Quote Originally Posted by Rock star_KB View Post


1992 -ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறுபவர்களை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர் பாலுமகேந்திராவும் இடம் பெற்றிருந்தார். அப்போது சிறந்த இசையமைப்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்வில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு இரண்டு படங்கள் மட்டும்தான் தேர்வாகி இருந்தன. ஏ.ஆர்.ரஹ்மானின் "ரோஜா" படமும், இளையராஜாவின் "தேவர் மகன்" படமும்தான் இறுதி சுற்றி அடைந்த அந்த இரண்டு படங்களும்.

ராஜாவும், ரஹ்மானும் ஒரே அளவிலான வோட்டுகள் பெற்றிருந்த நேரத்தில், பாலுமகேந்திராவின் வோட்டுதான் சிறந்த இசையமைப்பாளரை தேர்வு செய்யும் என்பது மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் இளைஞர் ஒருவரை ஊக்குவிக்கும் பொருட்டு " ரோஜா" படத்துக்கு தன்னுடைய வோட்டை செலுத்தி, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கியுள்ளார் பாலு மகேந்திரா.

இதை தன்னுடைய பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் பாலுமகேந்திராவே கூறியுள்ளார்.

ரஹ்மானுக்கு ஆதரவாக தான் வோட்டு போட்டதை, ராஜாவிடம் உடனடியாக தொலைபேசி மூலம் பாலு மகேந்திரா பகிர்ந்து கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அது எத்தனை சதவிகிதம் உண்மை என்று தெரியாவில்லை.
he did not share immediately . When they met later, BM informed this to TRaaja - Raaja smiled and said he is happy about it . BM told this in an interview