-
17th August 2014, 12:24 AM
#1
Senior Member
Senior Hubber
கடல் மைனா
கடல் மைனா..
**
சின்னக் கண்ணன்
*
முன்னுரை
*
திடுமென மனதில் ஒரு எண்ணம்.. ஏன் வெகு சிலவே பாராக்கள் கொண்ட ஆனால் இனிமையான ஒரு சரித்திரத் தொடர்கதை எழுதக் கூடாது என..உடனே செயல் படுத்தி முக நூலில் ,இரண்டு அத்தியாயங்கள் எழுதியும் விட்டேன்..பின் தான். வரலாற்றுக் களம் தேடினேன்! ..என்னசெய்வது..
சரித்திர நாவல்களின் பகவத் கீதை போன்ற பொன்னியின் செல்வன் கண்ணில் பட்டது..முதல் அத்தியாயத்திலேயே கதாநாயகரின் பெயர். இவரை வைத்து ஏன் எழுதக்கூடாது...பின் கேட்க வேண்டுமா..அது பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து அவரே என் நாயகர் எனத் தோன்றி எழுத ஆரம்பித்தேன்..
நான்கு பாராக்களுக்குள்ளாக சரித்திரத் தொடர்கதை எழுதுவதென்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது..எனினும் விறு விறுவெனப் பல அத்தியாயங்கள் எழுதிப் பார்த்த போது நடுவில் கொஞ்சம் மனக்கலக்கம்.. முடியுமா என்ன சுவை இருக்குமா.. என நினைத்ததினலோ என்னவோ கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டேன்..கிட்டத் தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல்..
முடியாதென்பது இல்லை தான்..இருப்பினும் கதாநாயகரும் கதா நாயகியும் கனவில் வந்து யோவ் இப்படி எழுத ஆரம்பித்து அம்போ என விடலாமா நீ .. சரி நாலு பாரால முடிஞ்சவரைக்கும் எழுதிப்பார்..அப்படி இல்லை எனில் கொஞ்சம் நீட்டி எழுதேன்.. உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள் எனச் சொன்னதால்(கொஞ்சம் வேண்டியபுத்தகங்களையும் வாங்கிப் படிப்பதால்) இப்போது மீண்டு வந்து எழுதுகிறேன்..எழுதப்போகிறேன்..முடிக்கவும் உறுதி இருக்கிறது..
அன்புடன்
சி.க..
-
17th August 2014 12:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks