-
10th September 2011, 06:48 AM
#11
Senior Member
Diamond Hubber
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்கள் அன்பு உள்ளத்திற்கு பணிவான நன்றிகள்.'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கதையை மறுபடியும் அனுபவித்து படித்து மகிழ்ந்தேன். டி.எம்.எஸ்.எந்த மன,உடல் நிலைகளில் பாடினாலும் நம்மவர் அதை அப்படியே 100% பிரதிபலித்து விடுவார் என்ற பீம்சிங்கின் அசாத்தியமான நம்பிக்கை தான் பல்வேறு அற்புதமான பாடல்களை நமக்களித்தது.
அதிலும் டி.எம்.எஸ்.பாவமன்னிப்பில் பாடும் அந்த 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடலில் 'காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே' என்று ஆரம்பப் பல்லவியை அவர் அற்புதமாகத் துவங்குவதும் ,தொடரும் சீரான சரணங்களில் அவர் புரியும் ஏற்ற இறக்க குரல் பாவங்களும், அதை முழுவதுமாக உள்வாங்கி உன்னத உணர்ச்சிகளின் பிரதிபலிப்பால் நம்மவர் மற்றவர் கண்களைக் குளமாக்குவதும், பாடலின் பின்னணி இசையில் மனதைப் பிசைந்தெடுக்கும் இனம் புரியாத சோகம் குடி கொண்டு நம்மை பிழிந்து எடுப்பதையும் எப்படி மறக்க முடியும்? பீம்சிங் பீம்சிங் தான்....
நன்றியுடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 10th September 2011 at 08:21 AM.
-
10th September 2011 06:48 AM
# ADS
Circuit advertisement
Bookmarks