-
25th July 2014, 08:46 PM
#9
Junior Member
Diamond Hubber
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் ஒரு சாலை விபத்தில் கார் ஒன்று அடிபட்டு கிடக்கின்றது .உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் .
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் .
அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது .
தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்துவிட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன.
ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் .உலகிலேயே எங்கள் தமிழ்நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்துகொள்கின்றேன் என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks