-
3rd September 2015, 06:34 PM
#11
திருச்சி பாஸ்கர் சார்,
தங்களின் பதிவில் நடிகர்திலகத்தின் பின்னாளைய அரசியல் ஈடுபாட்டை நுட்பமாக அலசியுள்ளீர்கள். பெருந்தலைவர் காமராஜ் மறைவுக்குப்பின் தனிக்கட்சி கண்டிருக்க வேண்டும் என்ற உங்கள் கூற்றில் மட்டும் சற்று மாறுபடுகிறேன்.
காமராஜ் மறைவுக்குப்பின் பழைய காங்கிரசை (ஸ்தாபன காங்கிரசை) இவர் கைப்பற்றியிருக்க வேண்டும். அன்றைய நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது ஸ்தாபன காங்கிரஸ் மட்டும்தான். இந்திரா காங்கிரஸ் அப்போது ஒரு லெட்டர் பேட் கட்சி மட்டுமே.
எனவே மிகப்பெரிய தொண்டர்படையை கொண்ட ஸ்தாபன காங்கிரசை சிவாஜி கைப்பற்றி, அதன் தலைமை ஏற்று நடத்தியிருக்க வேண்டும். பெருந்தலைவருக்குப்பின் பழைய காங்கிரசில் செல்வாக்குப்பெற்ற பெரிய தலைவர்கள் யாருமில்லை. பா.ரா. வெல்லாம் சும்மா பேருக்குத்தான் இருந்தார். அந்த நல்ல வாய்ப்பையும் கோட்டைவிட்டார் நடிகர்திலகம்.
1989-ல் சம்மந்தமில்லாத யாரையோ முதல்வராக்குவதற்கு இவர் கட்சி ஆரம்பித்தார். அப்போது அ.தி.மு.க. 'ஜா' அணி என்றும் 'ஜெ' அணி என்றும் பிரிந்து இருக்க, இரட்டை இல்லை சின்னமும் முடக்கப்பட்டு இருக்க, தி.மு.க.வுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று பரவலாக தெரிந்தது. அப்போது தி.மு.க.தலைவர் தமிழக முன்னேற்ற முன்னணிக்கு 25 இடங்கள் தருவதாக தூது அனுப்பினார். அதை ஏற்று கூட்டணியில் சேர்ந்திருந்தால் 15 எம்.எல்.ஏ.க்களாவது ஜெயித்திருக்க முடியும். திருவையாறு அவமானமும் ஒட்டாமல் இருந்திருக்கும். ஹும்.. எல்லாம் போச்சு.
நடந்தவற்றை இப்போது போஸ்ட்மார்ட்டம் பண்ணி என்னபயன் என்ற விரக்திதான் மிச்சமாகிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
3rd September 2015 06:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks