-
20th May 2017, 08:41 PM
#11
Senior Member
Devoted Hubber
அப்போதைய திரையரங்குகள் மற்றும் டூரிங் கொட்டகைகளில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் யாவும் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தமையால் பிலிம் சுருள் அறுந்து விடுவதுண்டு அதை தியேட்டர் புரஜெக்டர் ஆபரேட்டர் பெரும் சிரமப்பட்டு ஒட்டவைத்து மீண்டும் படத்தை ஓட வைப்பார், அதற்குள் ரசிகர்கள் போடும் கூப்பாடு காதை கிழித்து விடும், அப்படியே படம் தொடரும்போது துண்டாகிப் போன பிலிம் சுருளில் நடிகர்திலகத்தின் காட்சிகள் இடம் பெற்று படம் பார்க்கும் போது அது இல்லாமல் போனால் படத்தின் முக...்கியத்துவமே இல்லாமல் போய் விடும்,
மற்ற ஏனைய நடிகர்களின் படங்களுக்கு இந்த குறை ஏற்பட வாய்ப்பில்லை, மற்ற நடிகர்கள் எல்லாம் எந்த வித முக பாவனைகளையும் காட்டத் தெரிவதில்லை, வசனம் பேசும்போது முகத்தில் எந்த மாற்றமும் வெளிப்படையாக தொற்றுவிக்கத் தெரியாது, நடிப்பு என்ற ஒன்று இருக்கவே இருக்காது எனவே அந்தப் படங்களில் ஏதாவது பிலிம் சுருள் துண்டாகிப் போனாலும் படத்தின் தன்மை மாறாது, ஆனால் நடிகர் திலகம் மட்டுமே அவர் தோன்றும் காட்சிகள் காட்சிக்கு காட்சி நடிப்பிலும் வசனம் பேசுவதிலும் அசத்தியிருப்பார், எனவே 3 அடி பிலிம் சுருள் விடுபட்டு போனாலுமே படத்தின் சுவராஸ்யம் குறைந்து விடும்
நடிகர் திலகத்தின் நடிப்பை திரும்ப திரும்ப பார்த்த காலங்களில் எல்லாம் அதிக நாட்கள் என 175 நாட் களுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருந்ததனால் பிலிம் சுருள் தேய்ந்து கோடுகள் விழுந்து விடும், அப்போது அது ஒரு பெரிய கவலை,
ஆனால் இப்போதெல்லாம் வெளியாகும் படங்களுக்கு டிஜிட்டல் வசதி வந்து விட்டது தியேட்டரில் 1000 காட்சிகள் ஓடினால் கூட ஒரு கீரல் விழ வாய்ப்பில்லை, ஆனால் படத்தை பார்க்கத்தான் யாரும் இல்லை.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th May 2017 08:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks