-
28th February 2013, 07:20 AM
#1971
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் காஸ்ட்யூம் விஷயத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்தது சி.வி.ஆர். அவர்களே. இந்த விஷயத்தில் கோபால் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். அவரிடம் நேரிலேயே கேட்டிருக்கிறேன். தங்கள் படத்தில் மட்டும் நடிகர் திலகத்தின் தோற்றம் வித்தியாசமாக இருப்பது மட்டுமின்றி இளமையாகவும் தோன்றுகிறதே என்று கேட்டோம். சொல்லப் போனால் அவர் இதை ஊட்டி வரை உறவு படத்திலேயே செயல் படுத்தத் தொடங்கி விட்டதாக கூறினார். ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருப்பதாக அவர் கூறினார். இதற்கென்றே அந்தக் காலத்தில் பல டிசைனர் புத்தகங்களை வாங்கிப் படித்ததாகவும் கூறினார். இதை விட பெரிய விஷயம், அனுபவம் புதுமை படத்தை நடிகர் திலகம் பார்த்து சி.வி.ஆர் அவர்களைப் பாராட்டியது தெரிந்த விஷயம். ஆனால் அவர் முதலில் பாராட்டியது அப்படத்தில் சி.வி.ஆர். பயன் படுத்திய காஸ்ட்யூம் தான். குறிப்பாக கனவில் நடந்ததோ பாடலில் முத்துராமன் அணிந்திருந்த உடைகளை நடிகர் திலகம் மிகவும் ரசித்ததாகவும் கூறியுள்ளார். அதே போல் ஊட்டி வரை உறவு படத்தில் எங்கெங்கு half sleeve எங்கெங்கு full sleeve போன்றவற்றையும் பார்த்து பார்த்து செய்ததாகவும் அதை நடிகர் திலகம் மிகவும் பாராட்டியதாகவும் கூறினார். இதனுடைய உச்சம் தான் சுமதி என் சுந்தரி. இப்படம் ஓடியதில் பெரும் பங்கு நாயக நாயகியரின் உடையலங்காரம். அதிலும் ஒரு காட்சியில் நான் ஒரு சந்தேகம் கேட்டேன். ஆலயமாகும் பாடல் இரண்டாம் முறை வரும் போது அலுவலகத்திற்கு நாயகன் கிளம்புவதாக வரும் போது முழுக்கையாகவும் வரும் போது அரைக்கையாகவும் இருக்கும். இதைக் கேட்ட போது சிவிஆர் சிரித்தார். தாங்கள் கேட்டது சரிதான். ஆனால் அதை நான் ஒரு சிம்பாலிக்காகத் தான் வைத்துள்ளேன். அது ஒரே நாளாக எடுத்துக் கொண்டால் தவறாகத் தோன்றும். ஆனால் பொதுவாகத் தான் அந்த இடத்தில் வைத்துள்ளேன் என்றார்.
இந்த கலர் கான்செப்டைத்தான் சி.செ. படத்தில் எத்தனை அழகு பாடலிலும் கடைப் பிடித்துள்ளார். அப்படிப் பார்க்கும் போது சிவிஆருக்கு முன்பிருந்த இயக்குநர்கள் இந்த கலர் கான்செப்ப்டைப் பயன் படுத்தியிருந்தால் இன்னமும் கூட அழகான தோற்றங்களில் நாம் நடிகர் திலகத்தை ரசித்திருப்போம்.
கோபால் சார், தங்களுடைய பதிவுகளை எல்லோரும் ரசிக்கிறார்கள் பார்க்கிறார்கள். எனவே தாங்கள் அதற்காக பிரத்யேக முயற்சி எடுக்க வேண்டாம். வம்பிற்கிழுக்கும் பதிவுகளைப் போட வேண்டாம்.
இந்த முதல் மரியாதை அமர்க்களத்தில் ராகுலின் அம்பிகாபதி, தில்லானா மோகனாம்பாள் பதிவுகள் கவனிக்கப் படாமல் போய் விட்டன. சில சமயம் இத்திரி சிலருக்கு மட்டும் தான் முன்னுரிமையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. அவ்வாறு இல்லை என்று நிரூபித்து அனைவரின் பதிவுகளையும் ஒரு சேர மதித்து அனைத்திற்கும் தங்கள் பதில் கருத்துக்களை எழுதுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
கிட்டத் தட்ட மூன்று நான்கு பக்கங்கள் கோபால் ஒருவருக்கே கோட்டா வாகி விட்டது.
சந்தோஷம் தானே கோபால்
Last edited by RAGHAVENDRA; 28th February 2013 at 07:22 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013 07:20 AM
# ADS
Circuit advertisement
-
28th February 2013, 07:27 AM
#1972
Senior Member
Seasoned Hubber
சிவிஆர் கலர் கான்செப்ட் ... தொடர்ச்சி
ஆனால் சி.வி.ஆர். அவர்கள் கோட்டை விட்டது என் மகன் படத்தின் விக் விஷயத்தில். சாதாரணமான விக் வைத்திருந்தால் அப்படத்தின் உடைகள் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கும். குறிப்பாக பொண்ணுக்கென்ன அழகு பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் உடைகள் மிகவும் பிரமாதமாக இருக்கும், ஆனால் அவற்றை ரசிக்க விடாதபடி அந்த விக் வந்து கெடுக்கும். மஞ்சுளாவின் காஸ்ட்யூம் அப்படத்தில் times ahead ஆக இருக்கும். ஆனால் அன்றைய கால கட்டத்தில் அது ஆபாசமாயிருந்தது உண்மை. இன்றைக்கும் பெரியவர்கள் அந்தப் பாட்டை தொலைக் காட்சியில் போட்டால் சேனலை மாற்றி விடுவார்கள். இது போன்ற சிற்சில விஷயங்களில் இன்னும் சற்று கவனம் எடுத்து செய்திருந்தால் என் மகன் இன்னும் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கும்.
சி.வி.ஆர். அவர்களின் ஒவ்வொரு படத்தின் காஸ்ட்யூமைப் பற்றி எழுதவே தனியாக திரி தேவைப் படுகிறது
Last edited by RAGHAVENDRA; 28th February 2013 at 07:31 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013, 07:37 AM
#1973
Junior Member
Newbie Hubber
பழைய பதிவு(ஆனால் இன்றைய உரையாடலோடு தொடர்புள்ளதால்)
சுமதி என் சுந்தரி-1971
எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)
நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்)
அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.
ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)
பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.
நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.
விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின்
லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)
இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.
Last edited by Gopal.s; 28th February 2013 at 08:03 AM.
-
28th February 2013, 08:04 AM
#1974
Senior Member
Seasoned Hubber
சிவிஆர் கலர் கான்செப்ட் தொடர்ச்சி
என் மகன் படத்தில் பொண்ணுக்கென்ன அழகு பாடலைப் பாருங்கள்
பல்லவி தொடங்கி முதல் சரணம் வரை cream வண்ணத்தில் டிசைன் போட்ட சட்டையும் அதன் மேலே பிங்க் வண்ணத்தில் மேலங்கியும் நடிகர் திலகத்திற்கும், செவ்வண்ணத்தில் மஞ்சுளாவிற்கு நவீன உடையும் அவ்வளவு அழகாய்த் தோன்றுகின்றன. அதே போல் முதல் சரணத்தில் டார்க் சேண்டல் நிறத்தில் கால் சட்டையும் அதே வண்ணமும் க்ரீம் வண்ணமும் இணைந்த டிசைன் சட்டையும் நடிகர் திலகத்திற்கும் ஊதா நிறத்தில் மஞ்சுளாவின் உடையும் மிக அருமையாய் உள்ளன. அதுவும் அந்த தோட்டத்தில் கீழேயிருந்து மேலே படிக்கட்டில் ஓடிவரும் ஸ்டைலைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கு இடையூறாக இருப்பது அந்த விக். இப்பாடல் முழுவதுமே நடிகர் திலகத்தின் உடைகள் வித்தியாசமாகவும் இருக்கும். ஆனால் எடுபடாமல் போனதற்கு தலைமுடி ஸ்டைலே காரணம்.
ஓரிடத்தில் கருநீல பூக்கள் திரையின் வலது பக்கம் மேல் மூலையில் தெரிய பின்னணியில் லாங் ஷாட்டில் அவர்களின் போஸைக் காண்பிக்கும் போது கேமிரா கம்போஸிங்கின் அருமையும் வண்ணங்களை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பதும் புலப்படுகிறது.
அதே போல் இன்னோரிடத்தில் டாப் கோணத்தில், நடிகர் திலகம் அமர்ந்திருக்க மஞ்சுளா நின்றிருக்க, அந்த ஊதா நிறம் வானத்தின் நீல நிற பின்னணியில் அந்த காதலர்களின் உணர்வை அப்படியே சித்தரிப்பது அந்த கோணத்தையே கவிதையாக்கி விடும்.
பாடலின் உச்சக் கட்ட சிறப்பு அந்த ஆசையெனும் பந்து சரணத்தில் நடிகர் திலகம் அணிந்திருந்த உடையின் வண்ணம். டார்க் டேன் கலரில் நடிகர் திலகமும், அதே க்ரீம் கலரில் மஞ்சுளாவின் உடையும்.
இவையெல்லாவற்றையும் நமக்கு உணர்வு பூர்வமாக அளித்தது மெல்லிசை மன்னரின் மெட்டும் அதற்கான இசையும் கவியரசரின் வரிகளும் சுசீலா சௌந்தர் ராஜன் குரல்களும் என்றால் அதற்கு ஜீவன் அளித்தவர் நடிகர் திலகம். ஒரு நிமிடம் இப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் தெய்வ மகன் அல்லது சுமதி என் சுந்தரி விக்கை வைத்துப் பாருங்கள். தாங்களே உணர்வீர்கள்...
Last edited by RAGHAVENDRA; 28th February 2013 at 08:16 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013, 09:35 AM
#1975
Senior Member
Seasoned Hubber
அடுத்து தேவர் மகன் படத்திற்கு சில பக்கங்கள் போன பிறகு மீதி யிருந்தால் நடிகர் திலகத்தின் மற்ற படங்களைப் பற்றிப் பேசலாம் என எண்ணுகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்தைக் கூறவும். ஏனென்றால் ஆதி ராம் கூறியது போல் நமக்கு வேறு திரியும் இல்லை. எனவே இவர்களெல்லாம் தங்கள் படங்களை அலசியது போக மிச்சம் மீதி நமக்கு அளித்த பிறகு நாம் மற்றவற்றைப் பற்றிப் பேசலாம். சி.வி.ஆர். பற்றிய பதிவுகள் ஒரு sample ஆகத் தான் இங்கு பதியப் பட்டன. இனி இப்போதைக்கு தொடராது. பயப்படவேண்டாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th February 2013, 10:21 AM
#1976
Junior Member
Newbie Hubber
பிரபு/முரளி/சாரதி ,
இப்போது என்ன செய்ய சொல்கிறீர்கள்? நான் சும்மா இருந்தாலும் விடாது இப்படி தொந்தரவு தருகின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் போட்ட போதெல்லாம் இனித்த பாராட்டுகள் இப்போது கசக்கின்றன. இத்தனைக்கும்,பாராட்டல்ல. தொடர் பதிவுகள். open ஆக போதும்,மற்றவரை கவனியுங்கள் என்கிறார். political ஆக இப்படி நடந்தால், எப்படி நமக்கும் interest வரும்? ஆட்டு மந்தை போலத்தான் சிந்திக்க வேண்டும் , இந்த திரியின் தரம் உயர்வதில், இவ்வளவு, insecurity இருந்தால், எங்கே போய் முட்டி கொள்ள? நான் சிவாஜி செந்திலுக்கு பதிலளித்தால், இவர் வந்து ஆள் சேர்த்து மோதுகிறார். நான் விமரிசனம் எழுதினால் cut paste செய்து திரிக்கிறார். இத்தனைக்கும், இவருடைய பல பதிவுகள் சுவாரஸ்யமானவை. விஷயம் தெரிந்த மனிதர். இவரே இப்படியென்றால், எங்கே சந்திக்க?(சந்திப்பிலா).நான் இவர் வழிக்கே போகாத போதும், mental torture . ஆனால் என்னிடம் சுவாதீனம் எடுத்து advise பண்ணும் ஆட்கள், இவரை கண்டிப்பதே இல்லை.(நானும் ஆள்
சேர்ப்பேனாக்கும் )
-
28th February 2013, 10:43 AM
#1977
Junior Member
Newbie Hubber

Originally Posted by
s.vasudevan
Mr Raghavendra Sir,
Well said Sir. Here I would like to mentioned the words
of Mr Joe that Sivaji Padam Thorkalam Sivaji Thorpathillai.
சிவாஜி தோற்ற படங்கள் உண்டு.
தர்மராஜா ,இரு துருவம், வாழ்விலே ஒரு நாள், புனர் ஜென்மம், சந்திப்பு,அமர காவியம்,என் மகன் ,உனக்காக நான்..-to name a few .
Last edited by Gopal.s; 28th February 2013 at 10:45 AM.
-
28th February 2013, 11:04 AM
#1978
Senior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இந்த முதல் மரியாதை அமர்க்களத்தில் ராகுலின் அம்பிகாபதி, தில்லானா மோகனாம்பாள் பதிவுகள் கவனிக்கப் படாமல் போய் விட்டன. சில சமயம் இத்திரி சிலருக்கு மட்டும் தான் முன்னுரிமையோ என்கிற எண்ணமும் தோன்றுகிறது. அவ்வாறு இல்லை என்று நிரூபித்து அனைவரின் பதிவுகளையும் ஒரு சேர மதித்து அனைத்திற்கும் தங்கள் பதில் கருத்துக்களை எழுதுமாறு அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புள்ள திரு. ராகுல் ராம் அவர்களே,
தங்களின் "அம்பிகாபதி" மற்றும் "தில்லானா மோகனாம்பாள்" படக் கட்டுரைகள் பெரிய அளவில் இங்கு விவாதிக்கப்படவில்லை என்று தோன்றலாம்.
எனக்குத் தெரிந்து முக்கியமான காரணம், ஒரே சமயத்தில், வேறு சில படங்களைப் பற்றிய கட்டுரைகளும் அதையொட்டி வழக்கம் போல் சர்ச்சைகளும் துவங்கி, சில நல்ல ஆய்வுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன என்பது தான் உண்மை.
நண்பர்கள் பலர் என்னுடைய பாடல் ஆய்வுகளை தொடருங்கள் என்று கூறினாலும், நான் அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ள பல காரணங்கள் உண்டு. முதற்கண் அலுவலக வேலைகள் மற்றும் சொந்த வேலைகள். இன்னோர் காரணம் இங்கு அடிக்கடி எழும் சர்ச்சை என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. இது போன்ற தருணங்களில், என்னதான் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும், இது போன்ற சர்ச்சைகள், சில சிறந்த ஆய்வுகளை இருட்டடிப்பு செய்து விடுகிறது என்பது கசப்பான உண்மை. என்னதான் சொந்த திருப்திக்கு எழுதினாலும் இது போன்ற தருணங்கள் பயணத் தடைகளாகி விடுகிறது. இது பற்றி மேலும் எழுதினால், புது சர்ச்சைகள் துவங்கி விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இருப்பினும், தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். ஏனென்றால், இப்பூவுலகு எல்லோருக்கும் சொந்தம்! - திரு. ராகவேந்திரன் சார் - இது உங்களுக்கும் தான்! தங்களுடைய "என் விருப்பம்" - அற்புதம் தயை கூர்ந்து தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
28th February 2013, 11:07 AM
#1979
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
என் பெயரை ஏனையா இழுக்கிறீர்கள்? நான் பாட்டுக்கு பொம்பளையா லட்சணமா 'தேமேன்னு' இருக்கிறேன். அதுதான் 'அழிச்சாட்டியம் பண்ணி' 'பெரியவரிடமிருந்து பாராட்டு வாங்கியாச்சே, அடங்கவேண்டியதுதானே!
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை. இங்கிலீசு படிச்சாலும் இந்த திரி கூட்டிலே.....
-
28th February 2013, 11:33 AM
#1980
Junior Member
Newbie Hubber
அதிகம் படித்திருந்தாலும் - அதிகம் பேசியிருந்தாலும் - அதிகம் ஊர் சுற்றியிருந்தாலும் -மேலைநாடுகள் மற்றும் அந்த நாடுகள் பற்றிய தகவல்கள் அறிந்து வைத்திருந்தாலும் - நம் தமிழ் நாட்டில் கிடைத்த வைர பெட்டகம் நடிகர் திலகத்தின் நடிப்பினை குறை கூற முடியுமா ?
நமது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு முன் உலகளவு பேசப்படும் நாவல்கள் - பல்வேறு உலக மொழி நடிகர்கள் - மற்றும் படங்கள் எம்மாத்திரம்
நடிகர் திலகத்தின் அனைத்து படங்களும் பேசப்படவேண்டும் . பாகுபாடு வேண்டாம் .
தனிப்பட்ட வெறுப்பு விமர்சனங்கள் தவிர்க்கலாம் .
மறைமுக தாக்குதல்கள் - கிண்டல்கள் - எச்சரிக்கை - போன்றவை உயர்ந்த மனிதனின் கௌரவம் பாதிக்கப்படும் என்று உத்தமன் புகழ் பாடும் உங்களுக்கு தெரியாதா ?
தவறு செய்கிறீர்கள் நண்பர்களே
இனியாவது நடிகர் திலகம் அவர்கள் அவன்தான் மனிதன் என்று அவன் ஒரு சரித்திரம் - வெற்றிக்கு ஒருவன் -
என்று புகழ் பாடுங்கள் .
பாவ மன்னிப்பு உண்டு பாசமலர்களே .
நெஞ்சிருக்கும் வரை ... இந்த புண்ணிய பூமியில் சிவகாமியின் செல்வனாம் - நிறைகுடமாம் -அன்னை இல்லத்தின் பெருமைகளை கூறி , எங்கள் தங்க ராஜா வின் சாதனைகளை தொடருங்கள் .
Bookmarks