-
12th March 2013, 05:37 PM
#3151
Junior Member
Veteran Hubber
திரைப்பட வரலாற்றின் நூற்றாண்டு விழா. புரட்சித்தலைவரின் பெயரை சொல்லாமல் அதுவும் தமிழகத்தில் நடக்கிறது. தமிழனின் புகழை தன் படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் தரணி எங்கும் தழைக்க வைத்த தலைவனின் சுவடு இல்லாமல் ஒரு விழா.. உலகத்தமிழர்களுக்கு இதை விட துயர செய்தி ஏதாவது இருக்க முடியுமா.. சினிமா வரலாற்றிலேயே நடிகர் என்ற தொழிலையே குறைவாக எடைபோட்டபோது, அந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரு கௌரவத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகர் நாடாள முடியும் என்பதை நிரூபித்தவர்..இவருக்கு பிறகுதான் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் 1981ம் ஆண்டு பதவி ஏற்றார். சிறந்த நடிப்பிற்காக பாரத் விருதை பெற்றது மட்டுமல்லாது பாரத தேசத்தின் பல தலைவர்களால் போற்றப்பட்டு பாரதத்தின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்திற்கே பெருமை சேர்த்தவர்..இந்தியாவின் இரும்பு மங்கை என்று போற்றப்பட்ட அன்னை இந்திராவின் அன்பிற்கு பாத்திரமான ஒரே ஒப்பற்ற தலைவர் புரட்சிதலைவர். நடிகராய் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும் மக்களுக்காக..ஏன் இந்தியாவிற்காக செலவிட்டார்.எத்தனை முறை யுத்த நிதிக்காக நிதியளித்தார்..அப்படி புகழ்மிக்க தலைவராக இன்றும் விளங்கும் எம்.ஜி.ஆருக்கு அந்த விழாவில் ஒரு பங்கில்லை. எல்லாவற்றிற்கும் மேலான விஷயம் ஒன்று இருக்கிறாது. மக்களின் உள்ளங்களில் மட்டுமல்லாது இந்த உலகத்திலே அதிக கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் இடம்பெற்ற, பேசப் படுகிற ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்தான்..இது ஒரு பெரிய கின்னஸ் சாதனைஆகும்..இந்த சாதனையை கின்னசில் இடம்பெற செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நடிப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதை எல்லோரும் ரசிக்கும்படி செய்தவர். அவர் நடிப்பு கொஞ்சம் கூட மிகையில்லாத ஒரு இயற்கை நடிப்பாகும்..ஆம். இயற்கை நடிப்பால் எல்லோருடைய மனங்களையும் கவர்ந்து இன்றும் இதய தெய்வமாக வாழ்ந்து வருபவர்..மலைக்கள்ளனில் அவரது பண்பட்ட மற்றும் மாறுபட்ட நடிப்பால் அப்படம் ஜனாதிபதியின் தங்கபதக்கம் பெற்றது..அப்படிப்பட்ட ஒரு ஒப்பில்லா நடிகரை பாராட்ட இந்த விழாவில் வார்த்தை இல்லாதபோது இந்த விழா நடக்கவும் வேண்டுமா என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக இருக்கும்..எனவே மேற்கூறிய கருத்துகளை நூற்றாண்டு விழா நடத்துவோரிடம் நடிகர் சங்கமோ, அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ கொண்ட செல்ல வேண்டும் என்பதுதான் என்போன்ற தலைவரின் தொண்டனின் எண்ணமாகும்.
-
12th March 2013 05:37 PM
# ADS
Circuit advertisement
-
12th March 2013, 09:17 PM
#3152
Junior Member
Platinum Hubber
கலியபெருமாள் சார்
மக்கள் திலகம் பற்றிய உங்களின் விரிவான நூற்றாண்டு விழா சாதனை குறிப்புக்கள் மிகவும் அருமை .
அனைத்துலக எம்ஜியார் மன்ற அமைப்பினர் . மற்றும் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் , நடிகர் சங்கம் , என்று எல்லா தரப்பு நிர்வாகிகள் இது வரை எந்த வித முயற்சி எடுக்கவில்லை என்பது வருத்தமான விஷயம் .
நூற்றாண்டு விழா -நிகழ்ச்சியில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் சாதனைகள் இடம் பெறவில்லை என்றால் உண்மையிலே அது நூற்றாண்டு விழா இல்லை .
நாம் எல்லோரும் ஒன்று பட்டு உரிமைக்குரல் எழுப்புவோம் .
-
12th March 2013, 10:04 PM
#3153
Junior Member
Seasoned Hubber
செல்வகுமார் சார்,
300 மகத்தான பதிவுகள். அதிலும் மக்கள் திலகத்தின் பட பாடல்கள் பற்றிய குறிப்புகள் கதைச்சுருக்கம் என்று மிக அரிதான செய்திகளைத் தாங்கிய தங்களது அபாரமான பதிவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். மென்மேலும் தங்களால் இத்திரி ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.
ஜெய்சங்கர், வள்ளிநாயகம், கொளத்தூர்.
-
12th March 2013, 10:10 PM
#3154
Junior Member
Diamond Hubber
-
12th March 2013, 10:14 PM
#3155
Junior Member
Seasoned Hubber
கலை என்பது கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா
பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் வழக்கமாக பட்டிமன்றங்களில் இதுவும் சரி அதுவும் சரி என்ற பாணியில் பதில்வரும். ஆனால் இந்த தலைப்பில் மட்டும் எந்தக் கலைவடிவமும் மக்களுக்காகவே என்பது தான் உள்ளபூர்வமான உறுதியான உண்மையாக இருக்க முடியும்.
அப்படிப் பட்ட கலை வடிவங்களில் மிக மிக முக்கியமானதாகிவிட்ட ஒன்று திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு நூற்றாண்டு விழா.
கலையை மக்களுக்காக பயன்படுத்திய, ஒரே கலைஞன் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. தனது எல்லாப் படங்களிலும் இந்த நியதியிலிருந்து வழுவாத ஒரே நடிகர் மக்கள் திலகம் மட்டுமே. தனது ஒவ்வொரு படத்தையும் பாடமாக வகுத்துத் தந்தவர் அவர் மட்டுமே. கருத்து சொல்வது எங்கள் வேலையல்ல என்று ஒதுங்குபவர்கள் மத்தியில் அழுபவர்கள் சிரிக்க வேண்டும். சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே தனது திரையுலக வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மக்கள் திலகம். ஈகையின் அவசியம், நேர்மையின் மாண்பு, உழைப்பின் உயர்வு, கண்ணியத்தின் சிறப்பு, கடமையின் முக்கியத்துவம். மனிதாபிமானத்தின் மகத்துவம், பெண்மையின் சிறப்பு, வீரத்தின் சிறப்பு, இப்படி உயர் ஒழுக்க நெறிகளை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் தன் வாழ்க்கை முறையின் மூலமாகவும் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாகக் காணும் ஒப்பற்ற நடிகர், தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். பொது வாழ்விலும், திரை வாழ்விலும் தவறுக்கு இடம் கொடாத தன்னலம் கருதா தலைவர் அவர். இந்த நூற்றாண்டு விழாவில் அவரை போற்றுவோம். அவர் இல்லாத விழா நிலவில்லாத வானம். உயிரில்லா உடல். மழை பொழியாத மேகம். பயன் இல்லாத வார்த்தை. மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணராதவர்களை உணரச் செய்வோம்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
-
12th March 2013, 11:06 PM
#3156
Junior Member
Veteran Hubber

Originally Posted by
jaisankar68
கலை என்பது கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா
பட்டிமன்றத் தலைப்பு. ஆனால் வழக்கமாக பட்டிமன்றங்களில் இதுவும் சரி அதுவும் சரி என்ற பாணியில் பதில்வரும். ஆனால் இந்த தலைப்பில் மட்டும் எந்தக் கலைவடிவமும் மக்களுக்காகவே என்பது தான் உள்ளபூர்வமான உறுதியான உண்மையாக இருக்க முடியும்.
அப்படிப் பட்ட கலை வடிவங்களில் மிக மிக முக்கியமானதாகிவிட்ட ஒன்று திரைப்படம். அந்த திரைப்படத்திற்கு நூற்றாண்டு விழா.
கலையை மக்களுக்காக பயன்படுத்திய, ஒரே கலைஞன் உலக அளவில் மக்கள் திலகம் மட்டுமே. தனது எல்லாப் படங்களிலும் இந்த நியதியிலிருந்து வழுவாத ஒரே நடிகர் மக்கள் திலகம் மட்டுமே. தனது ஒவ்வொரு படத்தையும் பாடமாக வகுத்துத் தந்தவர் அவர் மட்டுமே. கருத்து சொல்வது எங்கள் வேலையல்ல என்று ஒதுங்குபவர்கள் மத்தியில் அழுபவர்கள் சிரிக்க வேண்டும். சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே தனது திரையுலக வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் மக்கள் திலகம். ஈகையின் அவசியம், நேர்மையின் மாண்பு, உழைப்பின் உயர்வு, கண்ணியத்தின் சிறப்பு, கடமையின் முக்கியத்துவம். மனிதாபிமானத்தின் மகத்துவம், பெண்மையின் சிறப்பு, வீரத்தின் சிறப்பு, இப்படி உயர் ஒழுக்க நெறிகளை தன் திரைப்படங்களின் வாயிலாகவும் தன் வாழ்க்கை முறையின் மூலமாகவும் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாகக் காணும் ஒப்பற்ற நடிகர், தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். பொது வாழ்விலும், திரை வாழ்விலும் தவறுக்கு இடம் கொடாத தன்னலம் கருதா தலைவர் அவர். இந்த நூற்றாண்டு விழாவில் அவரை போற்றுவோம். அவர் இல்லாத விழா நிலவில்லாத வானம். உயிரில்லா உடல். மழை பொழியாத மேகம். பயன் இல்லாத வார்த்தை. மக்கள் திலகத்தின் மகத்துவத்தை உணராதவர்களை உணரச் செய்வோம்.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
தலைவர் பெயர் இல்லாததாது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
-
12th March 2013, 11:06 PM
#3157
Junior Member
Veteran Hubber
Congrats Selvakumar Sir on completing 300 posts.
-
13th March 2013, 05:03 AM
#3158
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் ஜெய் சார்
உங்களின் பதிவு ஒவ்வொரு மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளத்தில் இருக்கும் ஏக்கத்தின் பிரதிபலிப்பாகும் .கடமை செய்யவேண்டிய வர்கள் அமைதி காத்தால் என்ன செய்ய முடியும் .
மக்கள் திலகத்தின் புகழை இருட்டடிப்பு செய்ய ஆளும் கட்சியின் தலைமையும் , கட்சி நிர்வாகிகளும் ,பெயரளவில் செயல் படும் மன்ற நிர்வாகமும் உள்ளபோது நாம் எதையும் எதிர் பார்க்க முடியாது .
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் திலகத்தின் படங்கள் , பாடல்கள் மட்டும் இவர்களுக்கு தேவை .
மக்கள் திலகத்தின் பெயரால் முகவரி பெற்றவர்கள் -இன்று அவரையே மறைக்க - மறக்க துணிந்துவிட்ட இவர்களின் செயல் களுக்கு காலம் நிச்சயம் உணர்த்தும் .
-
13th March 2013, 05:29 AM
#3159
Junior Member
Platinum Hubber
புதுவை மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் எங்க வீட்டு பிள்ளை 15-3-2013
வெற்றி பெற வாழ்த்துக்கள் .
காலத்தால் அழியாத வெற்றி காவியம்
உலக சினிமா வரலாற்றில் என்றென்றும் பேசப்படும் காவியம்
மக்கள் திலகத்தின் சிறப்பான நடிப்பு கொண்ட படம்
வசூலில் புயலை கிளப்பி சாதனை புரிந்த படம்
1931-1977 வரை வந்த தென்னிந்திய படங்களில் அதிக அரங்கில் வெள்ளி விழா ஓடிய படம்
நான் ஆணையிட்டால் - பாடல் 48 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்கப்படும் பாடல்
நான் ஆணையிட்டால் - பாடலுக்கேற்ப நிஜ வாழ்வில் ஆணையிட்டு 10 ஆண்டுகள் முதல்வராக வாழ்ந்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்கு மூல காரணமான பாடல்
உலகமெங்கும் வாழும் கோடி க்கணக்கான ரசிகர்கள் சொல்லும் ஒரே வார்த்தை - மக்கள் திலகம் - அவர்
எங்க வீட்டு பிள்ளை .

எங்கவீட்டு பிள்ளை நம்மையெல்லாம் பார்த்து பாடிய பாடல் - நான் உங்கள் வீட்டு பிள்ளை . இது ஊரறிந்த உண்மை .
1972ல் - புரட்சி நடிகர் - மக்களின் அரவணைப்பால் புரட்சி தலைவரானார் .
மக்கள் தந்த முதல் பரிசு - திண்டுக்கல் .-1973
மக்கள் தந்த மாபெரும் பரிசு - தமிழ் நாடு -1977-1987.
இந்திய அரசு தந்த பரிசு - பாரத் பட்டம் -1972
இந்திய அரசு தந்த மற்றுமொரு மாபெரும் பரிசு - பாரத ரத்னா 1988
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தினமும் பேசும் பொது உச்சரிக்கும் வார்த்தைகளில் இடம் பெறும் ஆறு வார்த்தைகளில் ஒன்று எம்ஜியார் .
இத்தனை புகழுக்கு உரியவரான மக்கள் திலகம் மீண்டும் புதுவை நகருக்கு 15-3-2013 முதல் எங்க வீட்டு பிள்ளையாய் வரும் அவரை வரவேற்பதில் மக்கள் திலகம் திரியின் சார்பாக பெருமை படுகிறோம் .
Last edited by esvee; 13th March 2013 at 05:47 AM.
-
13th March 2013, 05:42 AM
#3160
Junior Member
Platinum Hubber
கோவை நகரில் நாடோடி மன்னன்
1958 ஆண்டில் இந்திய சினிமாவில் புரட்சி ஏற்படுத்திய படம்
1956 மதுரை வீரன் இமாலய வெற்றிக்கு பின் வந்த காவியம்
வசூலில் வரலாறு கண்ட படம்
வள்ளலை நாடோடி மன்னனாக உயர்த்திய படம்
ஒரு அரசாங்கமும் - கட்சி இயக்கமும் செய்ய வேண்டிய சமூக மாற்றத்தை இந்த ஒரே படம் மூலம் செய்து காட்டி புரட்சி உண்டாக்கிய படம் .
கதை - நடிப்பு - வசனம் - பாடல்கள் - இயக்கம் என்று எல்லா துறைகளிலும் வெற்றி கண்ட படம் .

55 ஆண்டுகளாக தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் படம் .
சந்திரன் - சூரியன் - எம்ஜியார் - மூன்று பெயர்களும் சுழன்று கொண்டே இருக்கும் .
Last edited by esvee; 13th March 2013 at 05:50 AM.
Bookmarks