Page 382 of 401 FirstFirst ... 282332372380381382383384392 ... LastLast
Results 3,811 to 3,820 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3811
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3812
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். one india தமிழ் தளத்தில், ஷங்கர் என்ற ஒருவர் (கலைக்கு எத்தனை வேந்தர்களோ)தொடர்ந்து சிவாஜியை இருட்டடிப்பு செய்வது, அல்லது தாக்கி செய்தி வெளியிடுவது (கர்ணன் ரிலீஸ் போது ,மணி மண்டபம் உதாரணம்)என்பதை தொடர்ந்து செய்து ,தான் கொண்ட தொழிலுக்கு துரோகம் செய்கிறார். உடனடியாக அந்த பெங்களூர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு,ஸ்ரீராம் என்ற அதன் தலைமை நிர்வாகியிடம், புகாரை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    நாமெல்லாம் படித்து நல்ல நிலைக்கு சென்று விட,இம்மாதிரி
    வேலைகளில் இவர்களை நுழைய விட்டு விட்டோம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Georgeqlj liked this post
  6. #3813
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் மறக்கவே முயலும் நினைவு நாள் காணும் எங்கள் தென்னவர் திலகமே,திராவிட ஆண்மையின் மன்மத திலகமே ,நடிகர் திலகமே , இந்த தூசு கவி உனக்களிக்கும் மாசு காணா ஆசை கவி மழை. உன் ஆசிகளின் துளியை எனக்களி பிரதியாய் .

    அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
    உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

    போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
    ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது

    ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
    பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்

    தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
    காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே

    தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
    நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே

    காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
    சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்

    கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
    தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு

    வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
    தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது

    தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
    முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு

    கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
    வேண்டார் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை

    வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
    அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே

    சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
    சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே

    அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
    தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை

    விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
    தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்

    காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
    மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்

    நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
    யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.

    நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க
    வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்

    நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ
    இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை

    எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு
    ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை

    நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்
    இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை

    வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க
    விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது

    உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல
    கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு

    ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்
    தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக

    தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்
    மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை

    ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து
    மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே

    தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்
    காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்

    வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து
    இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Georgeqlj, Russellmai liked this post
  8. #3814
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அடியேன் போடும் கோனார் நோட்ஸ்.





    பாடல்

    அன்னை தமிழின் அருந்தவ புதல்வனே நல்லூழ் கண்டோர் நாங்கள்
    உன்னை தொழுதே அளப்பரிய களிப்புடன் அடிதன்னில் வீழ்வோம்

    உரை

    தமிழ் மொழிக்கு மகனை போன்றவரே. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    உன் காலில் மிக மகிழ்ச்சியுடன் விழுந்து வணங்குகிறோம்.




    பாடல்
    போற்றி உன்னை எனை மறந்து புகழ்ந்தே கவிபாடும் திறன்
    ஆற்றல் எமக்கே அளித்தோனே ஆக்கமுடன் மருளாது



    உரை

    எங்களையே மறந்து உன்னை புகழ்ந்து பயமின்றி கவிதை பாடும்

    ஆற்றலை எங்களுக்கு அளித்தவன் நீயே.




    பாடல்
    ஏற்றமிகு வாணியின் பிணக்கா செல்வம் கணக்கிலா இணக்கமுற
    பெற்ற நீ இம்மண்ணுதித்ததோ ஆயிரத்தொன் இருபத்து எட்டில்



    உரை

    சரஸ்வதியின் அருள் நிறைய பெற்ற நீ ,இந்த பூமியில் பிறந்தது

    ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் வருடம்.


    பாடல்
    தோப்புகரண துதி செய்து தெளிதேனுடன் இடுவேன் இந்நினைவுநாள்
    காப்பு நீயென வேண்டி தொழுவேன் எங்கள் கணேசமூர்த்தியே




    உரை.

    இந்த நினைவு நாளில் உனக்கு தோப்பு கரணம் போட்டு, பல வகை படையல்கள் இட்டு

    கணேச மூர்த்தி என்ற பெயர் கொண்ட உன்னை நீயே துணை என கும்பிடுவோம்.



    பாடல்
    தேவ பெற்றோருக்கு தேவமைந்தனாய் வந்துதித்த தேவனே
    நாவன்மை பேறு நான் பெற காவன்மை குவித்த காருண்யனே



    உரை.

    தேவர் குலம் சார்ந்த குடும்பத்தில் (உயர்ந்த தேவர் என்ற வானுறை குலம் என்ற உயர்வு பொருள்)

    பிள்ளையாய் வந்த தெய்வம் போன்றவனே.எனக்கு நல்ல பேச்சு திறமை தந்து காத்த கருணை மனம் கொண்டவனே.




    பாடல்
    காரிருள் களைந்து களைத்துநின்ற தமிழுக்கு பேரொளி தந்தாய்
    சூரிய செம்மை நிகர் ஒப்பரிய காரிய செம்மை வீரியம் கண்டோய்



    உரை

    சோர்ந்து போயிருந்த தமிழ் மொழிக்கு சூரியனை போல ஒளி கொடுத்து

    செயல் பட்டு இருளில் இருந்து வெளிச்சத்தை காட்டினாய்.

    பாடல்

    கொஞ்சும் தமிழால் அஞ்சுக செல்வன் அருந்தமிழை விருந்தமைவாய்
    தஞ்சையின் தங்கமே நல்லதோர் வீணையாய் விந்தையுறு விசையுறு
    வேகமொடு வேந்துவின் வீச்சோடு வற்றியிருந்த மண்ணுக்கு வெற்றிவாகை
    தாகமொடு தாங்கொணா தகிப்புடன் தவித்த தத்தைகளுக்கு தமிழமுத தாயமுது



    உரை.

    தஞ்சை மண்ணின் மைந்தனே , கலைஞர் அவர்களின் தமிழை விருந்து போல

    நல்ல ஒரு வீணையின் கொஞ்சும் நாதம் போல ,ஒரு உதைக்க பட்ட பந்தின் வேகத்தோடு

    ஒரு மன்னனின் கம்பீரத்தோடு,வற்றி போயிருந்த தமிழகத்தை வெற்றி காண செய்தாய்.

    தாகத்துடன் குழந்தை போல தவித்து நின்ற எங்களுக்கு தாய் பாலூட்டுவது போல தமிழ் என்ற அமுதத்தை கொடுத்தாய்.



    பாடல்.
    தரணியே இருள் இற்று அடைநதது அளப்பெரும் பேறு அருந்தவன் பேரு
    முரணியே தேங்கிடா காட்டாற்று வெள்ளம் கலையின் தலைமகன் கொடைநூறு
    கண்டோர் கேட்டோர் களித்து கடைந்தெடுத்த பார்க்கடலமுதாய் நடிப்பமுது
    வேண்டோர் வேண்டார் நல்லோர் அல்லார் சிந்தையில் கண்டார் சிவாஜி வென்றதை



    உரை

    பூமி இருள் நீங்கி சொல்ல முடியாத உயர்வை அடைந்தது. உன் ஒருவனின் பெயரால்.

    காட்டில் ஆற்றின் வேகம் போல ஓடி கொண்டே இருந்த நடிப்பு கலை எங்களுக்கு மிக மிக தனமாய் கிடைத்தது.

    பார்த்தவர்கள் கேட்டவர்கள் எல்லோரும் சந்தோசம் கொள்ள பார்க்கடலில் கிடைத்த அமுதம் போன்ற நடிப்பு.

    வேண்டியவர் வேண்டாதவர் நல்லவர் கெட்டவர் எல்லாருமே சிவாஜி ஜெயித்ததை பாகுபாடு இல்லாமல் உணர்ந்தனர்.



    பாடல்
    வசதி வேண்டி மெய்வருத்தம் காணா தடை தகர்த்து படைபுடை கண்டு
    அசதி இன்றி ஈந்தாயே இன்னுயிர் இன்னுடல் கலைபணிக்கே
    சந்தையில் நிலை உயர நேசம் மறவா நன்நெஞ்ச நற்றமிழர் நயந்தே
    சிந்துபாடி சிறப்புற ஊக்கம் உகந்தனர் உணர்ந்தே உகந்தே



    உரை

    தனக்கு வசதி செய்து கொள்ள எண்ணாமல் ,தன்னுடைய உடல் கஷ்டங்களை பொருட்படுத்தாது

    ஓய்வு எடுத்து கொள்ளாமல் ,உடலையும் உயிரையும் நடிப்புக்கு கொடுத்து , இடைஞ்சல் செய்தோரை வெற்றி கண்டு

    பலரை தன் பால் கவர்ந்து உன்னுடைய மார்க்கெட் value மேலே போக தமிழர்கள் உன்னை புகழ்ந்து

    உன்னுடைய திறமை தெரிந்து உன்னை மதித்து உனக்கு ஊக்கம் தந்தனர்.




    பாடல்
    அந்தவரை தன்னை அணுவும் மறக்காமல் ,நிலை துறக்காமல்
    தந்தவரை தலையில் தூக்கி போற்றினான் தன்னுள் பின்னாள் வரை
    விந்தையுற தந்தான் உடன் உடன்பிறந்த கற்ற பெற்ற வித்தைகளை
    தங்கு தடையின்றி ஓங்கு புகழ் சேர்த்தான் தன் பால் தமிழ்மண்ணுக்குமாய்



    உரை

    தன்னுடைய நிலையில் இருந்து உயர்ந்தும் கர்வம் கொள்ளாமல் ,தனக்கு ஆதரவு கொடுத்தவர்களை

    மதித்தே போற்றினார் கடைசி நாட்கள் வரையில் .

    தனக்கு பிறவியிலேயே கிடைத்த நடிப்பு, அனுபவத்தால் கிடைத்த,பிறரிடம் கற்றறிந்த நடிப்பு திறமை

    இவற்றை கொடுத்து தனக்கும் புகழ் சேர்த்து,தமிழகத்திற்கும் புகழை கொடுத்தார்.

    பாடல்

    காசினியில் கண்டோர் விண்டொரெல்லாம் பூசித்து போற்றும்
    மாசிலா புகழை எகிப்து ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில்
    நேசித்து ஈந்தனர் உலகின் சிறந்த கலைஞர் உயர்ந்த சிறப்பை
    யோசித்த நாசரோ நம் நடிகரல்ல உலக தலைவர் நேருவினும் நேரானவர்.



    உரை

    உலகத்தில் அந்த நடிப்பை கண்டு,அதை ஆராய்ந்த உலகத்தினர் பாராட்டி

    அவருக்கு ஆசிய ஆப்பிரிக்க பட விழாவில் சிறந்த நடிகர் பட்டம் வழங்கி

    உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று கொண்டாடினார்கள்.சிவாஜியை பற்றி தெரிந்து

    மதித்த எகிப்தின் ஜனாதிபதி நாசர் . நமது நேருவை விட சிறப்பான நேர்மையான உலக தலைவர்.




    பாடல்


    நாணிய அமெரிக்கனோ வா வா எனவே சிவப்பு கம்பளம் விரிக்க


    வாணியின் வையக மைந்தனை சிறப்பு மேயராக்கி சிறக்க வைத்தான்


    நெப்போலிய பூமிக்கோ அளப்பிலா அசூயை கலையின் ஊற்றிடம் அன்றோ


    இப்புவியின் ஒப்பிலா வீரன் துவக்கிய அசுத்தம் கலக்கா புனித விருதை



    உரை

    ஆப்பிக்கா முந்தி கவுரவித்ததால் அமெரிக்கா வெட்க பட்டு(தான் இதை முன்னமே செய்யாததை எண்ணி)அவரை சிறப்பு விருந்தினர் ஆக அழைத்து ,சிறப்பு மேயர் என்ற கவுரவம் அளித்தது இந்த சரஸ்வதியின் அருள் பெற்ற உலகம் ஒப்பு கொண்ட நடிகர்திலகத்தை. பல கலைகளின் பிறப்பிடம் ஆன பிரெஞ்சு நாட்டு அரசு இவர்களை பார்த்து பொறாமை பட்டு (அடடா நம்மை முந்தி கொண்டார்களே என்று )நெப்போலியன்
    என்ற வீரனால் உருவாக்க பட்ட செவாலியே என்ற உன்னதமான விருதை



    பாடல்


    எப்புவிக்கும் ஒப்புவிக்கும் ஒப்ப வைக்கும் ஓய்வு காணா கலை விந்தைக்கு


    ஒப்புவித்தே தப்புவித்தது தன் கலை புகழை தன் தேச தகைமையை


    நடிப்பு வீரம் போற்றி துடிப்பு மிகு விழா கண்டு பெருமை மீட்டது ஓங்கியும்


    இடித்தே இகழ்ந்தது இந்திய துணை கண்டத்தின் இழிவு நிலை அரசு அரசியலை



    உரை

    எந்த உலகத்திற்கும் பொதுவான ஒப்பு கொள்ளும் விதத்தில் ,ஓய்வின்றி நடிக்கும் திறமை மதித்து , விருது கொடுத்து தன்னுடைய கலையின் மதிப்பை பிரெஞ்சு காப்பாற்றி கொண்டது.இதற்காக பெருமையாக விழா எடுத்தது.இந்தியாவின் இழிவான ,அரசியல் சார்பு கொண்ட ,கலையை மதிக்க தெரியாத இழிவை குத்தி காட்டுவது போல அமைந்தது.


    பாடல்


    வேகமற்ற இந்திய அரசோ அரசை கலையாக்க கலையை அரசியலாக்க


    விவேகமுற்ற வேகத்தில் விருது ஒன்றிற்கு பெருமை தந்து தாதாவை காத்தது


    உலக வல்லரசே உன் முறை மீண்டும் இம்முறை தங்க சாவியல்ல


    கலகம் கண்டே கலக்கமின்றி உரைப்போம்,வாழ்நாள் ஆஸ்கார் பூட்டு



    உரை

    எதிலும் வேகம் காட்டாமல் அரசியலை நடிப்பு போல எண்ணி, நடிப்பை அரசியலாக்கிய இந்திய அரசு , முழித்து கொண்டு சிறிதே விவேகத்துடன் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது தந்து ,அந்த விருதின் பெருமையை காத்தது.இப்போது அமெரிக்காவின் முறை மீண்டும்.மேயராக தங்க சாவி தந்தவர்கள் ,நாங்கள் உரத்த குரலில் சொல்லுவதை கேட்டு அவருக்கு வாழ்நாள் சாதனை ஆஸ்கார் கவுரவம் தர வேண்டும்.




    பாடல்


    ஓர்ந்து பதில் சொல் விருதுகளுக்கு கேள்விகளும் கேலிகளும் கூடுமுன்


    தேர்ந்தெடுப்பாய் தெளிவாக உலக உன்னத உயரத்தை பதிலாக



    உரை

    ஆஸ்கார் விருதுகளை பற்றி நிறைய கேள்விகளும் ,கேலிகளும் அதிகம் எழாமலிருக்க ,சிவாஜி போன்ற மிக உயர்ந்த நடிகருக்கு வழங்குவதன் மூலம் ,பதில் சொல்ல முடியும் .



    பாடல்


    தூயவனே தேட படுகிறாய் உலக மனிதம் காக்கும் காவலர்களால்


    மாயவனே மனித அடிமை விலங்கொழித்து துடைத்தெறிந்த வழக்கை


    ஓயாமல் காத்துள்ளாயாமே பெரும் வாழ்நாள் அடிமை கூட்டம் சுமந்து


    மாயாமல் மாய்ந்ததாய் கதைத்து விடுவிக்கும் மனமும் அற்று சோதிக்கிராயாமே



    உரை

    human rights organisations உன்னை விசாரிக்க தேடுகிறது .ஏனென்றால் உலகத்தில்

    அடிமைகளை ஒழித்து விட்டதாய் சொல்ல படும் நிலையை மாற்றி ஒரு பெரிய அடிமை கூட்டத்தை சிவாஜி என்ற நீ வைத்துள்ளாயாமே . நீ இறக்காமலே ,இறந்து விட்டதாய் உலகத்தை நம்ப வைத்து ,இந்த அடிமை கூட்டத்தை உன் பிடியில் இருந்து விடாமல் உலகத்தை சோதித்து கொண்டிருக்கிறாயாமே..




    பாடல்


    தேயாமல் புகழ் தாங்கும் கூட்டமோ நிலை பெற்ற விலையிலா பிடிப்புடன்


    காயாமல் காக்கும் கதிர்களாய் கர்ணன் கண்ட புத்திளம் புது கூட்டம் கூடுதல்


    வித்தகம் உன் நினைவை விழைவுடன் மனமேந்தி மெய்யுணர்வு தூண்ட பகிர்ந்து


    இத்துடன் முடிக்கின்றேன் கவிதையை மட்டும் சித்தமதில் உணர்வை என் முடிவில் .



    உரை.

    உன் புகழை சிறிதும் குறையாமல் காத்து கொண்டிருக்கும் இந்த அடிமை கூட்டம் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாதது. சூரியனின் கதிர்கள் போல உன் புகழுக்கு ஒளி கொடுத்து கொண்டே இருப்பதுடன் ,கர்ணன் மறு வெளியீட்டினால் நிறைய இளைஞர்களும் உன் அடிமை கூட்டத்தில் கூடுதலாக சேர்ந்து விட்டனர்

    உணர்வில் தூண்ட பட்ட ,உன்னுடைய மிக பெரும் நடிப்பு வித்தகத்தை ,எங்கள் மனமெங்கும் உண்மை உணர்வுடன் தேக்கி இந்த கவிதைக்கு முடிவு கண்டாலும் ,

    எனக்கு முடிவு நேரும் வரை உன்னையே நினைத்திருப்பேன்.
    Last edited by Gopal.s; 20th July 2015 at 08:17 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Georgeqlj, Russellmai liked this post
  10. #3815
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    பாடல் காட்சிகளை வர்ணிப்பதில் இரண்டு பேர்தான் ராஜா. ஒன்று சாரதி. மற்றொன்று நீங்கள். ஆனால் உங்கள் இரண்டு பேர் பாணியும் வெவ்வேறு வகை. ஆகையால் உங்கள் பாணியில் நீங்கள்தான் தனிக்காட்டு ராஜா.

    எனவே தன்னந் தனிக்காட்டு ராஜா பற்றி நீங்கள் எழுதுவது பொருத்தம்தான். உற்சாக துள்ளல் மிகுந்த இளமை ஆர்ப்பாட்டம். டிஎம்எஸ் அதற்கேற்றாற்போல் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பார். [ராஜ்ஜா - ரோஜ்ஜா]. நம்முடைய பாட்டுடை தலைவனோ இதை விட handsome முகம் உண்டா என்று சவால் விடுவார். அருமையான ட்யூன். இந்த பாடலில் அந்த back projection மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் படமாக்கத்தில் ஏசிடி அழகாய் பண்ணியிருப்பார்

    படத்தில் மெல்லிசை மன்னரின் பாடல்கள அனைத்தும் சூப்பர் ஹிட். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். ஸ்டைல் சக்கரவர்த்தி கலக்கோ கலக்கல் சொர்க்கம் பக்கத்தில், செல்லக் கிளிகளாம், என்னங்க சொல்லுங்க இவையெல்லாம் அலப்பறைக்கு என்றால் நம்மைப் போன்றவர்களை எப்போதும் கட்டிப் போடும் பாடலாக எல்லோரும் நலம் வாழ பாடல். White கோட்டில் பியானோ முன் உட்கார்ந்து காட்டும் அந்த பாவங்கள்! ஒவ்வொரு சரணமும் பிரமாதப்படுத்தும். கண் சிவந்து விழி நீர் கண்களில் அணை கட்டி நிற்க

    கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்; அது
    கடனாக வந்தாலும் தடை போடுவேன்

    நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
    என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்.

    எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்; நான்
    எப்போதும் நீ வாழ இசை பாடலாம்.


    என்ற வரிகளின்போதெல்லாம் ஒரு underplay அற்புதத்தையே நிகழ்த்துவார்.

    வாழ்க்கையில் முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்தை வெளியான அன்றே (முதல் நாள்) பார்த்த படம். மதுரை தங்கம் தியேட்டரில் நைட் ஷோ. அலப்பரை என்றால் அப்படி ஒரு அலப்பரை.

    மதுரை தங்கத்தில் முதல் வார வசூலில் ஒரு சாதனை புரிந்து [Rs 57 ஆயிரத்தி சொச்சம்], இரண்டு வாரங்களில் ரூபாய் 1 லட்சத்தை நெருங்கியது. அந்த ரிகார்டை [நீதி அதை சற்றே அசைத்துப் பார்த்தது] 78-ல் என்னைப் போல் ஒருவன் வரும்வரை தக்க வைத்துக் கொண்டு இருந்தது.

    வெகு நாட்களாயிற்று பெரிய திரையில் பார்த்து. இருந்தாலும் அன்றைய 70-ம் வருட பொங்கல் தினத்தில் கோடிஸ்வரனை பார்த்தது என்றைக்கும் மறக்காது.

    அந்த நாட்கள் தந்த இன்பமே தனிதான்!

    நன்றி வாசு!

    அன்புடன்

  11. Likes Russellmai liked this post
  12. #3816
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சிவாஜி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். one india தமிழ் தளத்தில், ஷங்கர் என்ற ஒருவர் தொடர்ந்து சிவாஜியை இருட்டடிப்பு செய்வது, அல்லது தாக்கி செய்தி வெளியிடுவது (கர்ணன் ரிலீஸ் போது ,மணி மண்டபம் உதாரணம்)என்பதை தொடர்ந்து செய்து ,தான் கொண்ட தொழிலுக்கு துரோகம் செய்கிறார்.
    ஆண்மையற்ற செயல்களை செய்கின்ற இதுபோல ஆணும் பெண்ணும்கெட்டவர்களை பற்றி நாம் எதற்கு கவலை படவேண்டும் சார் ...! இன்று நேற்ற இந்த ஆண்மையற்ற செயலை இவரை போன்றவர்கள் இதுபோல ஒரு புலம்பலை செய்கிறார்கள், வயிற்றெரிச்சல் கொள்கிறார்கள் ?

    அடுத்தவர் பெருமைகளை தம்முடையது என்று திருட, தம்முடைய சிறுமைகளை அடுத்தவர்களுடயது என்று விளம்பர படுத்ததான் இவர்களுக்கு தெரியும் எந்தகாலத்திலும் !

    இதுபோன்ற ஈன செயல்களில் ஈடுபடும் பேடிகள் எந்தகாலத்திலும் நம்மை வென்றதும் இல்லை ....எந்த காலத்திலும் இனி வெல்லப்போவதும் இல்லை.

    இவர்கள் இருப்பது மாயா உலகம் ...மாயையில் வாழ்பவர்கள்...விட்டுவிடுங்கள்...அவர்கள், அவர்கள் கனவுலகதிலயே சீரழியட்டும் !

    Whatever such insane sadists write is just out of sheer inferiority complex that THEY ARE UNABLE TO ACHIEVE...DREAM TO ACHIEVE EVEN 0.001% of NADIGAR THILAGAM's ACHIEVEMENT.

    இவர் எழுதி இருப்பது ...விக்ரம் பிரபு கோடிகளாக சம்பாதிக்கிறார் என்று..ஆகையால் இவர்களே கட்டவேண்டியதுதானே என்று ...இந்த கோமானை நான் ஒன்று கேட்கிறேன்...ஊரை அடித்து உலையில் ஒருபக்கம் ஆட்சியாளர்கள் அவர் அவர்கள் ஆட்சியில் போட்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.நேற்றும் சரி...இன்றும் சரி...இனி நாளையும் சரி.....ஒரு சில கோடி ருபாய் செலவு செய்து மணிமண்டபம் கட்டினால் இவர்கள் அப்பன் வீட்டு காசா குறையும் ? லஞ்சம் வாங்கும் பல நூறு கோடி ரூபாயில் ஒரு சில கோடி எடுத்து செய்ய வேண்டியது தானே..? சினிமா வில் இருந்து வரும் 30% வரி மட்டும் இவர்கள் அதிகார பிச்சை எடுக்கதானே செய்கின்றனர் ...அன்று 50% வரை அதிகார பிச்சை எடுத்தனர் ...நடிகர் திலகத்தின் 305 திரைப்படங்களில் 250 எடுத்துக்கொண்டால் கூட ...நடிகர் திலகத்தால் இந்த அரசாங்கம் பல நூறு கோடி ருபாய் வரிப்பணம் பிச்சையாக பிடுங்கிகொண்டதே ..அதில் இருந்து ஒரு சில கோடி ருபாய் எடுத்து கட்டவேண்டியதுதானே ?

    சினிமாகாரன் காசுமட்டும் இவர்களுக்கு வேண்டும் ...ஆனால் தமிழ் சினிமாவை உலக சினிமா அரங்கில் கொண்டுசென்று விருதும் பாராட்டும் பட்டமும், பெருமையும் பெறச்செய்த தமிழ் திரை உலகின் முதல் உலக நாயகனுக்கு ஒரு மணிமண்டபம் வைக்க வக்கு இல்லை இவர்களுக்கு...!

    அதை இந்த கோமான் எழுத தவறுகிறான்...ஆனால் நடிகர் திலகத்தை பற்றி நொட்டை எழுத இந்த சிகண்டி எங்கிருந்தோ வருகிறான் ஒவ்வொரு ஆண்டும் !

    மனதில் நல்ல விஷயங்களை கொண்டு செல்வதற்கும், நல்லவற்றை அரவனைப்பதர்க்கும், நல்லவைகளை ஒத்துகொள்வதர்க்கும் ஒன்று மனிதனாக இருக்கவேண்டும் அல்லது ஒரு சுத்த ஆண் மகனாக இருக்கவேண்டும்...! அது அல்லாத பட்சத்தில் இவரை போன்றவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

    தோல்விகள் மற்றும் பயங்களின் பிதாமகர்கள் இவர்கள் ...ALLOW THEM TO JUST F*** O**
    Last edited by RavikiranSurya; 20th July 2015 at 10:20 PM.

  13. Likes Georgeqlj liked this post
  14. #3817
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks Russellmai, eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj liked this post
  16. #3818
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1000பதிவுகள்



    Last edited by senthilvel; 20th July 2015 at 10:50 PM. Reason: 1000

  17. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  18. #3819
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பழனி-இதயம் இருக்கின்றதே...


    குழிமேட்டில் இருந்து இதயம் இருக்கின்றதே என்று பாடிக்கொண்டே தலையைத்தூக்கி அவர் பாடுவது சோக ராகம் என்றாலும் அதிலும் கூட பிரமிப்பூட்டும் முக பாவனைகளில் சாகசம் செயயும் நடிப்பு அவருக்கு மட்டுமே வரும்.அடக்க முடியாத சோகங்களைதன் அடக்கியாளும் நடிப்பினால்அடக்கிக் காட்டும் நடிப்புச்சித்தன்இந்தப் பழனியாய் வாழ்ந்த நடிகர்திலகம்.அந்த இடத்திலிருந்து அவர் மெல்ல எழுந்துவரும்போது அவர் காட்டும் உணர்வுகள்அரை நூற்றாண்டு வாழ்ந்து கெட்டஒரு மனிதனின் சரித்திரத்தை அரை நொடியில் காட்டி விடும் நடிப்பல்லவா அந்த நடிப்பு.முதல்முறை வரும்"தம்பி "
    என்கிற வார்த்தையின் போது வெளிப்படுத்தும்தலையாட்டல் இரண்டாம் முறை"தம்பி"என்று பாடும் போது வேறு. விதமாய் இருக்கும்.அதே "தம்பி"மூன்றாம்முறை இன்னொரு விதம்.இதே மூன்று வேட நடிப்பாகி விட்டது.இதெல்லாம் மீறினால்20 செகண்டுகளுக்குள் நடந்து விடும் மாயாஜாலம்.இந்த நடிப்புகளை நாம் கிரகித்து வியக்கும் காலகட்டங்கள் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
    அதனால்தான்அவை அதிசயங்கள்.அதிசயங்கள் எல்லா காலங்களிலும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருப்பதைப் போல்தான் இதுவும்.
    வாழ்வின் உறவுகளை அதன் இழப்புகளை
    வலிய பாடல்வரிகளையும் தாண்டி
    பாவங்கள் காட்டிஅவர் நடித்த நடிப்பு கற்காலம் முதல் நிகழ்காலம் வரை மனிதன் பார்த்தறியாத உணர்ச்சிப் பிளம்புகளாகத்தான் இருக்கும்.

    உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்

    துண்டை தோளில் தூக்கிபோட்டு" ஓடிடும் ஏழையர்க்கும்" எனும்போது நெஞ்சத்து குமுறல்களைமென்மையாகத்தான்வெளிப்படுத்துவார்.ஆன ால் அந்த வெளிப்பாடு எரிமலையின் சீற்றம்உள்ளே அடங்கி இருப்பதுபோல் காட்டும் மறைமுகநடிப்பின் வெளிப்பாடு.கிராமத்து விவசாயிகளின் துயரங்களையும்,இயாலாமைகளையும்
    சில நிமிடங்களில் சாட்சியப்படுத்தும் பாடலுக்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.எல்லாம் அறுந்து இனி பிடிப்புக்கு ஒன்றுமே இல்லை என்பது போல் , தரையில் மெதுவாக அவர் அமரும் காட்சி ஒன்றே அதை விளக்கிவிடும்.
    எளியவர்களின் வலிய சோகங்களை துல்லியமாய் காட்டும் அந்த நடிப்பு அசாத்தியமானது.எந்த எழுத்து அதை வடிக்க இயலும்?


    தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!.


    தானாட மறந்தாலும் என்பதற்கு முன் ஒரு நடை வரும்.உடம்பை ஒடுக்கி,குறுகி நடந்து வரும்நடை.அந்த நடையே அந்தப்பாத்திரத்தின் தன்மையை விளக்குவதாக இருக்கும்.சோகத்தை கூட சொர்க்கமாக்கும் அவருடைய நடிப்பு.


    ஒரு மரத்துக்கிளிகள் ஒன்றைவிட்டு
    எங்கோ பறக்கின்றதே
    கூட்டுக்குடும்ப வாழ்க்கையில்,
    பிரிவுகளை.,பிரிவுகளின் வருத்தங்களை
    விளக்கும் வரிகள்.இந்த வரிகளுக்கு ஒரு கையைத் தூக்கி நடித்தே வரிகளை வரலாறு ஆக்கி விட்டார்.ஜீவனுள்ள நடிப்பு.நெஞ்சையறுக்கும் படப்பதிவுகள்.


    பழனி யின் இந்தப்பாடல் கிராமத்து பாமரனின் நெஞ்சகுமுறல்.அந்தக் குமுறல்
    அவனின்சாதாரண புலம்பல் அல்ல.
    அதில் மண்ணின் பாரம்பரியமுமம்,
    உறவுகளின் சங்கமும்,அவற்றின் தன்மையையும் உணர்த்தும் பாடல்.



    நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்கும் நாயகர்கள் பழனியைப் பாருங்கள்.
    பழனி ...வாழ்கைப் போராட்டங்களின் பாடம்



    இதயம் இருக்கின்றதே - தம்பிஇதயம் இருக்கின்றதே!வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும்உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்... (இத)உறவினில் நீராகி பிரிவினில் நெருப்பாகும்உணர்வும் இருக்கின்றதே! - தம்பிஉணர்வும் இருக்கின்றதே!... (இத)தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாகத்தாளாமல் துடிக்கின்றதே! - தம்பிதாளாமல் 4!...தாயென்றும் பிள்ளையென்றும்தழுவிக் கிடந்தவர்க்கும்தர்மம் துணையில்லையே! - தம்பிதர்மம் துணையில்லையே!... (இத)ஒரு மரத்துக் கிளிகள் ஒன்றை விட்டு ஒன்றுஎங்கோ பறக்கின்றதே! - தம்பிஎங்கோ பறக்கின்றதே!... (இத)கூடப் பிறந்து விட்ட கொடுமையினால் மேனிகனலாய்க் கொதிக்கின்றதே! - தம்பிகனலாய்க் கொதிக்கின்றதே!
    - Kannadasan

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  20. #3820
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் பதிவுகளை கண்ட அன்பு நண்பரே செந்தில்வேல் அவர்களே - இத்திரியின் புதுமை வேந்தரே - பார் போற்றும் நடிகர் திலகத்தை பல பரிமாணங்களில் காட்டியவரே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  21. Thanks Georgeqlj thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •