-
8th March 2015, 10:49 PM
#11
Senior Member
Senior Hubber
ஓர் இள அன்னை சோஃபாவில் சாய்ந்தவண்ணம் கண்ணயர்ந்திருக்கிறாள்..;அவளை இறுக அணைத்தபடி மார்பில் தலைசாய்த்துத் தூங்குகிறது குழந்தை.. இப்படி ஒரு புகைப்படம் போனவருடமோ என்னவோ முக நூலில் நண்பர் ஒருவர் கொடுத்து அவரும் ஒரு வெண்பா இட்டிருந்தார்.. அந்த படத்திற்கு நான் எழுதிய வெண்பா ( என்னிடம் நான் பதிந்து வைத்துக் கொள்ளவில்லை) இன்று மறுபடி இன்னொரு நண்பர் லைக்கிட அது கிடைத்தது
வெல்லமென வந்தமகன் விந்தையென வஞ்சிமடிச்
செல்லமெனக் கண்ணுறங்க சிந்தைநிறை கொண்டவளும்
மெல்லமெல்ல மெய்மறந்து மேனிதனைச் சாய்த்தபடி
தள்ளுகிறாள் தூக்கத்தைத் தான்..
**
கொள்ளையிட வந்தமகன் கெஞ்சிநெஞ்சில் கண்ணயர
தொல்லைகளும் துன்பமதும் தள்ளிசெல மெய்மறந்து
அல்லியிதழ்க் கண்ணிமைகள் அஞ்சுகத்தின் கண்தழுவி
அள்ளுமனச் சித்திரம்தான் ஆம்
**
முற்றிலும் குறில்களால் ஆன கூவிளங்காய்ச் சீர்களில் நண்பர் எழுதியிருந்தார் (இறுதிச் சொல் மட்டும்காசு என்ற வாய்ப்பாட்டில் முடியும் வண்ணம்) எனக்கு அது வரலை..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th March 2015 10:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks