One friend from Salem - Mr.Bala (he is working as drawing teacher & he is a regular visitor of this Hub) sent me a design (his own creation) for Karnan's 25th day. He wants to post this in Hub.
Doctor Akkineni Nageswara Rao shares his moments with Nadigar Thilagam, in the "Thirumbi Parkkiren" of Jaya Tv. The speciality of this clipping is a piece from the great film Chanakya Chandraguptha starring ANR, NTR and NT.
video courtesy: Daily Motion.
Last edited by RAGHAVENDRA; 12th April 2012 at 02:53 PM.
உண்மைதான். மதுரையில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் 100-வது நாளை தவற விட்டார், இல்லை தவற விட வைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். வில்லன் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ். தமிழகமெங்கும் பல பெயர்களில் [கிரசன்ட் மூவீஸ் போன்ற பெயர்களில்] விநியோக நிறுவனத்தை நடத்தி வந்த இந்த கீழக்கரை நபர்தான் தேவர் பிலிம்ஸ், பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்களுக்கு நிரந்தர விநியோகஸ்தர். தவிர பல படங்களின் தயாரிப்பிலும் பைனான்ஸ் செய்வது வரை இந்த மனிதர்தான் என்பதால் மிகுந்த செல்வாக்கு உடையவராக திகழ்ந்தார். வியட்நாம் வீடு படத்தை திரையிட்ட வினியோகஸ்தரோ [எம்.ஏ. பிலிம் டிஸ்டிரிபியுட்டர் என்று நினைவு], எம்.ஆர். எனப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் மட்டுமே வர்த்தகம் செய்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண விநியோகஸ்தர்.
இதற்கும் பார்த்தோமென்றால் வியட்நாம் வீடு மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் ஒரு புதிய சாதனை நிகழ்த்திய படம். மதுரை ஸ்ரீ தேவியில் தொடர்ந்து 106 காட்சிகள் அரங்கு நிறைந்த படம். 106 Continuous House Full Shows. வெளியான 1970 ஏப்ரல் 11 முதல் மே 12 வரை அதாவது 32 நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடிய படம். இந்த சாதனையை பின்னாளில் பட்டிக்காடா பட்டணமா வந்து முறியடித்தது [கோவையிலும் இரும்பு திரைக்கு பின் வசூல் சாதனை படைத்த கருப்பு வெள்ளை படம் வியட்நாம் வீடு]. இவ்வளவு ஏன், 13-வது வாரம் ஓடும் போது கூட ஞாயிறு மாலை காட்சி கூட [அதாவது 86-வது நாள் -1970 ஜூலை 5-ந் தேதி] ஸ்ரீதேவியில் ஹவுஸ் புல்.
இந்த நேரத்தில் தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் தேவர் தயாரித்த ஜெய்சங்கர் நடித்த மாணவன் படம் ஜூலை 10 அன்று வெளியாகிறது. அந்தப் படத்தை ஸ்ரீதேவியில் வெளியிடுவது என்று சேது பிலிம்ஸ் ஒப்பந்தம் செய்கிறார்கள். சேது பிலிம்ஸ் நினைத்தால் மாணவன் படத்தை சென்ட்ரலிலோ நியூ சினிமாவிலோ சிந்தாமணியிலோ வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவர்களோ பிடிவாதமாக ஸ்ரீதேவியில்தான் வெளியிட வேண்டும் என்று இருந்தார்கள். நமது பட விநியோகஸ்தரும் ரசிகர்களும் தியேட்டருக்கு சென்று பேசியும் கூட அவை சேது பிலிம்ஸின் பலத்திற்கு முன் எடுபடாமல் போனது. ஆகவே மதுரை தேவியிலிருந்து 90 நாட்கள் நிறைவு செய்த பிறகு வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களை நிறைவு செய்தது.
எத்தனையோ நடிகர் திலகத்தின் படங்கள் எங்கே அதிக பட்சமாக ஓடியிருக்கின்றன என்று பார்த்தால் கண்டிப்பாக மதுரைதான் என்று பெருமையோடு சொல்வோமோ அது போல் சில தீர்க்க முடியாத வருத்தங்களும் எங்களுக்கு உண்டு. அவற்றில் வியட்நாம் வீடு, ஞான ஒளி போன்றவை 100 நாட்களை தவற விட்டதும் [இரண்டுமே 90 நாட்கள்], மனோகரா, சம்பூர்ண ராமாயணம், பாசமலர், திருவிளையாடல் போன்ற படங்கள் குறைந்த நாட்களில் வெள்ளி விழாவை தவற விட்டதும் அடங்கும்.
அன்புடன்
மகேஷ், இதற்கும் முன்பு இதை பற்றி எழுதியிருக்கிறேன் என்றாலும் மீண்டும் உங்களுக்காக இதை எழுதுவதன் மூலம் ஒரு சின்ன மன ஆறுதல்.
பிரஸ்டீஜ் பத்மனாப ஐயரின் அரிய புகைப்படங்கள் நமது திரிக்கு என்றென்றும் பெருமை சேர்ப்பவை. அனைத்து புகைப்படங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
தினத்தந்தி ஆகஸ்ட் வெளியீடு விளம்பரம் தலைவரை அசல் பத்மனாபனாகவே பிரதிபலிக்கிறது.
அதுபோல முதல் வெளியீட்டு விளம்பரங்கள் அற்புதம். கோவை சென்ட்ரலில் நூறாவது நாள் நடைபெறப் போவதாக வந்த விளம்பரம் அரிதிலும் அரிது. தலைவர் மேடையில் தோன்றுவார் என்ற விளம்பரம் பார்த்ததில் அந்த நிகழ்ச்சி எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனைக் குதிரை பறக்கிறது. இப்போதுள்ள வசதிகள் அன்று இருந்திருந்தால் அப்படிப்பட்ட சரித்திர நிகழ்வுகளை கண்டு களித்திருக்கலாமே என்ற ஏக்கம் மேலிடுகிறது. அட்டகாசமான விளம்பரத்தை அமர்க்களமாக அளித்துள்ளீர்கள்.
ஆனந்த விகடன் விமர்சனம் தலைவரை உச்சத்தில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை படிக்கும் போது அப்படி ஒரு சந்தோஷம். குமுதம் விமர்சனமும் கன ஜோர்.
அவன்தான் மனிதன் ஸ்டைல் கிங் ரவிகுமாரின் ரம்யமான தோற்றம் என் கணினியில் டெஸ்க்டாப்பை அலங்கரிக்கிறது. நூறாவது நாள் விளம்பரம் படம் சுமாரான வெற்றி என்பவர்களுக்கு நெத்தியடி. கல்கி விமர்சனம் ஜாலியாக இருந்தது.
விடுதலை முதல் வெளியீட்டு விளம்பரம் நன்றாக உள்ளது.
மொத்தத்தில் அற்புதமான பல பதிவுகளை அள்ளிக் கொட்டியுள்ளீர்கள். இப்பதிவுகளுக்கெல்லாம் நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள் என்பதை நினைத்தால் தலை சுற்றுகிறது. உங்கள் அபார உழைப்புக்கு என் மனப் பூர்வமான பாராட்டுக்களும் முக்கியமாக இதயம் நிறைந்த நன்றிகளும்.
vasudevan
Last edited by vasudevan31355; 13th April 2012 at 06:55 AM.
Bookmarks