-
15th April 2016, 07:38 PM
#2351
Senior Member
Senior Hubber
அலைகள் சாந்தியில் தான் பார்த்தது என நினைக்கிறேன்..வெகு சின்ன வயதில் தான்.. சந்திரகலா பரிதாப ப் பட்ட பெண்ணாக வந்து விஷ்ணுவர்த்தனைக் காப்பாற்றுவார் காப்பாற்றி கடிமணம் புரிவார் இல்லியோ.. ஊமைப்பெண்ணை பேசச்சொன்னால் உறவோ, பொன் என்ன பூவென்ன கண்ணே இரண்டும் நினைவிருக்கிறது..மற்ற பாடல்களுக்கும் நன்றி வாசு ராகவேந்தர் மதுண்ணா..
எஸ்விசார்.. ஜல் ஜல் எனும் சலங்கையொலி என்னை மிகக் கவர்ந்த பாடல்களில் ஒன்று..அதுவும் சிலோன் ரேடியோவில் எத்தனை முறை கேட்டிருப்பேன்.. நன்றி..
-
15th April 2016 07:38 PM
# ADS
Circuit advertisement
-
15th April 2016, 07:39 PM
#2352
Senior Member
Senior Hubber
Originally Posted by
vasudevan31355
சின்னா!
'ராஜா' நட்பு பாசம் பறி போயிடும் போலிருக்கே!
'வினோத' நட்பு உருவாவுதே! உம்மா பேச்சை கேக்காம 'பாச'த்தால் மோசம் போனேனே!
'கோபலனோடு நான் ஆடுவேனேi
நந்த கோபாலன்...ஹாங்...
வேணு கோபாலன்
ஹாங்...
எல்லாம் காலம் வாஸ்ஸு.. தேர்தல் காலம்! எதுவும் நடக்கும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th April 2016, 07:47 PM
#2353
Senior Member
Senior Hubber
ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?// ஏற்காடு எனக்கு மிகப்பிடித்த ஊர்..சின்ன வயதில்..அதாவது கல்லூரி முடித்த இளமைக் காலத்தில் ஒரு நாள் காலையில் சேலத்தில் கிளம்பிச்சென்று இரவில் திரும்பியிருக்கிறேன்..பட் அந்த ஒரு நாள் முழுக்க நன்றாகவே மகிழ்ந்திருந்தது நினைவில் இருக்கிறது..அதன் பிறகு இரண்டாவது முறையாகவும் ஒரு நாள் போய்வந்தது நினைவில்.. நல்ல க்ளைமேட்..அவ்வளவாக ஸ்பாய்ல் ஆகாத பசுமை..அங்கிருந்த பள்ளி..ம்ம் இப்போ நிறையக் கட்டிடங்களா..
ஊட்டியும் அப்படித்தான்.. ஆறுவருடம் முன் ஜூனில் போனால் - இங்கு டிசம்பர் மாத மஸ்கட்டில் மெலிதாய் குளிரிருக்கும் - அதுபோலவே தான் இருந்தது..நிறையக் கட்டிடங்கள் + நிறையக் குப்பை..காஞ்ச் அந்திப்பட்டு பேசலாமே பாடும் நீர்வீழ்ச்சி(?) யில் பாறைகள் மட்டும் தான் கொஞ்சூண்டு தண்ணீர் சாஸ்திரத்திற்கு..ம்ம் கொடைக்கானலும் மாறிவிட்டது என்று சொன்னார்கள் கொடை..98ல் போனது..அதன் பிறகு இல்லை..
-
15th April 2016, 07:52 PM
#2354
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
ஆனால் கறுப்பு வெள்ளையில் ஏற்காட்டின் அழகை அள்ளி எடுத்து ( அந்த ஏரிக்கரையில் இப்போ எத்தனை கட்டிடங்கள் ... ?? ) வழங்கிய படமல்லவோ ?// ஏற்காடு எனக்கு மிகப்பிடித்த ஊர்..சின்ன வயதில்..அதாவது கல்லூரி முடித்த இளமைக் காலத்தில் ஒரு நாள் காலையில் சேலத்தில் கிளம்பிச்சென்று இரவில் திரும்பியிருக்கிறேன்..பட் அந்த ஒரு நாள் முழுக்க நன்றாகவே மகிழ்ந்திருந்தது நினைவில் இருக்கிறது..அதன் பிறகு இரண்டாவது முறையாகவும் ஒரு நாள் போய்வந்தது நினைவில்.. நல்ல க்ளைமேட்..அவ்வளவாக ஸ்பாய்ல் ஆகாத பசுமை..அங்கிருந்த பள்ளி..ம்ம் இப்போ நிறையக் கட்டிடங்களா..
ஊட்டியும் அப்படித்தான்.. ஆறுவருடம் முன் ஜூனில் போனால் - இங்கு டிசம்பர் மாத மஸ்கட்டில் மெலிதாய் குளிரிருக்கும் - அதுபோலவே தான் இருந்தது..நிறையக் கட்டிடங்கள் + நிறையக் குப்பை..காஞ்ச் அந்திப்பட்டு பேசலாமே பாடும் நீர்வீழ்ச்சி(?) யில் பாறைகள் மட்டும் தான் கொஞ்சூண்டு தண்ணீர் சாஸ்திரத்திற்கு..ம்ம் கொடைக்கானலும் மாறிவிட்டது என்று சொன்னார்கள் கொடை..98ல் போனது..அதன் பிறகு இல்லை..
அங்க யாராவது கைகுலுக்கினா(ங்க)ளா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th April 2016, 08:07 PM
#2355
Senior Member
Diamond Hubber
Originally Posted by
vasudevan31355
மதுண்ணா! ராகவேந்திரன் சார்,
விஷ்ணுவர்தனுக்கு பின்னணிக் குரல் யாருன்னு இப்போதான் 'அலைகள்' பார்த்து கொஞ்சம் கண்டு பிடிச்சேன். நீங்களும் சொல்லி அது மேட்ச் ஆயிட்டா தொகுதி நிலவரத்தை ஜனங்களிடம் வெளியிட்டு விடலாம்.
உங்க "ராஜா"வும்... சிக்காவின் வடமொழிப் பெயரும் இணைந்து வெற்றி எனும் இனிஷியல் கொண்டவர்தானே ?
-
15th April 2016, 08:14 PM
#2356
Senior Member
Senior Hubber
ஜெ.ராஜகிருஷ்ணாவா யார் அது ?!
ஏற்காட்டில யாரும் கை குலுக்கலை.இன்ஃபேக்ட் சேலத்தில் இருந்த அக்கா அத்திம்பேர் தான் ஒரு வருடத்தில் அய்யம்பேட்டை ட்ரான்ஸ்ஃபரில் செல்ல அங்கு மனது குலுக்கியவரைப் பற்றி ஏற்கெனவே பகின்றிருக்கிறேன் என்பதை நீவிர் அறிய மாட்டீரா என்ன வாஸ்ஸு.. (ஹா..என்னே தமிழ்)
-
15th April 2016, 09:03 PM
#2357
Senior Member
Diamond Hubber
Originally Posted by
madhu
உங்க "ராஜா"வும்... சிக்காவின் வடமொழிப் பெயரும் இணைந்து வெற்றி எனும் இனிஷியல் கொண்டவர்தானே ?
கரெக்ட்...கரெக்ட். அதுதான்...அதேதான். வீஜீ தான். உங்களுக்கு விஜயம்தான். கோகலே! கோகலே
Last edited by vasudevan31355; 15th April 2016 at 09:05 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th April 2016, 10:03 PM
#2358
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
எண்ண அலைகளைப் பாய விட்டு விட்டீர்கள்...
முதன் முதலில் ஓடியன் தியேட்டரில் பார்த்த பொழுது மெல்லிசை மன்னரின் இசைக்காகவும் ஸ்ரீதரின் இயக்கத்திற்காகவும் இப்படத்தை விரும்பிப் பார்த்தேன். எப்படி அவளுக்கென்று ஓர் மனம் முடிவில் ஒரு Hangover ஏற்படுத்தியதோ அதை விட அதிகமாக அலைகள் ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப் பாடல் தான் நெஞ்சில் நெகிழ்வூட்டியது. அன்று முதல் அடிக்கடி மனதில் இப்பாடல் எங்கோ ஓர் மூலையில் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு நிலைத்து நின்ற பாடல். உண்மையில் இப்போது பார்க்கும் போது, மெல்லிசை மன்னர்-கவியரசர்-எஸ்.ஜானகி இவர்களின் கூட்டணியை வைத்து ஸ்ரீதர் கொண்டு வந்த அற்புதமான பாடல் ஊமைப்பெண்ணைப் பேசச் சொன்னால். தாங்கள் கூறியது மிகவும் சரி. இந்த ட்யூன் தான் இதற்கு மிகவும் பொருததமாய் அமைந்து விட்டது.
இனி இப்பாடலைப் பற்றி என் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நாயகி சந்தர்ப்ப வசத்தால் ஒரு காமுகனால் விலைமாதராக வாழ்க்கையில் தள்ளப்படுகிறாள். நாயகன் அவளை எதிர்பாராத விதமாக அவளை சந்திக்கும் போது அவள் நிலை அறிந்து வருந்துகிறான். அவளுக்கு வாழ்வைக் கொடுக்க முன் வருகிறான். அவளுடைய சூழ்நிலை, அதற்கான காரணம் போன்றவற்றைக் கேட்கிறான். அவள் நேரில் சொல்லாமல் நழுவுகிறாள். தன் அறையில் இருக்கும் பொழுது அவள் அங்கே வருவது போன்று ஒரு பிரமை அவனுக்கு ஏற்படுகிறது. அப்போது அவள் அங்கே தோன்றி தன் மனநிலையை பாடலில் சொல்கிறாள். அவனுக்கோ இது உண்மையாய் அவள் சொல்கிறாளா இல்லை தான் ஏதாவது கனவு காணுகிறேனா என புரியாமல் அந்த பிரமையினுள்ளேயே மூழ்குகிறான்.
இந்த சூழ்நிலையில் தான் இந்தப் பாடல் அலைகள் படத்தில் இடம் பெறுகிறது. எஸ்.ஜானகியின் குரலில் இப்படி ஒரு உயிரோட்டமான உணர்வினை நாம் கேட்கும் போது நம்மை நாம் மெய்ம்மறந்து போவது உறுதி.
அவள் நுழைவதைச் சுட்டிக்காட்ட ஒரு Chord. Guitar and Sitar combination. அதனுடனே ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடல் துவங்குகிறது.
இப்போது நாயகி அவன் கண் முன் வருகிறாள். அவனுக்கும் அது கனவா இல்லை நினைவா என ஐயம் எழுகிறது., அவன் ஒரு விதமான சந்தேகப் பார்வையுடன் பார்க்கிறான். இதற்கான சூழ்நிலையை இந்த ஹம்மிங்கிலேயே மன்னர் உணர்த்தி விடுகிறார்.
...ஹம்மிங்...ஒலிக்கிறது...
பாடல் தொடங்குகிறது..
ஊமைப் பெண்ணைப் பேசச் சொன்னால் உறவோ இது நினைவோ வெறும் கனவோ
மீண்டும் வெறும் கனவோ என ஐயத்தை எழப்புவதன் மூலம் தன் ஐயத்தை அவன் மேலும் திணிக்கிறாள்.
அவனுக்கு தன் சூழ்நிலை என்பது கொஞ்சம் மறக்கும் நிலை ஏற்படுகிறது. உண்மையிலேயே அவள் தான் முன்னால் நிற்கிறாளா என உற்றுப் பார்க்கிறான்.
இதற்குப் புல்லாங்குழலும் குழு வயலின்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவனுடைய இந்த திடுக்கிடும் மனநிலையை சரியாக பிரதிபலிக்கும் வகையில் இந்த இசையமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனி புல்லாங்குழலை ஒருவிதமான மர்ம சூழலை பிரதிபலிக்க மன்னர் பயன்படுத்தியிருப்பது அவருடைய மேதைமையைப் புலப்படுத்துகிறது.
இப்போது சரணத்திற்கு முந்தைய பின்னணி இசை. ஷெனாய் என்னமாய் ஒலிக்கிறது..
(இது போன்ற ஷெனாய் இசையையெல்லாம் நாம் கவனிக்காமலேயே விட்டு விடுகிறோம். எல்லோருக்கும் தெரிந்தவற்றை விட்டு வெளிவந்து இது போன்ற அபூர்வ முத்துக்களைத் தேர்ந்தெடுத்து வெளியுலகிற்கு சொல்வதே மெல்லிசை மன்னருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.)
இப்போது...ஆஹா. தொடரும். அந்த சாரங்கி இசையை எப்படி சொல்வது.. அவனுடைய மன நிலையை - என்ன சொல்வது, என்ன செய்வது ஒன்றுமே தெரியாமல் விழிக்கும் த்த்தளிக்கும் மனநிலையை அந்த சாரங்கி சொல்கிறது.. அவளை சந்தித்த சூழலை சொல்கிறது...
இப்போது வயலின் மிகவும் குறைந்த மாத்திரை இடைவெளியிலும் சரணத்தை இணைக்கிறது. அதோடு அவள் மனதையும்...
இப்போது அவள் அவனை சந்தித்த அனுபவத்தை சொல்கிறாள்..
கூண்டுக்கிளியாக வாழ நினைத்தேன்.. தாங்கும் கை ஒன்று கண்டேன்...
அவளுக்கு அடைக்கலம் கொடுக்க அவன் முன் வந்ததை அவள் மனம் இவ்வாறு சொல்கிறது. கவியரசரின் பங்கிற்குக் கேட்கவா வேண்டும்.
இப்போது அவள் முகத்தில் வடியும் கண்ணீரை ஒரு கை துடிக்கிறது.
இங்கே இயக்குநரின் பங்கினை நாம் காண்கிறோம். அந்தக் கை யாருடையது என காட்டவில்லை.
அவள் அவனைத் தான் சொல்கிறாளா என்ற ஐயத்தை எழுப்பும் வகையில் இந்த கை மட்டும் திரையில் காட்டப்படுகிறது..
அது யாருடையதாக இருக்கும் என்ற ஐயத்தை பாடலைக் கேட்போர் பார்ப்போர் அறிய வேண்டாமா.. அதற்கு அந்த மர்மத்தை சொல்ல மீண்டும் புல்லாங்குழல் இங்கே...
இது வரை இருந்த தாளம் மாறி இப்போது தபேலா துவக்கம்...
இப்போது அந்த மர்மத்தை உடைத்து அந்த வரியை மீண்டும் பாடியபடியே அவள் அவனைப் பார்க்கிறாள். அவனுக்கு மனம் ஒரு நிலைக்கு வருகிறது..
இதற்குத் தான் தபேலா பயன்படுத்தினாரா மன்னர்.. கேள்வி எழுகிறதல்லவா...
நின்றன சொர்க்கங்கள் என் வாழ்வில் என்று ஓடி வர நோக்கி நின்றேன்...
தன் மனதில் எழுந்த சலனத்தை அவள் வெளிப்படுத்துகிறாள். தனக்கு ஓர் ஆறுதல், புகலிடம் கிடைத்த்து என்று மனம் லேசானதை வெளிப்படுத்துகிறாள். அதை எதிர்பார்ப்பதாக உணர்த்துகிறாள். இப்போது அவளுக்கு அது கோயிலாகத் தெரிகிறது. இதனை உணர்த்தும் வகையில் திரையில் ஒரு கோபுரம் நிழலாக மேலெழும்புகிறது...
இத்தனையும் நினைவு தானோ இல்லை கனவாகப் போய் விடுமோ என்று அவளுக்கு மனதில் ஓர் ஆதங்கம்.. இப்போது மிருதங்கம் (அல்லது டோலக்?) ஒலிக்கிறது.
பல்லவி ஒலிக்கிறது. முடியும் போது அவள் திரையிலிருந்து மறைகிறாள். அவன் அவள் மறையும் திசையைப் பார்க்கிறான்.
இப்போது முதலில் அவளை சந்தித்த போது ஏற்பட்ட கசப்பான நிகழ்வு அவன் மனத் திரையில் நிழலாடுகிறது. இது மறக்க வேண்டிய சம்பவம் என்பதாக அவன் முகத்தை திருப்பிக் கொள்கிறான். இதை சித்தரிக்க இங்கே மீண்டும் ஷெனாய்.. மனத்திரையில் இக்காட்சி முடியும் போது மிக்க் குறைந்த மாத்திரை அளவிற்கான நேரத்திற்குள் ஒரு சாரங்கி மீண்டும் ஒலிக்கிறது.
இந்த சாரங்கி அவள் உள் மனதை உலுக்குவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. அவள் பாடுகிறாள். தன் மனசாட்சியை வெளிப்படுத்துகிறாள்.
பெண்ணின் மனசாட்சி பேசும் பொழுது என்னை நீ காண முடியும்...
இந்த வரியின் மூலம் ஏராளமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவளால் பேச முடியாத நிலை. அவள் பேசும் பொழுது அவனைப் பற்றிய அவளுடைய உயர்ந்த எண்ணங்களைக் கூறுவாள். அதற்கான சந்தர்ப்பம் வரும் என்கிற நம்பிக்கை.. இத்தனையும் இந்த ஒரு வரியில்... கவியரசராயிற்றே...
முடியும் என்கிற பொழுது ஜானகியின் குரலில் வெளிப்படும் அந்த சங்கதிகள், அவள் மன நிலையை சொல்வதில் அவளுக்குள்ள உறுதியான நிலைப்பாட்டை சொல்வதாய் அமைத்திருக்கிறார்.
ஒவ்வொரு சங்கதிக்கும் மன்னர் ஒரு காரணம் வைத்திருப்பார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா..
கேயில் தீர்த்தங்கள் அபிஷேகமானால் எண்ணம் உனைத் தேடி அடையும்...
இரண்டாம் முறை அடையும் சொல்லும் போது அந்த ம்.. எழுத்திற்கு சங்கதி.. இங்கும் அவள் மன உறுதியை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் அவள் மனம் ஏங்குகிறது. இது நினைவோ வெறும் கனவோ..
ஆனால் இந்த முறை அது ஏக்கமாக பிரதிபலிக்கிறது. இது நினைவாக இருக்கக் கூடாதா என அவளுக்குள்ளேயே கேட்டுக் கொள்கிறாள்.
இப்போது பல்லவிக்குப் பிறகு அடுத்த சரணத்திற்கு முந்தைய பின்னிசை. இருவரின் மனநிலையும் மீண்டும் அல்லாடுகிறது. அதே போல அதை சித்தரிக்க மீண்டும் ஷெனாய், அதைத் தொடர்ந்து சாரங்கி.. பின் இந்த தெளிவற்ற மனநிலையை உணர்த்த புல்லாங்குழல் மீண்டும் ஒலிக்க, சரணம் தொடங்குகிறது..
பாலும் சிலர் கண்ணில் நீராகத் தெரியும் காணும் கண் செய்ய தவறு..
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்கிற வழக்கினை இந்த வரியில் கவியரசர் என்னவாய் வெளிப்படுத்துகிறார். அது அவளுடைய மன நிலை, அவன் அவளை சரியாகப் புரிந்து கொள்ளாத மனநிலை, ஏனென்றால் அவள் அவனுடைய காதலியாய் இருந்தவள் சந்தர்ப்ப வசத்தால் இது போன்ற சூழலில் அவனைப் பார்க்கிறாள், அதைத் தன் மனதின் குரலாய் வெளிப்படுத்துகிறாள்.
பாவங்கள் ஏதேனும் இருந்தால் யாவும் நான் கொண்ட அழகு... என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்..
பல்லவி மீண்டும் தொடர ...
கனவோ கனவோ ... என்று அவளுக்கு மனதிற்குள் இது கனவாகப் போய் விடுமோ என்கிற பயம்... அதனை வெளிப்படுத்தியவாறே மறைகிறாள்..
ஒரு மூன்று நிமிடங்கள் நம்மையும் அவர்களின் உலகத்தில் அழைத்துக் கொண்டு போய் விடுகிறார். மெல்லிசை மன்னர்..
இப்போது நமக்குள்ளும் ஒரு ஐயம் எழுகிறது..
மெல்லிசை மன்னர் மறைந்து விட்டார்... இது நினைவோ அன்றி கனவோ...
வேண்டாம் அவர் மறைவு என்பது கனவு..
அவர் நம்முடன் வாழ்கிறார் என்பது தான் நினைவு..
அது தான் நிஜம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
15th April 2016, 10:04 PM
#2359
Senior Member
Veteran Hubber
gopalanodu......
Originally Posted by
vasudevan31355
'கோபலனோடு நான் ஆடுவேனேi
நந்த கோபாலன்...ஹாங்...
வேணு கோபாலன்
ஹாங்...
From vaazhkkai (1949)
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th April 2016, 10:45 PM
#2360
Junior Member
Veteran Hubber
From the Treasure Island of GG with Pleasure!
கலாய்க்கிறாரே காதல் மன்னர் !....கும்பல் கூட இருக்கும் தைரியத்தில்.....
ஜெமினி கணேசன் அவர்கள் காதல் நாயகனாக வலம் வந்த போதும் காதலியுடன் இணைநது இனிமையான பாடல் காட்சிகளைத் தந்த போதும் இளமையான கூட்டத்தோடு சேர்ந்து காதலியைக் கலாய்க்கும் பாடல் காட்சிகளிலும் எல்லை மீறாத கண்ணியத்தைக் கடைப்பிடித்தார்!
பகுதி 1 பாக்கியலக்ஷ்மி.......(1961)காந்தக் கண்ணழகி ஈ வி சரோஜாவின் சிங்காரச் சோலையான இளமைக் கொண்டாட்டத்தில்.......
பகுதி 2 காதல் என்பது எதுவரை.....ஆராய்ச்சி முனைவர் ஜெமினி அம்பாரி ஆனையின் மேலே...
பாதகாணிக்கை!
பகுதி 3
பெண்கள் இல்லாத உலகத்திலே.....ஆண்களினாலே என்ன பயன்! சரணாகதி அடையும் காதல் கைதியும் ஜெமினியே!!...ஆடிப்பெருக்கு
பகுதி 4 வீர அபிமன்யு
கடவுளையே கலாய்க்கலாமா கன்னிப் பெண்கள் கூட்டம் ? மாயக் கண்ணனாக மயக்குகிறார் லீலா கிருஷ்ணர் ஜெமினி!!
Last edited by sivajisenthil; 15th April 2016 at 10:50 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks