-
29th September 2015, 02:15 PM
#11
ராகவேந்தர் சார்,
இது உங்களிடம் எதிர்பார்த்ததுதான். நடிகர்த்திலகத்துக்காக (திரைப்படங்களின் வெற்றிக்காகவும் அரசியலுக்காகவும்) அந்தரங்க சுத்தியோடு உழைத்த ரசிகர்கள் / தொண்டர்கள் தங்கள் மனம் ஆற்றாமையால் சில கருத்துக்களை வெளியிடும்போது உடனே குதித்து வந்து வாதம் செய்யும் நீங்கள், மாற்றுத்திரி நண்பர்கள் நடிகர்திலகத்தை மிகவும் மட்டமாக பேசும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறீர்களே அது ஏன்?. உங்கள் நடிகர்திலக விசுவாசம் அப்போ எங்கே போயிற்று?.
உதாரணமாக, அங்குள்ள நண்பர் ஒருவர் "நடிகர்திலகம் ஒரு வார்டு கவுன்சிலராக ஆகக்கூட லாயக்கில்லாதவர்" என்று கேலி பேசியபோது வெகுண்டெழுந்தீர்களா?. இல்லையே. ஏன்?.
அந்த திரியின் இன்னொரு நண்பர், (நடிகர்திலகத்துக்கு அரசு மணிமண்டபம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது) "பி.யு.சின்னப்பா முதல் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வரை அனைத்து நடிகர்களுக்கும் அரசு செலவில் மணிமண்டபம் கட்டியிருக்கும்போது சிவாஜிக்கு மட்டும் ஏன் கட்டவில்லை?" என்று குத்தலாக கேட்டாரே. (அதாவது அவர்களைப்போல இவரும் ஒரு நடிகர்தானாம்) அப்போது உங்கள் வீரம் கொப்பளிக்கவில்லையே. நம் திரியின் மற்ற நண்பர்கள் மாற்றுத்திரிக்கு பதிலடி கொடுத்தபோது நீங்கள் மட்டும் மௌனியாக இருந்தது ஏன்?.
அவர்களால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட 'கண்ணிய காவலர்', 'அன்பாளர்', 'பண்பாளர்' போன்ற பட்டங்கள் பறிபோய்விடும் என்ற பயமா?.
அப்போது உங்கள் நடிகர்திலக விசுவாசம் எங்கே போயிற்று?. நானும், திருச்சி பாஸ்கர் அவர்களும் எங்கள் ஆதங்கத்தை வெளியிடும்போது மட்டும்தான் உங்கள் வீரம் தலைதூக்குமா?.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
29th September 2015 02:15 PM
# ADS
Circuit advertisement
Bookmarks