-
28th September 2009, 04:54 AM
#141
Moderator
Diamond Hubber
Interview with Shruthihassan
[html:aa8466de0c] <div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=15781726&vid=6074257&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11441/93961153.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=15781726&vid=6074257&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11441/93961153.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:aa8466de0c]
thanks to IsaiTamilNet
-
28th September 2009 04:54 AM
# ADS
Circuit advertisement
-
8th October 2009, 05:30 AM
#142
Moderator
Diamond Hubber
விஜய்யின் "வில்லு' படத்தில் "தீம் தணக்க தில்லானா' பாடலை பாடிய திவ்யா விஜய், தற்போது விஜய் "டிவி' சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சிக்கு காம்பியரிங் செய்து வருகிறார். "பேட்டி'க்காக சந்தித்தபோது "கர்நாடக இசையை முறையாக கற்றுக் கொண்டதால் இந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் காம்பியரிங் செய்ய முடிகிறது'' என்றார். திவ்யா விஜய்யின் ஆர்வப் பேட்டி:
டிவி', சினிமாவில் பணி புரிந்தால் பணம், புகழ் கிடைக்கும் என்று நினைப்பில் தானே இந்த துறைக்கு வந்தீர்கள்?
கர்நாடக இசை தெரிஞ்சதால தான் சினிமாவில் பாடுவதற்கும்"டிவி' நிகழ்ச்சிகளில் காம்பியரிங் வாய்ப்பும் எனக்கு கிடைச்சிருக்கு. அம்மாவின் ஆசை தான் இதற்கு முழுக்க, முழுக்க மூலகாரணம். ஆரம்பத்தில கர்நாடக இசை கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வம் இல்லை. அம்மாவுக்கு நிறைய ஆர்வம் இருந்தது. என்னை இசை கத்துக்க சொன்னப்ப நான் முடியாதுன்னு தான் சொன்னேன். இசையோட அருமை உனக்கு இப்ப தெரியாது, நீ கத்துக்கிட்டு பாடும் போது இசையோட அருமை உனக்கு தெரியும். சந்தோஷப்படுவேன்னும் சொன்னாங்க. நான் கர்நாடக இசை கத்துக்க ரொம்ப உதவினாங்க. அம்மாவோட அந்த உதவியால தான் நான் யார்ன்னு இன்னைக்கு பலருக்கு தெரிஞ்சிருக்கு. அம்மாவுக்கு இந்த தருணத்தில நன்றி சொல்லிக்க விரும்பறேன். உழைப்புக்கு பணம், புகழ் கிடைத்தால் சந்தோஷம் தான்.
விஜய் "டிவி'யில் "சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சியில் காம்பியரிங் செய்வது திருப்தியா?
புதிய நிகழ்ச்சிகளை வித்தியாசமா, ஈர்ப்பா மக்களிடம் அறிமுகம் செய்வதில் விஜய் "டிவி'யை யாரும் மிஞ்சிட முடியாது. குழந்தைகளிடம் உள்ள இசையாற்றலை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக "சூப்பர் சிங்கர் ஜூனியர் 2' நிகழ்ச்சி அமைஞ்சிருக்கு. ரொம்ப திருப்தியா இருக்குங்க.
இசை போட்டி நிகழ்ச்சியில் பாடுவதில் உங்களை அசத்திய குழந்தைகள் பற்றி?
"சூப்பர் சிங்கர் ஜூனியர் 2'வில் கலந்திட்டிருக்கிற குழந்தைகளிடம் நிறைய டேலண்ட் இருக்கு. ஒவ்வொரு போட்டியிலும் ஆச்சரியப்படும்படி அவுங்களோட டேலண்ட் இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. பாடுவதற்கு கஷ்டமான பாடல்களை கூட ஈசியா பாடி அசத்துறாங்க. நிகழ்ச்சியில இந்தக் குழந்தை தான் "பெஸ்ட்'டா பாடுதுன்னு அவசரப்பட்டு கணிச்சிட முடியாது. ஒருத்தரை விட ஒருத்தர் டேலண்ட்ல குறைஞ்சவங்க இல்லைன்னு நிகழ்ச்சியை பார்த்தாலே தெரியும். இசை ஆர்வத்துடன் போட்டிக்கு வந்திருக்கும் எல்லா குழந்தைகளுமே எனக்கு பிடிச்ச குழந்தைங்க தான்.
முதலில் சினிமாவில் பாடுவதற்குத்தான் முயற்சித்ததாக பேசப்பட்டதே,"டிவி' பக்கம் வந்திருப்பது பற்றி?
கர்நாடக இசை கத்துக் கிட்டதால மேடைக்கச்சேரிகள் நிறைய பண்ணியிருக்கேன். சினிமாவில் பாடுவதற்கு முயன்றப்ப தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ரெடி, கிங் ஆகிய படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைச்சது. "சிலம்பாட்டம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான "மாவாடு' படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையிலும் பாடியிருக்கேன். தமிழில் "வில்லு' படத்தில "தீம் தணக்க தில்லானா' பாடல் என்னை நிறைய ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியிருக்கு. தமிழ், தெலுங்கு, கன்னடம்னு 15 படங்களில் பாடியாச்சு. தமிழகத்திலும்,கேரளாவிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன். மலையாளத்தில கைரளி "டிவி' சேனலில் "கந்தர்வ சங்கீதம்' நிகழ்ச்சியை காம்பியரிங் செய்தப்ப கேரள மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்ப விஜய் "டிவி'யில் கிடைச்ச இந்த காம்பியரிங் வாய்ப்பு தமிழகத்திலும் நிறைய பேருக்கு என்னை யார் என்று தெரியவச்சிருக்கு. சந்தோஷமாயிருக்கு.
நினைச்ச இலக்கை எட்டிவிடுவோம் என்று நம்பிக்கை பற்றி?
உழைப்புக்கு வருவாய் கிடைச்சா போதும்ன்னு நினைச்சு ஒரு தொழிலை செய்யும் போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட அந்த தொழிலை பயபக்தியோடும், ஆர்வத்தோடும் செய்யும் போது கிடைக்கிற சந்தோஷமும், மனதிருப்தியும் அலாதியானது. மனசுக்கு இதமாக இருக்கும். பயபக்தியோடும், ஆர்வத்தோடும் இந்த துறையில காலடி வச்சிருக்கேன். அதனால உயர்வேன்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு.
யாரோட இசையில் பாட ஆசை?
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு. நிச்சயம் பாடுவேன்ங்கிற நம்பிக்கையும் இருக்கு.
நீங்க பாடிய பாடலை கேட்டுவிட்டு இசையமைப்பாளர்களிடம் இருந்து அழைப்பு வந்ததா?
"நாம 15 படங்கள்ல பாடிட்டோம். அதனால இசையமைப்பாளர்கள் உடனே அழைப்பு விட்டு பாட அழைப்பாங்கங்கிற நினைப்பெல்லாம் எனக்கில்லை. பாடலில் என்னோட குரல் வளத்தை தெரிஞ்சுக்கிட்டு அழைப்பு வந்தா உடனே ஏத்துக்கிட்டு அவுங்க எதிர்ப் பார்ப்புபடி பாடிட முடியும். எந்த பாடலை யாரு பாடினால் சரியா இருக்கும்ன்னு இசையமைப்பாளர்களுக்கு தெரியும். திவ்யா பாடினா சரியாயிருக்கும்னு நினைச்சா கண்டிப்பா எனக்கு சான்ஸ் தேடி வரும். வராட்டியும் வருத்தப்படக்கூடாது,'' என்று சிரித்துக் கொண்டே சொன்ன திவ்யா விஜய் காம்பியரிங் செய்ய புறப்பட்டார்.
[html:66d15d0533]<div align="center">[/html:66d15d0533]
நன்றி: தினமலர்
-
13th October 2009, 10:52 AM
#143
Senior Member
Seasoned Hubber
சினிமா எங்களுக்கு உயிர்!
:
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் திருமண வேலைகளில் பரபரப்பாக இருக்கும் "மானாட மயிலாட' புகழ் ஆர்த்தி - கணேஷ் இருவரையும் ஒரு விழாவில் மடக்கிப் பிடித்தோம். இதோ அவர்களுடன் ஒரு ஜாலி கலாட்டா...
சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நீங்கள் இருவரும் ஒன்றாக நடித்திருக்கிறீர்கள்? உங்கள் இருவரில் யார் முதன்முதலில் அன்பைத் தெரிவித்தீர்கள்?
ஆர்த்தி:அன்பைத் தெரியப்படுத்தியது என்று எதுவும் இல்லை. இருவரும் சிறுவயதிலிருந்து குடும்ப நண்பர்கள். அவரோட அம்மா இறந்த கொஞ்சநாள்லேயே அவுங்க பாட்டியும் இறந்துட்டாங்க. அவர்களுக்குப் பிறகு அவுங்க வீட்டைக் கவனித்துக் கொள்ள பெண்கள் யாரும் இல்லை. இந்தச் சமயத்தில் எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவருக்கு பெண் பார்க்க அவரது வீட்டில் யாரும் இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் அம்மா இறந்ததில் இருந்து ரொம்ப உடைந்து போய் இருந்தார். அதனால நாங்க ரெண்டு பேரும் மூணு மாதத்திற்கு முன்பு இது பற்றிப் பேசினோம். எங்க அப்பாவிடம் கலந்து சொல்றேன்னு சொன்னார். அவுங்க அப்பாவும் முறைப்படி வந்து எங்க வீட்ல பொண்ணு கேட்டார்.
உங்கள் இருவரையும் இணைத்து நிறையக் கிசுகிசு வந்ததே?
ஆர்த்தி:எங்களைப் பற்றி நிறைய கிசுகிசு எல்லாம் வந்தது. அது எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும். எங்க அம்மா ரொம்ப பீல் பண்ணுவாங்க. நல்ல பேமிலி, நல்ல பையன், நல்ல நட்பை இப்படிக் கெடுக்கிறாங்களேன்னு. இதனால் இரண்டு பேரோட பேரும் கெட்டுப் போகுதேன்னு கவலைப்பட்டாங்க. அந்த மாதிரி கிசுகிசு எல்லாம் வரும்போது அவர்களிடம் போய் சண்டை போட வேண்டும் என்று தோன்றும். அது போல கிசுகிசு வந்ததுனாலேயே நாங்கள் இரண்டு பேரும் ஒரு மூன்று மாதம் மீட் பண்ணவே இல்லை. அப்படி நாங்கள் காதலித்தால் இப்போ சொல்ற மாதிரி அப்பவே சொல்லிருக்கப் போறோம். இதுல என்ன வந்திருக்கு. நாங்க என்ன தப்பாவா முடிவெடுப்போம். உண்மையிலேயே காதல் கீதல் என்று ஒன்றும் கிடையாது. நீறைய சேர்ந்து நடித்திருக்கோம். அதனால வந்த வதந்திகள்.
உங்கள் இரண்டு பேரையும் கணவன் - மனைவியாகத்தான் மக்கள் நினைத்தார்கள். அதைப் பற்றி என்ன பீல் பண்ணுவீங்க?
கணேஷ்:எங்கள் இருவருக்கும் திருமணம் முடிவானது தெரிந்ததும் நிறையப் பேர் போன் பண்ணிக் கேட்டாங்க. இப்போதானா உங்கள் திருமணம். பேப்பர்ல செய்தி எல்லாம் கொடுத்து...காமெடியெல்லாம் பண்ணாதீங்க என்று சொன்னார்கள். கணேஷ் உண்மையைச் சொல்லு. முன்பே உனக்கு கல்யாணம் ஆகலன்னு சிலர் கேட்டாங்க. எனக்குத் தூக்கிப் போட்டுட்டு அடப்பாவிகளான்னு.
சின்ன வயதில் இரண்டு பேரும் ஒன்றாகப் படங்கள் நடித்திருக்கிறீர்கள்? வளர்ந்த பிறகு எப்போ எங்கே எப்படிச் சந்தித்தீர்கள்?
ஆர்த்தி:சின்ன வயசுல படங்கள் ஒண்ணா நடிச்சோம். அதன் பிறகு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆறுவருடம் கழித்து சன் டிவியில சூப்பர்10 நிகழ்ச்சிக்காக மறுபடியும் இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து பண்ணினோம். முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்லதான் மீட் பண்ணினோம்.
கணேஷ்:சூப்பர் 10 நிகழ்ச்சியிலதான் சந்தித்தோம். முதல் சந்திப்பிலேயே அடி பின்னி எடுத்துட்டாங்க.
ஆர்த்தி:ஆறு வருஷம் தொடர்ந்து நடிச்சோம். அந்த நிகழ்ச்சியில எங்க ரெண்டு பேரோட ஜோடி நல்லா இருக்குன்னு கலைஞர் டிவியில கூப்பிட்டாங்க. கலைஞர் டிவியில் பல நிகழ்ச்சிகள் பண்ணினாலும் மானாட மயிலாடதான் எங்களுக்குப் பெரிய பிரேக் கொடுத்தது.
திருமணத்திற்குப் பின்பு தொடர்ந்து நடிப்பீங்களா?
கணேஷ்:வழக்கமாப் பெண்களைத்தானே கேட்பீங்க. இப்போ எங்களையும் கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா?
ஆர்த்தி:திருமணத் திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு திரும்ப வந்து நடிக்கிற மாதிரி பிட் போடறது எல்லாம் கிடையாது. கண்டிப்பா ரெண்டு பேருமே நடிப்போம். சினிமா எங்களுடைய தொழில் மட்டுமல்ல. உயிர்.
-
13th October 2009, 10:59 AM
#144
Senior Member
Seasoned Hubber
ஒரு நடிகையின் கதை!
First Published : 04 Oct 2009 11:52:00 AM IST
Last Updated :
கன்னடத்தில் பிஸியாக இருக்கும் நடிகை சங்கவி ஜெயா டிவியில் புதியதாக ஒளிபரப்ப இருக்கும் புதிய தொடர் "சாவித்திரி'யில் அதன் நாயகியாக நடிக்கிறார். நடிகை சங்கவியை படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தோம். ஒரு ஷாட் முடிந்து அடுத்த ஷாட்டிற்குச் செல்லும் இடைவெளியில் நம்மிடம் பேசினார்.
ஜெயா டிவியில் ஆரம்பமாகும் சாவித்திரி என்ன மாதிரியான கதை? அதில் நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கிறது?
சாவித்திரி ஒரு நடிகையின் கதை. கதையைக் கேட்கும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மூன்று வித்தியாசமான கேரக்டர். நல்லா பெர்ஃபாம் பண்ணுவதற்கான கேரக்டர். நல்ல சப்ஜெக்ட். கேரக்டர் மாறிக் கொண்டே இருக்கும். ரொம்ப இன்னோசென்ட்டாக இருக்கிற ஒரு பெண் அவள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள், அதனால் ஏற்படுகின்ற மாற்றங்கள், அதில் இருந்து மீண்டும் எப்படி ஒரு நல்ல நிலைக்கு வருகிறாள் இதெல்லாம் சொல்வதுதான் "சாவித்திரி'. அழகே இல்லாத ஒரு பெண் தன்னை எப்படி ஒரு நடிகையாக்கிக் கொள்கிறாள். ஒரு நடிகையாக அவளுக்கு ஏற்படும் ஏமாற்றங்களை எப்படிச் சந்திக்கிறாள் என்பது போன்ற கதை. நிறைய முயற்சியெடுத்துப் பண்ணியிருக்கேன். மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரியவில்லை.
சினிமா, சின்னத்திரை என்ன வித்தியாசம்?
சின்னத் திரையில் நடிக்கும்போது நான்தான் ஹீரோயின். சின்னத் திரையில் பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும். நடிப்புத் திறமையை முழுமையாகக் காட்டுவதற்கு வாய்ப்பும் இருக்கும்.
சினிமாவில் அப்படிக் கிடையாது. வந்தோமா? நாலு சீன் பண்ணினோமா? டான்ஸ் பண்ணினோமா? அப்படித்தான் இருக்கும்.
தொடர்களில் நடிப்பதால் சினிமா "டச்' குறைந்திருக்குமே?
அப்படி ஒன்றும் இல்லை. நான் இப்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட "மன்மதராஜா' போய்க் கொண்டு இருக்கிறது. கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லா மொழிகளிலும் சேர்த்து எத்தனை படங்கள் நடித்திருக்கிறீர்கள்? அவற்றில் மறக்க முடியாத படம்?
தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 100 படங்கள் பண்ணியிருக்கிறேன். மறக்க முடியாத படம் என்று சொல்வதை விட எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம் "செந்தூரம்' தெலுங்குப் படம். அந்தப் படத்திற்கு நேஷனல் அவார்டு கிடைத்தது. தமிழில் "ரசிகன்' படம்தான் எனக்கு ஒரு பிரேக் கொடுத்தது. அதற்குப் பிறகு கேரக்டர் ரோல் என்று சொல்வது போல அமைந்தது "பொற்காலம்' தான்.
சினிமாவுக்கு இப்போது வருகிற ஆர்ட்டிஸ்ட் சினிமாவைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டு வருகிறார்கள். நான் அந்த மாதிரி ட்ரெயினிங் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை. இங்கே வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.
தமிழ் தவிர பிறமொழிப் படங்களில் என்ன மாதிரியான கேரக்டர்ஸ் பண்ணுகிறீர்கள்?
சமீபத்தில் கன்னடத்தில் "அணாதெரு' - பிதாமகன் ரீமேக், அதில் உபேந்திரா - விக்ரம் ரோல் பண்ணினார். தர்ஷன் - சூர்யா ரோல் பண்ணினார். அடுத்து ரமேஷ் அரவிந்த் ஜோடியாக ஒரு படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அது மராட்டி மொழிப் படம் ரீமேக். அப்புறம் "இந்திரா' என்று ஒரு படம். தர்ஷன் ஜோடியாக நடிக்கிறேன். முனி ரத்தினம் சார் ரீமேக் செய்த "ரத்தக் கண்ணீர்' படத்தில் நடித்தேன். அது நல்ல பெயர் வாங்கித் தந்தது.
சூட்டிங் இல்லாத நேரத்தில் உங்களுடைய பொழுதுபோக்கு?
நண்பர்களோடு ஜாலியாக அரட்டை அடிப்பது. சினிமாவுக்குப் போவது. வெளியே போய் சாப்பிடுவது. சிலநேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு இருப்பது.
எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்?
என் கல்யாணம் எப்போது என்று எனக்கே தெரியாது. கடவுளுக்குத்தான் தெரியும். வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் யாரும் முடிவாகவில்லை. முடிவானதும் எல்லாருக்கும் சொல்கிறேன்.
-
17th October 2009, 04:24 AM
#145
Moderator
Diamond Hubber
I still have a lot to learn about acting, says Sangavi
S.R. Ashok Kumar
"I think a stint in the film institute is necessary for upcoming artists to bloom"
Sangavi
Sangavi is an artist who has balanced glamour and character roles in her career. Except for Malayalam, the actor has acted in all other south Indian languages. A graceful dancer, Sangavi talks about her films, and her likes and dislikes.
I am a nice person as long as you are nice to me. I do not mingle with everyone freely, but once I strike a friendship it will be for life.
I have acted in films since I was a child. My grandmother's younger sister is popular Kannada artist Arathi. Whenever she went for shoots, I used to accompany her. Maybe, those visits sparked an interest in acting later in my life.
It was director Selva who made me a lead actor in his directorial venture `Amaravathi'. My co-star in that movie was Ajith Kumar. The same director cast me opposite Arjun in `Aanai', in which I did the mature role of a mother who loses her daughter. My work in the film won me appreciation.
I still think I have a lot to learn about acting. After my first film I got a few breaks in Telugu and Kannada. I did nearly 45 films in Telugu and some half-a-dozen films in Kannada. The remaining movies are in Tamil.
In spite of not performing too well, I like my first film `Amaravathi'. My list of favourite films includes `Rasikan' and `Porkalam'. I also rate the Telugu film `Seetharamraj' with Nagarjuna highly. I did the lead role in the national award winning film `Sindooram', which was directed by Krishna Vamsi, husband of Ramya Krishnan, with two new heroes — Ravi Teja and Brammaji. For that film I got the State award. Now, I am working in the Telugu remake of `Pithamagan'.
My role model is Sridevi. But I like all the artists who are working today. How can one forget performances of Trishna in the Telugu film `Nuvvu Vasthanante Nenoddantana' or Simran in `Valee', Asin in `Gajani' and Jyotika and Nayantara in `Chandramukhi'? I also liked Suriya in `Kakka Kakka' and `Peralazhagan', and Vijay and Vikram in some of their films.
I think a stint in the film institute is necessary for upcoming artists to bloom. When I came I was raw in all the departments of filmmaking. There is no limit to what the youth of today can achieve.
When my first film was released a reviewer wrote that I "had a deadpan face". But, a subsequent review in the same newspaper lauded my performance. I feel that this is one of the best critical reviews I got in my lifetime.
When I did the film `Porkalam', directed by Cheran, superstar Rajinikanth, director Bharathiraaja and Suhasini commended my acting. I was really thrilled. Another high point was when I received an award from the Andhra Pradesh Government for the film `Sindooram'.
I do not plan my future, as things do not happen as one wishes it would. I have learnt to accept things as they come.
My mission in life is to serve the underprivileged.
நன்றி: Hindu
-
24th October 2009, 04:22 AM
#146
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் ஜெனிலியா!
தமிழ்த் திரைத் தாரகையாக ஜொலித்த ஜெனிலியா, தற்போது பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2003-ம் ஆண்டில் `துஜே மேரி கசம்' படத்தின் மூலம் இந்தித் திரை யுலகில் பிரவேசித்த ஜெனிலியா, அது முதல் துறுதுறுப்பான அடுத்த வீட்டுப் பெண் வேடத்திலேயே நடித்து வருகிறார். "ஆறாண்டுகள் ஆகிவிட்டபின்பும் அம்மாதிரிப் பாத்திரங்கள் அலுத்த மாதிரி தெரியவில்லை'' என்று உறுதியளிக்கிறார், ஜெனிலியா.
படங்களில் பிசி நிலையிலும் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவிருக்கும் `ரியாலிட்டி ஷோ' விலும் தொகுப்பாளினியாகப் பிரவேசிக்கப் போகிறார், ஜெனிலியா.
வறுமையே அறியாது வளர்ந்த 10 பணக்காரப் பையன்கள் ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதும், கிடைக்கும் சாதாரண வேலைகளைச் செய்வதும்தான் அந்த நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சி குறித்து ஜெனிலியா கூறுகையில், ``பணத்துக்காகவோ, மற்ற சினிமா நட்சத்திரங்கள் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றுகிறார்கள் என்பதற்காகவோ நானும் சின்னத்திரைக்கு வரவில்லை. இந்த நிகழ்ச்சியின் `கான்செப்ட்' எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. ஆரம்பத்தில், நான் ஒரு திரைப்பட ஷூட்டிங்குக்குக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததால் நிகழ்ச்சியை நான் நடத்த முடியுமா என்பதே உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போக, நான் டி.வி. நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேன்'' என்று முன்கதை கூறு கிறார் ஜெனிலியா.
சரி, இவருக்குப் பிடித்த டி.வி. நிகழ்ச்சிகள் என்னென்ன?
``நான் பெரும்பாலும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளைத்தான் பார்ப்பேன். அவை தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வமில்லை.''
இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் ஜெனிலியா மிகவும் நெருக்கமாக இருப்பதாகச் செய்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதைப் பற்றிக் கேட்டால்...
``நான் இந்த மாதிரிக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டேன். நாங்கள் நல்ல நண்பர்கள்தான். நான் யாருடனும் சேர்ந்து சேர்ந்து சுற்றவில்லை''. ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் பதில் வந்து விழுகிறது.
சரி, ஜெனிலியா விரும்பும் ஆண் எப்படியிருக்க வேண்டும்?
``எந்த ஒரு உறவிலும் முக்கியமானது தொடர்பு தான். நல்ல ஒரு தொடர்பாளராக இருக்கக்கூடியவரை நான் விரும்புவேன்''
சொல்லியபடி தனது `பளீர்' புன்னகையைப் படர விடுகிறார் ஜெனிலியா.
நன்றி: தினதந்தி
-
24th October 2009, 04:24 AM
#147
Moderator
Diamond Hubber
தமிழ் கலாச்சாரத்துடன் ஒரு சிங்கப்பூர் சீரியல்
தமிழ்சேனல்களில் அதிக சீரியல்களை இயக்கி தயாரித்தவர் என்ற முறையில் பிரபுநேபாலைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். தென்னாப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இவர், தனது கலைப்படைப்புக்கள் மூலம் தமிழ் சேனல்களில் வித்தியாசமான படைப்புக்களை தந்து நிலைத்தார்.
இப்போதும் தமிழ் சேனல்களுக்கு தனது படைப்புக்களை தொடர்ந்து கொண்டிருக்கும் பிரபுநேபால், இத்துடன் இன்னொரு கலாச்சாரப் பதிவையும் ஓசையின்றி செய்து கொண்டிருக்கிறார். சிங்கப்பூர், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடிப்புக் கலைஞர்கள் நடிக்க, தமிழ் டெக்னீஷியன்கள் கைவண்ணத்தில் சிங்கப்பூர் டிவிக்காக ஒரு சீரியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த சீரியலுக்குப் பெயர் `சின்டா தியேடா ஆக்கிர்.' தொடரை தயாரிப்பதுடன் இயக்குவதும் பிரபுநேபால் தான். இதில் சிங்கப்பூரில் முன்னணியில் இருக்கும் சீரியல் நடிகர்கள் நடிக்கிறார்கள்.
"என்ன திடீரென்று சிங்கப்பூர் சீரியலுக்குப் போய்விட்டீர்கள்?
பிரபுநேபாலைக் கேட்டால்...
"நான் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் நான் பிரபலமானது தமிழ் சீரியல்கள் மூலம் தான். என்னை பிரபலப்படுத்திய தமிழகத்தின் கலாச்சாரத்தை அதன் இயல்பு மாறாமல் வெளிநாடுகளிலும் தரவேண்டும் என்று விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவே இம்மாதிரியான முயற்சிகள்.அதிலும் இதில் நடிக்கும் சிங்கப்பூர், தென்னாப்பிரிக்க கலைஞர்கள் அனைவரும் தமிழ்க்கலாச்சார உடையணிந்தே நடிக்கிறார்கள். கதையும் இந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கதை தான்.''
"தொடர் என்றாலே வருடக்கணக்கில் நீளுமே?''
"அதுதான் இல்லை. அங்கே ஒரு தொடரை அதிகபட்சம் 2 மாதங்களுக்குள் முடித்து விடுகிறார்கள். அதற்குமேல் நீண்டால் அங்குள்ளவர்கள் பார்ப்பதை விட்டு விடுவார்கள். இதை மனதில் கொண்டே அங்கு குறைந்த பட்சமாக ஒரு மாத தொடரையும், அதிகபட்சமாக இரண்டு மாத நீண்ட தொடரையும் தயாரிக்கிறார்கள்.''
"இம்மாதிரியான முயற்சிக்கு வித்திட்டது எது?''
"சிங்கப்பூரில் இருந்து ஒரு பெண், நடிகர் ஷாருக்கானை பார்க்கும் ஆவலில் இந்தியாவுக்கு வருவதாக 5 வருடத்திற்கு முன்பு `சின்டா பாலிவுட்' என்ற படத்தை உருவாக்கினேன். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பாலிவுட் நடிகர்களுக்கு அதிக கிரேஸ் உண்டு. மும்பை வந்தும் அந்தப்பெண் ஷாருக்கானை பார்க்கமுடியாமல் சிங்கப்பூருக்கே திரும்பிபோவதாக கதை முடியும். நடிகர்-நடிகைகளை திரையில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் படத்தின் மெசேஜ். இந்த படத்துக்கு சிங்கப்பூர் அரசின் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 9 விருதுகள் கிடைத்தன. இந்த படைப்புக்கு கிடைத்த உற்சாகம் தான் இப்போது என்னை சீரியலுக்காக சிங்கப்பூர் வரை நகர்த்தியிருக்கிறது. என்றாலும் தமிழ்சீரியல்களிலும் என் படைப்புக்கள் தொடரும்.''
[html:5fe5d21f4e]<div align="center"></div>[/html:5fe5d21f4e]
நன்றி: தினதந்தி
-
27th October 2009, 12:10 PM
#148
Senior Member
Seasoned Hubber
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ
மும் பைக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருந்த சுதாசந்திரனை ஏர்போர்ட் வாசலில் சந்தித்தோம். போர்டிங்பாûஸ எல்லாம் செக்கிங் கவுன்டரில் கொடுத்துக் கொண்டே நமது கேள்விகளுக்கு விடையளிக்க ஆரம்பித்தார் "கலச'த்தில் சந்திரவாக கலக்கி, "அரசி'யில் அட்வெகேட்டாக வந்து தற்போது "தாய'த்தில் சோலப்பூவாக மலர்ந்திருக்கும் மயூரி சுதா சந்திரன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிகைக்கு அளிக்கும் பேட்டி இது.
தமிழ் தொலைக்காட்சியில் நடிக்க வந்தது எப்படி இருக்கிறது?
பனிரெண்டு வருடத்திற்குப் பிறகு தமிழ்ல நடிக்க வந்தது ரொம்ப சந்தோமா இருக்கு. அப்போ நான் நடிக்கும் போது எனக்கு சரியான ரோல்ஸ் அமையல. படங்கள் சரியா ஓடல. அதுல கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது. இந்த சமயத்துல இந்தியில வாய்ப்புகள் நிறைய வந்தது. அதனால மும்பையில போய் செட்டில் ஆகிட்டேன். அங்கே போய் டி.வி. சீரியல், இந்தி படங்கள் நிறைய நடிச்சேன். அதன் பிறகு அங்கே பாலாஜி டெலி பிலிம்ஸ்ல ரொம்ப பிஸியாக இருந்தேன்.
பாலாஜி டெலி பிலிம்ஸ்ல நடிச்சதை பார்துட்டு குட்டி பத்மினி மேடம் போன் பண்ணி கலசத்துல நடிக்க கூப்பிட்டாங்க. அதே போல பிரபுநேபால் சாரும் ஜெயா டிவியில ஒரு தொடர்ல நடிக்கக் கூப்பிட்டார். அவுங்க இரண்டு பேரும்தான் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு மறுபடி வர காரணம். "கலசம்', "அரசி' இரண்டும் நெகட்டீவ் ரோல். ரொம்பவே மேக்கப் போட்டுக்கிட்டு நடிச்சேன். ராதிகா மேடமோட நடிச்சது ரொம்ப நல்ல அனுபவம். எனக்கு பாரதிராஜா சார் படத்துல நடிக்கனும் ரொம்ப நாளா ஆசையிருந்தது. அப்போ அந்த வாய்ப்பு கிடைக்கல. இப்போ அவரோட உதவியாளர்தான் இந்த தாயம் தொடரை எழுதுறாரு. என்னோட ஆசை நிறைவேறின திருப்தி.
மேக்கப்பே இல்லாம பண்ணியிருக்கீங்களே?
மக்கள் கிட்ட ரீச் கண்டிப்பா இருக்கும். விளம்பரம் பார்த்துட்டே நிறைய பேர் எனக்கு போன் பண்ணி விசாரிக்கறாங்க. "இதுல என்னமாதிரி பண்றீங்க? பார்க்கறதுக்கு ரொம்ப சிம்பிள்ளா இருக்கீங்க, என்ன கதை' அப்படின்னு ரொம்ப ஆர்வமா கேட்கிறாங்க. ஆடியன்ஸ் எவ்வளவு எதிர்பார்ப்போட இருக்காங்கன்னு தெரியுது.
வடிவுக்கரசி மேடம் இதில் பட்டம்மாவா வராங்க. ஒரு சூழ்நிலையில அவுங்க ஜெயிலுக்குப் போக வேண்டியது ஆகிவிடும். அவுங்களுக்கு ஐந்து மகன்கள். அவங்களையும், அவுங்க வீட்டையும் நான் தான் மெயிண்டன் பண்ண வேண்டி இருக்கும். அதில் என் பெயர் சோலப்பூ. சோலப் பூன்னா அது ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறை பூக்கும் பூ. அது மாதிரி ஒரு அழகான ரோல். ரொம்ப எமோஷோனல் ஆன ரொம்ப இண்னோசென்ட்டான.. அதே சமயதுல எந்த பிரச்னையா வந்தாலும் உறுதியா எதிர்கொள்கிற மாதிரியான கேரக்டர்.
அப்போது நடித்தற்கும்,இப்போது நடிப்பதற்கும் எப்படி உணர்கிறீர்கள்?
காண்பிடண்ட் வந்திருக்கு. ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்ததுனால தமிழ் அவ்வளவா என்னால பேசமுடியல. இப்போ லாங்வேஜ் நல்லா செட் ஆகிடுச்சு. நல்லா சரளமா தமிழ் பேசுறேன். அதுமட்டுமல்ல மும்பையில் இந்தி தொடர்களில் நிறைய நடித்தில் நல்ல எக்ஸ்பிரியன்ஸ் கிடைச்சருக்கு. அங்கேயும் சரி, இங்கேயும் சரி டைரக்டர்கள் நல்ல சப்போர்ட் பண்ணாங்க. எல்லாரும் நல்ல எக்ஸ்பிரியன்ஸ் டைரக்டர்கள் அதுனால நிறைய அனுபவம் கிடைச்சது.
விபத்தில் உங்கள் காலை இழந்த போது மீண்டும் நடிக்க முடியும்னு நம்பிக்கை இருந்ததா?
அந்த நேரத்துல நடிக்கறது எல்லாம் என் மைண்ட்ல இல்ல. எப்படியாவது எந்து நடக்கனும் மட்டும் தான் ஆசைப்பட்டேன். அதுக்காக நிறைய முயற்சி எடுத்தேன், ரொம்பவும் கஷ்டப்பட்டேன். பிறகுதான் நடிக்கணும்,டான்ஸ் பண்ணணும்ன்ற ஆசை எல்லாம் வந்தது.
மும்பையில் உள்ள ஆடியன்ஸ்க்கும், தமிழ் ஆடியன்ஸ்க்கும் என்ன வேற்றுமை?
ரொம்ப வித்தியாசம் இருக்கு. அங்கே பார்த்தீங்கன்னா கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டு நடிக்கனும். ஆனால் மலையாளம், தமிழ்ல எல்லாம் ஓவர் மேக்கப் எல்லாம் இருக்காது. தமிழ் கதைகள் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்துலையும் நடக்கிற உண்மையான கதை போல இருக்கும். ரொம்ப ஏதார்த்தமா இருக்கும். இந்தியில அப்படி கிடையாது. இப்போதான் இந்தி டெலிவிஷன் மாறிக்கிட்டு வருது. மெட்ரோவைவிட்டு நகர்ந்து கிராமங்களுக்குப் போக ஆரம்பிதிருக்கிறார்கள். இருந்தாலும் இந்தியில் ஜூவல்லரி, ஆடம்பர சாரின்னு எல்லாமே கொஞ்சம் அதிகமா இருக்கும். ஆனால் தமிழில் அப்படியில்லை. தமிழ் ஆடியன்ûஸ சீட் பண்ண முடியாது.
இதுவரை நீங்கள் நடித்ததில் மறக்க முடியாத கதாபாதிரம் எது ஏன்?
"மயூரி' படம்தான் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அந்த மாதிரி படம் யாரும் நடிக்க மாட்டாங்க. அப்படியே பண்ணாக்கூட கதை யாரைப் பற்றியோ அவுங்களே அதில் நடிக்கிறது ரொம்ப கஷ்டம். அந்த மாதிரி அமையாது. நான் ரொம்ப லக்கி என்னோட வாழ்க்கையே படமாக்கி அதுல நானே நடிச்சிருக்கேன். அதுக்காக எனக்கு 1985ல தேசிய விருது கிடைச்சது. இதைவிட பெருமை வேற எதுவுமே இல்ல என் வாழ்க்கைல.
டான்ஸ் ஸ்கூல் நடத்துறீங்களே? அதில் கிடைச்ச அனுபவம்?
மும்பையில டான்ஸ் ஸ்கூல் வெச்சிருக்கேன். டான்ஸ் ஸ்கூல்ல போய் உட்கார்ந்துட்டா மனசுக்கு ரொம்ப நிம்மதி கிடைக்கும்.ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு.
மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறீர்களே? சென்னையில் எப்போ வீடு வாங்க போறீங்க?
இந்தக் கேள்வி கொஞ்சம் லேட். போனமாதம் தான் சென்னையில் வீடு வாங்கினேன். இப்போ சூட்டிங்கிற்காக மாதத்தில் பதினைந்து, இருபது நாள் இங்கேதான் இருக்கிறேன். முன்பு மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். இப்போ சென்னையில் இருந்து மும்பைக்குப் போய் வருகிறேன்
.
உங்க குடும்பம் பற்றி?
எனக் குக் குழந்தைகள் இல்லை. என் கணவர் ரவியும் நானும் தான். அவர் சினிமா இன்டஸ்ட்ரியில் டைரக்ஷன் பீல்டுலதான் இருந்தாரு. அதுக்குப் பிறகு கனடா போய் சில வரும் ஓர்க் பண்ணிகிட்டு இருந்தாரு. இப்போது எங்கள் நாட்டியப்பள்ளியை அவர்தான் பார்துகிட்டு இருக்கிறார்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
-
31st October 2009, 04:47 AM
#149
Moderator
Diamond Hubber
டைட்டில் பாடலுக்குத்தான் அதிக உழைப்பு!
சின்னத்திரையில் `ஆளவந்தார் கொலைவழக்கு,' `வசந்தம் காலனி, புனிதபூமி, தர்மயுத்தம், துப்பறியும் சோழன், நிறங்கள், வண்ணவண்ணபூக்கள், காவ்யா, குல விளக்கு, ஜென்மம் எக்ஸ், ஷியாமளா, குடும்பம் ஒரு கோயில் என்று 75-க்கும் மேற்பட்ட மெகா சீரியல்களுக்கு இசை யமைத்தவர் `கலைமாமணி' அரவிந்த் சித்தார்த்தா. பெரிய திரையிலும் காவியத்தலைவன், முற்றுகை, வள்ளிவரப்போறா, ராஜாளி, எங்கிருந்தாலும் வாழ்க, பயம் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இப்போதும் 5 படங் களில் இசையமைப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்.
"பெரியதிரை, சின்னத்திரை இசையமைப்பில் என்ன வித்தியாசம்?''
இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவைக் கேட்டால்...
"திரைப்படங்களுக்கு இசையமைக்கும் போது இயக்குநர், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோருடன் படத்தின் கதையையும், காட்சிகளின் அமைப்புகளையும் நன்கு கலந்தாலோசிப்பேன்.
மெகா சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் போது முதலில் `டைட்டில் பாடல்' கம்போசிங்கின் போது மண்டையை உடைத்துக் கொள்ளாத குறையாக பலநாட்கள் செயல்படுவேன்.
ஏகப்பட்ட டிïன்களை கம்போஸ் செய்து தயாரிப்பாளர்கள், இயக்குநர், பாடலாசிரியர் என்று எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் முடிவாக ஒரு டிïனில் பாட்டை கம்போஸ் செய்து கொடுப்பேன்.
மெகாசீரியலுக்கு டைட்டில் பாடல் மிக முக்கியமாச்சே. அதன் பிறகு தினமும் சுடச்சுட ஷூட்டிங் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்வேன். இந்த அனுபவம் கொஞ்சம் திரில்லிங்காகவே இருக்கும்.''
அரசியல் கட்சிகளின் கொள்கைப் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறீர்களே?''
"தேர்தல் சமயத்தில் முதல்வர் கலைஞர் எழுதிய `தீட்டிய வாளை ஒத்த மீசை கொண்ட திராவிட காளையே புறப்படுக' என்ற பாடலை எடுத்துக் கொண்டு இயக்குனர் அமிர்தம் என்னை சந்தித்தார்.
தேர்தல் கால அவசரத்தை புரிந்து கொண்டு உடனடியாக புஷ்பவனம் குப்புசாமியை வரவழைத்தேன். காலையில் ஆரம்பித்து இரவு 9 மணிக்கு பாடலை கம்போஸ் செய்து முடித்தேன்.
அப்போது கலைஞரிடமிருந்து போன் வந்தது. பாட்டை கேட்க வேண்டும் என்று கூறிவிட்டார். அமிர்தம் சாரும், நானும் இரவு ஒரு மணிக்கு கலைஞரிடம் கேசட்டை எடுத்துச் சென்று போட்டுக் காட்டினோம். உற்சாகமாய்க் கேட்டு ரசித்து பாராட்டினார்.
இரவு ஒரு மணிக்கு தான் எழுதிய பாட்டிற்கு இசையமைப்பும், பாடகரின் வார்த்தை உச்சரிப்புகளும் சரியாக இனிமையாக இருக்கிறதா என்று கேட்டுவிட்டு தூங்கச் சென்ற கலைஞர் அவர்களின் ஆர்வத்தையும், என் இசையமைப்பை அவர் பாராட்டியதையும் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.''
நன்றி: தினதந்தி
-
31st October 2009, 04:51 AM
#150
Moderator
Diamond Hubber
ரோஜாத்தோட்டம்
வசந்த் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜாத்தோட்டம், பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு பேசும்
நிகழ்ச்சியாகும்.
இடையிடையே பெண்கள் விரும்பி கேட்ட புதிய திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும்.
நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் கலந்து கொண்டு நேயர்களிடம் பேசுகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி.
[html:15e0726c91]<div align="center">[/html:15e0726c91]
நன்றி: தினதந்தி
Bookmarks