Page 267 of 333 FirstFirst ... 167217257265266267268269277317 ... LastLast
Results 2,661 to 2,670 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    08/05/2016

    Happy Mothers' Day wishes and greetings from GG's elite thread!

    அமரர் ஜெமினி கணேசன் மேன்மைத் திரி சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

    வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சிறுவயதிலே பிரிந்த அன்னையை சிறையிலே மகன் சந்திக்க நேரும் உருக்கமான இறுக்கமான சூழலில் ஜெமினியின்
    உன்னதமான உணர்ச்சிக் குவியலான தாய்ப் பாசம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்புப் பாடமே !

    (தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை....ஹிந்தி பதிப்பான ராஜ்திலக்கில் நடிப்புச்செல்வம்....பாஷை எதுவானால் என்ன...அன்னையின் பாசம் புரிந்திட.....)




  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    08/05/2016


    வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சிறுவயதிலே பிரிந்த அன்னையை சிறையிலே மகன் சந்திக்க நேரும் உருக்கமான இறுக்கமான சூழலில் ஜெமினியின்
    உன்னதமான உணர்ச்சிக் குவியலான தாய்ப் பாசம் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்புப் பாடமே !


    ஜெமினி திரியில் நான் முன்னம் எழுதிய (30th May 2015) பதிவிது. இங்கே இப்போது பதிவிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன்.



    வஞ்சிக் கோட்டை திவானின் மகன் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு, கொடுஞ்சிறையில் வெந்து தணிந்து, வேதனை அனுபவிக்க, பக்கத்து சிறையில் சொந்தத் தாயும் அடைபட்டுக் கிடக்க, தாய் அறையின் கல்லுடைத்து தப்பி வந்து மகனிடம் வந்து சேர, அதுவரை அநாதை என்று தன்னை எண்ணிக் கொண்டிருந்த மகன் தாய் தன் மகனை அடையாளம் கண்டு வரலாறு கூறி அவன் அநாதை இல்லை என்று ஆறுதல் அளித்து அள்ளி மகிழும் போது ஆனந்தம் பொங்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். சிறையிலிருந்து தப்பி வெளியேற சிறைக் கற்களை தாயுடன் சேர்ந்து பெயர்க்கிறான். தப்ப வழி கிடைக்கும் சமயத்தில் தாய் தன் உயரை விடுகிறாள். துவல்கிறான்... அழுகிறான்... புரள்கிறான்... புலம்புகிறான்.... துடிக்கிறான் துன்பத்திலேயே உழன்ற மகன்.

    அற்ப நேரம் அன்னையுடனான அன்னியோன்யத்தை எண்ணி அழுகிறான். கொள்ளி போடவும் கொடுஞ்சிறையில் வழி ஏதுமில்லை.

    இருந்தால் என்ன?

    அன்னையைப் புதைக்க அங்கேயே சவக்குழி தோண்டுகிறான். அதுவரை இருந்த பொறுமை அறவே அழிந்து பொங்கி எழுகிறான். சிறைக்கு வரும் காவலாளியைத் தாக்கி, மற்றவர்களையும் தாக்கி தான் குடும்பத்தை நாசம் செய்த வஞ்சகனை பழி வாங்கத் தப்புகிறான் தண்ணீரில் குதித்து.

    மகனாக ஜெமினி. தாயாக கண்ணாம்பா. உணர்ச்சிமிகு கட்டங்கள். தாயும் மகனும் சிறையில் சந்திக்கும் காட்சி உணர்சிக் குவியல்களின் சங்கமம்.

    தாடியும் மீசையுமாய் பொலிவிழந்த முகத்துடன் நலிந்த, உருக்குலைந்த தோற்றத்துடன் நடிப்பில் உருக்குலையாத ஜெமினி.

    சோகங்கள் கவ்வ தாயைப் பார்த்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சியை காட்டுவதிலாகட்டும்...தாய் தான் பறி கொடுத்த தங்கையை பற்றிக் கேட்டதும் துவண்டு 'அவளை எமனிடம் பறி கொடுத்து விட்டேனம்மா' என்று கதறுவதாகட்டும்... அனாதையாகக் காரணமாயிருந்த அப்பாவின் மேல் கொள்ளும் கோபமாகட்டும்... அவர் நல்லவர் என்று சொல்லி அன்னை நம்பிக்கையூட்ட, பின் அவர் மேல் கொள்ளும் தாபமாகட்டும்... அன்னை தன் மடியில் உயிர்விடும்போது நிலை குலைந்து சிலை போல அசைவற்றுப் போவதாகட்டும்... அவளின் துயரங்களை நினைத்து துன்பப்படுவதாகட்டும்... சிலிர்த்தெழுந்து சிறு கடப்பாரையில் மாதாவின் அடக்கத்திற்கு மண் தோண்டுவதாகட்டும்... உள்ளே கிடந்த வீரம் வீறு கொண்டு எழுந்து அங்கு வரும் வீரர்களை உருண்டு புரண்டு சாயப்பதிலாகட்டும்...

