-
2nd August 2014, 11:20 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
1958 ல் அதிக வசூல் பெற்று சாதனை புரிந்த காவியம்
"திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும்! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100 நாள் கண்ட முதல் காவியமும் இதுவே! அரங்கு கிருஷ்ணா 113 நாள்).
"சிறந்த இயக்குநர் விருது "சினிமாகதிர்" புரட்சி நடிகருக்கு வழங்கியது.
"லண்டன்" தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.
"சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிகையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.
மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.
1958ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.
"லண்டன்" மாநகர் திரையங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே!
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் (தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம்! நாடோடி மன்னனே!
"இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 "சவரன்" தங்க வாள் பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது. பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
சீர்காழியில் "இன்பக்கனவு" நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டொக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த 'தாய் மகளுக்கு கட்டிய தாலி' படம் வெளிவந்தது. ஆகையால் 1959 ம் ஆண்டும் 'நாடோடி மன்னன்' தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.
ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராகயிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாக்க தந்தவர் புரட்சி நடிகரே.
நடிகை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். பி. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.
"பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.
அதிக நேரம் ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.
"தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல் (தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துக்கள் உணர்த்தும் பாடல்கள் அமைந்த ஒரே காவியம்.
அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும்- பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கெமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி.
மன்னன் "ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களில் இடம்பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ்க் காவியம்.
"10-க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கு ரகசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.
"கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் துள்ளாக உடைந்து சிதறுவது போல ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.
"அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்க பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.
"கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்டு செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி, ஒரு பணிப் பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது.
மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்டமான் இறந்து கிடப்பது போல காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம் இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.
தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் 'இந்தியன் மூவி நீயூஸ்' என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.
தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.
தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.
3 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது.
ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.
"வசனத்தில் புதுமை புரட்சி கருத்துக்கள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல், அன்பு, சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.
முதலில் "அரசியல் கட்சி கொடியை ஆரவாரத்துடன் பறக்க விட்டு வெளிவந்த காவியம் இது!
நாடோடி மன்னன் திரைக்காவியத்தின் பற்றிய தங்களின் அற்புதமான விமர்சனம் மற்றும் சாதனைப்பட்டியல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி திரு. வினோத் சார்.
Excellent.....Excellent....Excellent...
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
2nd August 2014 11:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks