வாசு சார்
பறக்கும் பந்து பறக்கும் பாட்டைப் பற்றி நீங்கள் எழுதியவுடன் ஏனோ எனக்கு தேவன் கோயில் மணியோசை படப்பாடல் நினைவுக்கு வந்து விட்டது.

அந்தப் படத்தின் துவக்க விழாவன்று ரணணா ஸ்ரீதர் இசையில் இரு பாடல்கள் பதியப்பட்டது என நினைக்கிறேன். ஒரு பாடலின் பல்லவி புதிய உலகம் பிறக்கும் என்று துவங்கும். இரண்டாம் வரி கூட ... கதவு திறக்கும்... என்று வரும். இரண்டாம் வரியின் முதல் வார்த்தை ஞாபகத்திற்கு வரவில்லை. அருமையான ட்யூன். டி.எம்.எஸ். பி.சுசீலா பாடியது. அந்தப் பாடலையாவது அவர்கள் வெளியிட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் அது புதுமையான ட்யூன். நமது நண்பர் ஒருவர் அந்தப் படப் பூஜையன்று அங்கிருந்தார். சில தினங்களுக்கு முன் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் அந்த ட்யூனைப் பாடிக்காட்டினார். அது மட்டும் வந்திருந்தால் டி.எம்.எஸ். பி.சுசீலா இணையின் புகழ் மகுடத்தில் மற்றுமோர் வைரமாய் மின்னியிருக்கும். காரணம் நண்பர் பாடிக்காட்டும் போதே அது அவ்வளவு ரம்மியமாக இருந்தது.