Sivaji Dhasan Sivaji Dhasan
Sivaji Kumar ·
Sabaash my son Vaira Bharathi
இல்லாத
கதையில் ...
தெரியாத
நடிப்பை ......
இனி யார் நடித்தால்
என்ன சிவாஜி !
கடவுள் பூமிக்கு வந்து
நடிக்க ஆசைப் பட்டான்
உன் உடம்பு கொண்டான்
பூமியே கடவுளைப் போல்
நடிக்க ஆசைப்பட்டதும்
உன்னை எடுத்துக் கொண்டான்
பட்டினி கிடந்து நீ கற்ற கலை
பசியைத் தீர்க்கிறது
வயற்றில் ஈர துணி கட்டி
நீ ஏறிய மேடை
இதய தாகம் சேர்க்கிறது
உதட்டில் உள்ளத்தைப் பேசியவனே
உலகம் தெரியாது உனக்கு
நடிப்பென்றால்
உலகத்திற்கு உன்னைத் தவிற
யாரையும் தெரியாது
அரங்கிலும் ...
அறையிலும் ...
உள்ளதை ப் பேசியவனே
உனக்கு
நடிக்கத் தெரியாது
விளம்பரம் இல்லாமல்
நீ செய்த உதவி
உன் இடது கைக்கு க் கூட தெரியாது
உன்னை உருவாக்கியவரிடம்
நீ காட்டிய நன்றி
அவர் மகனும்
அவருக்கு காட்டி இருக்க வாய்ப்பில்லை
உறவுகளிடம்
நீ காட்டிய கரிசனை
சுயநல பட்சிகளுக்கு
தெரிந்திருக்க சாத்தியமில்லை
ஒரே நாளில்
மூன்று படத்தில் நடிப்பாயே...
இப்போதெல்லாம்
ஒரு படம் எடுத்து
ரிலீஸ் ஆகவே
மூன்று வருடம் ஆகிறது
நேரம் கூட
உன்னைப் பார்த்து தான்
நேரம் தவறாமையைக் கற்றது
ஒவ்வொரு படத்திற்கும்
ஒவ்வொரு முகம்
ஒவ்வொரு உடைக்கும்
ஒவ்வொரு நடை
ஒவ்வொரு உணர்ச்சிக்கும்
ஒவ்வொரு அசைவு
ஒவ்வொரு குணத்திற்கும்
ஒவ்வொரு குரல்
ஒவ்வொரு துயரத்திற்கும்
ஒவ்வொரு அழுகை
ஒவ்வொரு மகிழ்விற்கும்
ஒவ்வொரு சிரிப்பு
நடிப்பு என்ற ஒன்றே
உன்னைப் பார்த்த பிறகு தான்
தன்னை நடிப்பென்று
ஒப்புக் கொண்டது
உன்
சரித்திர புராண இதிகாச
குடும்ப பாத்திரங்கள்
யாருக்கும் வராத
தெய்வ சூத்திரங்கள்
"ஓவர் ஆக்ட்டிங்'காம் "
நீ நடிப்பது ...
விமர்சன கொசுக்கள்
உன் மீது
சொல்பவர்களுக்கு
சொல்
இந்த காலத்து திரை நடிப்பு
எருமை மாட்டின் மேல்
மழை என்று ...
அன்பு பாசம் அறியா
இணைய தள யுகம்
உருக வேண்டிய
பாச மலர் பார்த்து
சிரிக்கும் ...
வெறுமை சேகரித்து
தனியாய் வாழப் போகும்
இவர்களுக்கு
ஆறுதலாய் வர போவது
உன் பாடல்களே
பொழுது போக்கிற்கு பழகி
பொழுது விடிய பிரியும்
பொய் உறவுகளுக்கு
அன்பு .. பாசம் ...
அரவணைப்பு .. காதல்
நட்பு ... பகிர்வு ...
கருணை .. சிருங்காரம் ..
கம்பீரம் ... தமிழ் மொழி
இவை எலாம் தொலையாமல்
இனி வாழ போவது
உன் படங்களில் மட்டுமே
அரசியல் தெரியாதவனே ...
மக்கள் மூளையற்றவர்கள்
கண்ணாடிக் கற்கள் என்று
வீசி எறிந்தனர்
வைரங்களை ...
மேலே போய்
விண்மீன் கள் ஆ நீர்
காமராஜரும் ...
நீயும் ...
தயாரிப்பாளரே
நடிகராகும்
கருங் காலத்திற்கு முன்
தமிழை
கீ போர்ட் வைத்து நசுக்கி
காயடிக்கும் முன்
உச்சரிப்பு
நச்சரிப்பு ஆவதற்கு முன்
காட்சித் தொகுப்பே
கதை என ஆவதற்கு முன்
வாராத போதே
போதும் என
நடிப்பை
நெட்டி முறிப்பதற்கு முன்
பேசும் வசனமே
பாடல் வரி என ஆவதற்கு முன்
தொழில் நுட்ப சாத்தன்
ஊதிய சங்கில்
காது ஜவ்வு கிழிந்து
அறுந்து தொங்குவதற்கு முன் ...
பாடி லாங்குவேஜ் போய்
வெறும்
உள் பாடிகளும் ..
வெளி பாடிகளும்
நடமாடி வருவதற்கு முன் !
மணமாய்ப் போய் சேர்ந்தீர்
மகிழ்ச்சி !
வானமாய்
இவர்கள் அடிக்கும் கூத்தை
அடி வயிறு குலுங்க சிரித்து
தலையில் அடித்து
ரசித்து இரும் ..
யாரும் பின்பற்ற முடியா
தத்துவமாய் வாழும்
வாழ்க !
இப்படிக்கு
கடைசி ரசிகன்
வைரபாரதி
நிறைந்தவரின் நினைவு நாள் இன்று !
July 21st
Bookmarks