Results 1 to 10 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by g94127302 View Post
    நல்ல நேரம் :

    அன்று எனக்கு மட்டுமே விடுமுறை - மற்ற நாட்களிலும் பெரிதாக ஒன்றும் சாதிப்பதில்லை - அன்று மட்டும் என்ன செய்து விடப்போகிறேன் என்று எனக்குள்ளேயே சொல்லிகொன்டு மீண்டும் கலைந்த போர்வைக்குள் photobucket க்குள் திரு முத்தையன் அம்மு புகைப்படத்தை சொருகுவதுபோல் என் உடம்பை இழுத்துக்கொண்டேன் - தூக்கம் வர மறுத்தது - ஆனால் சோம்பேறித்தனதிற்க்கு அளவே இல்லை . என் மனைவியின் குரல் , நேப்பாளில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது - கட்டில் அதிர எழுந்தேன் - இப்படி நிலைமை இருந்தால் அவள் பொறுமையுடன் நிலவரத்தை கையால்கிறாள் என்று அர்த்தம் . " உங்களைத்தானே ! இன்று வர்ஷாவிற்கு ( பெயர் திரு யுகேஷ் இடமிருந்து கடன் வாங்கியது ) காலேஜ் பீஸ் கட்ட வேண்டும் - நல்ல நேரம் இன்று எப்பொழுது என்று காலண்டரை பார்த்து சொல்லுங்கள் --

    " ஏன் நீயே பார்க்க கூடாதா ?" - சொல்ல தையிரியம் இல்லை - அடுத்த வேலை உணவுக்கு வழி வகுக்காமல் கேள்விகளை கேட்டு விட முடியுமா ?? - இதோ ஒரு நொடியில் பார்த்து சொல்கிறேன் - இதை விட வேறு என்ன வேலை எனக்கு ( இரு திலகங்களின் படங்களை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன ?) - காலண்டரை பார்க்க வில்லை - சட்ட் என்று சொன்னேன் - காலை 11மணியிலிருந்து இரவு 10.30 வரையில் - நடுவில் சற்றே எம கண்டம் - என்ன ? நல்ல நேரம் -இவ்வளவு நேரமா இன்று ?? என்றுமே என்னை நம்பாதவள் அன்று மட்டுமா நம்பி விடப்போகிறாள் ?

    காலண்டரை அவளே பார்த்து " ஏன் இப்படி உளறுகிண்டீர்கள் ( நான் பேசுவதாக என்றுமே அவள் ஒருநாளும் சொன்னதில்லை ) வேறு நேரம் தானே காலண்டரில் சொல்லப்பட்டுள்ளது ? . மனைவியிடம் தாழ்ந்த குரலில் ( என்றும் உள்ள அதே குரலில் தான் !) - இன்று sunlife இல் நல்ல நேரம் 11 மணியிலிருந்து பிறகு "நான் ஆணையிட்டால் " - அதற்குள் அவள் என்னைப்பார்த்து " என்ன தையிரியம் " நீங்கள் ஆணை இடப்போகிறீர்களா ? என்னிடமா ??"

    முட்டைக்குள் . பிறந்த கோழிக்குஞ்சை மீண்டும் அதற்குள் திணிப்பதுபோல , என் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டேன் - ஜன்னியே வந்துவிட்டது அந்த கோடை வெயிலில் ----

    மீண்டும் எல்லா தெய்வங்களையும் ஒருமுறை மனதில் நினைத்துக்கொண்டு சொன்னேன் - இன்று மக்கள் திலகத்தின் படம் நல்ல நேரம் - அவரின் படங்கள் போடும் எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் , நல்ல நேரமும் தானே - நீயே பார் , நம் வர்ஷா வின் எதிர் காலம் எப்படி இருக்கப்போகின்றது என்று - என் கண்களில் தெரிந்த அந்த ஒளி மயமான எதிர்காலத்தை அவள் கண்களிளிலும் ஏற்றினேன் - அவள் கண்கள் பணிந்தன .........

    சரி சரி படத்தை பற்றி சொல்லாமல் உங்கள் வீட்டு கதையெல்லாம் எங்களுக்கு எதற்கு - நீங்கள் அப்படி அலுத்துகொள்வதர்க்குள் , படத்திற்கு வந்து விடுகிறேன்

    கதையின் சுருக்கம்

    ராஜு மனித நேயம் மட்டும் அல்ல , மிருக நேயமும் உடையவன் . அந்த வாயில்லாத மிருகங்கள் , வாய் இருந்தும் விஷத்தை கக்குபவர்கலளாக , பேச்சுத்திறமை இருந்தும் , எப்படி பேசுவது , மனம் நோகாமல் என்ற கலையை தெரியாதவர்களாக இருக்கும் மனிதர்களை காட்டிலும் 1000 தடவைகள் மேல் என்பதை நன்றே உணர்ந்திருந்தான் - மாந்தர்களின் கண்ணீரில் வெறும் உப்பு தான் இருக்கின்றது - ஆனால் அந்த வாய் இல்லாத ஜீவன்களின் கண்ணீரில் வெறும் நன்றி உணர்வுகள் மட்டுமே உள்ளது என்பதையும் சரியாக புரிந்து கொண்டவன் ராஜு ..

    ராஜுவிடம் இருந்த யானைகள் அவன் வயிற்றை தினமும் கழுவ உதவின - ஓடி ஓடி உழைத்தான் - ஊருக்கெல்லாம் கொடுத்தான் - ஆடி பாடி பிழைத்தான் - அன்பை நாளும் விதைத்தான் - நாட்கள் நகர்ந்தன --
    விஜயா என்ற பெண் அவள் வாழ்வில் வந்தாள் - அவனுக்கு ஒரு தேவதையாக - ஆனால் அவன் வளர்க்கும் யானைக்கு ஒரு எமனாக !!

    அவள் வாழ்வில் நடந்த ஒரு கொடுமை அவள் யானைகளை வெறுக்க வழி வகுத்தது . ராஜுவின் நேரத்தை பறித்துக்கொள்ளும் அந்த மிருகங்களை கண்டு பொறாமை கொண்டாள் . ராஜு வளர்த்த யானை (ராமு)தன் உயிரை கொடுத்து அவளை விட , மனித இனங்களை விட அவைகள் தான் உயர்ந்தவை என்பதை நிருபித்து ராஜுவிடம் இருந்து விடை பெற்றது .

    நடிப்பு : மக்கள் திலகத்தை தவிர இந்த படத்தில் நன்றாக நடித்தவர்கள் அந்த யானை கூட்டம் ஒன்றே !

    மக்கள் திலகத்தின் நேய உணர்வுகளை அருமையாக படம் பிடித்து காண்பித்த படம் இது .

    பாடல்கள்

    1. ஆகட்டும்டா தம்பி ராஜா
    2. நீ தொட்டால்
    3. ஓடி ஓடி உழைக்கணும்
    4. டிக் டிக் டிக் டிக்


    எல்லா பாடல்களும் தேனில் தோய்த்து எடுத்த பலா சுளைகள் - "விவசாயி "க்கு பிறகு அதாவது 5 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு .K .R விஜயா மக்கள் திலகத்துடன் ஜோடி சேர்ந்த படம் - சின்னப்பா தேவர் -MGR இணைந்து வெளிவந்த கடைசி படம் , முதலாவது கலர் படமும் இதுவே - தேவரின் 16 படங்களில் MGR நடித்திருக்கிறார் - ஹிந்தி படத்தின் தமிழாக்கம் .

    ஒரு விடுமுறை நன்றாக செலவழித்ததில் ஒரு பெருமை - வர்ஷாவிற்கு காலேஜ் பீஸ் இந்த நல்ல நாளில் , நல்ல நேரத்தில் கட்டி என் மனிவியிடமும் நல்ல பெயரை வாங்கிக்கொண்டேன் .

    அன்புடன்

    ரவி
    அன்புசால் திரு. ரவி அவர்களுக்கு,

    தாமதத்துக்கு மன்னிக்கவும். 3 நாட்களாக கொஞ்சம் வேலை அதிகம். அதனால் திரிக்கு வரமுடியவில்லை.

    தாங்கள் உணர்வுபூர்வமாக, மனதைத் தொடும் வகையில் எழுதக் கூடியவர் என்று தெரியும். நகைச்சுவையாகவும் நன்கு எழுதக்கூடியவர் என்று தெரிந்து கொண்டேன். நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது. நானும் அரைத்தூக்கத்தில் ‘அதற்குள் விடிந்து விட்டதா?’ என்று நொந்து கொண்டு போர்வைக்குள் சுருண்ட அனுபவங்கள் உண்டு.

    நகைச்சுவையுடன் கூடிய நல்ல நேரம் விமர்சனம் பிரமாதம். ஆனால், உங்களின் ஒரு கருத்தை மட்டும் ஏற்க முடியவில்லை. ‘இரு திலகங்களின் நடிப்பை பார்க்கும் எனக்கு கொஞ்சம் கூட நடிப்பு வராதா என்ன?’... என்று கூறியிருக்கிறீர்களே. நடிக்கத் தெரியாத நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள் என்பதை உங்கள் எழுத்துக்களே காட்டுகின்றன.

    உங்களின் ‘அந்தக் காலம்’ கட்டுரையும் அருமை. பாராட்டுக்கள். இதுபோன்ற பதிவுகளைப் பார்த்தால் எனக்கும் எழுத ஆசை வருகிறது. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •