-
23rd November 2011, 02:54 PM
#1
Senior Member
Seasoned Hubber
திரு. பம்மலார் சார், தங்களின் சிறந்த பாராட்டுக்கு நன்றி.
தாங்கள் பதிவிட்டுள்ள ஆலயமணி பொக்கிஷப் பதிவுகளும், தகவல்களும் உண்மையிலேயே மணியோசையை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.
-
23rd November 2011 02:54 PM
# ADS
Circuit advertisement
-
24th November 2011, 07:22 PM
#2
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உச்சமான-உயர்வான-உணர்வுபூர்வமான பாராட்டுப்பதிவுக்கு எனது ஆத்மார்த்தமான நன்றிகள் !
ஆனந்தக்கண்ணீர்ப்பெருக்கில்,
பம்மலார்.
-
24th November 2011, 07:35 PM
#3
Senior Member
Veteran Hubber
டியர் ஜேயார் சார்,
தங்களின் அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி !
Dear Ramajayam Sir,
Double thanks to you, one for the compliments and the other for the additional info.
அன்புடன்,
பம்மலார்.
-
24th November 2011, 08:14 PM
#4
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
கலையுலக ஆண்டவரின் காவியமான "ஆலயமணி" மெகா ஆல்பம் மகா அருமை !
டியர் ராகவேந்திரன் சார்,
அமுதும் தேனும் எதற்கு ! ஆலயமணியின் ஆத்ம கீதங்கள் இருக்கையிலே நமக்கு !
அன்புடன்,
பம்மலார்.
-
23rd November 2011, 02:50 PM
#5
Senior Member
Seasoned Hubber
திரு. ஹரீஷ் சார், தங்களின் பாராட்டுக்கு நன்றி.
-
24th November 2011, 07:34 PM
#6
Senior Member
Diamond Hubber
-
25th November 2011, 06:48 AM
#7
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
சிவந்தமண்ணின் அடுத்த ஏவுகணையை ஏவி விட்டு இன்பத் தாக்குதல் நடத்தியுள்ளீர்கள். அபாரம்.
வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தச் சென்ற"சிவந்த மண்" படக்குழுவினருக்கு வழியனுப்பு விழா 'பேசும் படம்' அபூர்வ நிழற்படங்கள் அசத்துகின்றன. நம்ம தலைவர் படு ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.
"சிவந்த மண்" காவியத்திற்காக வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகள் பற்றி நடிகர் திலகம் தந்திருக்கும் ஐந்து பக்க பேசும்படம் இதழில் வந்த பயண-படப்பிடிப்புக் கட்டுரையை இடுகை செய்து நடிகர்திலகத்துடன் நேரிடையாக நாங்கள் அளவளாவியது போல மனம் மகிழச் செய்து விட்டீர்கள். படு கேஷூவலான பேட்டி.
சுமைதாங்கி படத்தில் திரு.ஜெமினி அவர்கள் சுமைதாங்கியாய் தாங்கிய கதாபாத்திரத்தை நினைவில் வைத்து சமயம் பார்த்து தலைவர் கோபுவை விமரிசித்தது அருமை.
இவ்வளவு பிரம்மாண்டமான படம் எடுத்தவர்கள் கையில் காசில்லாமல் தவித்திருக்கிறார்கள். அதையும் நடிகர்திலகம் நகைச்சுவை உணர்வுகளுடன் கூறியிருப்பது சூப்பர்.
சிகரெட் கேட்ட கோபுவுக்கு மனமே இல்லாமல் தான் வைத்திருந்த 'ஸ்டாக்'கிலிருந்து கர்ணனாய் சிகரெட் அளித்தது வயிறு குலுங்க வைத்தது.
மிளகாய் பொடியும் ஊறுகாயும் வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு இருகண்கள் என்பது சிவந்தமண் படப்பிடிப்பு குழுவினருக்கும் மட்டுமென்ன விதிவிலக்கா? அரிசிச் சோறு பற்றியும் அவர் ஒரு குழந்தையைப் போல சிலாகித்திருந்தது ரசிக்கும்படியாக இருந்தது.
மொத்தத்தில் அற்புதமான கட்டுரையை இடுகை செய்தமைக்கு அளவில்லா நன்றிகள்.
இது போன்ற ஏவுகணைத் தாக்குதல்களை நாங்கள் தினமும் ஏற்றுக் கொள்ளத் தயார். தங்கள் இன்பத் தாக்குதல்களுக்கு தேங்க்ஸ்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 25th November 2011 at 12:45 PM.
-
25th November 2011, 01:27 PM
#8
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார்,
'சிவந்த மண்' மேளா முடிந்து விட்டதோ என்று எண்ணியிருந்த வேளையில், இன்னும் இன்னும் அதிகமான அன்றைய ஏடுகளை அள்ளித்தந்து பரவசத்தில் ஆழ்த்தி வருகிறீர்கள். இன்றைக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளிநாடுகளில் சரவசாதாரணமாக படமாக்கப்பட்டு வரும் வேளையில், முதல் தமிழ்ப்படத்தை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க சித்ராலயா யூனிட்டார் எவ்வளவு கஷ்ட்டப்பட்டுள்ளனர் என்பதை நடிகர்திலகம் மிக சுவையாக எடுத்துரைத்துள்ளார். கட்டுரை முழுவதிலும் அவரது குறும்பு பளிச்சிடுகிறது. முரளிசார் முன்பு மணியன் பற்றிய பதிவில் சொன்னதைப்போல, மிகக்குறைவான அந்நியச்செலாவணி மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த காலம். ஏனென்றால் அப்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியும் குறைவு, என்.ஆர்.ஐ. வருமானங்களும் சுத்தமாகக்கிடையாது. (வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் துவங்கியிராத நேரம்).
இப்போது படத்தைப்பார்க்கும்போது, ஸ்ரீதர் இன்னும் வேறுவிதமாக வெளிநாட்டுக்காட்சிகளைப் படமாக்கியிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழ் மக்கள் வெளிநாட்டுக்காட்சிகள் என்றால் வானளாவிய நவீனக்கட்டிடங்கள், மற்றும் நவீனக்காட்சிகளையும் காண விரும்புவர். ஆனால் ஸ்ரீதர் பெரும்பாலும் அந்நாடுகளிலுள்ள புராதனச்சின்னங்களையே அதிகம் கவர் பண்ணியிருப்பார். ஏரியில் 'பெடல்-போட்' ஓட்டும் காட்சி பெரும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதே சமயம் பனிமலைக்காட்சிகள் அருமையாக இருக்கும்.
சிவந்த மண் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரானதாக நடிகர்திலகம் சொல்லியிருக்கிறார். அப்படீன்னா தெலுங்கில் நடித்தது யார் யார்?. இந்தியில் நடித்த ராஜேந்திரகுமார், வகீதா ரெகமான் ஆகியோர் இப்போது இருக்கிறார்களா?.
அதிகமதிகம் சிவந்த மண் ஆவணப்பதிவுகளைத்தேடித் தேடியெடுத்து வந்து பறிமாறும் உங்கள் ஆர்வத்துக்கு மனமார்ந்த நன்றிகள். சிவந்த மண் குழுவினரை வழியனுப்பும் காட்சிகளின் தொகுப்பும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.
-
25th November 2011, 02:04 PM
#9
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
வெற்றிகரமாக இரண்டாயிரமாவது பதிவை நெருங்கும் தங்களுக்கு எங்கள் அனைவரது வாழ்த்துக்கள். இந்த இரண்டாயிரம் பதிவுகள், எத்தனை ஆயிரம் அரிய விஷயங்களைத்தாங்கி வந்துள்ளன என்ற உண்மை பிரமிக்க வைக்கிறது. அவற்றில் நீங்கள் அளித்த பல்வேறு புள்ளிவிவரப்பதிவுகள், நடிகர்திலகத்தின் சாதனைகளைப்பறைசாற்றும் சாட்சிகளாய் நிற்கும் ஆவணங்கள், கிடைத்தற்கரிய தகவல் களஞ்சியங்கள், இதுவரை பார்த்திராத ஏடுகளின் தொகுப்புக்கள் என அனைத்துமே தங்கச் சுரங்கத்திலிருந்து வெளிவந்த தங்கக்கட்டிகள்.
இந்த இரண்டாயிரம் இன்னும் பல ஆயிரமாக பல்கிப்பெருகி, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இளைப்பாறும் ஆலமரமாய் விரிந்து பரந்து புகழ் பரப்ப வேண்டும் என்று இதயம் நிறைய வாழ்த்துகிறோம்.
-
25th November 2011, 03:34 PM
#10
Senior Member
Senior Hubber
அன்பு நண்பர்களே,
மறுபடியும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை இந்தத்திரியின் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நம் அன்பு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பங்களிப்பை நாள்தோறும் விடாமல் செய்து வருகிறார்கள். திரு. பம்மலார் (இவர் தான் நமது திரியின் சூப்பர் ஸ்டார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை), திரு. ராகவேந்தர் மற்றும் திரு. வாசுதேவன் அவர்கள் எங்கெங்கோ உள்ள ஆவணங்களையும், கட்டுரைகளையும், பாடல் காட்சிகளையும், புகைப்படங்களையும் இடுகை செய்து எல்லோரையும் பரவசப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
திரு. முரளி அவர்களின் சில கட்டுரைகள் அவருடைய வழக்கமான சரளமான நடையில் சுவைபட இருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் சாரதா மேடத்தின் இடுகைகள் பரவசப் படுத்துகின்றன.
திரு. சந்திரசேகர் சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல நல்ல காரியங்களை, தொடர்ந்து செய்து ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் இறுமாந்து கொள்ள வைக்கின்றார்.
திரு. கார்த்திக் அவர்களும் அவருடைய பங்களிப்பைத் தொடர்ந்து நல்கி வருகின்றார்.
மேலும், நமது மற்ற நண்பர்களும் தொடர்ந்து ஏதோ ஒரு சிறிய விஷயத்தையாவது எழுதுகிறார்கள்.
திரு. பம்மலார் அவர்கள் பதிவிட்ட "ஆலய மணி" படச் சாதனை விளம்பரங்கள் ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் மகிழ்ச்சியின் எல்லைக்கே அழைத்துச் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. என் இதயத்திற்கு மிக நெருக்கமான முதல் பத்து படங்களில், "ஆலய மணி" தியாகு எப்போதும், ஒரு முக்கியமான இடத்தில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்னும் போது, எனக்கு வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே, ஆய்வுக்கட்டுரை வேறு எழுதி இருந்தேன். அந்த அளவிற்கு என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட கதா பாத்திரம் "தியாகு". நன்றி திரு. பம்மலார் அவர்களே. சிவந்த மண் பட சம்மந்தப் பட்ட ஆவணக் கட்டுரைகளும் நடிகர் திலகத்தின் பேட்டியும், வெளி நாடு செல்வதற்கு முன்னர், படக்குழுவினர் மற்றும் பிற கலைஞர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் மிக அருமை மற்றும் காணக்கிடைக்காத ஒன்று. இரண்டாயிரமாவது பதிவை நெருங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு முன் கூட்டியே வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
திரு. வாசுதேவன் அவர்களின் ஜூனியர் விகடன் இதழில் வெளி வந்த கட்டுரையும் மிக அருமை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Bookmarks