Results 1 to 10 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மல்லியக்கா மல்லியக்கா -

    பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் வரிகள்

    நன்றி - http://tamilnation.co/literature/lyr...padalkal1c.htm


    ரோஜா : ஓ....மல்லியக்கா

    மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா

    ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
    கொஞ்சம் சொல்லடியக்கா
    எதுக்கு இப்படி குலுக்கி நடக்கிறே?

    மல்லி : நான்-மணவறையைச் சிங்காரிச்சு
    வாசனையை அள்ளித் தௌிச்சு
    வாரவங்க எல்லோரையும்
    மயக்கப் போறேன்
    மணப்பொண்ணு கூந்தலிலே
    மணக்கப் போறேன்

    ரோஜா : நீ-மணப்பொண்ணு தலையில் மட்டும்
    மணக்கப்போறே,
    நான்-மாப்பிள்ளை கழுத்தச்சுத்தி
    தொங்கப் போறேன்
    நீ-வாசனையைக் கொடுத்துப்பிட்டு
    வதங்கப் போறே,
    நான் வாரவங்க கையில் எல்லாம்
    குலுங்கப் போறேன்-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உடல் நெறத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    மல்லி : கள்ளமில்லா மனசுக் கென்னை உவமை
    சொல்வாங்க - பெரும்
    கவிஞரெல்லாம் காவியத்தில் இடம்
    கொடுப்பாங்க,
    காத்தடிச்சா போதும் என்னைக்
    காணத்துடிப்பாங்க - ஓன்னை
    கண்டாக்கூட முள்ளெ நெனச்சு
    முகஞ்சுளிப்பாங்க - அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    ரோஜா : நீ - மலருமுன்னே வந்து கடைக்கு
    மலிஞ்சு போறவ!

    மல்லி : நீ - உலருமுன்னே தொட்டாக்கூட
    உதிர்ந்து போறவ!

    ரோஜா : நீ - வளரும் போதே கொம்பைத்
    தேடிப்புடிச்சவ!

    மல்லி : அதுக்கு வகையில்லாமெ
    தனிச்சு நின்னு!-அடி
    தந்தனத்தான தந்தனத்தான
    சரக்கிது தானா? - உன்
    தரத்துக்கும் உள்ளகுணத்துக்கும் நான்
    கொறஞ்சு போனேனா?

    (தாமரை வருதல்)

    தங்கச்சி தங்கச்சி
    தாமரைத் தங்கச்சி
    எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
    எடுத்துச் சொல்லு தங்கச்சி?

    தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
    மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! - சில
    மனிதரைப் போல வம்புகள் பேசி
    பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!

    தாமரை : உலகில் சிறந்தது என்ன?

    மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்

    தாமரை : அந்த தானத்தில் சிறந்தது என்ன?

    ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்

    தாமரை : அதிலும் சிறந்தது என்ன?

    மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள்
    ஆராய்ந்து சொன்ன உலக சமாதானம்!

    தாமரை : அதை நாம் உணர்ந்து
    நடக்க வேணும் எல்லோரும்-ஒன்றாய்
    இருக்கவேணும்!-அப்போதுதான்
    உலவும் சமாதானம்-எங்கும்
    நிலவும் சமாதானம்!

    மூவரும் : அதை நாம் உணர்ந்து
    நடந்திடுவோம்
    எல்லோரும் ஒன்றாய்
    இருந்திடுவோம்!
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •