது.
வாசு சார்,
தங்களின் என் கிராமம்... என் மக்கள் பதிவை கண்டவுடன் தங்களுடனே இருந்து அந்த கொண்டட்டாடங்களில் பங்கு பெற்றதை போல் உணர்ந்தேன். அது எப்படி சார் உங்கள் எழுத்து நடையின் மூலம் எங்களை சென்னையில் இருந்து ராமாபுரம் கிராமத்துக்கு பைசா செலவில்லாமல் அழைத்து சென்று விட்டீர்கள்?
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(2)
http://i1087.photobucket.com/albums/...2178628_71.jpg
அபூர்வ நிழற்படம்
http://sphotos-f.ak.fbcdn.net/hphoto...06100210_n.jpg
நன்றி நமது நண்பர் எம்.எல்.கான் அவர்கள். முகநூல் பக்கம்.
ஆஹா! கடவுளைக் கண்டேன்.
நண்பர் வாசு அவர்களுக்கு,
தமிழில் நான் படித்தவைகளில்,மிகசிறந்த ஒன்று மேற்கண்ட உங்கள் எழுத்தோவியம்..
அப்படியே அசந்து விட்டேன்.என்ன ஒரு நேர்மை,சத்தியம் மற்றும் நேசம் கலந்த எழுத்துக்கள்!!!
உங்கள் கிராமத்தில் நான் வாழ்ந்தாற்போன்ற ஒரு உணர்வு எனக்கு கிட்டியது.சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான ஒரு நிகழ்வை ஏதோ நேற்று நடந்தாற்போல விவரித்துள்ளீர்கள்.
சென்னை திநகரிலிருந்து 11A எண் பேருந்தில் சாந்தி திரையரங்கம் பயணித்து,தங்கபதக்கம் பார்த்த என் போன்ற ரசிகர்களின் ஒரு வரி அனுபவத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது உங்கள் நாற்பது கிலோமீட்டர்நடை பயணம்.Superb.
உங்கள் பெற்றோர்களுக்கு என் வணக்கம்.
முரளி,கோபால்,பார்த்தசாரதி, வாசு ஆகிய அனைத்துப்பெயர்களும் கிருஷ்ணபரமாத்வாவின் பல பெயர்கள்.அதற்கேற்ப நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாணியில் அவ்வப்பொழுது விஸ்வரூபம் எடுத்து எங்களைப்போன்ற பக்தர்களுக்கு அருள் புரிகிறீர்கள்.
நன்றி.வணக்கம்.
அண்ணன் கணேசனோ, அந்த நடிப்பு கடவுள் கணேசனின் லீலைகளை பரண் மேல் ஏறாமலே நகைச்சுவை தெளித்து மகிழ்விக்கிறார். தம்பி ஸ்வாமினாதனோ அந்த உ .வே .சா போலவே தேடி தேடி ஓலை சுவடிகள் கொணர்ந்து எங்கள் திரிக்கே வாழ்வளித்தார்.
Dear Ragavenderan sir,
Thanks for your feedback . Yes Adiparasakthi was a blockbuster forgot to mention that in flow of writing thanksfor pointing it out.
Dear vasu sir ,
என் கிராமம்... என் மக்கள். - அருமை but Iam waiting for your article like Santhipu
Dear Gopal sir,
Your series NT oru Ulaga adisayam is top class
Dear Sowri sir,
Your posts give a different dimension and varied themes boldly about NT
நேற்றிரவு முரசு தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். நானும், என் மனைவியும் அவரது சிறப்புகளைப் பேசி வியந்துகொண்டே கண்டுகளித்தோம். அவரது க்ளோஸ்-அப் காட்சிகளுக்காகக் காத்திருந்து நான் பார்த்ததை ஏதோ காதலியைப் பார்ப்பதைப் போல் பார்க்கிறோமோ என்று நானே எண்ணிக்கொண்டேன். உண்மை. வேறு யாரையும் இவ்வளவு ஈடுபாட்டுடன் ரசிக்கத் தோன்றாது.
நன்றி! - அவரது நடிப்பின் நுட்பம், சிறப்புகளைத் தெளிவாக விளக்கும் ஹப் பெரியவர்களுக்கும்; தன் விளையாட்டிலும், சில சமயம் காட்சிகளிலும் மனம் லயித்து என்னைப் புறமிழுக்காத இரண்டு வயது மகனுக்கும்.
இனிய நண்பர் கோபால் சார்
உங்களின் பாராட்டுக்கு நன்றி . நீங்கள் நினைப்பது போல்
எந்தவித மாற்றமோ - தடுமாற்றமோ - என்றைக்குமே எனக்கு இல்லை .
திறமை - எங்கிருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் .
உங்களின் திறமை எனக்கு நன்கு தெரியும் .அந்த திறமைக்கு
எனது வாழ்த்துக்கள் .
மக்கள் திலகத்தின் பாடல்கள் சில நடிப்பு காட்சிகள் உங்களை மிகவும் கவர்ந்துள்ளது என்பதும் எனக்கு தெரியும் .
என்றும் நட்புடன்
வினோத்