-
15th September 2015, 03:16 PM
#1
Senior Member
Diamond Hubber
'மணிப்பயல்' படத்திலிருந்து ஒரு அருமையான பாடல். மாஸ்டர் சேகர் பாடும் பாடல். இன்று அறிஞர் அண்ணா பிறந்த தினம். அதையொட்டி இந்தப் பாடல். (இதே படத்தில் 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்' என்று அண்ணா புகழ் பாடும் இன்னொரு பாடலும் உண்டு)
நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரிஞ்சுதடா
அட நல்லது கெட்டது நாளும் எனக்கு நல்ல்லாப் புரிஞ்சுதடா
அம்மா வயித்துல சும்மாக் கிடந்தேன் ஆபத்து இல்லையடா
அட பத்தாம் மாசம் பெத்துப் போட்டா ஆயிரம் தொல்லையடா
நான் அண்ணா போலே
அறிஞர் அண்ணா போலே பண்புடையோர்க்கு
செருப்பாய் இருப்பேன்டா
இங்கு அடுத்தவர் குடியை கெடுத்திடும் பேர்க்கு
நெருப்பாய் இருப்பேன்டா
சின்னாவுக்கு மட்டும் ஒரு கேள்வி. சேகருக்கு பாடலைப் பாடும் பின்னணிப் பாடகரோ பாடகியோ அது யார்?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th September 2015 03:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks