-
1st April 2016, 01:50 AM
#3041
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016 01:50 AM
# ADS
Circuit advertisement
-
1st April 2016, 01:51 AM
#3042
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 01:52 AM
#3043
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 01:53 AM
#3044
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 01:54 AM
#3045
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st April 2016, 01:55 AM
#3046
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 01:56 AM
#3047
Junior Member
Diamond Hubber
புரட்சி தலைவரை பற்றி விஜேய்காந்த் மனைவி பிரேமலதா பேசுகையில், எம்.ஜி.ஆர் குண்டடி பட்ட பிறகு அவர் மக்களிடம் பேசியது மக்களுக்கு புரிந்ததா என்று கேட்கிறார், இப்பொழுது நான் பிரேமலதா அவர்களிடம் கேட்கிறேன், குண்டடி பட்ட பிறகும் மக்களிடம் தன் உடல் நலனை கருதாமல் தமிழ் மக்கள் நலம் கருதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியது பிரேமலதாவுக்கு புரிந்ததா? பொன்மான செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது குறை பார்ப்பதை தவிர்த்து விட்டு, விஜயகாந்த் அவர்களிடம் உள்ள குறைகளை அவரின் மனைவி பிரேமலதா சரி செய்வது நல்லது. மக்கள் திலகம் தேர்தலில் பேசிதான் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை அவரின் முகமே வெற்றியின் திருமுகம் தமிழ் நெஞ்சங்களின் ஆசை முகம்.
- #சிங்கப்பூர்எம்ஜிஆர்
Originally Posted by
Govindraj Kpr
விநாசகாலே விபரீத புத்தி எனும் ஒரு சொல் உண்டு- இதன் அர்த்தம் என்னவெனில் ஒருவருக்கு அழிவு காலம் நெருங்கும் பட்சத்தில் எண்ணங்களும் செயல்களும் மிகவும் விபரீதமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கும் என்பதே.. இதை நாம் கூறக் காரணம் உலகத்தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒளி விளக்காகவும் இதய தெய்வமாகவும் ஒளிர்ந்து வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களை கொச்சைப் படுத்தி பேசியதன் விளைவாக அல்லிராணியும்,கோமளவல்லியுமான பிரேமலதா தற்போது தனது கணவர் விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்துள்ளார். எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க உயர்ந்த தலைவர்கள் களம் கண்ட தமிழக அரசியலில் அறிவு முதிர்ச்சியற்ற காட்டு ராணி பிரேமலதாவின் வருகை மிகவும் கொடுமையானது அவலமானது. தனது திரையுலக வாழ்விற்கும் நிஜ வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரைப் படங்களில் தான் உழைத்து சம்பாதித்த பெரும் செல்வங்களை ஏழை எளிய தமிழ் மக்களின் நல் வாழ்விற்கே அர்பணித்த புரட்சித் தலைவர் எங்கே? தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் வாழ்விற்கும் இடைவெளியில்லாது திரையில் புகைத்தும்,குடித்தும் நடித்து நிஜவாழ்விலும் அவ்வாறே வாழ்ந்து அப்படி சம்பாதித்த பணத்தை கல்லூரி நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அத் தொழில்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் மேலும் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்க அரசியல் அரங்கிற்கு வந்த ஸ்டெடி மன்னன் விஜயகாந்த் எங்கே? யாரை யாருடன் ஒப்பிடுகிறாய் பிரேமலதா? கங்கையுடன் சாக்கடையை ஒப்பிடுவதா? சந்தனத்துடன் மலத்தை ஒப்பிடுவதா,{ சாணிகூட விராட்டி தட்ட பயன்படும் } சிங்கத்துடன் சிறு முயலை ஒப்பிடுவதா? ஒப்பிட்டிற்கு அளவுகோல் வேண்டாமா? முதலமைச்சர் பதவி என்பது பெட்டிக் கடையில் விற்கும் கடலை உருண்டையா உடனே உனது கணவருக்கு வழங்கி விடுவதற்கு. தமிழ் மக்களை எவ்வளவு முட்டாள்களாக இளிச்சவாயர்களாக நீ நினைத்து இருந்தால் அப் பதவிக்காக மேடை போட்டு தொண்டை கிழிய கத்திக் கொண்டிருப்பாய். எதிர்கட்சி கட்சிப் பதவி எனும் உயர்ந்த மக்கள் நலன் சார்ந்த பணிக்கு சற்றும் பொருத்தமில்லாத உனது கணவருக்கு அப் பதவியை பெற்றுத் தந்ததே எங்கள் புரட்சித் தலைவர் கண்டெடுத்த கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் என்ற உண்மையை மறந்து விட்டு நீ பேசுவது மிகவும் கண்டிக்கத் தக்கது. பிரேமலதாவை நாம் கேட்பது அரசியல் அரங்கில் உமது வரலாறு தான் என்ன? விஜயகாந்த் மனைவி என்ற அடையாளத்தை தவிர வேறு என்ன தகுதி உமக்கு உள்ளது. தமிழக அரசியல் களத்தில் மக்களுக்காக பல்வேறு தியாகங்களும் சாதனைகளும் செய்துள்ளார் எனது கணவர் விஜயகாந்த் என்பதால் அது ஒன்றே எனக்கு போதும் நான் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு என்கிறீர்களா? அம்மையார் பிரேமலதாவே உமக்கு விவரம் இல்லாததால் ஒரு உண்மையை தெரியப் படுத்துகிறேன் தெரிந்து கொள். உலக அரசியல் அரங்கில் ஒரு நடிகர் முதல் முறையாக முதல்வராகி தமிழ் நாட்டிற்கு காலத்தால் அழியாத பெரும் புகழை தேடிக் கொடுத்தார் என்றால் அது இம் மண்ணில் புரட்சித் தலைவர் ஒருவரே. அவ் விஷயத்தில் இங்கு முதலும் இறுதியும் புரட்சித் தலைவர் ஒருவரே. தமிழக மக்கள் முட்டாள்கள் அவர்களை வாய் ஜாலத்தால் ஏமாற்றி உமது கணவரை அரியணை ஏற்றி தம்பியுடம் தமிழ் நாட்டை கொடுத்து விடலாம் என மனப் பால் குடிக்க வேண்டாம். விவரமான எங்களைப் போன்ற வாக்காளர்கள் இருக்கும் வரை உமது கனவு பலிக்காது. இந்த நூற்றாண்டில் ஒரு வியக்கத்தகு சம்பவம் தமிழக அரசியல் களத்தில் நடந்தேறியுள்ளது. அது தனது மனைவியை முன்னிலைப் படுத்தி அவருக்கு பின்னே நின்று அரசியல் செய்யும் ஒரே தமிழக அரசியல் தலைவராக விஜயகாந்த் பரிமளித்து வருகிறார். இந்த சரித்திர சாதனைக்கு வித்திட்ட அம்மையார் பிரேமலதா மிகவும் பாராட்டத் தக்கவர். இப்படியெல்லாம் கேவலமாக அரசியல் செய்யும் அம்மையார் பிரேமலதாவா கோடிக் கணக்கான உலக தமிழ் மக்களின் இதய தெய்வமாக ஒளிர்ந்து வரும் ஒப்பாரும் மிக்காரும் மிக்க மிக உயர்ந்த மக்கள் தலைவரான புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசுவது. அம்மையார் பிரேமலதாவே இது போன்ற அர்த்தமற்ற சிறுபிள்ளை தனமான பேச்சே உமக்கும் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். . பக்கம் பக்கமாக உமது அரசியலை விமர்சித்து எம்மால் எழுத முடியும். புரட்சித் தலைவரின் பக்தன் என்ற வகையில் நாகரீகம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவரை கொச்சை படுத்தி பேசி கோடிக் கணக்கான தமிழ் மக்களின் உள்ளக் கொதிப்பிற்கு ஆளாகி விஜயகாந்திற்கு விரைவான அரசியல் அஸ்தமனத்தை தேடிக் கொடுத்த அம்மையார் பிரேமலதாவிற்கும் மக்கள் நலக் கூட்டணிக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆர்.கோவிந்தராஜ்,
பத்திரிக்கையாளர்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st April 2016, 01:56 AM
#3048
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st April 2016, 01:57 AM
#3049
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
1st April 2016, 01:58 AM
#3050
Junior Member
Diamond Hubber
பிரேமலதாவின் - பேச்சு
தமிழகமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டார் எம் ஜி ஆர் ரசிகரகளின் மத்தியிலும் வெருப்பை ஏற்படுத்தியது.
பல தேமுதிக தொன்டர்களே
-முகம் சுளிக்கின்றனர்
பாரதரத்னா -விருதுபெற்ற புரட்சி தலைவர்.
எவ்வாறு
விஜயகாந்த்துக்கு சரி சமமாக முடியும்
தமிழக மக்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks