-
27th August 2007, 10:08 AM
#11
Senior Member
Seasoned Hubber
"அப்பா அம்மா சந்தோஷப்பட்டா போதும் அசத்துகிறார் அனுஹாசன்
"எது ரைட்'ன்னு படுதோ அதை செய்வேன் அப்பா அம்மா சந்தோஷப்பட்டா அது தான் எனக்கு கிடைத்த பெரிய சந்தோஷமாக நினைப்பேன்! இப்படி "சென்டிமென்ட்'டாக பதில்களை அள்ளி விட்ட அந்த நடிகை தொகுப்பாளினி! யார் தெரியுமா? விஜய் "டிவி'யில் "காபி வித் அனு' தொகுப்பாளினி அனுஹாசன்தான் கலைஞர் "டிவி'க் காக ரேகா ஐபிஎஸ், சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் கலக்கல் பேட்டி:
* "டிவி'யில் கவனம் செலுத்தும் அளவிற்கு சினிமாவில் கவனம் செலுத்தவில்லையே ஏன்?
சினிமா மீது ஆர்வம் இல்லாமலில்லை "இந்திரா' படத்தை சுகாசினி இயக்கினாங்க பயமில்லை, ஈசியா இருந்தது. கிராமத்து ஸ்டோரி பிடிச்சிருந்தது. நடிச்சேன். தொடர்ந்து சினிமாவில் நடிக்காததற்கு காரணம், ரொமான்ஸ் சீன்ல நடிக்க மாட்டேன், குட்டி, குட்டி டிரஸ் போட்டுக்கிட்டு நடிக்க, ஆடமாட்டேன்னு கண்டிஷன் போட்டேன். எனக்கு பிடிச்ச மற்றவங்களை சங்கடபடுத்தாத கேரக்டராக இருந்தால் நடிக்கலாம்ன்னு நினைச்சேன். அப்போது பேஷன் வெறி எனக்கு கிடையாது.
* சினிமா பற்றி கமல், சுகாசினி ஏதும் அட்வைஸ் செய்யவில்லையா?
யாரு எப்படி நடந்துக்கணும்ங்கிறது அவுங்க, அவுங்களுக்கு தெரியும்ன்னு அவுங்க நினைப்பாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்வைஸ் சொல்லிகிடறதெல்லாம் கிடையாது. நான் இதை செய்யப்போறேன், அதற்கு உங்கள் அட்வைஸ் எதிர்பார்க்கிறேன்னு கமல் சித்தப் பாக்கிட்டேயோ, சுகாசினி அக்காகிட்டேயோ கேட்டா சரியான வழியை சொல்லிடுவாங்க. அது சரியாயிருக்கும்.
* கமல், சுகாசினியிடம் உங்களுக்கு பிடித்தது?
இரண்டு பேரும் ஒரே மாதிரி கடின உழைப் பாளிங்க எதைச் செய்தாலும் இது என் வேலையில்லைன்னு விடமாட்டாங்க. நடிப்பா இருந்தாலும் சரி, ஸ்கிரிப்ட் ஒர்க்கா இருந்தாலும் சரி, சேவையாக இருந்தாலும் சரி இன்னும் நல்லா செய்யணும்ன்னு செய்வாங்க. அதற்காக நேரம், காலம் பார்க்காம அவுங்களுக்கு திருப்தின்னு தோணும் வரை கடுமையா உழைப்பாங்க. அதனாலதான் அவுங்க ஜெயிக்கிறவங்களா நின்னுட்டிருக்காங்க.
* "டிவி'க்களில் வரும் நீங்கள் சினிமாவிற்கு வருவதற்கு சாதகமான வழிகள் இருந்தும் தவிர்ப்பது ஏன்?
ஒவ்வொரு நிலையிலும் எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செஞ்சிட்டிருக்கேன். நடிப்பு எனக்கு பிழைப்பு இல்லை. பெரிய நடிகையாகணும்ங்கிற வெறி எனக்கு கிடையாது. என்ன விலை கொடுத்தாவது நான் நடிக்கணும்ன்னு நினைக்கலை. டைரக்டர்கள் சொல்ற மாதிரியெல்லாம் நடிக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருந்தா நிறைய படங்களில் நடித்திருக்கலாம். இப்ப "ஃ' என்ற படத்தில பாம் ஸ்குவார்ட் கேப்டனா நடிச்சிட்டிருக்கேன். நல்ல ஸ்கிரிப்ட் பிடிச்சதால நடிக்கிறேன்.
* சமீபத்திய புதிய தகவல் ஏதும்?
கலைஞர் "டிவி'க்காக ரேகா ஐபிஎஸ், சீரியலில் ஹீரோயினியாக நடிக்கிறேன். என் கனவு ஹீரோ போலீஸ்தான். எங்கு அநியாயம் நடக்குதோ, அநீதி நடக்குதோ, சமுதாயத்திற்கு தேவையில்லாத விஷயம் நடக்குதோ, அங்கெல்லாம் போலீஸ் தட்டிக்கேப்பாங்க அப்படீன்னு சின்னப்பிள்ளையாக இருந்தபோது நினைச்சிருக்கேன். இப்ப போலீஸ் ஆபிசரா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் கனவு ஹீரோ போலீஸ் ஆசை என்பதால ஆர்வமா நடிச்சிருக்கேன். ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு.
* உலகில் நீங்கள் பெரிதா நினைப்பது எதை?
உலகில் சந்தோஷப்படும் விஷயம் நிறைய இருக்கு நான் படும் சந்தோஷத்தை பார்த்து அப்பா, அம்மா சந்தோஷப்பட்டா அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம். எது ரைட்னு படுதோ அதைச் செய்வேன். எது நல்லதுன்னு தோணுதோ அப்படியே நடப்பேன். சுதந்திர பறவை மாதிரி என்னோட பயணம் இருக்கணும். அதே நேரம் யாரையும் சங்கடபடுத்தாமலும் இருக்கணும்வாழ்க்கையில் நுõறு சதவீதம் சந்தோஷமா வாழணும். மற்றவர்களுக்கு பிரச்னையில்லாமல் எனக்கு பிடித்தமானவைகளை செஞ்சிக்கிட தயக்கமில்லை.
இவ்வாறு அனுஹாசன் அசத்தினார்.
-
27th August 2007 10:08 AM
# ADS
Circuit advertisement
Bookmarks