Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalaiventhan View Post
    நமது மக்கள் திலகம் திரியில், பேராசிரியர் செல்வகுமார் அவர்களால் பதிவிடப்பட்ட கலைவேந்தன் எம். ஜி. ஆர். சாதனைகளை தாங்க முடியாத அறிவு ஜீவி ஒருவர் தனது அபிமான நடிகர் பெயரில் இருக்கும் மற்றொரு திரியில் புலம்பி தீர்த்திருக்கிறார்.

    முதலில் இதை நான் ஒரு பொருட்டாகவே கருத வில்லை. ஆனாலும், அந்த நண்பர் அடிக்கடி "வரலாற்று பிழை" ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் ஒரு பொய்யான மறுப்புரை வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருப்பதால், நானும் உண்மை நிலவரத்தை இந்த திரியினை பார்வையிடுபவர்கள் அறியும் வண்ணம் ஒரு விளக்கம் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

    மக்கள் திலகம் திரியில், தனது அபிமான நடிகருடன் நம் பாரத் எம். ஜி. ஆர். அவர்களையும் சேர்த்து பொதுவான புகழாரம் சூட்டுவது, பின்னர் தனது அபிமான நடிகரின் திரியில் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த படங்களையும், அவரையும் எதிர்மறையாக விமர்சிப்பது ஏன் இது போன்ற கபட நாடகத்தை அரங்கேற்றி அதில் இரட்டை வேடம் தாங்கி நடிப்பது என்று புரிய வில்லை.

    நம் தலைவனின் திரைப்படங்கள் புரிந்து வருகின்ற மறு வெளியீட்டு சாதனைகள் பற்றி நாம் எழுதக்கூடாதாம். உங்கள் அபிமான நடிகரின் திரைப்படங்கள், மறு வெளியீட்டில் ஏதேனும் ( ? ) ஒன்றிரண்டு சாதனைகள் புரிந்திருந்தால் அதை பதிவிட்டு அற்ப சந்தோசம் அடைவது தானே ? முதல் வெளியீட்டில் மட்டும் என்ன சாதனைகள் வாழுகிறதாம் என்று நம் திரி அன்பர்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

    தனது அபிமான நடிகர் நடித்த படங்கள் பல இருக்கிறதாம் அதில் எதை பதிவிடுவது என்று தெரிய வில்லையாம் - எதை எடுப்பது எதை விடுப்பது என்ற தொலைக்காட்சி விளம்பர பாணியில் ஒரு பிதற்றல். ஆடத் தெரியாதவள் கூடம் பத்தாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

    மற்றொரு அறிவு ஜீவி பாரகன் தியேட்டர் சென்னை திருவல்லிக்கேணியில் தானே இருந்தது என்று ஒன்றும் தெரியாத பாப்பா போல் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளார். உண்மையிலேயே எனக்கொரு சந்தேகம் .... தாத்தா சாஹிப் பால்கே விருது என்ன நம் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாரத்" , " பாரத ரத்னா" பட்டங்களை விட உயரந்ததா என்ன ? அவ்வப்போது இதை ஒரு தேய்ந்து போன ரெக்கார்ட் போல ஊளையிடுவது.

    பத்மஸ்ரீ பட்டமோ ஆண்டுதோறும் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கலை, சமூகப் பணி, விஞ்ஞானம் - பொறியியல், வியாபாரம் - தொழில், மருத்துவம், இலக்கியம் - கல்வி, விளையாட்டு போன்ற துறைகளின் வல்லுனர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் கலைத்துறையை சார்ந்த 24 நபர்களுக்கு ஆந்திரா மாநிலம் கஜம் அஞ்சையா வில் தொடங்கி ராஜஸ்தான் மாநிலம் ஷகிர் அலி வரை மொத்தம் 24 பேருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாரத் - பாரத ரத்னா பட்டம் என்ன வருடந்தோறும் இத்தனை நபர்களுக்கு அளிக்கப்படும் பட்டமா ?

    பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதும் ஒரு தொகை கட்டினால் கிடைக்கக் கூடிய பட்டமே என்று நண்பர் ஒருவர் கூறினார். அது உண்மையாக இருக்கக் கூடும். ஏன் என்றால் சென்னையிலேயே செவாலியர் விருது அளிக்கப்பட்ட நபர்கள் பலர் இருக்கின்றனாராம்.

    அலெக்ஸ் என்ற நடிகர் (அதிகம் கேள்விப்படாத நடிகர்) கூட செவாலியர் விருது பெற்றிருக்கிறார் என்று தகவல்.

    1997ல் கொடுக்கப்பட்ட தாத்தா சாஹிப் பால்கே விருதுக்கே இப்படி ஒரு அவல கூக்குரல் என்றால் 1972லேயே பாரத் பட்டம் பெற்ற கலைவேந்தன் எம். ஜி. ஆர். ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கர்ஜிக்க வேண்டும் ? நாட்டிலேயே உயர்ந்த விருதான பாரத ரத்னா பட்டம் பெற்ற இதய தெய்வம் எம். ஜி. ஆர். பக்தர்கள் எவ்வளவு குதிக்க வேண்டும். ஆனாலும் எங்கள் தலைவன் பாணியில் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறோம்.

    ஒடாத ராஜபார்ட் ரங்கதுரை, ராஜ ராஜ சோழன் (இத்தனைக்கும் முதல் ஸ்கோப் படம்), விளையாட்டு பிள்ளை, சுமதி என் சுந்தரி, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற படங்களையெல்லாம் 100 நாட்கள் பட்டியிலில் சேர்த்து அற்ப சந்தோசம் அடைந்தீர்கள்.

    விட்டால், அன்பளிப்பு, பாதுகாப்பு, வாழ்க்கை அலைகள், நாம் பிறந்த மண், கவரிமான், வெற்றிக்கு ஒருவன், அமர காவியம், மோகனப்புன்னகை, ஊருக்கு ஒரு பிள்ளை, கருடா சவுக்கியமா, ஊரும் உறவும், மிஸ்டர் மகேந்திரா , இரு மேதைகள், நாம் இருவர், சுமங்கலி, சிம்ம சொப்பனம், சரித்திர நாயகன் (பட டைட்டில் எங்கள் இதய தேய்வத்துக்குத் தான் பொருந்தும்), குருதட்சனை, காவல் தெய்வம், அஞ்சல் பெட்டி 520, திருடன், எதிரொலி, தேனும் பாலும், தர்மம் எங்கே, மூன்று தெய்வங்கள், பொன்னூஞ்சல், மனிதரில் மாணிக்கம், மனிதனும் தெய்வமாகலாம் , அன்பைத்தேடி அன்பே ஆருயிரே சித்ரா பௌர்ணமி, இளைய தலைமுறை, நிறைகுடம், வம்ச விளக்கு, [படிக்காத பண்ணையார்), நேர்மை, லட்சுமி வந்தாச்சு, குடும்பம் ஒரு கோயில், ராஜ மரியாதை, வீர பாண்டியன் அன்புள்ள அப்பா, என் தமிழ் என் மக்கள் உட்பட பல 50 நாட்கள் கூட ஒடாத படங்களைக் கூட ஓடியதாக கதை விடும் பலே அண்டப் புளுகு ஆகாசப் புளுகர்கள் நீங்கள். ஒரு சாம்பிளுக்கு தான் இந்த படங்கள். 1952 முதல் பட்டியலிட்டால் தோல்விப்படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்.

    உங்கள் திரியில், இது போல் நீங்கள் அள்ளி விடும் சரடுகளை நாங்கள் ஏதேனும் விமர்சனம் செய்கிறோமா ? அதுதான் எங்கள் தலைவர், தனது காவியங்கள் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்த நாகரீகம், பண்பாடு.

    எது ஒன்றுக்கும் ஒர் எல்லை இருக்கிறது. எங்களை சீண்டினால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.
    நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்,

    தாங்கள் அறிவு ஜீவி என்று கூறியது என்னை என்றால் தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி. நான் இங்கு நடிகர் திலகம் மக்கள் திலகம் தொடர்பான தகவல் கிடைக்கும்போது அல்லது பழைய பதிவுகளிலிருந்து கிடைக்கும்போது அதை பதிவிடுவது வழக்கம்.

    தவறான தகவல் நடிகர் திலகத்தை பற்றியது இங்கு நேராகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவிடும்போது அதை இங்கு வந்து அது தவறு என்று எழுதி ஆதாரத்துடன் பதிவிடுவதும் என்னுடைய வழக்கம். காரணம் தவறான தகவல் அது யாரைபற்றியதாக இருந்தாலும் அது மக்களிடம் சென்றடைய கூடாது என்பது தான் என் நோக்கம். மக்கள் திலகம் அவர்கள் மீது என்றுமே எனக்கு மதிப்பும் மரியாதையும் ஒரு admiration உம் உண்டு.
    நான் மறுப்பது இங்கு தவறாக எந்த ஆதாரமும் இல்லாத பதிவுகள் வரும்போதுதான் ! தாங்கள் அவற்றை படித்து பார்த்து verify செய்து கொள்ளலாம்.

    Mgr ரசிகன் சிவாஜியை பற்றி தவறான தகவல் பரப்பினால் தான் ஒரு முழுமையான mgr ரசிகன் என்றோ அல்லது சிவாஜி ரசிகன் mgr பற்றி தவறான தகவல் பரப்பினால் தான் அவன் ஒரு சிவாஜி ரசிகன் என்று நம்பும் சாப்பா குத்திகொள்ளும் கூட்டத்தை சேர்ந்தவன் அல்ல நான் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.!

    பிறகு ...விருதுகள் - தங்களுடைய பத்மஸ்ரீ, பத்மபூஷன், தாதா சாஹிப், செவாலியர் பற்றி விவரணம் அருமை. இதை படிக்கின்ற மக்கள் இந்திலிருந்தே தங்களுக்கு அவைகளை பற்றி எந்தளவுக்கு தெரியும் என்பதை புரிந்து கொள்வார்கள்.

    திரு அலெக்ஸ் அவர்கள் பெற்றது பிரெஞ்சு அரசாங்கத்தின் செவாலியர் விருது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதைபோல..இதைபோல அண்டபுளுகள், ஆதாரமற்ற தவறான தகவல் இங்கு பதிவிடும்போதுதான் நான் பதில் உரைப்பது வழக்கம்.

    நடிகர் திலகம் பெற்ற விருதுகளை பற்றி நீங்கள் புளுகி, தவறான தகவல் பதிவிட்டுளீர்கள். அதே போல நான் தவறான தகவலை பரத் விருது பற்றி இங்கு பதிவு செய்ய மாட்டேன்.

    எந்த தி மு க அரசியல்வாதிஇடம் ( 60 வயது மேல் உள்ள ) சென்று கேட்டாலும், அல்லது அந்த பரத் விருது குழிவினரிடம் யாரவது ஒருவர் இருப்பின் நீங்கள் அவர்களிடம் கேட்டு சென்று தெரிந்து கொள்ளலாம் எந்த நிலைமையில், எந்த காரணத்தில் யாரால் political பிரஷர் கொடுக்கப்பட்டு அந்த "பரத்" விருது வழங்கப்பட்டது என்று ..அதுவும் எந்த படத்திற்கு அதில் நடித்ததிர்க்கு ????? கொடுக்கப்பட்டது என்று. அல்லது திருமதி சௌந்தரா கைலாசம் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உண்மைகளை.

    நடிக்க வந்த ஏழே வருடத்தில் உலக விருதை வாங்கியவர் நடிகர் திலகம். பத்து வருடத்தில் உலக பேரரசு நாடான அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாம் john f kennedy அழைத்த ஒரே இந்திய நடிகர் இன்று வரை நடிகர் திலகம் மட்டுமே.

    உங்களுடைய தவறான காழ்புணர்ச்சியால் தமிழன் என்ற நிலையில் இருந்து தாழ்ந்து விடாதீர்கள் என்பது தான் எனது விண்ணப்பம்.

    பிறகு தாங்கள் அளித்துள்ள நடிகர் திலக பட பட்டியல். திருடன் தவிர அனைத்தும் 100 நாட்கள் தொடாத படங்களே அன்றி வியாபார ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கை கடித்த படம் அல்ல. நீங்கள் பதிவிட்ட அந்த லிஸ்ட் நாங்கள் ஒன்றும் நூறு நாள் ஒடிற்று என்று எப்போதும் கூறவில்லை !!

    ராஜபார்ட் ரங்கதுரை மற்றும் உயர்ந்த மனிதன் 100 நாட்கள் படங்களே. நீங்கள் இல்லை என்றால் அது 100 நாட்கள் படம் இல்லை என்று ஆகிவிடாது ! ஆதாரம் இங்கு திரு சிவா பதிவிட்டுள்ளார் ! இதிலிருந்தே நீங்கள் கூறுவது பொய் என்றும் ஓடிய படங்களை கூட ஓடவில்லை என்ற உங்களுடைய காலம் காலமாக பரப்பப்படும் புளுகுகள் காழ்புணர்ச்சியால் பரப்பப்பட்ட புளுகுகளே என்று இந்த ஆதாரம் பதிவிட்டதன் மூலம் நிரூபித்தாயிற்று.

    இதை போல நாங்களும் பதிவிடலாம் உங்களுடைய படங்களை.

    136 திரைப்படங்கள் - 42 வருடம் - அதில் 39 மட்டும் 100 நாட்கள் மற்றும் அந்த 39 படங்களில் 5 வெள்ளிவிழ படங்கள். இதுதான் உங்கள் statistics !!!!


    மறு வெளியீடு - உங்களுடைய சாதனைகளுக்கு என்றுமே குறைந்ததல்ல நடிகர்திலகத்தின் சாதனைகள் !

    நீங்கள் சொன்னாலும் சொல்லவில்லயென்றாலும் நாங்கள் அறிவுஜீவிகள் தான் !

    இப்போதாவது ஒத்துகொண்டதற்கு, உங்கள் வாயால் பாராட்டியதற்கு நன்றி ! மிக்க நன்றி !

    படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவை முதல் முதலாக அறிமுகபடுத்திய கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் புகழ் புவியெங்கும் பரவுக ! மென் மேலும் வளர்க !

    Jaihind !

    Rks
    Last edited by RavikiranSurya; 30th July 2014 at 11:33 AM.

  2. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •