Results 1 to 10 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓர் இள அன்னை சோஃபாவில் சாய்ந்தவண்ணம் கண்ணயர்ந்திருக்கிறாள்..;அவளை இறுக அணைத்தபடி மார்பில் தலைசாய்த்துத் தூங்குகிறது குழந்தை.. இப்படி ஒரு புகைப்படம் போனவருடமோ என்னவோ முக நூலில் நண்பர் ஒருவர் கொடுத்து அவரும் ஒரு வெண்பா இட்டிருந்தார்.. அந்த படத்திற்கு நான் எழுதிய வெண்பா ( என்னிடம் நான் பதிந்து வைத்துக் கொள்ளவில்லை) இன்று மறுபடி இன்னொரு நண்பர் லைக்கிட அது கிடைத்தது

    வெல்லமென வந்தமகன் விந்தையென வஞ்சிமடிச்
    செல்லமெனக் கண்ணுறங்க சிந்தைநிறை கொண்டவளும்
    மெல்லமெல்ல மெய்மறந்து மேனிதனைச் சாய்த்தபடி
    தள்ளுகிறாள் தூக்கத்தைத் தான்..

    **

    கொள்ளையிட வந்தமகன் கெஞ்சிநெஞ்சில் கண்ணயர
    தொல்லைகளும் துன்பமதும் தள்ளிசெல மெய்மறந்து
    அல்லியிதழ்க் கண்ணிமைகள் அஞ்சுகத்தின் கண்தழுவி
    அள்ளுமனச் சித்திரம்தான் ஆம்

    **

    முற்றிலும் குறில்களால் ஆன கூவிளங்காய்ச் சீர்களில் நண்பர் எழுதியிருந்தார் (இறுதிச் சொல் மட்டும்காசு என்ற வாய்ப்பாட்டில் முடியும் வண்ணம்) எனக்கு அது வரலை..

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •