-
13th August 2011, 08:17 AM
#971
Senior Member
Seasoned Hubber
Sorry - absolutely no respect for a man who recommended KR Ramasamy instead of NT when the latter was a nobody, still shining out, and needed an opportunity.
It is easy to hop on to the bandwagon AFTER someone has climbed the ladder, isnt it?
It is our duty to disrespect such money bags with a feudal atitude
இந்த விஷயத்தில் ப்ளம் அவர்களுடைய கருத்தில் நானும் சற்று உடன் படுகிறேன். நடிகர் திலகம் பெருந்தன்மையுடன் நடித்துக் கொடுத்து அவர் படங்கள் வெற்றி பெற்று வசூலைக் கொடுத்தாலும் விளம்பரத்தில் அவருடைய பெயரை முன்னிலைப் படுத்த வில்லை இந் நிறுவனம். இன்று சரவணன் அவர்கள் நடிகர் திலகத்திற்கு அளிக்கும் மகத்துவம் அன்று தரப்படவில்லை என்பதே என் போன்ற பழைய சிவாஜி ரசிகர்களின் ஏக்கம். இத்தனைக்கும் தன்னுடைய எதிரி முகாம் நடிகர்களை வேண்டுமென்றே அழைத்து நடிக்க வைத்ததையெல்லாம் எப்படி மன்னி்க்க முடியும். அப்படி மன்னித்தாலும் மறக்க முடியுமா. அதே மாற்று முகாமில் படமெடுத்த போது விளம்பரத்தில் முக்கியத்துவம் யாருக்கு அளிக்கப் பட்டது. பராசக்தியில் குதிரை முகம் என்று வர்ணித்த அதே நிறுவனம் பின்னர் அவருடைய கால்ஷீட்டை நாடி வரவில்லையா. அந்த நாள் போன்ற ஒரு படத்தை ஏன் வேறு யாரையாவது வைத்து எடுத்திருக்கக் கூடாது.
இப்படி எண்ணற்ற கேள்விகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. இவையெல்லாம் நம்மால் மறக்க முடியவில்லை.
என்றாலும் நம்மைப் பொறுத்த வரையில் நாம் நடிகர் திலகம் வழி நடப்பவர்கள் என்ற காரணத்தால், பம்மலார் கூறிய வாழ்த்துக்களோடு பெருந்தன்மையோடு நாமும் சேர்ந்து கொள்வோம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th August 2011 08:17 AM
# ADS
Circuit advertisement
-
13th August 2011, 08:26 AM
#972
Senior Member
Platinum Hubber
nInga ellAm moderate faction. nAn extremist. ennAla innum maRappOm mannippOm ellAm mudiyala. Respecting the man's perundhanmai, I desist from posting further on this
-
13th August 2011, 10:41 AM
#973
Junior Member
Senior Hubber
dear friends
To my knowledge and follower of NADIGAR THILAGAM ever since PALUMPAZAMUM days I fully agree that the respect and publicity by avm saravanan for NT FOR AVM BANNERS NOT THERE in earlier days.
2. politics had no impact on NT MOVIES success or failure like like the otherheros mgr always ssr to some extent and their political connections played tal role. for example when mgr resigned MELSABAI MEMBER enkadamai had a big disaster. many a things can be shwn examples. for NT only continous release of movies in 70 80s had the impact'
-
13th August 2011, 11:28 AM
#974
Senior Member
Seasoned Hubber
I agree with Plum & Raghavendra sir. Most of us are aware about the fact that how the production of NT's 125th film "Uyarndha Manidhan" got delayed....this was discussed here in details, month's back. It was NT's dedication, greatness, tolerance and sincerity that ultimately paved way for the release of the film, which obviously turned out to be a huge success.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
13th August 2011, 11:44 AM
#975
Senior Member
Seasoned Hubber
Apart form Gowravam, I frequently visit Enga OOr Raja climax and Raman ethanai Ramanadi.
Particularly the scene from RER where NT enters Nambiar's house and innocently asks about his marriage with KR Vijaya. From the moment he comes in and till he leaves the house (again, a brilliant scene without any dialogues...just gestures !!!)...the entire episode just leaves me dumbfounded !!!!!
விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !!! The moist that gathers in every rasigan's eyes after watching this scene is the highest form of honour, I would say.
சத்தியமா, ங்கொப்புறான சொல்றேன், in spite of having watched this scene quite a number of time, it gives me goosebumps every time i watch it.
Can someone upload this brilliant piece of art, please...PLEASE.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
13th August 2011, 02:28 PM
#976
Senior Member
Senior Hubber

Originally Posted by
rangan_08
Apart form Gowravam, I frequently visit Enga OOr Raja climax and Raman ethanai Ramanadi.
Particularly the scene from RER where NT enters Nambiar's house and innocently asks about his marriage with KR Vijaya. From the moment he comes in and till he leaves the house (again, a brilliant scene without any dialogues...just gestures !!!)...the entire episode just leaves me dumbfounded !!!!!
விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !!! The moist that gathers in every rasigan's eyes after watching this scene is the highest form of honour, I would say.
சத்தியமா, ங்கொப்புறான சொல்றேன், in spite of having watched this scene quite a number of time, it gives me goosebumps every time i watch it.
Can someone upload this brilliant piece of art, please...PLEASE.
Dear Mr. Mohan Rangan,
Exactly. As for Enga Oor Raja, the scene from where younger Sivaji and Nagesh leave the elder Sivaji upto the climax, it's racy and one man show. I still the remember the impact this last episode created in the minds of audience when I watched in Srinivasa Theatre, Mambalam. The way he arrests the audience with his performance is unparalleled in the world of Cinema i.e., world cinema.
As for Raman Ethanai Ramanadi also, it's the same and in fact, I wrote the "the last 20 minutes of Raman Ethanai Ramanadi" as soon as I entered this great hub because of the impact it created in me for years. Apart from this 20 minute episode, the scene where he enters his own village after becoming an Actor till he leaves Nambiar's house is the ultimate. The way he reacts when Nambiar told him that his lover has already got married is "simply superb" and words fail me in narrating his greatness.
Thanks for rekindling memories.
Regards,
R. Parthasarathy
-
13th August 2011, 05:49 PM
#977
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
முதற்கண் பாராட்டுக்கு நன்றி !
"NT & AVM" குறித்து Mr.Plum, தாங்கள், ராமஜெயம் சார், Mr.Rangan உள்ளிட்டோர் பதிவிட்ட நியாயமான, உண்மையான உள்ளக்குமுறலுடன் கூடிய மேலான கருத்துக்களுக்கும் நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
-
13th August 2011, 06:01 PM
#978
Senior Member
Diamond Hubber
அன்பு ராகவேந்திரன் சார்,
இயக்குநர் யோகானந்த் அவர்களைப் பற்றி நீங்கள் அளித்துள்ள விவரங்கள் அருமை. நன்றி!.ரத்தினச் சுருக்கமான அழகான விளக்கங்கள்.
நீங்கள் குறிப்பிட்டது போல யோகானந்த் ஒரு மிகச் சிறந்த இயக்குநர். யோகானந்த் நடிகர்திலகத்தை வைத்து இயக்கிய படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம்" தாய் ". இந்தப் படத்தின் வீடியோ குறுந்தகடுஎங்கு தேடியும் கிடைக்க வில்லை. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளைக் கூட டிவி சேனல்களில் ஒளிபரப்பி நான் பார்த்ததில்லை. நடிகர் திலகத்தின் அற்புத கலைப் பொக்கிஷங்கள் சில நமக்குக் கிடைப்பதே அரிதாக இருக்கிறது." தாய் "திரைப்படத்தின் வீடியோ குறுந்தகடு விரைவில் கிடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
நடிகர்திலகம் நடித்த கடைசி கருப்பு-வெள்ளைப் படம் இது. நடிக மன்னரின் 169-ஆவது படம் இது.
"முரடன் முத்து" திரைப்படத்தில் வெளுத்து வாங்குவது போல, "தாய்" திரைப்படத்திலும் முரட்டு இளைஞனாக நடிப்புச் சக்கரவர்த்தி பின்னிப் பெடலெடுப்பார்.{வழக்கம் போல இரண்டு முரட்டு கேரக்டர்களுக்கும் கடலளவு வித்தியாசம் காட்டியிருப்பார்]
நடிகர்திலகத்தின்,
தாயாக S.வரலஷ்மி ,
தந்தையாக மேஜர்,
தங்கையாக குமாரி பத்மினி,
ஜோடியாக ஜெயலலிதா,
வில்லனாக நம்பியார்
நடித்திருப்பார்கள். படம் நெடுகிலும் பெரும்பாலும் வேட்டி-சட்டையில் உலா வருவார் நடிகர் திலகம்.
எம்.எஸ். வியின் அற்புதமான இசையில் தேன் சொட்டும் பாடல்கள்.
ஜெயலலிதா அவர்களுக்காக பி.சுசீலா அவர்கள் பாடிய
'எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்'கேட்க கேட்க திகட்டாத பாடல்.
நடிகர்திலகம் கிராமத்தில் இருந்து மெட்ராஸ்[சென்னை] வந்து அவருக்கு அங்கு எற்படும் அனுபவங்களை ஜெயலலிதா அவர்களிடம் பாடுவதாக அமைந்த, டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் ஒலிக்கும்,
'நான் பாத்தாலும் பாத்தேன்டி மதராசு பட்டினத்த, பத்து கண்ணு போதாதம்மா பட்டிக்காட்டம்மா'
என்ற ஜனரஞ்சகப் பாடல் ரகளை. [இந்தப் பாடல் திரு.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "அனுபவி ராஜா அனுபவி" படத்தில் நாகேஷ் அவர்கள் பாடுவதாக அமைந்த' மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடலை ஒத்திருக்கும்] இந்தப் பாடலில் வரும் சரணங்களைப் பாருங்கள்....
கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்க ....
கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க....
துண்டு போட்ட மனுஷங்க எல்லாம் சுத்திக்கிறாங்கம்மா....
இந்த நாட்டை கூட துண்டு போடஎண்ணிக்கிறாங்கம்மா....
அம்மம்மா...அம்மம்மா...ஆமாம்மா...
அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளை கிண்டல் செய்யும் நையாண்டி வரிகள்.
மேலும் அடுத்த சரணத்தில்,
நான் ஒரு பெரிய விருந்துக்குப் போனேன்....
அங்கு ஒரு பொண்ணு வந்தா...
பக்கத்துல போனதுக்கப்புறம்தான் பொண்ணுன்னு தெரிஞ்சுது...
அவ நடந்தா... என்ன நட! வாத்து நட..
அவளுக்கு உதடே இல்ல போலிருக்கு.. கையிலேயே வச்சுருந்தா...
புருவமும் இல்ல போலிருக்கு.. அதையும் கையிலேயே வச்சுருந்தா...
ஆறடிக்கூந்தல் .அரையடிதான் ஒரிஜினல்...
என்று நாகரீக யுவதிகள் புருவ மையையும், லிப்ஸ்டிக்கையும் கை[பை]யிலேயே வைத்திருப்பதைக் கிண்டலடிப்பார் கலைக்குரிசில்.
'மங்கலம் காப்பாள் சிவசக்தி.. என் மாங்கல்யம் காப்பாள் சிவசக்தி' .... என்று எஸ்.வரலஷ்மி அவர்கள் தன் சொந்தக் குரலில் பாடும் லேடீஸ் சென்டிமென்ட் பாடலும் கேட்க நன்றாகவே இருக்கும்.
எல்லாப் பாடல்களுக்கும் மேலாக, பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி நடிகர்திலகமும் ஜெயலலிதா அவர்களும் கோஷ்டியோடு சேர்ந்து பாடும்
'நாடாள வந்தாரு... நாடாரா நின்னாரு.'. என்ற பாடல் படத்தில் ஹை-லைட்.
பெருந்தலைவரின் சிறப்புகளை இத்திரைப்பாடல் பறைசாற்றியது போல வேறு எந்தத் திரைப் பாடலும் பறை சாற்றியது கிடையாது...
குடும்ப சென்டிமென்ட் நிறைந்த, ஜனரஞ்சகமான பொழுதுபோக்குப் படம் "தாய்".
இந்தப் படத்தைப் பற்றிய நினைவலைகளைத் தட்டி எழுப்பியதற்காக ராகவேந்திரன் சார், உங்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நன்றி! நன்றி!
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பார்த்தசாரதி சார்,
தாங்கள்' கருடா சௌக்கியமா' ஆய்வை பாராட்டியமைக்கு நன்றி! தாங்கள் கூறியிருந்தது போல் நடிகர் திலகத்திற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்த பிறகு வந்த முதல் படம் இது. ஆனால் சங்கிலி படத்தின் டைட்டிலின் போது
'நடிகர்திலகம் சிவாஜி கணேசன் m.p.' என்று போடுவார்கள்.
அன்பு கார்த்திக் சார்,
நன்றிகள் பல. கருடா சௌக்கியமா படம் சரியாகப் போக வில்லை என்ற தங்களின் ஆதங்கம் நியாயமானது. என் மனதின் எண்ணங்களை அப்படியே
கண்ணாடி போல் பிரதிபலித்து விட்டீர்கள். ஹப் நண்பர்கள் எழுதுவது போல நம் படங்களே நமக்கு எதிரி. என்ன செய்வது?. இந்தப் படத்துக்கு மட்டுமல்ல. பல படங்களுக்கும் இதே நிகழ்வுகள் தான்.. " தியாகி" கூட அற்புதமான படம்.
அதுவும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th August 2011 at 09:47 PM.
-
13th August 2011, 06:15 PM
#979
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
நிழலில் வைக்கப்பட்ட இயக்குனர்
நான் வாழவைப்பேன், சுமங்கலி ஆகிய படங்களின் விளம்பரங்களைப் பார்த்தபோது என் மனதில் ஒரு எண்ணம் / சந்தேகம் / ஐயம் தோன்றியது. அதாவது இயக்குனர் திரு டி.யோகானந்த் நடிகர்திலகத்தின் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அவை
காவேரி
வளர்பிறை
தங்கைக்காக
தாய்
கிரகப்பிரவேசம்
ஜெனரல் சக்கரவர்த்தி
ஜஸ்டிஸ் கோபிநாத்
நான் வாழ வைப்பேன்
எமனுக்கு எமன்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
சுமங்கலி
சரித்திர நாயகன்.... உள்பட பல படங்கள்
இவற்றில் ஜெனரல் சக்ரவர்த்தி, நான் வாழவைப்பேன், வா கண்ணா வா உள்பட பல படங்கள் 100 நாட்களைக்க்டந்து ஓடியுள்ளன.
இதுபோக ஆரம்ப காலங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார்.
இருந்தாலும் இவர் ஒரு கே.எஸ்.ஜி., ஒரு ஸ்ரீதர், ஒரு ஏ.பி.என். ஒரு கே.விஜயன், ஒரு ஏ.சி.டி., ஒரு சி.வி.ஆர். போன்று பிரபலமாகப் பேசப்படவில்லையே என்ன காரணம்?.
இவரது பெயரைக்குறிப்பிட்டு எந்த ஒரு செய்தியையும் எந்தப்பத்திரிகையும் எழுதியதில்லை. எந்த ஒரு விழாவிலும், எந்த ஒரு விருதும் கொடுத்து கௌரவிக்கப்படவில்லையே அது ஏன்". கடைசி வரையில் நிழலுக்குள்ளேயே வைக்கப்பட்டு விட்டாரே என்ன காரணம்?.
அனுபவசாலிகளான ராகவேந்தர் சார், முரளி சார் போன்றோர் விளக்க முடியுமா?.
டியர் mr_karthik,
டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களைப் பற்றிய தங்களது பதிவிற்கு நமது ராகவேந்திரன் சார் ஒரு விளக்கப் பதிவு அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, நமது நடிகர் திலகம் குறித்தும், அவரைத் தான் இயக்கியது பற்றியும், டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களே 'பிலிமாலயா' இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதை தங்களது பதிவுக்கு இன்னொரு பதிலாக - சிறப்புப் பதிவாக [அந்த இதழின் பக்கங்களையே] - நான் இங்கே வழங்குகிறேன். தங்களது பதிவில் காணப்படும் சில கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அவரது இந்த நேர்காணலும் நல்லதொரு விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். ஓவர் டூ,
பிலிமாலயா தீபாவளி மலர் : 30.10.1992



அன்புடன்,
பம்மலார்.
-
13th August 2011, 06:25 PM
#980
Senior Member
Diamond Hubber
அன்பு ரங்கன் சார்,
உங்களின் துணிச்சலான" விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !" என்ற 'தில்'லான வரிகளுக்காகவே ஆயிரம் விருதுகளை உங்களுக்கு அள்ளித் தரலாம். சத்தியமான வரிகள். விரைவில் உங்கள் ஆசை நிறைவேற்றப் படும் [ ராகவேந்திரர் அருளால்] என நம்புகிறேன்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 13th August 2011 at 06:28 PM.
Bookmarks