-
14th April 2013, 07:35 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
வானத்திலிருந்த 27 நட்சத்திரங்களையும் ஒவ்வொன்றாக காட்டி இது அந்த நட்சத்திரம், அது அந்த நட்சத்திரம் என சொல்லிக்கொண்டே வந்து அடையாளம் காட்டினார்!" என ராஜா விவரிக்கையில் பேட்டி எடுப்பவர் சொல்லும் "ப்ப்பா!" - "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் !" படத்தின் கடைசி காட்சியாக திருமண மேடையில் நாயகன் நாயகியை அடிக்கடிப் பார்த்து "ப்ப்பா!" என சொல்வது சட்டென ஞாபகத்திற்கு வந்தது!)
கரெக்ட். நானும் நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் கிளைமாக்ஸ் ஞாபகம் வந்து வாய் விட்டு சிரித்தேன். அதை விட நீங்க எழுதியது மேலும் நன்றாக கோர்வையாக இருந்தது.
ராஜா சாரிடம் வேலை பார்ப்போர் நிறைய படித்த கிறிஸ்துவர்கள் மற்றும் பிராமணர்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதன் தாக்கமா இல்லை, ஆன்மீக சொற்பொழிவை 'அந்த' பாஷையில் பேசினால் எடுபடும் என்று நினைத்து பேசினாரா என்று தெரியவில்லை.
விஞ்ஞான ரீதியில் பார்ப்போமேயானால், 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் ஒரே இடத்திலிருந்து பார்க்கும்படியாக சஞ்சரிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இது சமந்தமாக பெரியவர் இவரிடம் ஏதோ சொல்லி இருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. நமக்கு கிடைக்காத பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கிறது, அப்படி தான் எடுத்துக்கொள்ளவேண்டும். நிறைய பணம் சம்பாதிக்கும் நேரத்தில், நேரம் கிடைக்காத போதும் மனிதர் பேரின்பத்தை தேடி தேடி அலைந்திருக்கிறார். பெரிய விஷயம் இது.
அந்த "மிருதங்கம் சந்திரமௌலி" யார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் இந்த செய்தியை சொல்லி, அவரை ராஜா சாரை பார்க்க வைத்தால், ராஜா சார் நிச்சயம் மிகிழ்ச்சி அடைவார்.
-
14th April 2013 07:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks