-
20th October 2014, 04:13 PM
#11
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு வணக்கம்.
திரு.எஸ்.வி., திரு. செல்வகுமார், திரு.லோகநாதன், திரு.ராமமூர்த்தி ஆகியோரின் பாராட்டுக்களுக்கு நன்றி. திரு. செல்வகுமார் சார், நீரும் நெருப்பும் படத்தை பற்றிய தலைவரின் பேட்டியை பதிவிட்டு உலகமெங்கும் உள்ளவர்கள்அதை படிக்க வழி செய்த உங்களுக்கு நன்றி. தலைவரின் அபூர்வ ஸ்டில்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து. ‘மற்றவர்கள் கொடுத்தால் பட்டம் தானே புகழ்ந்து கொண்டு பட்டம் சூட்டிக் கொள்வது தம்பட்டம்’ என்று தலைவரின் வசனத்தை நீங்கள் மேற்கோள் காட்டி வம்புக்கு இழுப்பவர்களுக்கு பதிலளித்திருப்பது அற்புதம். சூடு போட்டுக் கொண்டதெல்லாம் புலிகள் என்று கூறிக் கொண்டால் அவற்றைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர என்ன செய்ய முடியும்?
திரு. வெங்கட்ரமணி அவர்களை இதயவீணையின் 43வது துவக்க நாளான இன்று தலைவரின் பாணியில் ‘வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமோஷ்கார்’ என்று கூறி வரவேற்கிறோம். திரு. முத்தையன் அம்மு, எனது பதிவுகள் பிடித்திருக்கிறதா? என்று என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? மிகவும் அருமை. அதிலும் தாங்கள் இரவு 2.30 மணிக்கெல்லாம் கூட பதிவுகள் இடுவதை பார்க்கும்போது தங்கள் அயராத உழைப்புக்கு தலை வணங்குகிறேன். சிறிது இடைவெளிக்கு பிறகு வந்துள்ள ரூப் குமார் சார், ஒளிவிளக்கு படத்தில் தலைவரும் சோவும் சந்தித்து பேசும் காட்சியை நீங்கள் விவரித்த விதத்தை பாராட்டி மேலும் தங்களிடம் இருந்து இதுபோல் எதிர்பார்க்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தேன். அதை கவனித்தீர்களா என்று தெரியவில்லை. மீண்டும் தங்களுக்கு பணிவோடு நினைவுபடுத்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
20th October 2014 04:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks