-
28th August 2012, 11:23 AM
#1
Senior Member
Senior Hubber
நிற்பதுவே.. நடப்பதுவே...பறப்பதுவே
நிற்பதுவே... நடப்பதுவே.. பறப்பதுவே....
சின்னக் கண்ணன்..
ஒட்டகம் பஸ்ஸைக் காதலுடன் பார்த்தபடி நின்றது. 'ஏய்.. நீயும் என்னைப் போலவே உயரமா இருக்கே ' எனச் சொல்வது போல கொஞ்சம் ஆடி அசைந்து பஸ்ஸின் கண்ணாடிக்கருகில் வந்தது. அந்த இருட்டில் நேர்க்கோடாய்த் தெரிந்த பஸ்ஸின் தலைவிளக்கின் வெளிச்சத்தில் அதன் கோலிக்குண்டுக் கண்கள் பளபளத்தன. உள்ளிருந்த ஓமானி பஸ் டிரைவர் பிடித்து வைத்த பிள்ளையார் போல அசையாமல் உட்கார்ந்திருந்தான். பஸ் மட்டும் ம்ம்ம் என்று மினி சிங்கம் மாதிரி உறுமிக் கொண்டிருந்தது.
சற்று நேரம் பஸ்ஸைப் பார்த்த படி இருந்து விட்டு பின் கோபம் கொண்ட மனைவியைப் போல முகம் திருப்பிக் கொண்டது. அழகாய் மடித்துக் கொடுக்கப் பட்ட கும்பகோணம் துளிர் வெத்திலை மற்றும் சாமுண்டிப் பாக்கை பொக்கை வாய்த் தாத்தா கன்னத்தோரம் வைத்து மெல்வது போல வாயை அசை போட்டுக் கொண்டு மெல்ல நடந்தது. என்ன நினைத்துக் கொண்டதோ மறுபடியும் பஸ்ஸை ஒருமுறைத் திரும்பிப் பார்த்து விட்டு சூல் கொண்ட வாத்தைப் போலத் தள்ளாடித் தள்ளாடி கழுத்தை விலுக் விலுக் என ஆட்டிக் கொண்டே சாலையைக் கடந்தது..
டிரைவர் மெளனமாய் பஸ்ஸை எடுத்தான்..உள்ளே இருக்கையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சந்திர சேகரனின் காதில் செளம்யா கிசுகிசுத்தாள்.. 'ஏங்க..இந்த அர்த்த ராத்திரில்ல இது எங்க போறது. ?. '
'மே பி... அதோட காதலியைப் பார்க்கவா இருக்கும்.. '
'இந்த ராவேளையிலையா.. '
'ஏண்டி இதுகளுக்கெல்லாம் நேரங்காலம் தெரியுமா என்ன.. ' என்றதற்குச் செளம்யா செல்லமாய்ச் சிணுங்கினாள்.. 'யோவ்.. நீ ரொம்ப மோசம்..ஆமா..பஸ்ஸை எப்ப நிறுத்துவாங்க.. '
'எதுக்கு ? '
'எல்லாம் தாயக்கட்டம் தான்..கொஞ்சம் அர்ஜண்ட்.. '
'அச்சச்சோ இவன் எப்போ நிறுத்துவான்னு தெரியலையே.. அதான் எட்டரைக்கு நிப்பாட்டினான்ல..இப்போ என்ன டைம்.. பத்து தானே ஆறது.. என்ன அவசரம்..
-
28th August 2012 11:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks