-
23rd March 2016, 01:07 PM
#311
Senior Member
Seasoned Hubber
Super singer thearvil murai keadu edhuvum nadakavillai. vijay tv vilakkam.arivippu.
http://cinema.dinamalar.com/tamil-tv...r-Singer-5.htm
Nandri.Dinamalar.
-
23rd March 2016 01:07 PM
# ADS
Circuit advertisement
-
23rd March 2016, 01:10 PM
#312
Senior Member
Seasoned Hubber
Aanlainil serial panna pogirean/ Aanger dsk interview.
http://cinema.dinamalar.com/tamil-tv...-on-online.htm
Nandri.Dinamalar.
-
23rd March 2016, 02:48 PM
#313
Senior Member
Seasoned Hubber
Seialgalil pennadhikam kurainrthu varugiradhu nadigar Bharath.
http://cinema.dinamalar.com/tamil-tv...or-Bharath.htm
Nandri.Dinamalar.
-
23rd March 2016, 03:04 PM
#314
Senior Member
Seasoned Hubber
90 vayadhu kilaviyaga kuda nadipean-Nagalakshmi interview.
http://cinema.dinamalar.com/tamil-tv...-interview.htm
Nandri.Dinamalar.
-
23rd March 2016, 03:05 PM
#315
Senior Member
Seasoned Hubber
Counsling maiyam thodangugiraar Nadigai ramya.
http://cinema.dinamalar.com/tamil-tv...ling-class.htm
Nandri.Dinamalar.
-
27th March 2016, 11:34 PM
#316
Moderator
Diamond Hubber
வெயிட்டான வேடங்களை எதிர்பார்க்கும் நீயா-நானா கோபிநாத்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வருபவர் கோபிநாத். அதுதவிர, சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன, விஜய் அவார்டுஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு, பூவெல்லம் உன்வாசம், வாமணன், தோனி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ஜீவா-நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள திருநாள் படத்திலும் நடித்திருக்கிறார்.<p>இதற்கு முன்பு நடித்த படங்கள் சிறிய கேரக்டர்களிலேயே நடித்த அவர், திருநாள் படத்தில் புகழேந்தி என்றொரு ஐபிஎஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பல காட்சிகள் படத்தில் உள்ளதாம். அதோடு முந்தைய படங்களை விடவும் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறாராம் கோபிநாத். அதனால் இனிமேல் இன்னும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளாராம் கோபிநாத்.
நன்றி: தினமலர்
-
27th March 2016, 11:37 PM
#317
Moderator
Diamond Hubber
நான் ஏன் ஜெயித்தேன்? நிம்மதி இழந்தேன்: ஆனந்த் அரவிந்தாக்ஷன் வேதனை
விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் 5 சீசனில் டைட்டில் வென்றவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன். தற்போது இவரது வெற்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது. தொழில்முறை சினிமா பாடகரான இவர் எப்படி போட்டியில் கலந்து கொண்டார், வெற்றிபெற்றார்? என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மனம் வருந்தி அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது: கடந்த இரண்டு தினங்களாக நான் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும். கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை மகிழ்வாகக் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த வெற்றி சந்தோஷத்தை தரவில்லை. இந்த வெற்றி என்பதை நான் எளிதாக அடைந்துவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன் பாடியிருக்கிறேன் தான். ஆனால் பின்னணி பாடகர் என்றால் ஒரு பாடல் பாடியவரையும் அப்படித்தான் சொல்கிறோம் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி சாரையும் அதே பெயரில் தான் அழைக்கிறோம். என்ன செய்வது? இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா?
நான் இதற்கு முன் பாடியிருக்கிறேன் என்பதை என்றுமே மறைத்ததில்லை. என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றிய முழு விபரங்கள் இப்போதும் உள்ளது. மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அதையெல்லாம் என்றோ அழித்திருப்பேன். தவிர என்னுடன் பாடியவர்கள், போட்டியிட்டவர்கள் அனைவருக்கும் நான் பாடகன் என்று தெரியும். அவர்கள் ஒருவரும் இதுவரை எனக்கு எதிராக எதுவும் சொன்னதே இல்லை. தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதால் முன்பு பாடியிருக்கவே கூடாது என்று விதிமுறையில் இல்லை.
என்னுடைய இந்தப் பாதையும் பயணமும் அத்தனை எளிதாக நான் கடந்து வந்ததல்ல.. பத்து வருட போராட்டத்துக்குப் பின் ஒரு சிறிய நம்பிக்கையின் ஒளி என் பாதையில் தென்பட்ட போது அதை நான் பின் தொடர்ந்தேன். அது தான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த வெற்றியின் சந்தோஷத்தை உணர முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்பது போல் உள்ளது. இப்போது நிம்மதி இழந்து நிற்கிறேன். ஏன் நான் ஜெயித்தேன்? எதற்காக இந்த வெற்றி? என்று எழுதியிருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
27th March 2016, 11:45 PM
#318
Moderator
Diamond Hubber
லீடு ரோலில் மட்டுமே நடிப்பேன்! - சந்திரா லட்சுமண் -
ஒரு டிவி சீரியல் ஆரம்பிப்பது முதல் முடிகிற வரை அதில் நான் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதனால்தான் லீடு ரோல்களில் மட்டுமே நடிப்பது என்கிற கொள்கையை தொடர்ந்து நான் கடைபிடித்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை நடிகை சந்திரா லட்சுமண். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி..
மலையாள சீரியல்களில் நடித்து வந்த நான் தேவயானி நடித்த கோலங்கள் தொடரில்தான் தமிழுக்கு வந்தேன். முதல் தொடரிலேயே நல்லதொரு வேடத்தில் நடித்ததால் அந்த தொடரே என்னை பிரபலப்படுத்தியது. அதையடுத்து வசந்தம், மகள், சொந்த பந்தம் தொடர்களில் நடித்த நான் இப்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறேன்.
இந்த பாசமலர் தொடரில் லீடு ரோலில் நடிக்கிறேன். இந்த சீரியலில் பாசத்துக்காக நிறைய விசயங்களை விட்டுக்கொடுத்து நடிப்பதால் எனது கேரக்டருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், நான் சிலரைப்போன்று பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிப்பதில்லை. பாசிட்டீவ் வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
காரணம், எனது முகத்துக்கு செண்டிமென்ட் வேடங்கள்தான் செட்டாகும். அதனால்தான் நடிப்பில் வித்தியாசம் காட்டவேண்டும் என்பதற்காக நான் நெகடீவ் வேடங்களை ஏற்பதில்லை. அதேபோல், சிறிய வேடங்களிலும் நடிப்பதில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த லீடு ரோலில் மட்டுமே நடிக்கிறேன். அதனால்தான் தெலுங்கில் நடித்து வந்த மமதலா கோவேடா தொடருக்குப்பிறகு இப்போது தமிழில் பாசமலர் தொடரில் மட்டுமே நடிக்கிறேன். சில சீரியல்களில் சிறிய கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று அழைத்தபோது மறுத்து விட்டேன்.
இதற்கு காரணம் ஒரு சீரியல் தொடங்கியதில் இருந்து முடிகிற வரைக்கும் அதில் நான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இடையில் வந்து இடையில் போவது மாதிரியான கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதேயில்லை என்று கூறும் சந்திரா லட்சுமண், ஏற்கனவே மனசெல்லாம், ஏப்ரல் மாதத்திலே, தில்லாலங்கடி ஆகிய படங்களிலும் நடித்திருப்பவர், நல்ல வெயிட்டான வேடங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பாராம். ரோலில் மட்டுமே நடிப்பேன்! - சந்திரா லட்சுமண்
நன்றி: தினமலர்
-
27th March 2016, 11:48 PM
#319
Moderator
Diamond Hubber
அரவிந்தாக்ஷ்ன் ஆரோகணம் படத்தில் பின்னணி பாடினார்! -லட்சுமிராமகிருஷ்ணன் -
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 5வது சீசனின் இறுதி முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆன்ந்த் அரவிந்தாக்ஷ்ன் என்பவர் சூப்பர் சிங்கர் டைட்டில் மற்றும் 70 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்றார். ஆனால் அவருக்கு முதல் பரிசு கொடுத்தது தவறு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு, புதுமுக பாடகர் பாடகிகள் பங்கேற்றும் அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சினிமாவில் பின்னணி பாடிய அரவிந்தாக்ஷ்னை பாட வைத்து அவருக்கு பரிசு கொடுத்ததை ஏற்க முடியாது என தொடர்ந்து விஜய் டிவிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விஜய் டிவியினால் கலாய்க்கப்பட்ட நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், விஜய் டிவியில் முதல் பரிசு பெற்றுள்ள அரவிந்தாக்ஷ்ன் நான் இயக்கிய ஆரோகணம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த வகையில், அவர் ஒரு தொழில்முறை போட்டியாளர் ஆவார். அறிமுக பாடகர்களே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பின்னணி பாடகரை போட்டியாளராக்கியதை ஏற்க முடியாது.
அதோடு, புதியவர்களுடன் அனுபவசாலிகள் போட்டி போடும்போது புதியவர்கள்தானே பாதிக்கப்படுவார்கள். நம்பி அவர்களது ஷோக்களை பார்க்கிற மக்களை இப்படி ஏமாற்றலாமா? என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானது என்பது தெரியாமல் நான்கூட அரவிந்தாக்ஷ்னுக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன் என்கிறார்.
நன்றி: தினமலர்
-
29th March 2016, 11:35 AM
#320
Senior Member
Seasoned Hubber
Bookmarks