-
8th June 2016, 11:03 AM
#1381
Senior Member
Devoted Hubber
உத்தமன் 125 வது நாள்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
8th June 2016 11:03 AM
# ADS
Circuit advertisement
-
8th June 2016, 11:03 AM
#1382
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
8th June 2016, 11:04 AM
#1383
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
8th June 2016, 11:06 AM
#1384
Senior Member
Devoted Hubber
ராஜா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
8th June 2016, 11:07 AM
#1385
Senior Member
Devoted Hubber
பயங்கர சண்டை (ராஜா)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
8th June 2016, 11:08 AM
#1386
Senior Member
Devoted Hubber
பறக்கும் அடி (ராஜா)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
8th June 2016, 11:09 AM
#1387
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
8th June 2016, 03:41 PM
#1388
Senior Member
Diamond Hubber
'ராஜா' நினைவுகள்
புதிய பதிவு
நேற்று முன்தினம் என்னைப் பொறுத்தவரை வருடம் மீண்டும் 1972. தேதி 26 ஜனவரி. 'ராஜ'போக தினம். காலை ஷிப்ட் முடிந்து வந்து மதியம் 2.15 க்கு சாப்பிட உட்கார்ந்தால் ஜெயா மூவிஸில் 'ராஜா'. அப்புறம் சாப்பாடு இறங்குமா? முழு கவனமும் நம் 'ராஜா' மீதே. கூடவே விஸ்வத்தின் மீதும். அந்தக் கணமே கோபாலும், கிருஷ்ணாவும், கார்த்திக் சாரும், முரளி சாரும், ஆதிராம் சாரும் நெஞ்சில் 'டபக்'கென புகுந்து குந்திக் கொண்டார்கள். 'சாப்பிடுங்க...சாப்பிடுங்க' என்று மனைவி படுத்த, கைவிரல்கள் தட்டில் கோலம் போட, எதையுமே செய்யத் தோணாமல் மெய் மறந்து 'மெய்யழ'கனை இமையாமல் மெய்யாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல அனைத்துக் காட்சிகளையும் புத்தம் புதுமையாக உணர முடிந்தது. பிரிண்ட் வேறு பளிங்கு போல இருந்ததால் பேராண்மை மிக்க 'ராஜா' பேரழகன் இன்னும் நங்கூரமிட்டு நெஞ்சில் புதைந்தார்.
'ராஜா'வின் ஹேர் ஸ்டைலும், டிரெஸ் கலக்கல்களும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும், நீள்கிருதாவும் ஒரு காதலி அவள் காதலனை இன்ப இம்சை செய்வதை விடவும் அதிகமாக நம்மை இம்சை செய்பவை. பிறந்தால் 'ராஜா' போல பிறக்க வேண்டும். வாழ்ந்தால் அவனைப் போல ஜாலியாக வாழ வேண்டும். கிருஷ்ணனின் குறும்பும், சகுனியின் தந்திரமும் கலந்த வித்தியாசக் கலவை 'ராஜா'. 'தேவி சொர்க்க'த்தின் ஒரே வசூல் ராஜாவும் இவனே.
எந்தக் காட்சியை சொல்வது?
எத்தனயோ முறை அலசி விட்டாலும் அலுக்காத காட்சிகள். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 'ராஜா'வுக்கு கீழே ராஜாங்கம் பண்ணும் விஸ்வம், நாகலிங்க பூபதி, தர்மலிங்க பூபதி, தாரா டார்லிங், 'ராஜா'வின் ராதா டார்லிங், குமார், பட்டாபி, சீதா, ஜானகிராமன்கள், எதிரணி 'கவர்ச்சி வில்லன்' ஜம்பு, செம்பட்டைத்தலை பின்தொடர்பவர், சந்தர் என்ற பாபு, அந்த வயசிலும் கூட ஊசியில் நூலைக் கோர்த்து விடும் நம்பிக்கை கொண்ட தாய் பண்டரி, காரியத்தில் கண்ணாயிருக்கும் போலீஸ் கமிஷனர் சி.கே.பிரசாத் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ராஜேந்திரன் சி.வி.ஆரின் வார்ப்புகள். சொல்லாமல் விட்டதும் நிறைய.
உண்மை அசலை விட இந்த நகலுக்கு பவர் ஜாஸ்தி. வசூல் ஜாஸ்தி. வரவேற்பும் ஜாஸ்தி. அசலை நகலாக்கவும், நகலை அசலாக்கவும் என் 'ராஜா'வுக்குத் தெரியாதா என்ன! கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன்! 'ஜானி'யை மண்ணைக் கவ்வச் செய்தவன் இந்த 'ராஜா'.
பார்க்கும் போதே பரவசத்தின் உச்சத்தில் டைப் செய்ய கை பரபரத்தது. 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசையில் கேப் அணிந்த பச்சைக் கலர் உருவ கார்ட்டூன் மனிதர்கள் திகிலூட்ட டைட்டிலில் ஓடிவரும் போதும், 'ராஜா ராஜா ராஜா ராஜா' என்ற ஆண்களின் பின்னணி கோரஸ்களின் மத்தியில் 'ததததததம் ததததததம் தஜதம்...'ததததததம் ததததததம் தஜதம்' என்ற ஆரவார சத்தங்களுக்கிடையில் மன்னரின் பிரம்மாண்ட இசைப் பின்னணி புகுந்து விளையாட, இதுவரை நாம் அனுபவிக்காத இன்பமெல்லாம் ஒன்று சேர அனுபவிப்பது போன்ற பிரமை இந்த ராஜாவின் டைட்டிலில் மட்டும்தான் கிடைக்கும். மன்னரின் பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல்கள்தானே? அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே! விதவிதமான வண்ண வண்ண சுழலும் கட்டங்களுக்கிடையே டைட்டில் ஏற்படுத்தும் பரவசத்தை இதுவரை உலகில் எந்தப் படத்திலுமே நான் கண்டதில்லை. டைட்டில் என்றால் அது 'ராஜா' மட்டுமே. அது போல 'ராஜா' என்ற டைட்டிலுக்கு 'அவர்' ஒருவர் மட்டுமே.
முக்கியமாக அந்த வீராணம் குழாய் வடிவிலான தொடர் வட்ட வளையங்கள் படுவேகமாக நம்மை நோக்கி நகரும் காட்சி. 'கலை R.B.S.மணி, தோட்டா' என்ற டைட்டில் வரும் போது இந்த அற்புத காட்சி நம் கண்களுக்குள்ளே விரியும். அதே போல 'மெல்லிசை மன்னர்' என்று டைட்டில் போடும்போது வந்து அலங்கரித்து படுக்கை வாக்கிலும், குறுக்கிலும், நெடுக்கிலுமாக அசையும் ரிங்குகள் இன்னும் பிரமாதம். சி.வி.ஆருக்கு பருந்து ஷேப்பில் வடிவங்கள். நடிகர் திலகத்துக்கும் அப்படியே.
டைட்டில் முடிந்து சேகரும், சந்தரும் சிறுவர்களாய் 'பாக்ஸிங்' மோதும் அந்த ஆரம்ப நொடிக் காட்சியிலிருந்து இறுதியில் ஒன்று சேர்ந்து இளைஞர்களாக நடிகர் திலகமும், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்'காரரும் முன்னம் மோதிய விளையாட்டை மீண்டும் ஒரு தடவை 'லெப்ட்.. ரைட்' சொல்லி விளையாட்டாக மோதிப் பார்க்கும் அந்த 18 ரீல்களுமாகிய 4543.34 மீட்டர் படச் சுருள்களும் நம்மை அப்படியே சுகத்தில் சுருள வைப்பவை.
அந்த திகிலான பயமுறுத்தும் இரவுப் பின்னணியில் நாயகர்களின் இன்ஸ்பெக்டர் தந்தையை அவர்கள் கண்முன்னமேயே கருப்பு கம்பளி அணிந்த, சின்னப்ப தேவரை முக ஜாடையில் ஞாபகப்படுத்தும் வில்லனின் கையாள் தன் கையால் கூர்வாள் கொண்டு முதுகில் குத்தும் போது அதைப் பார்க்கும் பலரில் ரத்தம் உறையாமல் இருப்பவர்கள் குறைவு. அந்த கத்தியின் கூர்மை போலவே அர்த்தம் பொதிந்த ரசமான வசன கூர்மைகள் நம்மை அவை வசமாக்குகின்றன.
நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் வரை 'மன்னர்' என்னவோ நம் 'விஸ்வம்'தான். ஆரம்பக் காட்சிகளை அப்படியே குத்தகை எடுத்துக் கொள்வார். மீதியை பின்னணியில் 'மெல்லிசை மன்னர்' பார்த்துக் கொள்வார். ரீரிக்கார்டிங் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
விஸ்வம் சூயிங்கம் மென்றபடி tennis racquet டைப் பிடித்து 'இண்டர்நேஷனல் டிபார்ச்ச'ருக்கு வெளியே 'சிகப்பு விக்' களவாளி போலிஸ் எச்சரிக்கை செய்ததும் கொஞ்சமும் பதறாமல் சர்வ அலட்சியமாக டாக்ஸியில் ஏறும் 'கெத்'தே தனிதான் போங்கள்.
தங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியிலிருந்து தன்னை கழுகாக வட்டமிடும் காவலர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு தண்ணி காட்டும் 'தண்ணி' மாஸ்டர் விஸ்வம் செய்யும் விபரீத விளையாட்டுத்தனங்கள் விழுந்து விழுந்து ரசிக்கக் கூடியவை. டென்னிஸ் பிளேயர் உடையில் ஹோட்டலிலிருந்து வெளியே டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்து அவர் எம்.எஸ்.வியின் 'டடடடடடங் டங் டங் டங்' கிடார் பிரம்மாண்டங்களுக்கு நடுவே கவலையில்லாமல் டென்னிஸ் விளையாடுவது ஜோரான ஜோர்.
காவலாளிகள் விஸ்வத்தின் அறையை 'செக்' செய்து ஏமாந்து திரும்புகையில் tennis விளையாடிவிட்டு வரும் விஸ்வம் 'ராஜா'வை இயக்கிய இளம் ராஜேந்திரன் பில்லியர்ட்ஸ் பார்வையில் பட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு விளையாட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து செல்வது ஆபத்து சூழ்ந்திருக்கும் விஸ்வத்துக்கு இருக்கும் மகா நெஞ்சுத் துணிவை நமக்கு உணர்த்தும்.
Racquet ஸ்டாண்டில் அந்த குறிப்பிட்ட சிகப்பு கைப்பிடி போட்ட tennis racquet டை வைத்துவிட்டு கண்ணாடியில் வேறு தன்னைப் பார்த்து வேர்வையை ரிலாக்ஸாக டவலால் துடைத்துக் கொண்டு, கழுத்திலும் மப்ளர் அணிந்து, ஸ்டாண்டிலிருந்து வேறு ஒரு racquet டை எடுத்து யாராவது கவனிக்கிறார்களா என்று கவனிக்கும் விஸ்வத்தின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தன் ரூமை சோதனை செய்து விட்டு கேண்டீனில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 'மப்டி' காவலர்கள் இருவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக புகுந்து, வாயில் சிகெரெட்டை வைத்து, அவர்களிடமே சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும் விஸ்வத்தின் துணிவை அவன் கெட்டவன் என்றாலும் அவனுடைய சாமர்த்தியத்திற்காக அவனை மனதார பாராட்டலாம். சற்று வயதான வழுக்கைக் காவலர் ஒன்றும் செய்யத் தோன்றாமல் விஸ்வத்தின் சிகரெட்டுக்கு மேட்சஸ் கொண்டு நெருப்பு பற்ற வைக்க, அருகில் இருக்கும் பரிதாபமான அந்த இளம் காவலரைப் பார்த்து வாயில் சிகரெட்டுடன் விஸ்வம் விடும் நக்கல் நையாண்டி சிரிப்பு ஓஹோஹோ! அந்த காவலர்கள் இருவருமே விஸ்வத்தின் கிண்டலால் படா பரிதாபம்.
அதே போல விஸ்வத்தை ஏதாவது காரணம் காட்டி உள்ளே தள்ள போலீஸ் கமிஷனர் பிரசாத் ஐடியாவின்படி கான்ஸ்டபிள் பட்டாபி, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரும் விஸ்வம் மதுவிலக்கின் போது பெர்மிட் இல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கையில் அவனிடம் செய்யும் கலாட்டாக்கள்.... அதையும் மீறி விஸ்வம் முதலில் செய்யும் புத்திசாலித்தனமான தப்பித்தல் முறை கையாளுமை முயற்சிகள் ...(கான்ஸ்டபிள் பட்டாபி சரக்குக்கு ஆசைப்படுவதை 'சட்'டெனப் புரிந்துகொண்டு "நீங்களும் சாப்பிடுங்களேன்...ஆளுக்கொரு பெக்!" என்று குழைந்து பின் அதைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள பின்னும் சாமர்த்தியத் தந்திர வலை)
பின் கான்ஸ்டபிள் பட்டாபியின் எரிச்சல் போக்கை தாங்க முடியாமல் ('டியூட்டில நான் குடிக்கறதே இல்ல...டியூட்டி ஆர் நோ டியூட்டி..--நாம குடிக்கறதே இல்லே') விஸ்வரூப விஸ்வமாய் மாறி கோபத்தில் தன்னையே இழந்து, போலீஸை அடித்து 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று அந்த இடத்தில் மட்டும் ஆத்திரம் காட்டி மாட்டிக் கொள்ளும் (பின்னால் கிளைமாக்ஸிலும் படுபுத்திசாலித்தனமாக நடக்கும் விஸ்வம் இதே போல கோபத்தில் அவசரப்பட்டு ராஜா, கமிஷனர் இவர்களின் சிலந்தி வலைப் பின்னலில் மாட்டும் ஈயாக கொஞ்ச நேரம் மாட்டி, நாகலிங்க ரங்காராவின் நம்பிக்கையை தற்காலிகமாக இழப்பது விஸ்வத்தின் கேரக்டரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீராக அழகாக நமக்கு உணர்த்தும். அதற்கேற்றார் போன்று அருமையான காட்சி அமைப்புகள் தப்பு தவறு என்னவென்றே தெரியாமல் அழகாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும்) என்று அதுவரை நம்மை ஆளும் விஸ்வத்தின் ஆளுமையை தகர்த்தெறிய வருவார் தோன்றும் முதல் சிறைக் காட்சியிலே எல்லாவற்றிலும் சிகரம் தொட்டுவிடும் நம் ஸ்டைல் 'ராஜா'. ஆர்ப்பாட்ட அறிமுகம். அப்புறம் விஸ்வமென்ன?... யாராயிருந்தாலும் என் 'ராஜா'விடம் 'பஸ்பம்'தான்.
என்னடா இது 'ராஜா' திலகத்தைப் பற்றி எழுதுவான் என்று பார்த்தால் 'நாடகக் காவலரை'ப் பற்றி எழுதுகிறானே என்று நினைக்கிறீர்களா? எப்படி திரையுலகிற்கு ஒரே ஒரு 'ராஜா'வோ அது போல விவகாரமான வில்லனுக்கு ஒரே ஒரு சுவாரஸ்ய 'விஸ்வம்'தான். அதனால்தான் தலைவர் படத்திலும் கூட அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு. இரண்டாவது படத்தின் ஓப்பனிங் காட்சிகள் விறுவிறுப்பு விஸ்வத்தை நம்பியே.
நடிகர் திலகத்தின் நடிப்பு பிளஸ் ஸ்டைல் அக்கிரமங்களைப் பற்றி எழுத நாள் போதுமா என்ன! ஒரு ஆள் போதுமா என்ன! அதுவும் 'ராஜா'வாக அவர் செங்கோலோச்சும் போது கேட்கவும் வேண்டுமோ!
தொடருகிறேன் விரைவில்.
Last edited by vasudevan31355; 8th June 2016 at 08:45 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
8th June 2016, 08:55 PM
#1389
Senior Member
Diamond Hubber
இதோ 'ராஜா'வின் ரசிகர்களுக்காக யூ டியூபில் முதன்முறையாக இன்று தரவேற்றப்பட்ட 'ராஜா' டைட்டில் மியூஸிக்.
Last edited by vasudevan31355; 9th June 2016 at 08:17 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
9th June 2016, 06:56 AM
#1390
Senior Member
Seasoned Hubber
Vasu Sir
ஸ்டைல் ராஜா மட்டுமல்ல வசூல் ராஜாவும் கூட என்று மீண்டும் நிரூபித்த ராஜா வைப் பற்றிய தங்களின் அமர்க்களமான கட்டுரை நமக்கெல்லாம் ராஜ யோகம் தான். படத்தில் தலைவர் வைக்கும் பஞ்ச் சை விட தங்களின் கட்டுரை இன்னும் ஆழம்.. தூள்...மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைக் குறிப்பிட்டு எழுதியதற்காக இன்னும் ஸ்பெஷல் தாங்க்ஸ்...
வில்லன் நடிகர்களுக்கும் நடிப்புக்கும் கூட இயல்புத் தன்மை நம் தலைவரின் படங்களில் கிடைக்கும் என்பதையும் மீண்டும் நிரூபித்த படம் ராஜா.
தூள் கிளப்புங்க...இந்த டைட்டில் இசையை தேவி பேரடைஸில் கேட்டிருக்க வேண்டும்... நிஜமாகவே பேரடைஸ் தான்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks