சீரியலுக்கு வருகிறார் ரேவதி
மண்வாசனை படத்தில் அறிமுகமானவர் ரேவதி. துளியும் கிளாமர் காண்பித்து நடிக்காமல் நல்லதொரு பர்பாமென்ஸ் நாயகியாக சினிமாவில் நீண்டகாலம் நாயகியாக நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த அவர், சமீபகாலமாக அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் அவரது அம்மாவாக நடித்த ரேவதி, அம்மா கணக்கு, ப.பாண்டி படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் யுத்தம் சரணம் உள்ளிட்ட சில படங்களில் அம்மா ரோலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே ஓரிரு சீரியல்களில் நடித்துள்ள ரேவதி, தற்போது அழகு என்றொரு கிராமத்து நெடுந்தொடரில் லீடு ரோலில் நடிக்கிறார். அவரது கணவராக தலைவாசல் விஜய் நடிக்கிறார். குடும்பத்தலைவியாக அவர் நடித்து வரும் இந்த தொடரில் மையக் கேரக்டரில் நடிக்கும் ரேவதி, தனது குடும்பத்தில் நடக்கும் பெரிய பிரச்னைகளையெல்லாம் அனுபவத்தைக் கொண்டு எப்படி சிக்கல்களை சீராக்குகிறார் என்பதுதான் இந்த அழகு தொடரின் மையக் கதையாம். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
நன்றி: தினமலர்




Reply With Quote
Bookmarks