Results 1 to 10 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.

    எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்

    "அச்சம் என்பது மடமையடா;

    அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.

    அதே பாடலில்,

    "கனக விசயரின் முடித்தலை நெறித்து

    கல்லினை வைத்தான் சேரமகன்

    இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி

    இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."

    - என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.

    மதுரை வீரன் படத்தில் ,

    "கடமையிலே உயிர் வாழ்ந்து

    கண்ணியமே கொள்கையென

    மடிந்த மதுரை வீரா..."

    - என்று தொடரும் இப் பாடலில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.

    அதே படத்தில் இன்னொரு பாடல்.

    " செந்தமிழா எழுந்து வாராயோ - உன்

    சிங்காரத் தாய்மொழியை பாராயோ"

    - என்று சொல்வார்

    எம்.ஜி.ஆர். தயாரித்த ' நாடோடிமன்னன் ' படத்தில், 'செந்தமிழே வணக்கம்.." என்று

    பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் 'அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்" என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.

    courtesy - thinnai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •