-
9th August 2017, 07:43 PM
#11
Senior Member
Devoted Hubber
Jahir Hussain
நடிகர் திலகமும்,,, பெண் நடிகர் திலகமும்,,,,,,,,,,,
அண்ணல் அவர்கள் சுமார் 300 படங்களில் நடித்து இருக்கிறார் எனறால் மனோரமா அவர்கள் அவருடன் சுமார் 150 படங்களிலாவது நடித்திருப்பார்,,, ஒரே படத்தில் இருவரும் நடிக்கும் போதுதான் உண்மையான போட்டியே நிகழும்,, பன்முக திறமையாளர் "சோ" அவர்களின் அக்மார்க் ஸ்டேட்மெண்ட்,,, மனோரமா ஒரு பொம்பளை சிவாஜி என்பதுதான்,,, சோ அவர்கள் யாரையும் அவசரப்பட்டு பாராட்டி விட மாட்டார்,,, அவர் பாராட்டும் போதே கப் என்று பிடித்துக் கொள்ள வேண்டும்,,, சரி பெண் சிவாஜி எனறால் என்ன? பெண் நடிகர் திலகம்,,, நடிகையர் திலகம் அல்ல,,, அவர் வேறு ஒருவர்,,, நடிகர் திலகத்தின் இன்னொரு போட்டியாளர்,,, அவர் வேறு ஒரு எபிஸோடில் வருவார்,,, ஆக நடிகர் திலகத்தின பெண்பால்,,, சாம்பிளுக்கு தில்லானா மோனாம்பாளை எடுத்துக் கொள்வோமே? ஜில் ஜில் ரமாமணியோட அட்டாகாசத்தைப் பார்த்து கோடையிடி நந்தி முத்து ராக்கு அண்ணனே கதி கலங்கி போயிருப்பார்,
அந்தப் படத்தில் சிக்கலாருக்கும் ரமாமணிக்கும் ஒரு அந்யோநியமான சகோதரப் பாசம் இருக்கும்,,, அது சினிமாவுக்கான நடிப்பு என்றால் நாம் ஏமாந்து போவோம்,,, உண்மையான சகோதரப் பாசம் அது,, பாசமலர் தங்கை ஒரே ரத்தம் என்றால் இது ஒன்றுவிட்ட ரத்தம் அவ்வளவுதான்,,
நடிகர் திலகம் சிவாஜி படப் பிடிப்புத் தளத்தில் இருந்தாரென்றால், அத்தனை நடிகர்களும் அவரது நடிப்பை வியந்து ரசிப்பார்கள். அதில் நடிப்பிற்கான பாடத்தைப் படிப்பார் கள். அதேபோல் நடிகர் திலகம் அவர்கள் ஒருவரின் நடிப்பை ரசித்துப் பார்க்கிறாரென்றால், அது மனோரமாவின் நடிப்பாகத்தான் இருக்கும்,,,,
‘”என் தங்கச்சி நடிப்பப் பாருங்க… எவ்வளவு இயல்பா இருக்கு’’ என மனம் திறந்து பாராட்டுவாராம் சிவாஜி. அப்படி நடிப்பிற்கான பல்கலைக் கழகத் திடமே பாராட்டு பெற்ற பேராற் றல் மிக்கவர்தான் மனோரமா. அதனால்தான் அவர் பெண் சிவாஜி ஆகிப்போனார்,,, சரி தங்கையாக எப்படி ஆனார்?
காலம் தான் மனோரமா மூலம் சிவாஜிக்கு "ரக்ச பந்தன்" கயிறு கட்டி அவருக்கு தங்கையாக்கியது,, மனோரமாவே கூறுகிறார்,,,,,
‘‘எனக்கும், சிவாஜிக்கும் உள்ள உறவு, அண்ணன்-தங்கை உறவு. இதை உண்மை என்று நிரூபிப்பது போல் என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக, மிகப்பெரிய துணையாக இருந்தவர், என் தாயார். அவர் திடீரென்று இறந்து போனார். என்னால் துயரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தகவல் அறிந்ததும் முதல் ஆளாக என் வீட்டுக்கு வந்தவர், அண்ணன் சிவாஜிதான். என்னை தேற்றியதுடன், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நெகிழ்ந்து போகும்படி ஒரு செயலை செய்தார்.
எங்கள் குடும்ப வழக்கப்படி, தாயார் மறைந்தால் முதலில் மகன்தான் கோடித்துணியை தாயார் உடம்பில் போர்த்த வேண்டும். எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் கிடையாது. இதை நினைத்து நான் அழுது கொண்டிருந்தபோது, அண்ணன் சிவாஜி, என் கூடப்பிறந்த அண்ணனாக விலை உயர்ந்த ஒரு வெண் பட்டுப்புடவையை என் தாயாரின் உடம்பில் போர்த்தினார்.
என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘அண்ணே, இந்த தங்கச்சி மீது உங்களுக்கு இத்தனை பாசமா அண்ணே’’ என்று கதறி அழுதேன். ‘‘என்னைக்குமே நீ எனக்கு தங்கச்சிதாம்மா’’ என்று என்னை தேற்றினார்.’’
நடிப்புத்துறைக்கு வந்தோமா நடித்தோமா போனாமா என்றில்லாமல் தன்னுடன் நடிக்கும் அத்தனை கலைஞர்களையும் தன் குடும்பம் போல கருதியவர் அண்ணலார்,, ஆகவேதான் அவரது நடிப்பு இன்றும் சிலாகிக்கப் படுகிறது,,,, தனக்கு சவால் விடும் நடிப்பாளினியை நடிக்காமலேயே வென்று விட்டவர் அவர்,,, அவர்தான் நடிகர் திலகம் என்ற மஹான்,,,
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
9th August 2017 07:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks