-
23rd June 2015, 08:43 PM
#3291
Junior Member
Veteran Hubber
24 ஆம் தேதி கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்
நடிகர் திலகத்தின் மீது அதீத அன்பு கொண்டவர், காலப்போக்கில் அரசியல் இருவரையும் சிறிது காலம் சக நண்பர்களின் சூழ்ச்சியால் பிரித்துவைக்க...நடிகர் திலகம் கட்டபொம்மன் திரைப்படம் தயாரிக்க அதில் திரு எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களை வெள்ளையத்தேவன் பாத்திரத்தில் நடிக்க அழைக்க, எதற்கு இனியும் கணேசனுடன் சேர்ந்து நடிக்கவேண்டும், என்ற துர்போதனையில் அவரையும் தனது சொந்த படமான சிவகங்கை சீமையில் நடிக்கவைத்தார். வெள்ளையத்தேவன் கதாபாத்திரம் திரு ஜெமினி அவர்கள் நடிக்க மேலும் சிறப்பு பெற்றது கட்டபொம்மன்.
திரை விற்பன்னர்கள் திரு மெய்யப்ப செட்டியார் முதல் பலர் கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து சிவகங்கை சீமையை வெளியிட்டால் பெரிய வெற்றி பெரும் என்று அடித்து கூற....சுயநலம் கொண்ட, நடிகர் திலகம் மீது வெறுப்பு கொண்ட கயவர் கூட்டத்தின் துர்போதனையால் சிவகங்கை சீமை படத்தை கட்டபொம்மன் வந்த சில நாட்களில் வெளியிட்டு தனது கையை வெகுவாக சுட்டுக்கொண்டார்,...
தனது வெளிவராத ஒரு புத்தகத்தில் நடிகர் திலகம் திரைப்படங்கள் மூலம் தனக்கு தொடர்ந்து அதிகமாக பாடெழுதும் வாய்ப்பு வந்ததை பற்றி மறைமுகமாக கோடிட்டு காட்டி இருந்தார் கவிஞர் கண்ணதாசன்.
இவர் கடைசியாக எழுதி வெளிவந்து சுபெர்ஹிட் பாடல் கண்ணே கலைமானே என்ற பாடல்.
திரை உலகிலும் மக்களாலும் இப்படி ஒரு சொல் இப்பொழுதும் நிலவையில் உள்ளது
பாடல் என்றால் அது ....
கண்ணதாசன் எழுதவேண்டும்
விஸ்வநாதன் இசை அமைக்கவேண்டும்
சுந்தரராஜன் பாடவேண்டும்
சிவாஜி கணேசன் நடிக்கவேண்டும் .....!!!!
எத்துனை சத்தியமான வார்த்தைகள் !!
Rks
Last edited by RavikiranSurya; 23rd June 2015 at 09:14 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
23rd June 2015 08:43 PM
# ADS
Circuit advertisement
-
23rd June 2015, 09:15 PM
#3292
Junior Member
Regular Hubber
நம் இதயதெய்வம் நடிகர்திலகத்தின படிககாதமேதை திரைப்படத்தை பற்றி திரு கோபால் அவர்களும் எனது நண்பர் திரு.முரளி அவர்களும் அழகாக மிக நேர்த்தியாக விமர்சித்ததை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததிற்கு எனது நன்றிகள்.
திரு கோபால் அவர்கள்
ரங்கனை பாண்டுரங்கனுக்கு மேல் என்று எழுதி இருந்தார்..என்னோட கருத்தும் அது தான். நான் அந்த படத்தை பற்றி
எனது நண்பர்களிடமோ அல்லது யாரிடமோ பகிர்ந்து கொள்ளும் போதுநான சொல்லும் வார்த்தைகள் .1.கடவுளே இறங்கிவந்தால் கூட நடிக்க இதுபோல் நடிக்கமுடியாது.2.இந்தபடத்தை முழுவதும் பார்த்துவிட்டு நடிகர்திலகத்தை தவிர வேறு யாருக்கும் இரசிகராக இருப்பது மிக கடினம்.அப்படிஒரு படம்.இந்த மாதிரி ஒரு படத்தை கொடு த ததிற்கு நாம் இதன் மூல கர்த்தர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th June 2015, 04:45 AM
#3293
Junior Member
Newbie Hubber
கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் நம் ரத்தத்தில் கலந்த இரு மேதைகள். இருவரும் ஒரே நாளில் பிறந்தநாள் காணும் பிரித்தறிய முடியா உயிர் நண்பர்கள். (ஜூன் 24) கண்ணதாசன் ஒரு வருடம் மூத்தவர்.(1927) .இருவருமே நடிகர்திலகத்தை விட மூத்தவர்கள்.
நடிகர்திலகம்- விஸ்வநாதன்-ராமமூர்த்தி-கண்ணதாசன் இணைவு பாகபிரிவினை (1959)முதல் சாந்தி(1965) வரை தொடர்ந்தது. நடிகர்திலகம்-விஸ்வநாதன்-கண்ணதாசன் இணையோ ,கண்ணதாசன் இறப்பு வரை தொடர்ந்தது. பல உயரிய தமிழ் பாடல்கள் இந்த இணைவுக்கு சொந்தமானவை.
கண்ணதாசன் சுப்ரமணிய பாரதிக்கு அடுத்த நிலையில் கொண்டாட படும் உன்னத கவிஞன். என்னதான் வசனம், தனி பாடல்கள்,நாவல்கள்,சுயசரிதை,தத்துவம்,மதநூல்கள் என்று எழுதியிருந்தாலும், மறக்க முடியாத சாதனை அவர் திரைப்பாடல்களே.
அவர் திரை பாடல்கள் சாதித்தவை ,பலருக்கு ஊக்கம் கொடுத்து கவிஞனாக தூண்டியவை,.
1)இலக்கியத்துக்கும் ,திரை பாடல்களுக்கும் கலப்பு மணம் செய்வித்தவர். திருக்குறள்(உன்னை நான் பார்க்கும் போது ),அக-புற பாடல்கள்(நேற்று வரை நீ யாரோ), கம்ப ராமாயணம் (பால் வண்ணம் ),திருப்பாவை(மலர்ந்தும் மலராத,மத்தள மேளம் முரசொலிக்க ),காளமேக புலவர் சிலேடைகள் (இலந்த பயம்)பட்டினத்தார் (வீடு வரை உறவு), பிற்கால கவிஞர்கள் (அத்தான் என்னத்தான் ) என்று எத்தனை எத்தனை.என்று ஆய்வு செய்தால் வாழ்நாள் காணாது.
2)நடைமுறையை இணைத்தவர்.அரசியலை அழகாக படத்துடன் ,கதையமைப்பு கோணாது இணைத்தவர்.(ஓஹோ ஓஹோ மனிதர்களே,அண்ணன் காட்டிய வழியம்மா,யாரை எங்கே வைப்பது என்றே,என்னதான் நடக்கும்,ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு,சிவகாமி மகனிடம்,நலந்தானா யாரை நம்பி நான் பொறந்தேன்)
3)சொந்த வாழ்விலிருந்து கவிதைக்கு பொருள் சேர்த்து உரமாக்கியவர்.அவரின் வாழ்க்கையில் அனுபவங்களுக்கோ பஞ்சமில்லை. வாழ்க்கையை வெற்றி-தோல்வி,இன்ப-துன்பம்,பற்றி கவலையின்றி வாழ்ந்து பார்த்தவர். ஒளிவு மறைவில்லா திறந்த புத்தகம்.(அண்ணன் என்னடா தம்பி என்னடா, நாளை முதல் குடிக்க மாட்டேன்,இரண்டு மனம் வேண்டும்,ஆட்டுவித்தால்,மனிதன் நினைப்பதுண்டு ,)
4)இவ்வளவையும் மீறி இசையின் தேவையறிந்து,குறிப்பறிந்து ,வார்த்தைக்கு அழகியல் மெருகு சேர்த்து அர்த்தமும் கொடுத்து இசையை வள (வசமும்)படுத்திய கவிஞர்.
5)ஒரு படத்தின் ஜீவன் உணர்ந்து பாடல்கள் தருவதில் மிஞ்ச முடியாதவர். ஒரே வரியில் கதையை முடிப்பார்.(,கட்டிலுக்கு கடன் கொடுத்தாள் தொட்டிலுக்கு விலை கொடுத்தாள் ,சிந்தையிலே நான் வளர்த்த கன்று சேர்ந்ததடி உன் வயிற்றில் இன்று )
கண்ணதாசா, நீ எங்கள் ஞான தந்தைகளில் ஒருவன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th June 2015, 07:19 AM
#3294
Senior Member
Seasoned Hubber
மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பாளர்களாக பணிபுரியத் தொடங்கியதும்
நடிகர் திலகத்தின் திரைப்படம் - பணம்
மெல்லிசை மன்னரும் கவியரசரும் முதன் முதலில் இசையமைப்பாளர் பாடலாசிரியராக இணைந்து பணிபுரியத் தொடங்கியதும்
நடிகர் திலகத்தின் திரைப்படம் - பணம்.
ஆம் .. பணம் இவர்களை இறுதி வரை பிரிக்க வில்லை..
ஆனால்.. அந்த பணம் எத்தனை எத்தனை தத்துவங்களை இவர்கள் மூலம் கொண்டு வந்தது..
அண்ணன் என்னடா தம்பி என்னடா..
பணம் என்னடா பணம் என்னடா..
என ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை நமக்களித்த இவர்களின் பிறந்த நாள்.. தமிழ் சினிமாவுக்கு சிறந்த நாள்..
முகநூலில் ஒரு நண்பர் கூறியது போல்..
இந்நாளை மெல்லிசை நாளாக அழைப்போமே..
இவர்களை இணைத்த பணம் திரைப்படத்தின் பாடல் வரிகளைப் பாருங்கள்..
படத்தின் பெயர் பணமாக இருந்தாலும் இவர்கள் நாடியது ஏழையின் கோவிலை அன்றோ..
ஜி.கே.வெங்கடேஷைத் தமிழ்ப்பட உலகில் பாடகராக அறிமுகப்படுத்தியதும் இந்தப் பணம் தானன்றோ..
http://www.inbaminge.com/t/p/Panam/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
24th June 2015, 11:30 AM
#3295
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
24th June 2015, 05:10 PM
#3296
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th June 2015, 05:11 PM
#3297
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th June 2015, 05:12 PM
#3298
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
24th June 2015, 05:32 PM
#3299
Junior Member
Veteran Hubber
QUESTION and ANSWER THAT CAME IN DINAKARAN - COURTESY - Mr. ANNADURAI - TRICHY DISTRICT ALL INDIA SIVAJI FANS ASSOCIATION
Last edited by RavikiranSurya; 24th June 2015 at 05:35 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
24th June 2015, 05:33 PM
#3300
Junior Member
Veteran Hubber
DECCAN CHRONICLE writes .....!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks