-
5th May 2018, 01:21 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
MASTHAAN SAHEB
1958-ம் வருசத்தின் பிரம்மண்டமான வெற்றிப் படம் 13 தியட்டரில் 100 நாள் ஓடிய நாடோடி மன்னன் படம்தான். சேலத்திலே சித்தேஸ்வரா தியேட்டரில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா கொண்டடினாலயும் ஷிப்டிங் என்று வந்து விட்டதால் நாம் அதை வெள்ளிவிழா கணக்கில் சேர்ப்பது கிடையாது. என்றாலும் 1958ல் மட்டுமே இல்லாமல் இப்பவும் நாடோடி மன்னன் வெற்றிப் படமாக இருக்கிறது.
போன மாசம் டிஜிட்டல்லிலே வெளியாகி சென்னையிலே ஆல்பர்ட் திடேயட்டரில் 35 நாள் வெற்றிகரமாக ஓடியது. அதற்கான விளம்பரம் நம்ப திரியிலும் வெளியாகியது. இங்ேக தரப்படுகின்றது.
நாடோடி மன்னன் டிஜிட்டல்லில் வெளியானபோது மாலை மலர் பேப்பரில் நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று போட்டார்கள்.
உடேேனே மாற்றுத் திரியில் ‘அங்கே நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே போய்விட்டார்கள் என்று பதிவு போட்டர்கள்.
நான் அதுக்கு, அது தப்பான செய்தி நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் இல்லை என்று நம்ப திரியில் நே்ர்மையாக பதில் போட்டேன்.
மாற்றுத் திரி பற்றி பொதுவா நாம்ப கண்டுக்கிறது இல்லை. இருந்தாலும் நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே என்று நம்பளைக் கேட்டார்களே அதனால் நாம்பளும் கேட்கிறேன்.
சாரங்கதாரா படம் 100 நாள் ஓடியதா?
அன்னையின் ஆணை 100 நாள் ஓடியதா?
காத்தவராயன் படம் 100 நாள் ஓடியதா?
இந்த ஓடாத படங்கள எல்லாம் 100 நாள் ஓடினதாக பச்சையாக அவர்கள் புளுகி பத்திரிக்கையில் வந்திருக்கின்றது. அந்த பேப்பர் செய்தியையும் மாற்றுத் திரியில் போட்டிருக்கிறார்கள்.
நம்பளை கேட்டார்களே. இப்ப நாம்ப கேட்கின்றோம்.
நீதி நேர்மை ஞாயம் எல்லாத்தையும் மொத்த குத்தகைக்கி எடுத்தவர்கள் போல பேசும் ஞாயவான்கள் எங்கே போனார்கள்.
சாரங்கதார, காத்தவராயன், அன்னையின் ஆணை போன்ற படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடியதாக மாற்று முகாம் நண்பர்கள் தகவல் சொல்லி அந்த செய்தி இந்து பத்திரிகையில் வந்துள்ளது.
பத்திரிகைகள் எப்படி இதை சரிபார்க்காமல் வெளியிடுகின்றன என்று தெரியவில்லை. இப்போது பத்திரிகையில் இருப்பவர்கள் சின்ன வயதினர் என்பதும் அவர்களுக்கு பழைய விஷயம் தெரியாது என்பதும் காரணமாக இருக்கலாம்.
இந்த தவறான தகவல் பத்திரிகையில் வந்ததால் தெரிகிறது. இல்லாவிட்டால் வெளியே தெரியாது. மாற்று முகாம் நண்பர்கள் மாதா மாதம் அவர்கள் நடத்தி வரும் திரைப்பட காட்சி வெளியீடுகளின்போது ரசிகர்களை சந்தோசப்படுத்தவும் தங்கள் பெருமைகளை சொல்லவும் இப்படித்தான் ஓடாத படங்களை எல்லாம் 100 நாள் ஓடியதாக சொல்வார்கள் என்று தெரிகிறது.
அந்த பத்திரிக்கை செய்தியை மாற்று திரியில் பதிவு செய்துள்ளனர். நம் திரியில் படிக்கின்றவர்களுக்கு நாம் எதைப் பற்றி சொல்கிறோம். என்று தெரியாது. அதனால் அந்த செய்தியின் இணைப்பு கொடுத்துள்ளேன். அந்த இணைப்பு செய்திக்கு கீழே கருத்து பதிவு பகுதியில் நமது எஸ். வினோத் அய்யா பதில் சொல்லி இருக்கிறார். இளம் தலைமுறைகளுக்கு உண்மையை சொல்ல வேண்டும். எஸ்.வினோத் அய்யாவுக்கு நன்றி.
அந்த கருத்து பகுதியில் தமிழன்பன் என்பவர் நாடோடி மன்னன் பற்றி சொல்லி இருக்கிறார். அதற்காகவும் இதைப் பதிவு போடுகிறேன்.
http://tamil.thehindu.com/cinema/cin...le23761368.ece
-
5th May 2018 01:21 PM
# ADS
Circuit advertisement
Bookmarks