-
5th October 2011, 01:37 AM
#11
Senior Member
Seasoned Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
chinnakkannan
கிறுக்கரே.. கலக்கியது சிவமாலா.. நான் சும்மா நன்றி தானே சொன்னேன்..
நீங்கள்தான் செந்தூள் கிளப்பிவிட்டீர்கள்,.உங்கள் கவிதை மிக நன்றாகவே உள்ளது.
இப்போது மலேசிய யானைகள் பற்றி.......
யானை
கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
காணலாம் காண்பீரே சென்று.
அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
கூன்படாக் கொள்கை இது.
ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
யானும்நம் பாவலரோ டிங்கு.
-
5th October 2011 01:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks