-
25th April 2015, 06:56 PM
#11
Junior Member
Veteran Hubber
.

Originally Posted by
g94127302
அன்புள்ள Prof .திரு செல்வகுமார் அவர்களுக்கு - என்னுடன் நேரம் ஒதுக்கி பேசினதற்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை - ஒரு 1000 பக்கங்கள் உள்ள புத்தகத்தை 10 நிமிடங்களில் படித்து முடித்து விட்டால் , எப்படி மூச்சு வாங்குமோ அப்படி பட்ட நிலைமையில் இருக்கிறேன் - உங்கள் சாதனகளை கேட்டபின் உங்களை பற்றி அலசவே 100 திரிகள் வேண்டும் போல இருக்கின்றது - திரு கலைவேந்தன் சொன்னது நினைவிற்கு வருகின்றது - உங்கள் பெயரின் பக்கத்தில் A B C D யில் உள்ள 26 letter யை சேர்த்து போட்டாலும் நீங்கள் வாங்கியுள்ள படிப்பு அத்தாட்சிகளுக்கு போதாது என்று நினைக்கிறேன் - உங்களிடம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் மிகவும் அதிகம் - உங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டுதான் நன்றி மீண்டும் சொல்கிறேன் . இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்பதே என் அவா - இதில் உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை , முக்கியம் .
அன்புடன்
ரவி
சகோதரர் திரு . ரவி அவர்கள் அறிவது :
தங்களுடன் உரையாடியது எனக்கும் மிக்க மகிழ்வை தருகிறது. நன்றி !
நான் கற்றது கையளவு ... இன்னும் உள்ளது கடலளவு என்று நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின்

"நாளை நமதே" காவியத்தில் இடம் பெற்ற பாடலின் வரிகள் தான், என் செவிகளில் ஒலித்து கொண்டே இருக்கிறது. எங்கள் "வாத்தியார்" புரட்சித்தலைவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ள அவரது பள்ளிக்கூட மாணவன் தான் நான்.
இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்கின்ற தங்கள் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் எனது தொடர் பங்களிப்புகள் இருக்கும் என்பதை மீண்டும் தங்களிடம் இந்த திரி மூலம் உறுதி அளிக்கிறேன்.
மீண்டும் நன்றி !
தங்களுடன் பேசிய இனிய நினைவுகளுடன்
Last edited by makkal thilagam mgr; 25th April 2015 at 06:58 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th April 2015 06:56 PM
# ADS
Circuit advertisement
Bookmarks