Originally Posted by
mr_karthik
நிழலில் வைக்கப்பட்ட இயக்குனர்
நான் வாழவைப்பேன், சுமங்கலி ஆகிய படங்களின் விளம்பரங்களைப் பார்த்தபோது என் மனதில் ஒரு எண்ணம் / சந்தேகம் / ஐயம் தோன்றியது. அதாவது இயக்குனர் திரு டி.யோகானந்த் நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அவை
காவேரி
வளர்பிறை
தங்கைக்காக
தாய்
கிரகப்பிரவேசம்
ஜெனரல் சக்கரவர்த்தி
ஜஸ்டிஸ் கோபிநாத்
நான் வாழ வைப்பேன்
எமனுக்கு எமன்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
சுமங்கலி
சரித்திர நாயகன்.... உள்பட பல படங்கள்
இவற்றில் ஜெனரல் சக்ரவர்த்தி, நான் வாழவைப்பேன், வா கண்ணா வா உள்பட பல படங்கள் 100 நாட்களைக்க்டந்து ஓடியுள்ளன.
இதுபோக ஆரம்ப காலங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார்.
இருந்தாலும் இவர் ஒரு கே.எஸ்.ஜி., ஒரு ஸ்ரீதர், ஒரு ஏ.பி.என். ஒரு கே.விஜயன், ஒரு ஏ.சி.டி., ஒரு சி.வி.ஆர். போன்று பிரபலமாகப் பேசப்படவில்லையே என்ன காரணம்?.
இவரது பெயரைக்குறிப்பிட்டு எந்த ஒரு செய்தியையும் எந்தப்பத்திரிகையும் எழுதியதில்லை. எந்த ஒரு விழாவிலும், எந்த ஒரு விருதும் கொடுத்து கௌரவிக்கப்படவில்லையே அது ஏன்". கடைசி வரையில் நிழலுக்குள்ளேயே வைக்கப்பட்டு விட்டாரே என்ன காரணம்?.
அனுபவசாலிகளான ராகவேந்தர் சார், முரளி சார் போன்றோர் விளக்க முடியுமா?.