    அம்மா அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள்
    அழுது புரண்டாலும்
    மகனே!
    அன்னை வருவாளோ!
    உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ!
    முன்னை தவமிருந்து
    உன்னை முன்னூறு நாள் சுமந்து
    பொன்னைப் போலே உன்னை
    போற்றி வளர்த்திட்ட
    அன்னை வருவாளோ!
    கொள்ளி இடவும் வகையில்லை
    என்றே நீ கொடுஞ்சிறையில்
    கலக்கம் கொள்ளாதே!
    அள்ளி இட அரிசி இல்லையென்றால் என்ன?
    அன்பை சொரிவாய் மகனே!
    கண்ணீராலே நீராட்டு
    அன்னை தன்னை
    மண் மேலே தாலாட்டு

    என்று 'இசைச் சித்தர்' தனக்கே உரிய பாணியில் பின்னணியில் உருகிப் பாட,

    ஜெமினி இந்தக் காட்சிகளில் நம் மனதை தன் ஆழமான அழும் நடிப்பால் தோண்டி விடுவார். அந்த இயல்பான சோகம் அதுவும் தாய் இறந்தவுடன் அவர் காட்டும் அவர் மேல் கருணை பிறக்க வைக்கும் முகபாவங்கள் முத்திரைதான். அவருடன் சேர்ந்து நம் கண்களும் கலங்கத்தான் செய்யும்.

    'வஞ்சிக் கோட்டை வாலிபனி'ல் என்னை மிக மிக பாதித்த காட்சி இது.
    Last edited by vasudevan31355; 7th May 2016 at 11:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #3
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நேரம் தவறாமை, திறமை, நேர்மை, தமிழ் உச்சரிப்புப் பாவனைகளின் நேர்த்தி, நடிப்பாளுமை இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை மீது காட்டிய அன்பு
    பாசம் பக்தி
    ...வாழ்ந்து காட்டிய உதாரண மாமனிதர் நடிகர்திலகத்தின் கண்ணியத் திரி சார்ந்த உலக அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!



    From telugu version of Deiva Makan!


  7. Likes Russellmai liked this post
  8. #4
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்..அவள் இப்படித் தானிருப்பாள்.. பாரதி தானே..


  9. Likes Russellmai, vasudevan31355 liked this post
  10. #5
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நீண்ட நாட்களுக்குப் பின் காட்டுப் பூச்சியாரின் தயவில் இளமைக்காலங்களில் மிகவும் ரசித்த இசைமேடையை மீண்டும் அனுபவித்துச் சுவைத்தேன். நன்றி காட்டுப் பூச்சியாரே. ஒரு சிறு விண்ணப்பம். தங்கள் பெயர்க்காரணம் கேட்டு நண்பர்கள் என்னிடம் போனில் நச்சரிக்கிறார்கள். விளக்கம் அளிக்கவும். எனக்கும் சேர்த்துத்தான்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Likes chinnakkannan liked this post
  12. #6
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எப்போ கேட்டாலும் இனிக்கும் பாட்டு..

    கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
    கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
    என்ன என்ன என்றாரம்பம்
    இன்பம் இன்பம் இன்றாரம்பம்
    .
    மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
    மார்பில் மூடும் ஆடை மயக்கத்தாலே சரிந்ததோ
    பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
    பார்வை மோதும் வேளை பருவராகம் இசைத்ததோ
    நாணம் விடாதோ அம்மம்மா பெண்களே
    வேண்டும் நிதானம் அம்மம்மா ஆண்களே

    என்ன என்ன என்றாரம்பம்
    இன்பம் இன்பம் இன்றாரம்பம்
    .
    கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
    கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
    என்ன என்ன என்றாரம்பம்
    இன்பம் இன்பம் இன்றாரம்பம்
    .
    கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
    கொதிக்கும் இந்த உடலை குளிரச்செய்ய வழியென்ன
    கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
    கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும் பைங்கிளி
    வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ
    தருவார் தராமல் பெண் மேனி தூங்குமோ

    என்ன என்ன என்றாரம்பம்
    இன்பம் இன்பம் இன்றாரம்பம்

    அந்த ஒரு செகண்ட் இசையில்லாத மெளனம் பேசும் வார்த்தைகள் தான் என்னே!




  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, vasudevan31355 liked this post
  14. #7
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எங்கே எங்கே என்மனது
    அது அங்கே இருந்தால் தந்துவிடு..


  15. Likes Russellmai, vasudevan31355 liked this post
  16. #8
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு என்பதன் விரிவாக்கம் வார்த்தைகளின் சுரங்கம் என்பதே !

    சில திரைப்படங்களின் சில காட்சிகள் கல்வெட்டுக் கீற்றாய் மனதில் ஆழமான வடுவாய்ப் பதிந்து அந்தப் பிரமிப்பிலிருந்து நம்மால் என்றுமே விடுபட இயலாது என்பதற்கு அமரர் ஜெமினி கணேசனின் சாகாவரம் பெற்ற நடிப்புப் பதிவுகளில் இக்காட்சியும் ஒன்றே !!

    ஒரே அலைவரிசையில் நமது எண்ணங்கள் இருக்கின்றன என்று பெருமைப் படுத்தியமைக்கு நன்றி வாசு சார் !

    செந்தில்
    Last edited by sivajisenthil; 8th May 2016 at 12:12 AM.

  17. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355, chinnakkannan liked this post
  18. #9
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வ. கோ வாலிபனில் எனக்கு வைஜயந்தி மாலா ரொம்ப ப் பிடிக்கும்.. அனாவசியமாகச் சாகடித்தது பிடிக்காது..

  19. Thanks eehaiupehazij thanked for this post
  20. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பிஎஸ் வீரப்பா ஏன் மந்தாகினியைக் கொன்றார்? என்றுபாகுபலி ராஜமௌலியாரிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வோம் வஞ்சிக்கோட்டை வாலிபன் 2 எடுத்து வைஜயந்தியின் பாத்திரத்தை உயிர்ப்பித்து சின்னக் கண்ணரை குஷிப்படுத்திட!!

  21. Thanks chinnakkannan thanked for this post
    Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •