சார்
அந்தமான் காதலி
அடி லீலா கிருஷ்ணா ராதா
Printable View
கண்ணனும், கிருஷ்ணனும் கூட்டணி... தந்தை வசுதேவர். பிள்ளைகள் ஆனந்தமே தகப்பனுக்கு ஆனந்தம்.
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்பக் காதல் என்னும் மது
A fine radha song: Naan avan illai
https://www.youtube.com/watch?v=Vs8pipAGFKY
krishna ji இதுவா ?
http://youtu.be/iEZeGo_5JNw
அருமையான பாலா பாடலுக்கு நன்றி ரவி சார்.
10,000 miles ... no problem
janaki sweet voice ....
http://youtu.be/P2nWo2jLMkE
ராதா மாதிரி வாசு(கி)க்கு அள்ளி வழங்க முடியாதே! கெக்கேபிக்கே. மூளையைப் போட்டு கசக்குங்க.
ஜெயுச்சுட்டே
கண்ணா நீ ஜெயுச்சுட்டே
ஹைய்யா! ஜாலி:)
போற போக்கப் பார்த்தா நாளைக்கே பாகம் ரெண்டு தொடங்கணும் போல் இருக்கே!
http://youtu.be/RHZDIYEzpt8
video engeyavadhu chikkuma ?
சார்
யாரவது மங்களம் (உண்டாகட்டும் காசேதான் கடவுளடா) பாடுங்க
இது நியாயமா
நேற்றுதான் - 5000
24 மணிநேரத்தில் 5100
எப்படி பாகம் - 2 நாளை துவங்காமல் இருக்க முடியும் .
சதாப்தி எக்ஸ்பிரஸ் வேகத்தில் .....
திரு வாசு - திரு கிருஷ்ணா - திரு சின்னகண்ணன் - திரு ராகவேந்திரன் - திரு கோபால் - திரு மது
திரு கார்த்திக் இன்னும் பல நண்பர்கள் ...
இனிமையான பயணம் -இனிமையான பாடல்கள் - கனவு கன்னிகள் - கண்ணுக்கு விருந்தான படங்கள் - பாடல்கள் .
தொடரட்டும் பயணங்கள் .......
நூறாவது நாள் படத்தில் முத்துலிங்கம் பாட்டெழுத வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்தது ஒரு புதுமையான பேய்ப் பாட்டு. கொலை செய்யப்பட்டு இறந்தவள் அக்காள். தன்னுடைய தங்கைக்கு கொலையைப் பற்றிய செய்தியைச் சொல்ல வருகிறாள். அக்காவே என்றாலும் ஆவி என்றால் நடுக்கம் வரத்தானே செய்யும்.
உருகுதே இதயமே அருகிலே வா வா
நான் பாடும் ராகம் கேட்கும் நேரம்
ஏன் இந்த ஈரம் விழியின் ஓரம்
இளையராஜா இசை
sss சார் உங்க பங்கை காணவில்லை இன்று
//தொடரட்டும் பயணங்கள் .......// இந்தப் பயணங்க்ளில் தங்கள் பங்களிப்பும் அருமை எஸ்வி சார்.. நீல நிறம்.. வீட் போய் தான் கேக்கணும் பாக்கணும்..
கொஞ்சம் கால்ஸ் பேசி வர்றதுக்குள்ள பக் பக் பக்கங்கள்.. ம்ம் வெண்ணிலா முகம் தகவல்களுக்கு வீடியோவிக்கு நன்றி க்ருஷ்ணாஜி,மதுண்ணா.
பங்களிக்கும் எல்லோரையும் புதிய பாகம் தொடங்கச் சொல்லி ஆசைதான். மதுர கானங்கள் பல பாகங்களை சந்திக்கப் போவது உறுதி. நண்பர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு பாகமாக ஆனந்தமாகத் தொடங்கலாம். அனைவருக்கும் நன்றி!
இரண்டாம் பாகம் தொடக்கி வைக்க நம் கிருஷ்ணா சாரை முன்மொழிகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.
வெண்ணிலவு இந்தப் பாட்டில் வந்திருக்கிறது..ஆனால் ரொமாண்டிக்கா இல்லை..சிறு பிள்ளைகளுக்காக என்றும் இனிக்கும் பாடல் இனிய இசையரசியின் குரலில்..ஹை க்விஸ் போடலாம் போல் இருக்கே..வேண்டாம்..பாட்டையே போட்டுடலாம்..
ஆமா..படம்.. படத்தைத் தயாரித்தது எஸ்.எஸ்.வாசன்.. ஸ்ரீதர் படம்..வசனம் சித்ராலயா கோபு..படம் போட்டுக் காண்பித்தால்..ஆமா இதுல எனக்கு என்ன இருக்கு என்று கேட்டாராம்..
ஸ்ரீதர் புரியாமல் விழிக்க, ஸீ நான்55 பைசா கொடுத்து வாங்கிப் படம் பார்க்கற ஆளோட மன நிலையைச் சொல்றேன்..படம் ஜோராத் தான் இருக்கு..ஆனா காமடி.. ம்ம் இவங்களைப் போய்ச் சேராது..என வாசன் சொன்னாராம்
(சித்ராலயா கோபு ஞாபகம் வருதே புத்தகத்தில்)
படம் செளண்ட் ஆஃப் மியூசிக் ஐத் தழுவி முழுக்கப் பாடல்கள் இருக்கும் வண்ணம் அதே சமயம் கொஞ்சம் கொஞ்சம் சஸ்பென்ஸ்., அழகுக்கு காஞ்சனா அறிவுக்கு ஸ்ரீதர் ஹீரோவுக்கு ஜெமினி பாட்டுக்கு எம்.எஸ்வி என எடுத்த படம் ..சாந்தி நிலையம் தான்..
*
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி
ஆராரோ ஆரிராரோ
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது
கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும்
ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ
**
பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று சொல்லவும்வேண்டுமோ :)
//நான் வழிமொழிகிறேன்.// நானும் :)
வாசு மது chella சார்
என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை,அன்பு,பாசம் எல்லாவற்றிற்கும் நன்றி சார்
ஒரு சின்ன விண்ணப்பம்
இது ஒரு பெரிய பொறுப்பு
நான் 3வது பாகத்தை தொடங்குகிரேனே . கொஞ்சம் பக்குவம் வரணும் னு நினைக்கிறன் . ஒரு சீனியர் யாரவது தொடங்கினால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து . please
ஆனால் தினமும் நான் திரியில் பங்கு கொள்வேன்
இது உறுதி
இன்றைய ஸ்பெஷல் (51)
https://i1.ytimg.com/vi/QpkScBknqyg/hqdefault.jpg
இன்றைய ஸ்பெஷலில் மிக அற்புதமான அரிதான ஒரு பாடல். 'கவிக்குயில்' படத்தில் மேஸ்ட்ரோவின் இசையில் 'கண்ணியப் பாடகி' கலக்கிய பாடல். 'சின்னக் கண்ணன்' 'குயிலே கவிக்குயிலே' என்று அழைத்ததால் 'மான்' பார்க்கப் படமால் போய் விட்டது.
அதனாலென்ன?
https://i.ytimg.com/vi/pjQvjrzuRl0/mqdefault.jpg
மான் மான்தானே! எங்கள் மானின் குரல் என்றும் தேன் தேன்தானே!
என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்!
சுசீலாம்மாவின் பிற்காலப் பாடல்களில் என்னுடைய முதல் இடம் இப்பாடலுக்கே. ரஜனி கருப்பு வெள்ளையில் அழகாகத் தெரிவார். 'படாபட்' ஜெயலட்சுமி வழக்கம் போல பட் பட். சிம்பிள். புடவையில் அழகு.
இளையராஜா பின்னி இருப்பார். ஆள் பார்த்து கொடுத்தார் பாருங்கள் பாடுவதற்கு. அவருக்கு யார் யாருக்கு எதை எதைக் கொடுக்க வேண்டும் என்று தெரியுமே! அதனால்தான் இசையரசி அவர்களுக்கு இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்து பாடக் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பாடல் ஹிட் ஆகாமல் போனதற்கு அப்போது தமிழக மக்களுக்கு சாபமே கொடுத்திருக்கிறேன். நிறைய பேருக்கு இப்பாடல் தெரியாது.
நமது திரி மூலம் இனியாவது தெரிந்து ஹிட்டடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
https://i.ytimg.com/vi/MsdABYXwkBY/hqdefault.jpg
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
கன்னம்கருத்த கட்டழகா
கருநாவல் பழம் போல் கண்ணழகா
கற்கண்டு போலே சொல்லழகா
ஆஹா சொல்லழகா
ஆவாரங் காட்டுக்குள்ளே
ஒரு ஆதாயம் தேடி வந்தேன்
முத்தாடும் பெண்மை கொண்டாடு அங்கே
சொல்வேன் இன்பம் ஓராயிரம்
('முத்தா... டும் பெண்மை' யை சற்றே அவர் இழுத்து உச்சரித்துப் பாடும் போது நாம் அனுபவிக்கும் இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
ஆளான பொண்ணு நாளாக ஆக
பாலாடை மேனி தேமல் உண்டாக
ஆளான பொண்ணு நாளாக ஆக
பாலாடை மேனி தேமல் உண்டாக
ஏக்கத்தில் ஓடும் அத்தானைத் தேடும்
நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும்
ம்ஹூஹூஹூம் ம்ஹூஹூஹூம்
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
தேனாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தேனாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்
தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு
சந்தோஷமாக பொன்னூஞ்சல் ஆடு
ம்ஹூஹூஹூம் பொன்னூஞ்சல் ஆடு
மானோடும் பாதையிலே
வள்ளி தானோடிப் போகையிலே
வந்தாராம் கந்தன்
தந்தாராம் சொந்தம்
இன்பம் அங்கே ஓராயிரம்
ம்ஹூம் ம்ஹூம்
https://www.youtube.com/watch?v=Xp20...yer_detailpage
//சேலாடும் பூவில் நீ ஆட வேண்டும்
சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்// அழகிய பாடல் வரிகள் வாசு சார்.. நன்றி..நான் கேட்டதில்லை இனி தான் கேட்க வேண்டும்.. இந்த சேல் என்பது மீன் தானே..
ராகவேந்திரர் சார்.. இந்த விஜய் டிவிப் புகைப்படம் இப்போது தான் ந.தி இழையில் பார்த்தேன்..க்ருஷ்ணாஜியை த் தெரிந்தது.. நீங்கள் முரளிசார் எந்தப் படம் எனப் புரியவில்லை..
அருமையான பாடலை நினைவு கூர்ந்து உள்ளீர்கள் வாசு சார்
இசை ஞானியின் ஆரம்ப கால பாடல்
சின்ன கண்ணன் அழைக்கிறான் -பாலமுரளி மற்றும் ஜானகி குரலில் மீண்டும் வரும்
குயிலே கவி குயிலே - ஜானகி
உதயம் வருகின்றதே - ஜானகி
ஆயிரம் கோடி - பாலமுரளி
ஆனால் இந்த பாட்டு மட்டும் சுசீலா ஏன் இளையராஜா கொடுத்தார்
நீங்க சொன்ன பிறகு தான் புரிகிறது
என்ன ஒரு உச்சரிப்பு! என்ன ஒரு உற்சாகம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்!
vasu ji...
சுப்பர்ப்... சுசீலாவின் குரல் எப்படித் துள்ளி குதிக்குது ?
ம்ம்... அதெல்லாம் சரி.. "கன்னங்கருத்த கட்டழகா" என்றதும் கந்தனை கண்ணன் ஆக்கிட்டீங்களே !
ஒப்புக்கொள்ள மாட்டேன்.
மருகன் இருக்கும் இடத்தில் மகனை வைப்பது not acceptable...
நன்றி க்ருஷ்ணா ஜி.. கெண்டை மீனோன்னு ஒரு டவுட்ட்..பழையபாடல் சங்கப் பாடல்களில்
செவ்வரியோடய கண்களிரண்டினில் சேலொடு வேலாட - துலாபாரம் சங்கம் வளர்த்த தமிழ் பாட்டு
நீல மலையை நிஜதேவ தெய்வமதை,
சேல் விழியில் கண்ட திருக்கட்சியை யான் மறவேன்,
தோராத உச்சிவட்ட தேனாறு பாயுகின்ற பார ரகசியத்தின் பழம் பொருளை யான் மறவேன்,
பழ்ம் பாடல்..
வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை
பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம்
நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச்
சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.
நீர் ஓடி வரும் பெரு வாய்க்கால்களை வாளை மீன்கள் குறுக்கிட்டுத் தடுத்திட, அத்தன்மையால் அவ்விடத்து நீர் தேங்கிக் கரைகள் உடைபடும்படி நீருடைய அவ்வாய்க்கால்கள் நீர் நிறைந்து விலகிப் போகின்றன.
வயல்களில் நெருங்கி வரும் சேல் மீன்கள் பள்ளமாய வயல்களில், தம் தொகையால், கரையை உயர்த்துகின்றன. மதகுகளுட் புகுந்து வரும் நீர் வெளி வாராதபடி பெருத்த வரால் கூட்டங்கள் திரண்டு நின்று தடுக்கின்றன.
//பன்னிரண்டாம் திருமுறை :)//
பொதுவா கெண்டை மீன் அதாவது சேல் மீன் மங்கையரின் கண்களுக்குத் தான் ஒப்புமை கூறப்பட்டிருக்கின்றன..
//சிக்கா, கிருஷ்ணா ஜி.. அது "தேனாடும் பூவில் நீயாட வேண்டும்" என்று வரும்.// ஆஹா தாங்க்ஸ் மதுண்ணா.. என்னடா சேலாடும் பூ ந்னா இடிக்குதேன்னு நினைச்சேன்...
ரஜினியை ஃபடாபட் ஜெயலக்ஷ்மி சுசீலாவின் குரலில் பாடி மயக்கும் காட்சியைக் கண்டதும் காளி படத்தில் விஜயகுமாரை மயக்கும் காட்சி நினைவுக்கு வந்துடிச்சி..
அழகழகா பூத்திருக்கு ஆசை வைக்க தெரியலையே
ஆசை வைக்க தெரியாமே மீசை வச்சு லாபமென்ன
வாசு ஜி, கிருஷ்ணா ஜி.. வந்து விளக்குங்க.. சிக்கா .. வந்து குழப்புங்க
http://youtu.be/iyGMfepFqFw