-
18th May 2019, 10:34 PM
#11
Junior Member
Diamond Hubber
சென்னை காமராஜர் அரங்கில் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00.மணி முதல் இரவு 10.00 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ள புரட்சித்தலைவரின் அபிமானிகள் ஒன்று கூடும் விழாவாம்... பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.புகழ்பாடும் ஐம்பெரும் பெருவிழா ! சிறப்பான முறையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா, அபுதாபி, குவைத், பிரான்ஸ், கனடா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்தும் புரட்சித்தலைவரின் அபிமானிகள் அமைபுகளை சார்ந்த பக்தர்கள் யாவரும் கலந்து கொள்வது மட்டுமல்லாது.... அரபு ஆமீரகத்தில் உள்ள நாடுகளில் இருந்து ஒரு முக்கிய இளவரசர் தலைவரின் இந் நிகழ்ச்சிக்கு அபுதாபி திரு. சைலேஷ் பாசு அவர்களுடன் தனி விமானத்தில் வருகிறார்கள். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விழாவில் இன்னிசை "லஷ்மன்ஸ்ருதி " இசைநிகழ்ச்சி , தலைவருடன் கலை அரசியல் பங்குகொண்ட பல துறைகளை சார்ந்த சான்றோர்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றனர். மேலும் பல நிகழ்வுகள் நடைபெறுகிறது..... விழா ஒருங்கிணைப்பு : தலைவரின் அனைத்து அமைப்புகள். ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ். விழா ஒத்துழைப்பு : பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.நற்பணி சங்கம் மற்றும் நம்முடன் ஒன்றாக இணைந்த சென்னை நகர எம்.ஜி.ஆர் அமைப்புகள் ........... Thanks wa.,
-
18th May 2019 10:34 PM
# ADS
Circuit advertisement
Bookmarks