-
2nd April 2012, 02:25 AM
#191
Newbie Hubber
நண்பர் சாரதா அவர்களே :
"கலை நிலவு" ரவிச்சந்திரன் பற்றி நீங்கள் எழுதிய விரிவான
கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருந்தன. எங்களைப் போன்ற
ரசிகர்களைதத் துயரத்தில் தவிக்கவிட்டு விட்டுச் சென்று
விட்டார். நீங்கள் அவரைச் சந்தித்தது போல் நானும் என்
நண்பரகளும் கூட அவரை வடக்கு உஸ்மான் சாலை, தி நகர், வீட்டில்
சந்தித்தது இன்றும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.
அது 1968 என்று நினைக்கிறேன். அவர் வீட்டிற்குச் சென்ற போது
அவர் மனைவி விமலாவுடன், வீட்டு வாய்ரிபடியில் உட்கார்ந்துகொண்டு
தன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி இன்றும்
நினைவில் உள்ளது. அவருடைய பழைய திரைப் படங்களைப்
பற்றிய தொகுப்பு மிகவும் அற்புதம். எத்தனை செய்திகள். மிகவும்
கடின உழைப்பின்றி இவ்வளவு சாத்தியமல்ல. அதே போல் பம்மலார்
என்ற நண்பர் உங்களைப் போன்றே பல தகவல்கள் - படம் ஓடிய இடங்கள்,
திரையரங்குகள் என்று அசத்தி விட்டார் ! உங்கள் இருவரையும் இந்தக்
குழுவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். என்னுடைய மனமார்ந்த
வாழ்த்துக்கள். அதே போல் நம்ம நடிகர் திலகத்தைப் பற்றியும் .....
வாவ்....எப்பேர்ப்பட்ட செய்திகள்....ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கிறது.
உங்கள் பனி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
மீண்டுமொரு முறை !
வாஞ்சி
-
2nd April 2012 02:25 AM
# ADS
Circuit advertisement
-
2nd April 2012, 03:32 AM
#192
Newbie Hubber
"கலை நிலவு" ரவிச்சந்திரன் பற்றி நீங்கள் தளவேற்றம் செய்துள்ள
பல பிரம்மாண்டமான புகைப் படத் தொகுப்புகள் நீங்கள் ரவியின்
எத்தகைய தீவிர அபிமானி என்பதைச் சுட்டிக் காட்டுகிறது ! நீங்கள்
செய்துள்ள இத்தனை வேலைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு வாரமாவது
எடுத்திருக்கும் ! வார்த்தைகளால் விவரிக்க இயலாத தொகுப்பு.
மறந்து போன பல நல்ல படங்களைப் பற்றியும் அதன் பாடல்கள்
பற்றியும் எழுதி சிறப்பு செய்திருக்கிறீர்கள். நன்றி, உங்களுடைய
இந்த முயற்சிக்கு வேறு எந்த கைமாறும் செய்ய முடியாது என்றே
எண்ணுகிறேன். எனவே, என்னுடைய மனார்ந்த வாழ்த்துக்களை
உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் !
வாஞ்சி
-
10th May 2012, 09:51 AM
#193
Senior Member
Diamond Hubber

Originally Posted by
veegopalji
"கலை நிலவு" ரவிச்சந்திரன் பற்றி நீங்கள் தளவேற்றம் செய்துள்ள
பல பிரம்மாண்டமான புகைப் படத் தொகுப்புகள் நீங்கள் ரவியின்
எத்தகைய தீவிர அபிமானி என்பதைச் சுட்டிக் காட்டுகிறது ! நீங்கள்
செய்துள்ள இத்தனை வேலைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு வாரமாவது
எடுத்திருக்கும் ! வார்த்தைகளால் விவரிக்க இயலாத தொகுப்பு.
மறந்து போன பல நல்ல படங்களைப் பற்றியும் அதன் பாடல்கள்
பற்றியும் எழுதி சிறப்பு செய்திருக்கிறீர்கள். நன்றி, உங்களுடைய
இந்த முயற்சிக்கு வேறு எந்த கைமாறும் செய்ய முடியாது என்றே
எண்ணுகிறேன். எனவே, என்னுடைய மனார்ந்த வாழ்த்துக்களை
உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் !
வாஞ்சி
டியர் வாஞ்சி சார்,
தாங்கள் யாரை குறிப்பிட்டுள்ளீர்கள் என சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் சகோதரி சாராதா மற்றும் அன்பு சகோதரர் பம்மலாரின் அளப்பரிய சேவைகளை மனமுவந்து பாராட்டியமைக்கு அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்காக ரவியின் பாடல்களில் ஒன்று.
vasudevan
Last edited by vasudevan31355; 10th May 2012 at 10:25 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th May 2012, 10:16 AM
#194
Senior Member
Seasoned Hubber
எங்கே எங்கே என்று தேடிய போது இங்கே இங்கே இந்த பெட்டியிலே அடைத்து வைத்துள்ளேன் என்று தந்த வாசுதேவன் சார், சூப்பர். இதே போல் மாடி வீட்டு மாப்பிள்ளையில் இடம் பெற்ற டூயட் பாடலை (நெஞ்சுக்கு முகமே கண்ணாடி என எண்ணுகிறேன்) காணொளியாக வழங்க இயலுமா
-
10th May 2012, 10:17 AM
#195
Senior Member
Seasoned Hubber
நம் அனைவருக்காக இதோ ஒரு அருமையான பாடல் மாடி வீட்டு மாப்பிள்ளை படத்திலிருந்து. என்னை மன்னிக்க வேண்டும் என சுசீலா கேட்கிறார். நீங்களும் கேளுங்களேன்.
-
10th May 2012, 10:22 AM
#196
Senior Member
Seasoned Hubber
அதே படத்தில் மற்றொரு மிகப் பிரபலமான பாடல். டி.எம்.எஸ். சுசீலா குரல்களுடன் கோரஸ் இணைந்து கலக்கும் பாடலை,
கேட்டுப் பார் கேட்டுப் பார் ... கேட்டுப் பாரு கேள்விகள் நூறு....
-
10th May 2012, 10:36 AM
#197
Senior Member
Diamond Hubber
நன்றிகள் ராகவேந்திரன் சார்!
தங்கள் ஆசைதான் என் ஆசையும். கண்ணாடியைத் தர முயல்கிறேன்.
'என்னை மன்னிக்க வேண்டும் கன்னியரே', 'கேட்டுப் பார்.. கேட்டுப் பார்' என்று அடிக்கடி கேட்க முடியாத கானங்களைக் கேட்டுப்பார் என்று கேட்க வைத்த ரசிக வேந்தரே! ராட்சஷ நன்றிகள் தங்களுக்கு.
-
12th May 2012, 03:57 PM
#198
Senior Member
Diamond Hubber
'இது நீரோடு செல்கின்ற ஓடம்' நம் இதயத்தை பிழிந்து ரத்த நாளங்கள் அனைத்திலும் ஊடுருவி இனம் புரியாத உணர்ச்சிகளை நம்மகத்தே உருவாக்கும் அற்புத பாடல் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' திரைப்படத்திலிருந்து சீர்காழி அவர்களின் சீர்மிகு குரலில்.
vasudevan
-
12th May 2012, 05:47 PM
#199
Senior Member
Diamond Hubber
காவியத் தலைவி.(1970)


கடவுள் எல்லா இடங்களிலும் தானே இருக்கமுடியாது என்பதனால் தான் தாயைப் படைத்தான்."தாய் எனப்படுபவள் ஒரு காவியம்" இது ஒரு தாயின் கதை."ஆகவே இது ஒரு காவியத்தின் கதை"
நடிக,நடிகைகள்:-ஜெமினிகணேசன், செளகார்ஜானகி(மாறுபட்ட இரு வேடங்களில்), "கலைநிலவு"ரவிச்சந்திரன், எம்.ஆர்.ஆர்.வாசு, வி.எஸ்.ராகவன், எஸ்.வரலட்சுமி, எஸ்.என்.ஜானகி, லட்சுமிபிரபா, நிர்மலா, "ஜெமினி"மகாலிங்கம், நீலு, வீரராகவன், சேஷாத்திரி, வீராச்சாமி, கிருஷ்ணாராவ்,
இசையமைப்பு:-"மெல்லிசை மன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.
பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.
தயாரிப்பு:-செளகார்ஜானகி அவர்கள்.
மூலக்கதை:-நிஹார் ரஞ்சன் குப்தா அவர்கள்.
திரைக்கதை,வசனம்,இயக்கம்:-கே.பாலசந்தர் அவர்கள்.
மற்றொரு அற்புதமான பாடல். ரவியும், சௌகாரும் டூயட்டில் இணைய, பின்னணிக் குரல்களில் பாலுவும், ஈஸ்வரியும் பின்னியெடுக்க, மெல்லிசை மன்னரின் அற்புத இசையில் காலமெல்லாம் நம்மை கட்டிப் போடும் 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' காவியத் தலைவியில்.
ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத, சுசீலாவின் ஈடு இணையில்லா சுகமான குரலில் 'கையேடு கை சேர்க்கும் காலங்களே!' காந்தப் பாடல்.
vasudevan
Last edited by vasudevan31355; 12th May 2012 at 11:22 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th May 2012, 09:59 AM
#200
Senior Member
Diamond Hubber
இதயக்கமலம் (1965)


'நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ...போ...போ'...
'என்ன தான் ரகசியமோ இதயத்திலே'...
vasudevan
Bookmarks