
Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார்,
நான் என்ன சொல்லி விட்டேன் பாடலைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும். பாடலின் துவக்கத்தில் வரும் ஒரு சிறிய அளவிலான இசை அட்டகாசமாக இருக்கும், கடிகாரத்தின் பெண்டுலம் வழியாக அந்தகாலத்தில் அலாரம் போன்று ஒலிக்கும் அந்த ஒலியை பாடலின் சூழலுக்கேற்ப மெல்லிசை மன்னர் கொடுத்திருப்பார். பிரமாதம். அந்த பொம்மை மிகவும் பிரபலம். இந்தப் படம் வந்த காலத்தில் அந்த பொம்மை எங்கு பார்த்தாலும், குறிப்பாக சென்னை கடற்கரையில் விற்றுக் கொண்டிருப்பார்கள். கடை விரித்து அல்ல, ஆனால் சுண்டல் விற்பவர்களைப் போல ஒவ்வொருவரிடமும் கேட்டுச் செல்வார்கள். அப்போது நான் மிகவும் சிறியவன் என்றாலும் அந்த பொம்மை மட்டும் என் நெஞ்சில் அப்படியே நிலைத்து விட்டது.
அன்புடன்
Bookmarks