-
5th June 2016, 04:02 PM
#11
Junior Member
Diamond Hubber
உயில் உயிரை வாழ வைக்க முடியுமா? பாருங்கள் நமது மனித தெய்வத்தின் மகத்தான செய்கையை இதோ பாருங்கள் தனது தொண்டர் கணபதி என்பவரின் மகள் திருமணத்தை 1988 ஜனவரி 18 ம் தேதி முடிவு செய்து தேதி கொடுத்து உறுதியாக தான் வந்து நடத்திக் கொடுக்கிறேன் என்று கூறி திருமண மண்டபத்திற்க்கும் போன் செய்து விட்டார் தலைவர் அந்தக் குடும்பத்துக்கோ ஏகப்பட்ட குஷி கேட்க வேண்டுமா ? ஆனால் காலன் செய்த சதியால் அவருடைய புனித உயிர் 1987 டிசம்பர் 24ம் தேதி பிரிந்து விடுகிறது. தலைவர் இறந்த செய்தியை கேட்டு பேரிடி விழுந்தாற் போல் மனமுடைந்து விரக்தியாகி கல்யாணத்தையே நிறுத்தி விடுகிறார். ஆனால் மறு வாரமே முதல்வர் பொறுப்பிலிருந்த ஜானகி அம்மா வந்து அதே தேதியிலேயே திருமணம் கண்டிப்பாக நடைபெற்றால் தான் அவரது ஆசை நிறைவேறும் என்றும் அவருடைய " புரொகிராம் டைரியில்" புடவையிலிருந்து நகை பணம் வரை செய்ய வேண்டியதை அவரது கைப்பட எழுதி வைத்ததை காண்பிக்கிறார் பின் அதேமாதிரி சீர் வரிசையோடு ஜானகி அம்மாள் தலைமையில் அரை மனதோடும் ஆனந்தக் கண்ணீரோடும் நடைபெறுகிறது.
தான் மறைந்த பின்னும் விளக்கு ஏற்றி வைத்த அந்த ஒளியில் அக் குடும்பத்தின் கவலை இருட்டு விலகியது. இவரை தெய்வத்துக்கே தெய்வம் என்று தான் அழைக்க வேண்டும்.
குறிப்பு: இந்தப் பாராவை என்னால் தொடர்ச்சியாக இன்று வரை படிக்க முயன்று தோற்றுத் தான் போயிருக்கிறேன். மனதும் இதயமும் விம்மி வெடித்தே விடும். இவரல்லவோ அவதார புருஷன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th June 2016 04:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks