-
11th October 2015, 11:02 AM
#601
Senior Member
Diamond Hubber
'தரிசனம்' படத்தில் ஆச்சி 'சோ'வை சினிமாப் பாடல்களாகப் பாடி சித்ரவதை செய்வார் 'பாப்பா' என்ற பெயரில்.
போகாதே அய்யா போகாதே
நீ போனாலே என் பாட்டு வாழாதே
நான் பாடும் சங்கீதம் பிடிக்கலியா
என் ராகங்கள் உன்னை வந்து பிடிக்கலியா
Last edited by vasudevan31355; 11th October 2015 at 11:06 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th October 2015 11:02 AM
# ADS
Circuit advertisement
-
11th October 2015, 11:10 AM
#602
Senior Member
Diamond Hubber
முயலுக்கு மூணே காலு நான் பார்த்தேன் புடிக்கையிலே
காள மாட்டுக்கு ரெண்டே வாலு நான் பார்த்தேன் கறக்கயிலே
ஆச்சி அந்த வயதில் தாவணி அணிந்து சிறுவர்களுடன் என்ன சுறுசுறு!
ஆச்சிக்கு ஜானகி குரல் தந்திருப்பார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th October 2015, 11:45 AM
#603
Senior Member
Seasoned Hubber
தமிழ்ப் படப்பாடல்களில் சில காலத்தை வென்று நிற்பதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையோடு இணைந்து விடுவதுண்டு.
இந்தப்பாடல் அந்த வகையில் சேர்ந்து விட்டதோ..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th October 2015, 11:46 AM
#604
Senior Member
Diamond Hubber
1978 -ல் தீபாவளிக்கு முத்துராமன் நடித்து 'வாழ்த்துங்கள்' என்றொரு படம் வந்தது. கடலூர் ஓ.டி கமர் திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு காட்சி கூட நினைவுக்கு வரவில்லை. ஆனால் அப்போதே ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று அழியாமல் நெஞ்சில் நிலைத்து விட்டது.
'அருள்வடிவே! பரம்பொருள் வடிவே!
ஆனந்தமே! அருளே! பொருளே! புகழே!'
எப்போது கேட்டாலும் மனம் மயங்கும் பாடல். இந்தப் படத்தில் வேறு என்ன பாடல்கள் இருக்கின்றன?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
11th October 2015, 11:57 AM
#605
Senior Member
Seasoned Hubber
மக்கள் தலைவரைவாழ்த்திப் பாடும் மனோரமா... படம் நீதி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
11th October 2015, 06:20 PM
#606
Senior Member
Diamond Hubber
வாசுஜி...
வாழ்த்துங்கள் படம் கூட நான் பார்க்கவில்லை. அந்தப் பாட்டு மட்டுமே எனக்கும் தெரிந்த ஒரே விஷயம்.. வேறு விவரம் இருக்கா ?
-
11th October 2015, 07:01 PM
#607
மனோரமா அவர்களைப் பொருத்தவரை 'ஈடு செய்ய முடியாத இழப்பு' என்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் இல்லை. நிஜமாகவே ஈடு செய்ய முடியாத இழப்புதான். இவரைப்போல இன்னொருவர் தமிழ் திரையுலகுக்கு கிடைக்கவே இல்லை.
வெளிநாடுகளில் தமிழர்களுக்கு பெருமை தேடித் தந்த நடிகர்திலகத்தைப்போல ஒரு தமிழ் நடிகையான இவரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து விட்டார்.
என்னென்ன விதமான கதாபாத்திரங்களையும் ரொம்ப அசாட்டாக செய்து அசத்தியவர்.
பட்டிக்காடா பட்டணமாபடத்தில் கோழியடித்து குழம்பு வைத்து எம். ஆர். ஆர். வாசுவை ஒரு வழியாக்கும் வெள்ளையம்மாளை மறக்க முடியுமா?.
தீபத்தில் சுருளியிடம் 'இன்னுமா ஆகலை?" , 'இன்னும்தான் ஆகலை?' கொஞ்சலை மறக்க முடியுமா?
அண்ணன் ஒரு கோயிலில் அப்பாவியாக வந்து வீட்டையே கொள்ளையடித்து கம்பி நீட்டும் கைகாரியை மறக்க முடியுமா?
நடிகனில் நடுத்தர வயதை கடந்த பின்பும் பாட்டுவாத்தியார் சத்யராஜுடன் காதல் அரும்பும் நளினத்தை மறக்க முடியுமா?.
தமிழ் திரையில் இன்னொரு மனோரமா சாத்தியமே இல்லாமல் போய்விட்டதே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th October 2015, 09:42 PM
#608
Senior Member
Senior Hubber
//நடிகர் திலகத்தின் மறைவுக்கு சொந்த சகோதரியாய் இருந்து கதறியவர். எங்களைக் கதற வைத்தவர். இன்று பதறவே வைத்து விட்டார்.
இனி விண்ணுலக தேவர்களுக்கு சோகமில்லை. ஆச்சியின் நகைச்சுவையால் ஆண்டவர்கள் அனைவரும் ஆனந்த சிரிப்பிலே இனி மிதப்பார்கள். நமக்குத்தான் இனி ஆச்சி இல்லை. ஆனால் அவரின் திரையுலக ஆட்சி என்றும் நிலையானது.//
வெகு உண்மை வாசு..
எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை..விரல்கள் வெகு நேரம் ஸ்தம்பித்தபடி தட்டச்சுச் சுவடியின் மேல் நிற்கின்றன.. மனதில் அவரது திரைப்படங்கள்.. பிடித்த வசனங்கள் எனக் கோர்வையாக வந்தாலும் கூட,
அட, நானும் ஒருமுறை அவரை பார்த்திருக்கிறேன் நேரில்.. ஆனால் பேச எல்லாம் இல்லை..எங்கே..
கல்லூரிப் பருவம் எண்பதுகள் என நினைக்கிறேன்.. மதுரையில் காதம்பரி என ஒரு நாடக சபா ..அதில் ஒரு உறுப்பினர் என் சகோதரியின் கணவரின் நண்பர்.. எனில் ஒரு வருட சந்தா என் ச.க. தலையில் கட்ட வைத்துவிட ,சகோதரியின் கணவர் அந்தப் பாஸை என்னிடம் கொடுத்து விட்டதால் எனக்கு அடித்தது லக்கி ப்ரைஸ் எனலாம்..
மாதமிரு நாடகங்கள் போடுவார்கள்..அதுவும் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில்.. நிறைய நாடகங்கள் பார்த்திருக்கிறேன்..எஸ்வி.சேகரின் ஒன் மோர் எக்ஸார்ஸிஸ்ட், க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம், மெளலி – அவன் அவள் அது. ஆர்.எஸ் மனோகர் துரோணர்,
.விசுவின் அவள் சுமங்கலி தான், குடும்பம் ஒரு கதம்பம்…அப்புறம் தான் ஆச்சியின் நாடகம்..இதுவும் கதை வசனம் டைரக்ஷன் விசு தான்.
ஆண்டாள் அவள் ஆண்டாள் என்பது நாடகத் தலைப்பு..விறுவிறுவென இருந்த நினைவு..கதைப்படி மனோரமாவாகிய ஆண்டாள் ஒரு அமைச்சர்.. அவர் குடும்பத்திலும், அமைச்சராகவும் எப்படி இருக்கிறார் என்பது கதை.. நன்றாகவே இருந்தது..
ஏன் அவுக தான் ஆடுவாகளா.. அவக அப்படி ஆடினா நான் ஓரமா இருந்து பாத்துக்கறேன்..என்ற நடிப்புக்கும், அந்த அமைச்சராக நடித்த கம்பீரத்துக்கும் வெகு தொலைவு..இரண்டுமே வெகு சுவையானவை..தமிழில் சொல்வதென்றால் சூப்பர் தான்..
கடைசி சீனோ முந்தையதோ சிஎம்மின் வாய்ஸ் மட்டும் வைத்து ஆச்சி சேரில் அமர்ந்த வண்ணம் பதில் கூறுவது பின் நடப்பது என உணர்ச்சிகரமான கட்டம்.. ஸம் திங்க் ஹேப்பண்ட்.. உணர்ச்சிகரமாய் வசனம் பேசி நடந்த போது ஐ திங்க் காதின் தோடு கீழே விழுந்துவிட்டது என நினைக்கிறேன் – ஆனால் கொஞ்சமும் சளைக்காமல் வசனம் பேசி முடித்தபிறகு கைதட்டல்கள் அள்ளியதாய் நினைவு.. நாடகம் முழுக்கச் சுமந்தது ஆச்சி தான்..
பலவருடங்களுக்கு முந்தைய குமுதத்தில் – விவாகரத்து கிட்டு பட்டு ஸ்டைல் என நாடகத்தின் கதை வந்தது..அதில் செளக்கு ப் பதிலாக மனோரமா ஆச்சி.. என நினைவு.. ஸ்டில்களும் வெகு அழகாக இருக்கும்..
ஆச்சியிடம் கவர்ந்தது என்னவென்றால் – ஒவ்வொருவருக்கும் – இது நம்ம அம்மா – இது நம்ம பாட்டி – என ஒவ்வொருவரும் நினைவு கூறும் வண்ணம் வாத்ஸல்யமான தோற்றம். – சிரிக்கும் கண்கள்..தெள்ளிய நடிப்பு.
அவர் நடிப்பில் எதெது பிடிக்குமென எதைச் சொல்ல எதை விட…. குறிப்பாய்ச் சொல்ல..
ஜில் ஜில் ரமாமணி, நடிகன் பேரிளம் பெண் ரோல் தொடர்ந்தால்...
சர்வர் சுந்தரம் – போங்க சார்.. நான் இப்படிச் செஞ்சாத் தான் எல்லோருக்கும் பிடிக்க்கும் என டைரக்டர் எஸ்வி ரங்காராவை மண்டைகாயவைக்கும் நடிகையின் வேடம்
இந்தியன் – இதோ இந்த க்ளார்க்குக்கு இரு நூறு, இவருக்கு முன்னூறு..இவனுக்கு ஐநூறு இந்தப்யூனுக்கு பத்துகொடுத்துட்டேனா இன்னிக்குப் பெரிய ஆஃபீஸர ப் பார்த்து பணம் வாங்கப் போறேன் எனச் சொல்லும் வெள்ளந்தி குணங்கொண்ட பெண்மணி
போலீஸ் காரன் மகள் – ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே ஐயா உன்னை நினைச்சேனே..அர்ச்சுனன் போல முகமிருக்க அனுமார் சாதியைப் பிடிச்சேனே என சந்திரபாபுவை கலாய்க்கும் காதலி
மணல் கயிறு – அன்பே நான் அங்கே நீ இங்கே வாழ்ந்தால் என கிஷ்மூவுடனான நடுத்தரவயது அக்கா வேஷத்தின் கொஞ்சல் அதே படத்தில் ஒரே வார்த்தை சொல்லிட்டானே நீயாருன்னு – என எஸ்வி சேகர் கேட்ட கேள்வியால் நோகும் ஒர்ரே ஒரு கண நொந்த முகத் தோற்றம்..
சிங்கார வேலன் தாயம்மா வாழ்வே மாயம் ஏர்ஹோஸ்டஸ், சின்னத்தம்பி,சின்னக் கவுண்டர் – அம்மாவேஷம், பொன் வண்டு யாருக்காக, ஞானப்பறவையில் ந.தியுடனான பக்குவ நடிப்பு
பட்டிக்காடா பட்டணமா ரோலும் காசே தான் கடவுளடா ரோலும் இரண்டுமே இரு துருவங்கள்.. வெகு அழகாகக் கையாண்டிருப்பார்
சூர்ய காந்தியில் வம்பு மாமி பாடும் தெரியாதோ நோக்கு, முகமதுபின் துக்ளக்கில் பாக்கலாமான்னு பாக்கறேன்னு சொன்னா – என பி.ஏவைத் திணறடிக்கும் லாகவமான பேச்சு…
ம்ம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
ஒன்று மட்டும் உறுதி.. அவர் மறைந்திருக்கலாம்..ஆனால் மனித வாழ்க்கையில் நகைச்சுவை உள்ள வரையில் – தமிழ் சினிமாவில் அவரது நடிப்பை யாராலும் மறக்கவே முடியாது.. எல்லாமனங்களிலும் சிரஞ்சீவியாய்த் தான் இருப்பார் மனோரமா..
சென்று வாருங்கள் ஆச்சி.. ( இது நடக்காது எனத்தெரிந்தும் சொல்லாமல் இருக்க முடியவில்லை)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th October 2015, 07:38 AM
#609
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
வாசுஜி...
வாழ்த்துங்கள் படம் கூட நான் பார்க்கவில்லை. அந்தப் பாட்டு மட்டுமே எனக்கும் தெரிந்த ஒரே விஷயம்.. வேறு விவரம் இருக்கா ?
எப்படியாவது தகவல்கள் சேகரிப்போம் அண்ணா. முத்து ருத்திராட்சக் கொட்டையெல்லாம் போட்டுக்கொண்டு கேடிகளைப் பிடிக்க பக்த கோடி மாதிரி வேஷம் போட்டு இந்தப் பாடலைப் பாடுவார் என்பது மட்டும் மிக லேசாக நினைவிருகிறது. அதுவும் நிச்சயம் அல்ல. பிடிப்போம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
madhu thanked for this post
-
12th October 2015, 08:16 AM
#610
Senior Member
Seasoned Hubber
saravanan writes like this about
Vaazthungal
Saravanan writes:
�aruL vadivE paramporuL vadivE� from vaazhthungaL. Sung by K.J.Yesudas. Lyrics by Thelloor
Dharmarasan. Music by L.Vaidyanathan.
Senthamarai Combines� Vaazhthungal- 1978 starred Muthuraman and Chandrakala. It was directed by
C.V.Rajendran. Thelloor Dharmarasan, who also wrote the lyrics and the dialogues, produced the
film. I have not seen the film, but have heard that it was an unusual story beginning with a
girl�s birthday, and the three bizarre calls that the birthday brings with it: an anonymous caller
who threatens to kill her if her father doesn�t part with a specified sum of money, her father�s
friend who calls up hinting at ominous consequences if the money borrowed by her father is not
returned, and a third call from a persistent suitor, who warns of dire imprecations if she wasn�t
given in marriage to him!
There were 4 songs in the film:
poontherE chinna chinna kaaleduthu vaa- SPB
paadattuma aadattuma mOgathin vEgathil- VJ
pudhumugam tharum navarasam- SJ
aruL vadivE paramporuL vadivE- KJY
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks