பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் நவராத்திரி திரைக்காவியத்தை சென்னை மிட்லண்ட் திரையரங்கில் நடிகர் திலகத்துடன் பார்த்து அவரை வெகுவாகப் பாராட்டினார். இதைப் பற்றிய ஒரு நிழற்படம், பேசும் படம் ஜனவரி 1965 இதழில் வெளிவந்தது, இங்கே நம் பார்வைக்கு. வெகுநாளானதால் சற்று புள்ளி புள்ளியாகக் காட்சி அளிக்கிறது. இதனை சரி செய்ய முயன்றால் படத்தின் தெளிவு அடிபடுகிறது. எனவே முடிந்த வரை தெளிவாக்கித் தரப்பட்டுள்ளது.