Page 260 of 397 FirstFirst ... 160210250258259260261262270310360 ... LastLast
Results 2,591 to 2,600 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Hybrid View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    100 Days Films List

    Film Name /

    Place Name(s)

    (1952-1960)

    Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
    Thirimbipar Selam
    Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
    Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
    Ethir Parathathu Chennai, Trichy
    Kaveri Vellor
    Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
    Pennin Perumai Chennai(3), Trichy, Selam
    Amaradeepam Chennai, Trichy
    Vanangamudi Chennai(2), Trichy
    Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
    Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
    Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
    Sabash Meena Chennai, Selam
    Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
    Maragadham Chennai
    Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
    Irumbuthirai Kovai
    Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
    Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
    Vidi Velli Chennai(2), Madurai

    (1961-1970)

    Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
    Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
    Sri Valli Colombu
    Marutha Naatu Veeran Kerala
    Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
    Paarthal Pasi Theerum Madurai, Selam
    Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
    Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
    Iruvar Ullam Chennai, Madurai, Colombu
    Annai Illam Chennai
    Karnan Chennai(3), Madurai
    Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
    Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
    Pudhiya Paravai Chennai
    Navarathri Chennai(4), Madurai, Trichy
    Santhi Chennai
    Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
    Motar Sundaram Pillai Madurai, Trichy
    Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
    Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
    Iru Malargal Chennai, Trichy, Selam
    Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
    Galatta Kalyanam Chennai(2)
    Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
    Uyarntha Manithan Chennai
    Deivamagan Chennai(3), Madurai, Trichy
    Thirudan Colombu
    Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
    Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
    Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
    Raman Ethanai Ramanadi Madurai, Colombu
    Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
    Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli

    (1971-1980)

    Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
    Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
    Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
    Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
    Gnana Oli Chennai
    Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
    Thavapudhalvan Chennai
    Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
    Needhi Chennai
    Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
    Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
    Kouravam Chennai(3), Madurai, Selam
    Vani Rani Madurai
    Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
    En Magan Madurai
    Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
    Mannavan Vanthanadi Chennai(3)
    Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
    Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
    Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
    Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
    Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
    General Chakaravarthi Chennai, Yazh Nagar
    Thatcholi Ambu(Malayalam) Kerala
    Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
    Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
    Naan Vazhzvaippen Chennai
    Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
    Rishimoolam Chennai(3)
    Viswaroopam Chennai

    (1981-1990)

    Satthiya Sundaram Chennai, Selam
    Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
    Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
    Va Kanna Va Chennai(3)
    Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
    Neevuru Kappina Neppu(Telugu) Andhra
    Bejavaada Boppuli(Telugu) Andhra
    Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
    Sandhippu Chennai(3), Madurai, Trichy
    Miruthanga Chakravarthy Chennai
    Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
    Thiruppam Chennai
    Vazhkkai Chennai(3)
    Dhavanik kanavugal Chennai
    Bandham Chennai
    Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
    Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
    Sadhanai Chennai(2)
    Marumagal Chennai(2)
    Viswanatha Nayakudu (Telugu) Andhra
    Agni Puthrudu (Telugu) Andhra
    Jallkikattu Chennai(2)
    Pudhiya Vanam Chennai

    (1991-1999)

    Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
    Oru Yathramozhi(Malayalam) Kerala
    Once More Chennai(2)
    Padaiyappa
    நன்றி - லிஸ்டில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படங்களில் சில இடம் பெற வில்லை - ஓடியிய திரை அரங்குகளும் அதிகம் -

    1. லிஸ்டில் சேர்க்க மறந்த படங்கள்


    திருவருட்செல்வர் (சென்னை )
    விளையாட்டுபிள்ளை (மதுரை )
    என்தம்பி
    சங்கலி
    தியாகி ( ஸ்ரீலங்கா)
    பரீட்சைக்கு நேரமாச்சு (சென்னை)
    பெஜவாடா பொப்பிலி (ஆந்திரா )
    விடுதலை (சென்னை)
    ராஜா பார்ட் ரங்கதுரை ( சென்னை)
    ராஜராஜ சோழன் (சென்னை)
    சத்யம் ( யாழ் வின்சர் -ஸ்ரீலங்கா)
    சந்திர குப்த சாணக்கியா ( ஆந்திரா )
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks Harrietlgy thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மிக மிக விரும்பி சுவைத்த சிவாஜி பட காதல் பாடல் காட்சிகள் .

    மயக்கம் என்ன - வசந்த மாளிகை
    ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
    மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
    நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
    அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
    மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
    விண்ணோடும் முகிலோடும்-புதையல்
    காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
    கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்

    ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
    உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
    நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
    கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
    வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
    பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
    அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
    எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
    மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
    இனியவளே- சிவகாமியின் செல்வன்

    சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
    சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
    முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
    அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
    வாழ நினைத்தால்- பலே பாண்டியா
    அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
    காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
    புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
    ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
    வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்

    மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
    வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
    பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
    இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
    ஒன்றா இரண்டா- செல்வம்
    பாவை யுவராணி-சிவந்த மண்
    கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
    பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
    காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
    கல்யாண பொண்ணு- ராஜா

    நீ வர வேண்டும்- ராஜா
    கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
    பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
    இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
    ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
    ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
    ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
    இங்கே ஆஹா இங்கே-பாலாடை
    கங்கை யமுனை- இமயம்
    அந்தபுரத்தில்-தீபம்

    நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
    அந்தமானை- அந்தமான் காதலி
    காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
    திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
    யமுனா நதி இங்கே-கவுரவம்
    இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
    மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
    ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
    வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
    மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்

    தேவன் வந்தாண்டி- உத்தமன்
    நாளை நாளை - உத்தமன்
    தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
    செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
    புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
    பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
    இரவும் நிலவும்- கர்ணன்
    கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
    கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
    தேனுண்ணும் வண்டு- அமர தீபம்

    நிறைவேறுமா - காத்தவராயன்
    முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
    அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
    தேன் மல்லி பூவே- தியாகம்
    ஆஹா மெல்ல நட -புதிய பறவை
    சிட்டு குருவி- புதிய பறவை
    எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
    அமைதியான-ஆண்டவன் கட்டளை
    நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
    இன்று நமதுள்ளமே- தங்க பதுமை

    மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
    இகலோகமே- தங்க மலை ரகசியம்
    பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
    மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
    வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
    தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
    என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
    நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
    அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
    கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
    யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்

    கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
    மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
    கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
    நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Thanks Russellmai thanked for this post
    Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  6. #3
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Pammalar,

    What happened to Nadigarthilagam Pugazh Malai with all his Still from his Movies? We have been hearing since 2012 but not yet released.(Don't worry Murali,I am leaving our contribution Part).I feel little disappointed with Pammalar sluggish indifference.



    http://i1146.photobucket.com/albums/...psaea4ae92.jpg
    Last edited by Gopal.s; 20th January 2016 at 10:04 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #4
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

    ஒரு குளிர்சாதன(ஏ.சி.)டீலக்ஸ் திரையரங்கில்(சாந்தி) வெள்ளி விழாக் கண்ட முதல் திரைப்படம் பாவமன்னிப்பு. 1961-ம் ஆண்டின் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமான பாவமன்னிப்பு, சாந்தியில் 177 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது. பாவமன்னிப்பு தொடங்கி சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனைகளை தொடர்ந்து வரும் பட்டியலில் காணலாம்.
    (திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)


    1. பாவமன்னிப்பு - 16.3.1961 - 177 நாட்கள்

    2. பாலும் பழமும் - 9.9.1961 - 127 நாட்கள்

    3. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 75 நாட்கள்

    4. வளர்பிறை - 30.3.1962 - 35 நாட்கள்

    5. பலே பாண்டியா - 26.5.1962 - 49 நாட்கள்

    6. செந்தாமரை - 14.9.1962 - 43 நாட்கள்

    7. பந்தபாசம் - 27.10.1962 - 55 நாட்கள்

    8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்

    9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்

    10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்

    11. பார் மகளே பார் - 12.7.1963 - 64 நாட்கள்

    12. இரத்தத்திலகம் - 14.9.1963 - 81 நாட்கள்

    13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்

    14. பழநி - 14.1.1965 - 42 நாட்கள்

    15. சாந்தி - 22.4.1965 - 100 நாட்கள்

    16. திருவிளையாடல் - 31.7.1965 - 179 நாட்கள்

    17. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - 78 நாட்கள்

    18. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 133 நாட்கள்

    19. நெஞ்சிருக்கும் வரை - 2.3.1967 - 71 நாட்கள்

    20. திருவருட்செல்வர் - 28.7.1967 - 63 நாட்கள்

    21. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 107 நாட்கள்

    22. திருமால் பெருமை - 16.2.1968 - 56 நாட்கள்

    23. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்

    24. தில்லானா மோகனாம்பாள் - 27.7.1968 - 132 நாட்கள்

    25. அன்பளிப்பு - 1.1.1969 - 30 நாட்கள்

    26. தங்கச்சுரங்கம் - 28.3.1969 - 78 நாட்கள்

    27. குரு தட்சணை - 14.6.1969 - 41 நாட்கள்

    28. தெய்வமகன் - 5.9.1969 - 100 நாட்கள்

    29. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்

    30. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970 - 75 நாட்கள்

    31. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்

    32. தங்கைக்காக - 6.2.1971 - 83 நாட்கள்

    33. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்

    34. பாபு - 18.10.1971 - 102 நாட்கள்

    35. பட்டிக்காடா பட்டணமா - 6.5.1972 - 146 நாட்கள்

    36. வசந்த மாளிகை - 29.9.1972 - 176 நாட்கள்

    37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்

    38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்

    39. கௌரவம் - 25.10.1973 - 102 நாட்கள்

    40. தங்கப்பதக்கம் - 1.6.1974 - 176 நாட்கள்

    41. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 113 நாட்கள்

    42. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 114 நாட்கள்

    43. பாட்டும் பரதமும் - 6.12.1975 - 69 நாட்கள்

    44. உத்தமன் - 26.6.1976 - 70 நாட்கள்

    45. தீபம் - 26.1.1977 - 135 நாட்கள்

    46. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்

    47. தியாகம் - 4.3.1978 - 104 நாட்கள்

    48. ஜெனரல் சக்கரவர்த்தி - 25.6.1978 - 105 நாட்கள்

    49. திரிசூலம் - 27.1.1979 - 175 நாட்கள்

    50. இமயம் - 21.7.1979 - 48 நாட்கள்

    51. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 56 நாட்கள்

    52. ரிஷிமூலம் - 26.1.1980 - 104 நாட்கள்

    53. ரத்தபாசம் - 14.6.1980 - 83 நாட்கள்

    54. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்

    55. சத்திய சுந்தரம் - 21.2.1981 - 105 நாட்கள்

    56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

    57. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்

    58. வா கண்ணா வா - 6.2.1982 - 104 நாட்கள்

    59. தீர்ப்பு - 21.5.1982 - 105 நாட்கள்

    60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

    61. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 73 நாட்கள்

    62. நீதிபதி - 26.1.1983 - 141 நாட்கள்

    63. சந்திப்பு - 16.6.1983 - 100 நாட்கள்

    64. மிருதங்க சக்கரவர்த்தி - 24.9.1983 - 100 நாட்கள்

    65. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்

    66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

    67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

    68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

    69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்

    70. பந்தம் - 26.1.1985 - 105 நாட்கள்

    71. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்

    72. முதல் மரியாதை - 15.8.1985 - 177 நாட்கள்

    73. ஆனந்தக்கண்ணீர் - 7.3.1986 - 63 நாட்கள்


    74. வீரபாண்டியன் - 14.4.1987 - 32 நாட்கள்

    75. அன்புள்ள அப்பா - 16.5.1987 - 34 நாட்கள்

    76. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 70 நாட்கள்

    77. கிருஷ்ணன் வந்தான் - 28.8.1987 - 49 நாட்கள் (பகல் காட்சியில்)

    78. என் தமிழ் என் மக்கள் - 2.9.1988 - 35 நாட்கள்

    79. புதிய வானம் - 10.12.1988 - 100 நாட்கள்

    80. ஞான பறவை - 11.1.1991 - 21 நாட்கள்

    81. பசும்பொன் - 14.4.1995 - 56 நாட்கள்

    குறிப்பு:
    ஒரு நடிகரின், இரு புதிய திரைப்படங்கள், ஒரே நாளில் ஒரே திரையரங்கில் (அதுவும் மிகப் பெரிய திரையரங்கமான சாந்தி திரையரங்கில்) பகல் காட்சியாகவும், ரெகுலர் காட்சிகளாகவும் வெளியானது எமக்குத் தெரிந்த வரை நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
    (தேதி : 28.8.1987, திரைப்படங்கள் : கிருஷ்ணன் வந்தான்(பகல் காட்சி), ஜல்லிக்கட்டு(3 காட்சிகள்))

    சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகளின் புள்ளி விவரங்கள்:

    பாவமன்னிப்பு முதல் பசும்பொன் வரை வெளியான புதிய தமிழ்த் திரைக்காவியங்கள் : 81

    இதில் வெள்ளி விழா கண்டவை : 6

    20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடியவை : 2

    100 நாட்கள் முதல் 139 நாட்கள் வரை ஓடியவை : 33

    10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடியவை : 12

    50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை ஓடியவை : 9

    43 நாட்கள் முதல் 49 நாட்கள் வரை : 7

    6 வாரங்கள் வரை : 12

    சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !

    சாந்தி சாதனைகள் நிறைவு.

    சிங்கத்தமிழனின் சாந்தி சாதனை விளக்கங்கள் விரைவில் ...

    அன்புடன்,
    பம்மலார்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #5
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-

    1952- 1960
    தேசம் ஞானம் கல்வி(பராசக்தி), ஆணும் பெண்ணும்,சுந்தரி சௌந்தரி,குரங்கிலிருந்து,அபாய அறிவிப்பு,ஏறாத மலைதனிலே,(தூக்கு தூக்கி), விண்ணோடும் முகிலோடும்(புதையல்), சிவதாண்டவம்(ராணி லலிதாங்கி),யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), கனவின் மாயா லோகத்திலே(அன்னையின் ஆணை),காணா இன்பம்(சபாஷ் மீனா), கண்டேனே உன்னை கண்ணாலே(நான் சொல்லும் ரகசியம்),தேரோடும் எங்க சீரான மதுரையிலே(பாக பிரிவினை), கொடுத்து பார் பார் பார்(விடிவெள்ளி).


    1961-1970
    பறவைகள் பலவிதம்(இருவர் உள்ளம்),வந்தேனே (நவராத்திரி), பார்த்தா பசு மரம்(திருவிளையாடல்),ஓஹோஹோ little flower (நீலவானம்)டே க்கா கொடுக்கதப்பா,பத்து மாதம்(பேசும் தெய்வம்),அய்யய்யா, நான் பொறந்தது தஞ்சாவூரு(என் தம்பி), ஹாப்பி இன்று முதல் (ஊட்டி வரை உறவு),தங்க தேரோடும், போட்டாளே (லட்சுமி கல்யாணம்),ஏழு கடல்(எங்க ஊர் ராஜா), டான்ஸ் நிர்மலாவுடன் (தங்க சுரங்கம்),கோயில் டான்ஸ்(குரு தக்ஷிணை),அன்புள்ள நண்பரே,காதலிக்க கற்று கொள்ளுங்கள்(தெய்வ மகன்),ஆடல் காணலாம்(நிறை குடம்),என்னங்க (எங்க மாமா),சிரிப்பில்(எங்கிருந்தோ வந்தாள் ),பொன்மகள்(சொர்க்கம்).

    1971-1980
    தேரு பார்க்க(இரு துருவம்),பொட்டு வைத்த, ஒரு தரம் (சுமதி என் சுந்தரி),வரதப்பா(பாபு),கல்யாண பொண்ணு(ராஜா),அம்பிகையே,அடி என்னடி,கேட்டுகோடி (பட்டிக்காடா பட்டணமா), love is fine (தவ புதல்வன்), ஏன் ஏன் ஏன் ,குடிமகனே, ஆதி வாசி மழை டான்ஸ்(வசந்த மாளிகை),மாப்பிள்ளையே(நீதி), சிவதாண்டவம்(பொன் ஊஞ்சல்),மும் மும் மும் முத்தங்கள் (எங்கள் தங்க ராஜா), I will sing for you (மனிதரில் மாணிக்கம்), இனியவளே ,ஆடிக்கு பின்னே (சிவகாமியின் செல்வன்), நான் பார்த்தாலும் பார்த்தேனடி(தாய்),நல்லதொரு குடும்பம்(தங்க பதக்கம்),சோன் பப்பிடி(என் மகன்)கன்னங்கருத்த(Dr .சிவா),சிவகாமி ஆட,உலகம் நாம் ஆடும்,my song is for you (பாட்டும் பரதமும்),ராஜா யுவ ராஜா(தீபம்),கோவில் டான்ஸ்(தியாகம்), வேலாலே, ஆணாட்டம்,மௌனம் கலைகிறது(என்னை போல் ஒருவன்),என் ராஜாத்தி,காதல் ராணி(திரிசூலம்),பூ மொட்டு(யமனுக்கு யமன்),ஆடல் பாடலில்(வெற்றிக்கு ஒருவன்).

    1981-1990
    குற்றால அருவி(லாரி டிரைவர் ராஜா கண்ணு),ராத்திரி நிலாவில்(சந்திப்பு)

    1991-2000
    சின்ன சின்ன காதல் (once more ), தேவராட்டம்(என் ஆசை ராசாவே)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #6
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
    பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
    பாடியவர்- எஸ்.பீ.பாலசுப்ரமணியம் .
    பாடலாசிரியர்- புதுமை பித்தன்
    இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
    நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
    இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.


    நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)

    அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????

    ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.

    பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.

    காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.

    பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான் அல்லது மாலிஷ்.). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.


    எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.

    முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.

    இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.

    ஒரு இள விமானி, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.

    எழும் போதே suggestive ஆக தன் அவசர விழைவை வேட்கையை உணர்த்தி கையில் முத்தமிடுவார். , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தொடர்ந்து அலை பாயும் உணர்ச்சிகளை உணர்த்துவார் சிறு சிறு தொடல்களில். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.

    பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.

    ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks Harrietlgy thanked for this post
  11. #7
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக் சாரின் வேண்டுகோளை ஏற்று கஜுரஹோ factor குறைத்து என் காதல் தொடர் தொடரும்.

    கீழ்கண்ட படங்கள் முக்கியமாக பரிசீலனையில்....

    1)பராசக்தி
    2)புதையல்
    3)ராஜா ராணி
    4)தெய்வ பிறவி
    5)இரும்பு திரை
    6)பாவை விளக்கு
    7)கல்யாணியின் கணவன்
    8)ஆண்டவன் கட்டளை
    9)புதிய பறவை
    10)சாந்தி
    11)நீலவானம்.
    12)கலாட்டா கல்யாணம்.
    13)தங்க சுரங்கம்.
    14)தெய்வ மகன்.
    15)நிறை குடம்.
    16)சிவந்த மண்.
    17)சுமதி என் சுந்தரி.
    18)வசந்த மாளிகை.
    19)உத்தமன்
    20)ரோஜாவின் ராஜா
    21)திரிசூலம்.
    22)முதல் மரியாதை

    ஏதாவது ஆலோசனை இருந்தாலோ ,விட்டு போயிருந்தாலோ இணைக்கலாம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai liked this post
  13. #8
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் காதல்கள்- 1

    பராசக்தி- முதற்காதல்.

    புது பெண்ணின் மனசை தொட்டு போன அந்த புத்தம் புது நாயகன்.

    முதற்காதல் என்றால் எல்லோருக்குமே புது அனுபவம். ஐம்பதுகளின் இளைஞர்களுக்கு முதற்காதல் பிராணநாதா,பிரபோ என்ற ரேஞ்சில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு அத்தான்,மாமா,ஏன்னா ,என்னாங்க அளவிலாவது வாய்த்திருக்கும். ஆனால் அந்த இளைஞனுக்கு வாய்த்தது வா,போ,குணா என்று விளிக்கும் ஒரு பாரதி கனவு கண்ட புதுமை பெண்.பேஷ் பேஷ் அந்த இளைஞனின் முதற்காதலே மிக நன்றாக வாய்த்துள்ளதே? பத்மினியுடன் முதற்படம்.என்ன திகைக்கிறீர்கள்?படம் டைட்டில் கார்டு பண்டரி பாய்(பத்மினி)என்றே காட்டும்.விமலாவுடன் குணாவின் முதற்காதலை பார்க்கு முன் ஜாலியுடன் (கண்ணம்மா) ஜாலியாக பார்த்த முதல் நடனத்தை (சிவாஜியின் முதல் பாடல் காட்சி)பார்த்து விடலாமா?

    அந்த பணக்கார ,பர்மா செல்ல பிள்ளை ,தமிழ் நாட்டில் முதல் குரலை ஏளனம் செய்து ,ஹோட்டல் paradise (பர்தேஸ்) நுழையும் அமர்க்களமாய். ஸ்டைல் ஆக அலட்சியம் கலந்த curiosity யுடன் அறையை ஒரு நோட்டம் விட்டு,காப்பி ஆர்டர் செய்து,ரூம் பாயிடம் காசை சுண்டி டிப்ஸ் கொடுக்கும் தோரணை!!என்ன சொல்ல?கீழே வந்து மஜுராவிற்கு டிக்கெட் கேட்க ,அன்றைக்கு டிக்கெட் இல்லாமல் ,மறுநாள்தான் ,பண்ணி விடலாமா என்று கேட்கும் reception ஆளிடம், ஓரிரு நொடி கடுப்பு கலந்து ஏமாற்றம் காட்டி சரி என்பான்.அறைக்கு திரும்பி வந்தால் ,படுக்கையில் ஒரு முன் பின் அறியாத பெண்.பட படப்புடன் வியர்வையை டையால் துடைத்து, பிறகு அந்த பெண் தன் தவறுதான் என்றதும் ,காப்பியை கொடுத்து உபசரித்து,ஒரு ஆர்வம்,தயக்கம்,தடுமாற்றம்,பயம் கலந்த akwardness என்ற எல்லா உணர்வும் காட்டி, நடனத்திற்கு செல்ல அரை மனதாக சம்மதம் கொடுக்கும் அழகு!!பின் அழைப்பது பெண்ணல்லவா?ஒரு பெண்ணின் அருகாமை ,அக்கால இளைஞர்களுக்கு(50 களின்) கொடுக்கும் உணர்வை பார்க்க விழைவோர் ,இக்காட்சியை பார்த்தே ஆக வேண்டும்.நெளிந்து கொண்டு நாட்டியத்தில் முள் மேல் அமர்வது போல ,நடுவில் போய் விடலாமே என்று தயக்கம் கலந்த அரை மனதை, உணர்த்தியும்,பெண்ணின் அருகாமை தரும் சிறு சலனத்தால் பாவம் இளைஞன்...
    இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புது முகமாம்!!

    அதே இளைஞன். கதாநாயகி அறிமுக காட்சியில் பெட்டியை பிடுங்கி வில்லன் ஓட ,கதாநாயகன் அவனுடன் போராடி ,பெட்டியை மீட்டு தந்து,காதலை பெறுவதையே பார்த்த நமக்கு ஒரு அதிர்ச்சி. பெட்டியை ,கதாநாயகியிடம் இருந்து பறித்து ஒடுபவனே நாயகன்தான்.பெட்டியை விட்டு ,சாப்பாட்டை எடுத்து ,காக்கைகளுடன் (முதல் பாடலுடன் பாடல் காட்சி-சிவாஜிக்கு)பகிர்ந்து பாடி, மகிழும் இடம் ,கதாநாயகியின் வீடாகவே இருக்க வேண்டுமா?அவளை கண்டதும் ஒரே ஓட்டம்.

    பிறகு பௌர்ணமி நாளில்,ஒரு நதிக்கரையில் அதே பெண். அவள் நல்ல மனமறிந்து, அவள் அழைப்பை ஏற்று வீடு சென்றால்....
    காதல் மொழியா பேசினாள் கட்டிளம் கன்னி?குணா என்றும்,வா,போ என்றும் டோஸ்தான்.பிச்சைஎடுக்க வெட்க படவில்லை.பைத்தியமாக நடிக்க வெட்க படவில்லை,திருட வெட்க படவில்லை ஆனால் நீ ஏமாந்ததை சொல்ல வெட்கம், உன்னை ஏமாற்றிய அந்த ஜால காரியை பாராட்டுகிறேன்,அவளால்தான் நீ இந்த உலகத்தை பார்த்தாய் என்றெல்லாம் lecture பாணியில் டோஸ்..ஆனால் கடைசியில் சிறிதே கனிந்து ஒருவரையொருவர் புரிவர்.(அண்ணாவிடம் கற்றவளாம்). பிறகு இரவு தூங்காமல் தங்கையை எண்ணி குணசேகரன் உருக... விமலாவோ குணசேகரனின் காதல் கனவில் உருக...
    சிவாஜியின் கதாநாயகி மட்டும் பாடும் முதல் காதல் டூயட்.சுரிதாரில் அமர்க்களமாக முதல் பட கூச்சம் சிறிதும் இன்றி, கனவு காணும் கதாநாயகியின் எண்ண ஓட்ட படியே காதல் செய்வார்.(அந்த பாத்திர நடைமுறை சாயல் அற்று)
    இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!

    கடைசி காட்சியில் சுபம் போடும் முன்னால், நான் போகட்டுமா என தயங்கி கேட்கும் நாயகியை ,சோபாவின் கை பிடியில் காப்பி குடித்து கொண்டே தன் எண்ணத்தை உணர்த்தும் அழகு. பிறகு பெரிய நூலால் அவள் தலைப்பை இழுத்து சொந்த குரலில் பெண்ணின் மனதை தொட்டு பாடி கிண்டலிக்கும் இளமை.பார்த்து விட்டு சிறிய நூல் போதுமே என்று சொல்லும் அண்ணியின் முன் நாண சம்மதம்.
    இந்த காட்சியிலும் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!!
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  14. #9
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் காதல்கள்- 2

    அந்த நாளும் வந்திடாதா.......

    பராசக்தியிலும்,அந்த நாளிலும் படித்த சிந்திக்கும் பெண்ணை காதலித்து மணந்து நொந்து அந்த நாளில் அவர் பேசும் வசனம் "படித்த பெண்ணை கல்யாணம் செய்தது தவறு என்று புரிந்து கொண்டேன்".(நாம் எல்லோரும் நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)

    இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.படத்தில் சிவாஜி ராஜன் என்கிற புதுமை லட்சிய வெறி கொண்ட unethical careerist ஆகவும்,சந்தர்ப்பம் வாய்க்கும் போது அப்படியே மற்ற பெண்ணையும் பதம் பார்க்கும் ஆளாகவும்(காதலித்து கடிமணம் புரிந்தும்)வருவார். அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும் படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.

    உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.

    ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.

    கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதி ர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.

    மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.

    அடுத்து,இதையெல்லாம் சரி பண்ணும் இரண்டு உணர்வு காதல்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Thanks Russellmai thanked for this post
  16. #10
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் காதல்கள்-3

    ராஜா ராணி-1956.

    இதுவரை நான் பேசியதெல்லாம் intellectual காதல்கள்.இதெல்லாம் காதலில் சேர்த்தியா என்றே உலகம் பேசி கொண்டிருக்கிறது. இப்போது நான் பேச போவது அக்மார்க் உள்ள பூர்வமான காதல்.

    அதுவரை தமிழ்திரையே காணாத அதிசயம்.

    நிஜமாகவே chemistry கொண்ட அழகான இளைஞன் இளைஞி இணைவு.

    நடிப்பு,வயது,அனுசரணை (compatability ) அத்தனையிலும் நூற்றுக்கு நூறு வாங்கி அன்றைய இளைஞர்களின் இதய துடிப்பை எகிற செய்த ஜோடி.

    Feelgood என்ற genre ரொமாண்டிக் காமெடி.

    அலுப்பு தட்டாத திரைக்கதை ,வசனம்,நல்ல இயக்குனர்.

    டீசிங் ,situational காமெடி ,ஜாலியான ஓட்டம் அனைத்தும் கொண்ட அற்புத படம்.

    எப்போதாவது கிளைமாக்ஸ் முடிந்த பிறகு ஒரு full டூயட் பாடலை ஒரு ஜோடி பாடி ரசிகர்கள் கலையாமல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்த அதிசயம் கண்டதுண்டா?ராஜா ராணியில் சிவாஜி-பத்மினி என்ற அமர காதலர்கள் நிகழ்த்தி காட்டினர்.

    60லும்,70 களிலும் இயக்குனர்கள் திணறிய (கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலச்சந்தர்) விதவா மறுமணத்தை அலட்சியமாய் அலட்டாமல் சாதித்து காட்டியது இந்த 50 களின் படம்.

    சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் போன்ற அபூர்வ performance ,இந்த படத்தின் மிக அற்புத காதலை விழுங்கி ஏப்பம் விட்டு நிலைத்து நிற்பது சோகமே.

    ராணி என்கிற குருட்டு தகப்பனின் ஏழை பெண் ,சந்தர்ப்ப வசத்தால் ராஜா என்கிற வசதியுள்ள இளைஞனால் பணக்கார பெண்ணாக புரிந்து கொள்ள பட்டு ,அவனிடமே வேலைக்கு சேர்ந்து ,காதல் கனிந்து,உண்மையும் தெரியும் போது,ராணி இளம் வயது விதவை என்ற பேருண்மை திடீரென்று காதலை பெயர்க்க ,பிறகு பரபரப்பான இறுதி காட்சியில் காதலர்கள் சேரும் கதை.

    என்னவென்று இந்த படத்தை வர்ணிக்க?இதை பார்க்காதவர்களை சிவாஜி ரசிகன் என்ற லிஸ்ட் டில் நான் சேர்க்கவே மாட்டேன்.(ராகவேந்தர் மட்டும்தான் நிபந்தனை விதிக்க வேண்டுமா?நானும்தான்)இளைமையுடன் கூடிய குறும்பு மின்னி தெறிக்கும் அழகோ அழகு சிவாஜி-பத்மினி.(முத்துலிங்கம் போல நானும் சிறிதே வருந்தினேன் இந்த படம் காணும் போது)

    மயக்க மருந்து உட்கொண்டு ராணி தள்ளாடி ராஜாவின் காரில் உட்கார்ந்து கண்ணசர தொடங்கும் இளமை குதூகல திருவிழா. ராஜா வீட்டிற்கு அழைத்து சென்று(தூக்கம் வருதுப்பா என்னும் பத்மினியின் நடிப்பு,பின்னாட்களின் பஞ்ச தந்திரம் தேவயானியை தூக்கி சாப்பிடும்) ,ஏனோதானோ போஸில் போட்டு விட்டு,பத்திரிகையில் வந்த விளம்பர படி பணக்கார பெண்ணாய் (லீலா) இருப்பாளோ என்ற சந்தேகத்தில் ,அவளின் தூங்கும் விதத்தை நேர் செய்து,போர்வையும் போர்த்தும் விதம். மறுநாள் காலை ராணி ஒட்டு கேட்டு லீலாவாகவே தொடர ,அவளை வீட்டில் விட வரும் ராஜாவிடம் இங்கேயல்ல, என்ற டபாய்த்து ,சுலபமாய் நுழைந்து வெளியேறும் வீடாக பார்ப்பது. நுழைந்து பிறகு அமைதியாக வெளியேறி ,பரோபகாரம்-தங்கம்(என்.எஸ்.கே,டி.ஏ.மதுரம்) தம்பதிகள் வீட்டில் குழப்பம் விளைவிக்கும் சமயங்கள். ராஜா, ராணியிடம் சேலை கொடுக்க,துரத்தும் நாய்க்கு பயந்து மாடியேறி ஓடி அமர்க்களம் செய்ய , தங்கத்தையும்,ராஜாவையும் ,பரோபகாரம் சந்தேகிக்க, ராணியையும்,பரோபகாரத்தையும் தங்கம் சந்தேகிக்க ஜாலி நாட்.

    வேலைக்கு அமரும் ராணியிடம் சீசீ இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொருட்டா ,அவங்க பொழுது போக்கா வேலை செய்யறாங்க ,சம்பளமெல்லாம் வாங்க மாட்டாங்க என்று ராணி வயிற்றில் புளி கரைக்கும் காட்சி தூள். ராணி பிறகு தான் ஒரு 200 ஐ தொலைத்ததாய் சொல்லி சமாளித்து இருநூறை பெறுவார்.

    பாபு என்ற அமச்சூர் நாடக நண்பனிடம் முரண் பட்டு ,தானே நாடகம் அரங்கேற்றும் போது,பாபு பணம் கொடுத்து தூண்டி விடும் கலாட்டாவால் துவங்கும் காதல் அத்தியாயம் நம்மை சொக்க வைக்கும்.

    எனக்கு மிக பிடித்த காதல் காட்சிகளில் ஒன்று.கல்லடிக்கு தப்பி ஓடும் லீலாவை துரத்தி கொண்டு, ஓடி,இருவரும் ஒரு வாய்க்காலை கடக்க முயலும் போது நனைந்து விட,நடுக்கத்துடன் ,தன வயிற்றுக்குள் நாடகத்திற்காக சுருட்டும் சேலையை லீலாவிற்கு கொடுத்து திருமணம் என்று சொல்லி தீர்மானம் என்று சமாளித்து லவ் மீட்டர் கையை கொடுத்து மாட்டி கொண்டதாய் டபாய்த்து,மீனை கண்ணுக்கு ஒப்பிட்டு வழிந்து,அய்யய்யோ,அநியாயத்துக்கு ஜாலி இந்த காட்சி.

    பாபுவுடன் நேரும் கைகலப்பை விலக்க,வீட்டினுள்ளிருந்து பையன் வேஷத்தில் வரும் ராணியை ,போட்டோ பார்த்து அடையாளம் கண்டு ,கட்டு போடும் போது டபாய்ப்பது படு ஸ்வீட்.

    டீசிங் சாங் (எஸ்.சி.கிருஷ்ணன்)லீலா லாலி, பூனை கண்ணை மூடி கொண்டால் செம கலாய்ப்பு.

    improvisation என்றால் தெரிந்த கொள்ள விரும்பும் ஆட்கள், சிவாஜி-பத்மினி காதல் காட்சியில் சிவாஜி ஒரு மர மட்டையை பறித்து, frisky ஆக காலால் உதைத்து,மட்டையை கையால் உரித்து கொண்டு ,துரு துறுவென்று பண்ணும் இந்த அதகள காதல் காட்சி!! என்னவென்று வர்ணிக்க?

    காதலில் ஒருமித்த பின் transister பரிசு காட்சி என்று மகா சுவாரஸ்யம்.

    ஒரு இதமான ஜாலி ரைட் இந்த இதமான நகைச்சுவை கலந்த அர்த்தமுள்ள காதல் படம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •