Page 175 of 337 FirstFirst ... 75125165173174175176177185225275 ... LastLast
Results 1,741 to 1,750 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #1741
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    vaNakkam from Los Angeles,CA. Will post beginning Sunday!
    ராஜ்ராஜ் சார்!

    லாஸ் ஏஞ்சல்ஸ், ஹவாய் என்று கலக்குகிறீர்கள். இங்கே வெறும் கரி (நாட் கறி) அப்புறம் வெள்ளமாய் எங்க பார்த்தாலும் பானி பானி பானி. உங்கள் ஹேப்பி எங்கள் ஹேப்பி. என்ஜாய்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1742
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear RajRaj Sir
    Our fellow hubber SUBRAMANIAM RAMAJAYAM is now at Los Angeles only. If chance occurs, you can meet him there. I don't have his US mobile no. However u can contact him through pm and notify the pm here so he will come to know.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1743
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Dear RajRaj Sir
    Our fellow hubber SUBRAMANIAM RAMAJAYAM is now at Los Angeles only. If chance occurs, you can meet him there. I don't have his US mobile no. However u can contact him through pm and notify the pm here so he will come to know.
    We were waiting in the airport for the connecting flight. I thought I should let all of you know that I would be back soon!
    Thanks for the information. We have visited all tourist attractions in LA area. We might visit again when our grand children grow up.

    Vasu: It was a family get together in Hawaii. My eldest son likes the place where we stayed( a rented house). He wanted the entire family to be there! A bit expensive. We went along for the sake of our sons,daughter in law and grand children! It was fun. Hope the rain stops and the floods recede soon.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Likes madhu, rajeshkrv liked this post
  7. #1744
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    vanakkam

  8. #1745
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நினைத்துப் பார்க்கிறேன்



    1960களில் ஒரு பக்கம் மெல்லிசை மன்னர்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருக்க, தன்னிகரில்லா இசைச் சக்கரவர்த்தியாக விளங்கிய திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், இன்னொரு பக்கம் தன் ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திக்கொண்டேயிருந்தார். பல படங்களின் பெயர்கள் இன்றும் மக்கள் மத்தியில் நிலைகொண்டிருப்பதற்குக் காரணமே, கே.வி.எம். அவர்களின் பாடல்களால் தான். அப்படி ஒரு படம் தான் 1965ல் வெளிவந்த காக்கும் கரங்கள். சிவகுமார் அறிமுகமான படம் என்பதை ஓர் அடையாளமாக்க் கொண்டாலும், பாடல்களே இப்படத்தை இன்று வரை மக்களிடம் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன. இசையரசியின் குரலில் இப்படத்தில் ஒலித்த பாடல்களனைத்துமே நெஞ்சை விட்டு அகலாதவை. அதே போல பாடகர் திலகம் இசையரசி பாடிய அல்லித்தண்டு காலெடுத்து மற்றும் ஞாயிறு என்பது கண்ணாக - இந்த இரு டூயட் பாடல்கள் இப்படத் மிகப் பெரும் அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தன, சேர்க்கின்றன, சேர்க்கும்.

    முதன்முறை கேட்டதிலிருந்து பல நாட்களுக்கு ஞாயிறு என்பது கண்ணாக பாடல் நடிகர் திலகம் நடித்தது என்றே எனக்குள் ஓர் எண்ணம் இருந்தது. பொதுவாக பொதுக்கூட்டம், கல்யாணங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் மைக் செட்காரரிடம் நட்பாகப் பழகி அந்த இசைத்தட்டை வாங்கிப் பார்ப்பதில் தனி பரவசம் ஏற்படும், அந்தப் பழக்கத்தில் தான் இந்தப்பாட்டின் இசைத்தட்டை ஒரு நிகழ்ச்சியில் வாங்கிப் பார்த்தபோது அது எஸ்.எஸ்.ஆர். என அந்த மைக் செட் காரர் சொன்னார். அவ்வளவு தான் புஸ்ஸென்று ஆகி விட்டது.

    50 ஆண்டுகளாகியும் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை. மீண்டும் நடிகர் திலகம் பிறந்து வந்தால் நிச்சயமாக இந்தப் பாடலுக்கு நீங்கள் நடித்தே ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுப்பேன்.



    பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்கிற்கு...
    நம் மனதில் தோன்றும் கதாநாயகி ...
    வேறு யார்.. நம்ம...



    அண்ணி தேவிகா தான்.

    அதே கண்ணாடி அதே உடையுடன் நடிகர் திலகம்... விஜயகுமாரியின் காஸ்ட்யூமில் தேவிகா..

    ஆனால்...

    தலைவர் எப்படி செய்திருப்பார்...

    தேவிகா அந்தப் பாறை மேல் அமர்ந்திருப்பார்.. தலைவர் மெல்ல அருகில் வருவார். அப்படியே அமர்ந்திருக்கும் தேவிகாவை முதுகு வழியாக வளைத்து மெல்ல எழுப்புவார்.
    மெல்ல முகவாய்க்கட்டையில் கைவைத்து முகத்தை சற்றே மேலே தூக்கியவாறு கண்களைப் பார்ப்பார். இப்போது காமிரா ஒரு விநாடி க்ளோஸப்பில் வரும்.
    பல்லவி துவங்கும் போது இரு கைகளையும் தேவிகாவின் இரு தோள்களில் போட்டு பாடத்துவங்குவார். நீரோடும் வைகையிலே சௌகார் ஜானகியை நினைவுறுத்திக் கொள்ளுங்கள்..
    ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக எனப் பாடும் போது தேவிகா முகத்தில் நாணம் தோன்ற மெல்ல நழுவி நடக்கத் தொடங்குவார். இந்த இடத்தைப் பொறுத்த வரையில் விஜயகுமாரியின் உடல் மொழி சிறப்பு. தலைவர் கூடவே மெல்ல இரு ஸ்டெப் வைத்து, சேர்ந்தே நடந்த்து அழகாக என பல்லவியை முடிப்பார்...

    இதன் பிறகு அனுபல்லவி முடிய எஸ்.எஸ்.ஆருக்கு பதில் நடிகர் திலகத்தை நினைவுறுத்திக் கொள்ளலாம்.

    நேற்றைய பொழுது கண்ணோடு எனச் சொல்லும் போது, தலைவரின் கண்கள் சற்றே மேல் நோக்கிப் பார்த்து கீழிறங்கும்.. ஆஹா.. இது இந்தப் பாட்டில் மிஸ்ஸாகிறதே...

    நிழலாய் நடப்பேன் பின்னோடு வரியின் போது தலைவர் கூடவே நடத்தி வருவார். ஒரு ஸ்டெப் மற்றுமே முன்னால் செல்வார். தேவிகாவோ அவரை ஒட்டினாற்போல் பின் தொடர்வார்.

    இதன் பின் வரும் பிஜிஎம் மில் தலைவரின் தனி நடை வரும். ஆனால் அது வேகமாக இருக்காது. மெஜஸ்டிக்காக மெதுவாக நடப்பார். தொடர்ந்து சரணம், ஊருக்குத் துணையாய் நானிருக்க.. வரியின் போது தான் மருத்துவர் என்பதை சித்தரிக்கும் விதமாக உடல் மொழி தருவார். எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன் என்ற வரியின் போது ஒரு புன்னகை புரிவார்.. இதழ்கள் முறுவலிக்க, சுட்டுவிரல் தேவிகாவின் இதயத்தை தொட்டுக் காட்டும். உள்ளத்தின் கைகளில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்... இந்த வரிக்கு தேவிகாவும் தலவரும் டைட் க்ளோஸப்பில் ஒருவரை யொருவர் பார்த்தபடி ஃப்ரேம் கம்போஸிங் இருக்கும். திரை முழுதும் இந்தக் காட்சி பார்க்க ரம்மியமாக இருக்கும்..

    இப்போது எஸ்.எஸ்.ஆர். இரு கைகளையும் நீட்டும் அதே உடல் மொழியைத் தலைவரும் உபயோகிக்கலாம். முகத்தை ஒரு பக்கம் சாய்த்தவாறு தேவிகவைப் பார்த்து சிரித்தவாறே தன் இரு கரங்களாலும் அவளை வளைத்து மார்போடு அணைத்துக் கொண்டு பாடுவார்.

    இப்போது தலைவராயிருந்தால் பிஜிஎம்மில் இருவரும் சற்று தூரம் நடந்து வருவார்கள். முன்னொரு பிறவி எடுத்திருந்தேன் என்ற வரிக்கு கையை நன்கு மேலே உயர்த்தி அப்படியே அந்தக் கையை தேவிகாவின் மேல் கொண்டு வந்து வைத்து உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன் எனப் பாடுவார். ஆனால் சிரிக்க மாட்டார். கண்களில் ஒரு விதமான ஏக்கம் வரும். பெண்ணொரு பிறவி எடுக்க வந்தேன், பேசியபடியே கொடுக்க வந்தேன் என்ற அடுத்த வரியை தேவிகா பாடுவதாக இருந்தால், சற்றே நெருக்கமாக மீண்டும் காமிரா ஜூம் செய்து கொண்டே போய் பேசிய படியே கொடுக்க வந்தேன் என்ற வரியில் கொடுக்க வந்தேன் என்ற வரியின் போது முகம் நாணி கைகள் மூடிக்கொண்டு விடும்.
    இப்போது பல்லவி தொடரும் போது தலைவராக இருந்தால் முகத்தில் ஓர் இனம் புரியாத உணர்வைக் கொண்டு வந்து தேவிகாவைப் பார்க்க, அவரும் தலைவரை அதே போன்ற உணர்வுடன் பார்க்க, காதல் உணர்வு அந்தக் காட்சியைப் பார்ப்பவர்களுக்கும் அப்படியே தொற்றிக்கொண்டு மூழ்கி விடுவார்கள்.
    அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தவாறே மெய்மறந்து கண்களை மூடி சாய்ந்து அமர, காமிரா ஜூம் அவுட் ஆகி அப்படியே டிசால்வ் ஆகி விடும்.

    .....

    ஹ்ம்.. இவ்வளவு அருமையான பாடல் தலைவருக்கு வாய்த்திருந்தால் நான் இப்படித்தான் எடுத்திருப்பேன்..

    இந்தப் பாடலில் தலைவர் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என அடிக்கடி

    நினைத்துப் பார்க்கிறேன்

    என்றாலும் ஒரு ஆறுதலுக்காக இதோ தலைவர் தேவிகா சூப்பர் ஸ்டில்...

    Last edited by RAGHAVENDRA; 28th November 2015 at 12:27 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks chinnakkannan thanked for this post
    Likes madhu, Russellmai liked this post
  10. #1746
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Think NT in this song. What a composition. a fantastic melody from Poovum Pottum.



  11. Likes Russellmai liked this post
  12. #1747
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy:Tamil Hindu


    காற்றில் கலந்த இசை 32 - சுகானுபவத்தின் ஒரு துளி!



    ஹிட் ஆன படங்களின் பாடல்களைத் தவிர, பாடல்களுக்காகவென்றே நினைவுகூரப்படும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. 1983-ல் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் பிரபு, அம்பிகா நடித்த ‘ராகங்கள் மாறுவதில்லை’ படமும் அதில் ஒன்று.

    சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முன்னிலையில் ஸ்பூர்த்தி எனும் சிறுமி பாடிய ‘விழிகள் மீனோ’ பாடலைக் கேட்ட 80-களின் ரசிகர்கள் பூரித்து நின்றார்கள். இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்காமலேயே வளர்கிறோமே என்று இளைய தலைமுறையினர் வருத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. கல்யாணி ராகத்தின் சாயலில் அமைந்த அந்தப் பாடல், காதலியை வர்ணித்துக் காதலன் பாடும் சாதாரண ‘சிச்சுவேஷ’னுக்காக இசைக்கப்பட்டதுதான். எனினும், அப்பாடல் தரும் இசைச் சுவை, சுகானுபவம், சஞ்சரிக்க வைக்கும் கற்பனை உலகம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை.

    அழகை ரசிக்கும் மனதின் ஆலாபனையாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங்குடன் தொடங்கும் இப்பாடல் இசையமைப்பாளருக்கும் பாடகருக்கும் இடையிலான பரஸ்பரப் புரிதலுக்கு மிகச் சிறந்த உதாரணம். தபேலா, மிருதங்கம் தாள வாத்தியங்கள் அமைத்துத் தரும் நடைமேடையில் புல்லாங்குழல் நடைபயில, பாடல் தொடங்கும். முதல் நிரவல் இசையில் வீணையின் நடைபாதையில் குறுக்கிடும் இரண்டு வயலின்கள் நெகிழ்ந்துருகியபடி உரையாடிச் செல்ல, துள்ளும் மானின் குதூகலத்துடன் புல்லாங்குழலும், அதை வியக்கும் வீணையின் சிலிர்ப்பும் அவற்றைத் தொடர்ந்து ஒலிக்கும்.

    இசைஞானமும் கற்பனையின் வீச்சும் எல்லையற்று விரிந்து கிடக்கும் இளையராஜாவின் படைப்பாற்றலின் சிறு துளி அது. இரண்டாவது நிரவல் இசையில் எஸ்.பி.பி.யின் ஜதிக்கும், மிருதங்கத்தின் தாளத்துக்கும் இடையில் சின்ன உரையாடல். உரையாடலுக்கு நடுவே மிருதங்கத்துடன் சேர்ந்து ஒலிக்கும் பேஸ் கிட்டார் தரும் பியூஷன் என்று அற்புதமான இசைத் தருணங்கள் நிறைந்த பாடல் இது.

    எஸ்பிபி பாடிய ‘தென்றலோ தீயோ’ எனும் தனித்தன்மை மிக்க பாடலும் இப்படத்தில் உண்டு. இரவின் மவுனத்தைக் கலைத்தபடி மெலிதாக ஒலிக்கும் கிட்டாருடன் பாடல் தொடங்கும். நினைவுகள் தரும் வலியைத் தாளாமல் புலம்பும் மனதின் மெல்லிய விசும்பலாக ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் எஸ்.பி.பி. மென்மையான தபேலா தாளக்கட்டில் நகரும் பாடல் இது.

    ‘தீண்டியது நானோ’ எனும் வரியில் குற்றவுணர்வில் பரிதவிக்கும் மனதின் ஊடாட்டத்தைப் பிரதிபலித்திருப்பார் எஸ்.பி.பி. நிரவல் இசையில் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று டூயட் பாடல்களுப் பயன்படுத்தும் இசைக் கருவிகளை வைத்து மென்சோகத்தை இசைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது சரணத்தில் ‘இளமைக் காலம்… உறவுக் கோலம்’ எனும் வரியில், அலைக்கழிக்கப்படும் மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.

    இப்படத்தின் மற்றொரு பாடலான ‘என் காதல் தேவி நீ என்னில் பாதி’ எனும் பாடலை உற்சாகத்தின் உச்சத்தில் நின்று எஸ்பிபி பாடியிருக்க வேண்டும். அத்தனை குதூகலமான பாடல் இது. உண்மையில் 80-களின் ‘ஈவ்டீஸிங் சிச்சுவேஷன்’ பாடல்களில் ஒன்றுதான் இது. எனினும், நிரவல் இசையின் இனிமை அந்த வகைப்பாட்டைத் தாண்டிப் பாடலைத் தூக்கி நிறுத்தும். எஸ்.பி.பி., ஷைலஜா பாடிய ‘நாளெல்லாம் நல்ல நாளே’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.

    இப்படத்தின் மிக முக்கியமான பாடல் எஸ். ஜானகி பாடிய ‘வான் மீதிலே அதிகாலை ’. பல ஆண்டுகளுக்கு முன்னர், அதிகாலை நேரத்தில் வானொலியில் கேட்ட பாடல் இது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலான மங்கலான உலகில் ஒலித்த அந்தப் பாடல் நினைவடுக்கின் ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடந்தது. 2000-களில் இணையத்தின் வழியாக இந்தப் பாடல் மீண்டும் கேட்கக் கிடைத்தது. இளையராஜாவின் இசையில் தனக்குப் பிடித்த பாடல்களாக, கிட்டார் இசைக் கலைஞர் பிரசன்னா எழுதியிருந்த பட்டியலில் இப்பாடலைக் கண்டதும் மனம் அடைந்த ஒளி வெள்ளத்தை இன்றும் உணர முடிகிறது.

    பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங், விடிகாலை வேளையில் நாணல்கள் அடர்ந்த ஓடைக் கரையில் பாடியபடி செல்லும் பெண்ணை மனதுக்குள் உருவகப்படுத்தும். பெண் குரல்களின் கோரஸுடன் சேர்ந்து ஒலிக்கும் ஜானகியின் ‘பப்பப்பா…’ எனும் ஹம்மிங் தரும் உணர்வு மிக நுட்பமானது. சோகத்தை மறைத்துக்கொண்டு பிறருக்காகப் பாடும்போதும், தன்னையும் மீறி வெளிப்படும் துயரத்தை அதில் அத்தனை அழகாகப் பிரதிபலித்திருப்பார் ஜானகி.

    பாடலின் தாளம் மிக வித்தியாசமானது. அடித்துக்கொள்ளும் மனதின் பிரதிபலிப்பாகப் பாடலின் டிரம்ஸ் தாளத்தை வடிவமைத்திருப்பார் இளையராஜா. முகப்பு இசையிலோ நிரவல் இசையிலோ இந்தத் தாளம் ஒலிக்காது. ஜானகி பாடும்போது மட்டும் இந்தச் சிறப்புத் தாளத்தை ஒலிக்க விட்டிருப்பார். வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், ஏமாற்றங்கள் என்று பல்வேறு தருணங்களின் தொகுப்பாக இப்பாடலின் நிரவல் இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

    குறிப்பாக, இரண்டாவது நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸுடன் இணைந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மூலம், பூடகமான எத்தனையோ விஷயங்களைச் சிதறவிட்டிருப்பார். பல்லவியில் ‘பாவை எந்தன் நெஞ்சம்தான் பாடும்’ எனும் வரியை ஜானகி சரியாக உச்சரிக்காததுபோல தோன்றும். ஆனால், புலம்பிக்கொண்டிருக்கும் மனதின் மொழி வார்த்தைகளுக்குள் அடங்கக்கூடியதா என்ன?

    

  13. Likes Russellmai liked this post
  14. #1748
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil HIndu

    சினிமா ரசனை 26: தமிழில் ஒரு படம்கூட இல்லை!




    தமிழ் சினிமாவின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை கவனித்தால், ஒரு விஷயம் பளிச்சென்று தெரிகிறது. அது பொழுதுபோக்கு. அன்றைய கீசக வதமாக இருந்தாலும் சரி, இப்போதைய வேதாளமாக இருந்தாலும் சரி, வணிகப் படங்களே பெரும்பாலும் வசூலில் வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றில் பாடல்கள், நகைச்சுவை, செண்டிமெண்ட், சண்டைக்காட்சிகள் முதலியவற்றோடு, கதாநாயகனைக் கடவுள் போல சித்தரிக்கும் காட்சிகளும் உண்டு. அண்டை மாநிலங்களில் தரமான திரைப்படங்கள் வரும் அளவுகூடத் தமிழில் படங்கள் இல்லை என்பதையும் சென்ற சில வாரங்களில் மேலோட்டமாகப் பார்த்தோம். அப்படியென்றால், ஒரு கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட முற்றிலும் ‘கமர்ஷியல்’ அம்சங்கள் கொண்ட படங்கள் வரவே கூடாதா? வந்தால் என்ன தவறு?

    கமர்ஷியல் படங்களின் முகம்

    கமர்ஷியல் படங்கள் அவசியம் வர வேண்டும் என்பதே என் கருத்தும். ஆனால், நடிகர்களைக் கடவுள் போல சித்தரித்து, அவர்களுக்காகவே காட்சிகள் எழுதி, ஒவ்வொரு காட்சியிலும் பஞ்ச் வசனங்கள், ரசிகர்களை நோக்கிய நாயகனின் வசனங்கள் முதலியவைகளை விட்டுவிட்டு, தரமான, சுவாரஸ்யமான திரைக்கதைகளை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கப்படும் ‘கமர்ஷியல்’ படங்களே என் விருப்பம். அப்படிப்பட்ட படங்கள்தான் திரைப்படம் பார்க்க வரும் ஆடியன்ஸை முழுமையாகத் திருப்திப்படுத்தும்.

    மாறாக அந்த நட்சத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து, அவருக்கென்றே காட்சிகள் எழுதி ஒரு படம் எடுத்தால், முதலில் சில நாட்கள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கங்கள் அதிர்ந்தாலும், சரக்கு இல்லாததால் படம் எளிதில் மறக்கப்பட்டுவிடும். யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட படங்கள் ஆண்டுதோறும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் எத்தனை படங்கள் நம் நினைவில் இருக்கின்றன?

    இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுவதற்கான மையநோக்கமாக, ‘ரசிகர்களின் விருப்பம்’ என்ற விஷயம் இயக்குநர்களாலும் தயாரிப்பாளர்களாலும் முன்நிறுத்தப்படுகிறது. அது போலவே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமும், ‘திரைப்படம் பார்த்தால் பொழுது போக வேண்டும்’ என்பதாகவே இருப்பதும் தெரிகிறது. அதில் தவறும் இல்லைதான். என்றாலும், இந்தியாவிலேயே நாம் ஏற்கெனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கும் சில மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து தரமான படங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அங்கே மட்டும் ரசிகர்கள் பொழுதுபோக்குக்காகத் திரையரங்கு வருவதில்லையா?

    எப்படிச் சாத்தியமானது?

    யோசித்துப் பார்த்தால், மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம் முதலிய மாநிலங்களில் ஆரம்ப காலம் தொட்டே மக்களின் மத்தியில் நல்ல ரசனை இருந்துவருகிறது என்பது புரிகிறது. இது எப்படிச் சாத்தியமென்றால், வணிகம் மற்றும் கலைக்கான வேறுபாட்டை நன்றாக அறிந்துகொண்டதன் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. அரசியல்வாதிகளும் நடிகர்களும் கடவுளர்க்கு நிகராகக் கருதப்படும் இடமாகத் தமிழகம் தொடர்கிறது. கேரளத்திலோ மேற்கு வங்கத்திலோ அரசியல்வாதிகள் இப்படிக் கருதப்படுவதில்லை.

    நடிகர்களுக்கும் கடவுளுக்கு இருப்பதுபோன்ற ரசிகர் பட்டாளம் இல்லை. அங்கே மக்களுக்குத் தெளிவான புரிதல் உண்டு. இந்தப் புரிதல் அவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது என்பதை யோசித்தால், அந்த மாநிலங்களில் தரமான ரசனை சிறுவயதிலிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டுவருகிறது என்பது புரியும். இலக்கியத்துக்கே அங்கே முதலிடம். இதனாலேயே நல்ல திரைப்படங்கள் அங்கே இயல்பாகவே வரவேற்கப்பட்டுவருகின்றன. இதனால்தான் மேற்கு வங்கம் இன்று தரமான திரைப்படங்களுக்காக இந்தியாவில் முதலிடம் பெறுகிறது.

    அப்படியே தமிழகத்தைக் கவனித்தால், இங்கே இலக்கியத்துக்கு என்ன இடம்? இலக்கியப் புத்தகங்கள் சில நூறு பிரதிகள் விற்றாலே அதிகம். ஜனரஞ்சகப் புத்தகங்களே இங்கே அதிகம் விற்கின்றன. சிறுவயது முதலே இங்கே ஜனரஞ்சகத்துக்கே முதலிடம். இதனால்தான் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் இங்கே கடவுளைக் கண்டதுபோலக் காண வருகின்றனர்.

    பொழுதுபோக்கு மட்டுமே அல்ல

    திரைப்படங்கள் மூலம் நிகழ்த்தக்கூடிய சமூக மாற்றங்களைப் பற்றி இங்கே மிகச் சிலருக்கே தெரிகிறது. திரைப்படங்களைக் காணும் பலரும் இன்னும் அவை பொழுதுபோக்குக்காகவே எடுக்கப்படுகின்றன என்றே கருதி வளர்கிறோம்.

    இந்த மனநிலை சமுதாயத்தில் அடித்தட்டு முதல் மேல்தட்டு வரை அனைவருக்குமே இருக்கிறது என்பதும் தெரிகிறது. மிகச் சமீபத்தில்தான் உலகப்படங்களைப் பற்றிய ஆர்வம் நமக்கு வந்துள்ளது. இதற்கு இணையம் ஒரு காரணம்.

    கர்நாடகத்தைப் பற்றி மேலே பார்த்தோம். இங்கு இலக்கியத்துக்கான வரவேற்பு கண்கூடாகத் தெரிந்த விஷயம். நான் பல வருடங்களாக இங்கே இருப்பதால் இது நன்றாகவே புரிகிறது. இங்கும் ஜனரஞ்சகக் கமர்ஷியல் படங்களூக்கான வரவேற்பு அதிகம் என்றாலும், அதே சமயம் நல்ல படங்களும் அவசியம் ஓடவே செய்கின்றன. இலக்கியப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்கின்றன. மக்களுக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. இது என் அனுபவம்.

    தமிழ் மக்களாகிய நாம், தமிழில் இதுவரை வந்திருக்கும் தரமான இலக்கியங்கள் எவை என்று தேடித்தேடிப் படிக்க வேண்டும். இலக்கியம் ஒருபுறம், ஜனரஞ்சக எழுத்து மறுபுறம் என்று இரண்டுக்குமே சம அளவு இங்கே வரவேற்பு வேண்டும். வாழ்ந்து மறைந்த எத்தனையோ இலக்கியவாதிகள் இங்கே அங்கீகாரமே இதுவரை இன்றியே இருந்திருக்கின்றனர்; இன்னும் இருந்துகொண்டிருக்கின்றனர். இவர்களது புத்தகங்களை நாம் அனைவரும் தேடிச்சென்று படிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஏனெனில், தரமான எழுத்துகள் நமது வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவை. இலக்கியத்தை உள்ளபடி புரிந்துகொண்டால் வாழ்க்கையில் பக்குவம் கூடும். அந்தப் பக்குவத்தால் எளிதில் நம்முன் இருக்கும் விஷயங்களைத் தரம் பிரித்து அறிந்துகொள்ள முடியும். அப்படி அறிந்துகொண்டால், எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று புரிந்துகொள்வோம். யார் பின்னாலும் ஓட மாட்டோம். நல்லவற்றை வரவேற்போம்.

    இலக்கியம் எழ வேண்டும்

    இப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இலக்கியம். இது மட்டும் நடந்துவிட்டால், பின்னர் தாமாகவே உலக அளவில் பேசப்படும் பல படங்கள் இங்கும் அவசியம் எடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலில் நமது தாய்மொழியில் இருந்து மறைந்த/எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகள் யார் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்களின் எழுத்துகளை நாம் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இதுதான் சிறந்த காலகட்டம். இப்போது இலவசமாகவே பல இலக்கியக் கூட்டங்களும் உலக சினிமாத் திரையிடல்களும் பரவலாகத் தமிழகமெங்கும் நடைபெற ஆரம்பித்துள்ளன. இதனை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் நமது ரசனை மாறும். ரசனை மாறினால் வாழ்க்கை மாறும். வாழ்க்கை மாறினால், தமிழகத்திலிருந்து அவசியம் பிரமாதமான உலகப்படங்கள் வெளியாகி, தமிழுக்கு நீங்காத பெருமையை அளிக்கும்.

    நன்றாக யோசித்துப் பார்த்தால், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஏழாவது மனிதன், அக்ரஹாரத்தில் கழுதை, வீடு, சந்தியா ராகம், காக்கா முட்டை, குற்றம் கடிதல், விசாரணை போன்ற பல படங்கள் இங்கே நம்மால் கொண்டாடப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லைதான். ஆனால், இவற்றைத் தமிழே தெரியாத ஒரு உலகப்பட ரசிகர் வேறொரு நாட்டில் இருந்துகொண்டு பார்க்கிறார் என்றால், ஒரு ‘பதேர் பாஞ்சாலி’யை அவர் ரசிப்பது போலவோ, ஒரு ‘மேகே தக்க தாரா’வை அவர் உணர்ந்து புரிந்துகொள்ளுவதைப் போலவோ இவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கவனித்தால், அது கொஞ்சம் கடினமே என்று புரியும்.

    இப்படங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் விருதுகள் வாங்கியிருப்பது போதாது. மாறாக, ஒரு சத்யஜித் ராய் படம் போல உலகெங்கும் பாராட்டுகளைக் குவிக்க வேண்டும். காக்காமுட்டை, குற்றம் கடிதல், விசாரணை ஆகியவை உலகில் சில திரைவிழாக்களில் வலம்வருகின்றன. அது அவசியம் பாராட்டத் தக்கதே. ஆனால், அதுவும் போதாது. வெனிஸ் பட விழாவிலோ, கான் பட விழாவிலோ அல்லது இவற்றைப் போன்ற மதிப்புக்குரிய உலகப் படவிழாக்களிலோ ஒரு தமிழ்ப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு தங்கச்சிங்கம் போன்றதொரு விருதை வாங்கினால் நமக்கு எவ்வளவு பெருமை? இன்றுவரை தமிழில் உலகத் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு படம்கூட இல்லை என்பது வருத்தம்தானே?

  15. Likes madhu, Russellmai liked this post
  16. #1749
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr CK Karna song for you. Arjun with your favourite actress Ranjitha. Any update pls share.



  17. Likes Russellmai liked this post
  18. #1750
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பஞ்சினும் மெல்லிய பாவையின் கண்களில்
    ரஞ்சிதம் பூத்திடும் ரம்யமாய் - நெஞ்சினில்
    நேரிழை நல்லெழில் நேர்பட நின்றுதான்
    தூறிடும் சாரலாய்த் தான்..

    கொஞ்சுமெழில் விஞ்சிவரக் கோலமெழில் கொண்டவளாய்
    கோதையிவள் வந்ததுவோர் வரலாற்றுப் படமென்றால்
    விஞ்சுகிற நடிப்பில்லை விந்தையெனக் கொள்ளைகொளும்
    ..வித்தையிலை இருந்தாலும் பலவிதமாய்ப் பாத்திரங்கள்
    கெஞ்சினரா கேட்டுத்தான் பெற்றனரா யாரறிவர்
    .கேள்விகளும் எழும்புகின்ற நேரத்திலே எழிலான
    வஞ்சியிவர் மணம்புரிந்தார் சிலகாலம் சென்றபின்னர்
    ..வாகாக முனிவரையே பணீந்தகதை ஊரறியும்..!


    எஸ்.வாசுதேவன் சார்.. இது ரொம்ப அநியாயம்.. ராகவேந்தர் அழகாக தேவிகையை ந.தியைப் பற்றி ஞாயிறு பாட்டுடன் எழுத நீரென்றால் ரஞ்சிதத்தைப் பற்றிக் கேட்டுவெனைத் தூண்டுகிறீர்..

    நாடோடித் தென்றலில் கொஞ்சம் நிறம்மட்டாய் வாத்துக்கூட்டத்துடன் கருப்பு மயிலாய் கொய்ங்க் கொய்ங்க் கென்று வந்து கார்த்திக்குடன் கொஞ்சிப் பாடியவர் அன்றோ இந்த ரஞ்சிதை..

    அதன் பின்னர் நடித்த படங்கள் கணக்கில..ஊர்,உலகம், தமிழ் சினிமாவுலகம் மறந்திருந்த போழ்தில் பாவம் பொண்ணு கல்யாணமாயிப் போய்டுச்சு என இருந்த போதில்- ரீ எண்ட்ரியாக நித்தி ஸ்வாமிகளின் செய்திகளில் தலைப்புச் செய்தியானார்.. இப்போது என்ன செய்கிறார் எனத் தெரியவில்லை..இல்லியோ..?

    அர்ஜூன் படங்களில் நிறைய நடித்திருப்பார் என நினைவு.. ஜெய்ஹிந்த் திடீரென வந்த விறுவிறுப்பான படம்.. அது ரிலீஸான போது துபாயில் இருந்த நினைவு. ஆனால் பாடல் எனது உறவுகாரப் பையனின் காரில் தான் முதன்முதல் கேட்டேன். என்னமோ வித்தியாசமாக கொஞ்சம் குறும்பு கலந்து கொஞ்சம் வல்கராகவும் இருந்த பாடல்..முத்தமிட ஏற்ற இடம்.. அவன் இது தமிழ் பாப் ஸாங்க் அங்கிள் என்றதையும் நம்பினேன்..படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது அது திரைப்பாடல் என. அதே படத்தில் கட்டெறும்பு கடிக்க விடும் பாடலும் உண்டு!

    இந்தப் பதிவுக்காக நான் முழுக்கக் கேட்காத நீதானா நாள் தோறும் நான் பாடக் காரணம்..பாட்டுவாத்தியார் ரமேஷ் அர்விந்த் ரன்ச்சு..!



    நெய்வேலியார் ஏற்கெனவே நாடோடித்தென்றல் பாட் போட்டுவிட்டா.ர்

    *
    வாஸ்ஸூ.. உயிர்மேல் ஆசை பாடல்கள் போடவில்லை எனச் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி..வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.. நீங்கள் போடாத பாடல்கள் ஏதாவது உண்டு என்று பார்த்தால் நானே ஏதாவது புதிய பழைய படம் எடுத்தால் தான் உண்டு என நினைத்திருந்தேன்! ஆக்சுவலா பாத்தீங்கன்னா நான் தேடியது பழைய உயிர் படப் பாடல்களை..ம்ம் இதுவரை சிக்கவில்லை..இப்போது சிக்கிவிடும்!

    ராகவேந்தர் சார்.. வழக்கம் போல நி.பா அருமை.. நன்றி..

    **

    எஸ்.வாசுதேவன் சார்.. ரஞ்சிதை என்னோட ஃபேவரிட் ஆக்ட்ரஸா.. யார் சொன்னா ஒரு சின்ன ரப்பர் எடுத்து அழிக்கவும்
    Last edited by chinnakkannan; 28th November 2015 at 11:58 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •